search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து டி20 தொடர்"

    • ரூ.20 லட்சம் கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து கடத்தி வந்தனர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வழி நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு கடத்தி வரும் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்போது வெளி நாடுகளுக்கு வியாபார காரணங்களுக்காக சென்று வருவதாக கூறி அங்கிருந்து தங்கத்தை கடத்தி வருவது மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த நாடுகளில் உள்ள தரகர்கள மூலமாகவும் தங்கம் கடத்தி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள்,

    அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் எடுத்து வந்த வீட்டு உபயோக எலக்ட்ரானிக் பொருட்களில் மறைத்து ரூ 20 லட்சம் மதிப்பிலான 20 துண்டுகளாக கொண்டுவந்த 385 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் மேலும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கறம்பக்குடியில் தமுமுகவினர் சாலை மறியல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடியில் அரசு தாலுகா தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை. செவிலியர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    போதிய இட வசதி இன்மையால் மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவ வசதி பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து அரசு அதிகாரிகள் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதேபோல் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு பொதுமக்கள் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த டாஸ்மாக் கடைகளை இடம்மாற்ற பலமுறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கறம்பக்குடி நகர முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள் நியமிக்கக் கோரியும்,

    போதிய வசதிகள் செய்து தர வலியுறுத்தியும், சீனி கடைமுக்கம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை இடம் மாற்ற கோரியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    புவனேஷ்வர் குமார், அஸ்வின் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் வீழ்த்த தீபக் சாஹர் 42 ரன்களும், முகமது சிராஜ் 39 ரன்களும் வாரி வழங்கினர்.
    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் அறிமுகம் ஆனார்.

    நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மிட்செல் சந்தித்த முதல் பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் புவி வீசிய முதல் ஓவரில் க்ளீன் போல்டானார். அடுத்து மார்ட்டின் கப்தில் உடன் மார்க் சாம்மேன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதலில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி, அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    சாப்மேன் 50 பந்தில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ட்டின் கப்தில் 42 பந்தில 70 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் விளாசியது. இதனால் நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன் அடித்துள்ளது. 

    இந்திய அணி வீரர்கள்

    புவனேஷ்வர் குமார் 4 ஓவரில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், அஸ்வின் 4 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    முகமது சிராஜ் 39 ரன்களும், தீபக் சாஹர் 42 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    புவி வெப்பமயமாவதை தடுக்கும் வகையில் புவியின் வெப்ப நிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க ஜி-20 மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
    ரோம்:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    மாநாட்டில் எடுக்கப்பட்ட இறுதி முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    நிலக்கரி வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாடுகள் நிதி அளிப்பதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்திக் கொள்ள அனைத்து நாடுகளும் உறுதி ஏற்க வேண்டும். 

    கார்பன் டை ஆக்சைடால் ஏற்படும் காற்று மாசை இந்த நூற்றாண்டின் மத்திக்குள் முற்றிலுமாக தடுக்க முடிவெடுக்கப்பட்டது. 

    2015-ல் நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவியின் தட்பவெப்ப அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதை 1.5 டிகிரி செல்சியஸ் அளவில் வைத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முயற்சி எடுக்க வேண்டும்.

    பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு உதவ ஆண்டுக்கு 7.50 லட்சம் கோடி ரூபாய் நிதியை பணக்கார நாடுகள் திரட்ட வேண்டும் என ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

    இந்த இறுதி முடிவை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கையும் முடுக்கிவிடுவதோடு, மாற்றத்துக்கு தங்களை தயார் செய்து கொள்வது, நிதி ஆதாரங்களை திரட்டுவது ஆகிய பணிகளை உடனடியாக மேற்கொள்ள அனைத்து நாட்டு தலைவர்களும் உறுதி அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

    ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
    வாஷிங்டன்:

    சமீபத்தில் நடைபெற்ற இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.

    தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹூவாய் நிறுவனத்தின் ஹானர் பிராண்டு தனது ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.



    ஹூவாயின் ஹானர் பிராண்டு ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை லண்டனில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஹானர் 20 ஸ்மார்ட்போன்களில் 6.26 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஆல்-வியூ டிஸ்ப்ளே, கிரின் 980 பிராசஸர், டூயல் என்.பி.யு. மற்றும் ஜி.பி.யு. டர்போ 3.0 வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் கிராஃபீன் கூலிங் ஷீட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போனின் வெப்பத்தை 27 சதவிகிதம் வரை குறைக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

    இரு ஸ்மார்ட்போன்களின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் மற்றும் 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. 1/2" சோனி IMX586 சென்சார் மற்றும் 4 இன் 1 லைட் ஃபியூஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் f/1.4 அப்ரேச்சர் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கமான f/1.8 லென்சை விட 50 சதவிகிதம் அதிகளவு வெளிச்சத்தை உள்வாங்கி 204800 ஐ.எஸ்.ஒ. வழங்கும்.



    ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4-ஆக்சிஸ் OIS வழங்கப்பட்டுள்ளது. இது 3x வரை லாஸ்-லெஸ் சூம், 5x ஹைப்ரிட் சூம் மற்றும் 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ஸ்மார்ட்போனிலும் 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8 வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதில் OIS வழங்கப்படவில்லை. இத்துடன் 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ளது.

