search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா?
    X

    குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா?

    • குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் அதிக அளவில் புழுக்கள் மிதந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். அவர்கள் குடிநீரை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதா வது:-

    மதுரை மாநகராட்சி 4-–வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் வைகை வடகரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இதற்காக குடிநீர் அரசரடி பகுதியில் நீரேற்று நிலையத்தில் சுத்திக ரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் குடியிருப்பு பகுதிக ளுக்கு வினியோகம் செய்யப் படுகிறது.

    இவ்வாறு வரும் குடிநீர் வைகை ஆற்று வடகரை பகுதியில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் குடிநீரு டன் சாக்கடை நீர் கலப்பதாக தெரிவிக்கின்றனர். குடிநீர் வரும் பகுதியை மாநகராட்சி 29-வது வார்டு, 30-வது வார்டு பகுதியில் உள்ளது மேலும் இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று சாலையை தோண்ட வேண்டும் என்ப தால் தாமதப்படுத்துவதாக வும் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக வந்தது. இதனால் நாங்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தட்டுப்பாடு காரணமாக புழுக்கள் உள்ள தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம்.

    எங்கள் பகுதியில் தொடர்ச்சியாக பலருக்கு மஞ்சள் காமாலை, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குழாயில் வந்த குடிநீர், வீடுகளில் உள்ள குடம், பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் பார்வையிட்ட னர்.

    குடிநீரில் புழுக்கள் வந்ததற்கான காரணம் கண்டறி யப்பட்டு சுகாதார மான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக ஆழ்வார்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் தற்போது நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×