    இரு ஸ்மார்ட்போன்களிலும் டைனமிக் ஹாலோகிராஃபிக் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஹானர் 20 ப்ரோ மாடலில் 3D வளைந்த கிளாஸ் பேக் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் 20 ஸ்மார்ட்போன் 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரியும் ஹானர் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கின்றன. இவற்றுடன் 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.



    ஹானர் 20 மற்றும் ஹானர் 20 ப்ரோ சிறப்பம்சங்கள்

    - 6.26 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ ஆல்-வியூ டிஸ்ப்ளே, 412 PPI
    - ஹூவாய் கிரின் 980 பிராசஸர்
    - 720 MHz ARM மாலி-G76MP10 GPU
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி (ஹானர் 20) 
    - 8 ஜி.பி. ரேம், 285 ஜி.பி. மெமரி (ஹானர் 20 ப்ரோ)
    - ஆண்ட்ராய்டு 9.0 (பை) மற்றும் மேஜிக் யு.ஐ. 2.1
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஹானர் 20 ப்ரோ: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.4, 4-ஆக்சிஸ் OIS, EIS, PDAF
    - 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2
    - 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, f/2.4,  4-ஆக்சிஸ் OIS
    - 2 எம்.பி. கேமரா f/2.4
    - ஹானர் 20: 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2″ சோனி IMX586 சென்சார், f/1.8, AIS
    - 16 எம்.பி. 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 2 எம்.பி. கேமரா, f/2.4
    - 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 3D போர்டிரெயிட் லைட்டிங்
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, விர்ச்சுவல் 9.1 சடரவுண்ட் சவுண்ட், டூயல் மைக்ரோபோன், ஹூவாய் கிரின் 6.0
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - ஹானற் 20: 3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    - ஹானர் 20 ப்ரோ: 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 22.5 வாட் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ஹானர் 20 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சஃபையர் புளு மற்றும் ஐஸ்லேண்டிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 499 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.38,784) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹானற் 20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 599 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.46,550) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
    ஜெய்ப்பூர்:

    3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணியும், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணியும் மோதின.
     
    ‘டாஸ்’ ஜெயித்த சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெலா சிட்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது.

    முதலில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 37 ரன்களை எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    இறுதியில், சுஷ்மா வர்மா 40 ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளார். இவருக்கு அமலியா கெர் ஒத்துழைப்பு கொடுத்து 36 ரன்னில் அவுட்டனார்.

    பின்னர் 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி ஆடியது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.

    கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 51 ரன்னும், பிரியா புனியா 29 ரன்னும், ஜெமிமா ரோடிகஸ் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஆட்ட நாயகியாக ஹர்மன் பிரீத் கவுரும், தொடர் நாயகியாக ஜெமிமா ரோடிகசும் தேர்வு செய்யப்பட்டனர்.
    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெலா சிட்டி அணியை வீழ்த்தி சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WomenT20 #Velocity #Supernovas
    ஜெய்ப்பூர்:

    3 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ் அணிகள் சந்தித்தன.

    ‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சூப்பர் நோவாஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 48 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 77 ரன்னும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5 பந்துகளில் 1 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களே எடுத்தது. இதனால் சூப்பர் நோவாஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டேனிலி வியாத் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜ் 40 ரன்னுடனும், வேதா கிருஷ்ணமூர்த்தி 30 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். லீக் ஆட்டங்கள் முடிவில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி, மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

    ரன்-ரேட் அடிப்படையில் சூப்பர் நோவாஸ், வெலா சிட்டி அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. டிரைல் பிளாசர்ஸ் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து வெளியேறியது. இறுதிப்போட்டி ஜெய்ப்பூரில் நாளை இரவு நடக்கிறது. #WomenT20 #Velocity #Supernovas
    பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டிரைல் பிளாசர்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது வெலா சிட்டி அணி. #WomenT20 #Velocity #Trailblazer
    ஜெய்ப்பூர்:

    பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ், மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்திய வீராங்கனைகளுடன் வெளிநாட்டினரும் இடம் பெற்றுள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.



    இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-வெலா சிட்டி அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த வெலா சிட்டி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டிரைல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் டியோல் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெலா சிட்டி அணி 18 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேனிலி வியாத் 46 ரன்னும், ஷபாலி வர்மா 34 ரன்னும், கேப்டன் மிதாலி ராஜ் 17 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜெய்ப்பூரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் சூப்பர் நோவாஸ்-வெலா சிட்டி அணிகள் சந்திக்கின்றன.  #WomenT20 #Velocity #Trailblazer 
    புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. #RBI #20Rupees #Denomination
    மும்பை:

    பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய 500, 2000, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான மாதிரி ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருக்கிறது.

    புதிய 20 ரூபாய் நோட்டு பச்சை, மஞ்சள் நிறம் கலந்து காணப்படும். அதில் மகாத்மா காந்தி படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்தும் இடம்பெறும். நோட்டின் மறுபக்கம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் எல்லோரா குகைக்கோவில் தோற்றம் இடம் பெறுகிறது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 20 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.  #RBI #20Rupees #Denomination 
    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது தென்ஆப்பிரிக்கா. #SAvSL
    இலங்கை கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை 5-0 என தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

    தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. முதல் 2 போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில் நேற்று 3-வது மற்றும் கடைசி போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

    முதலில் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது. பின்னர் 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி 11.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறிக்கிட்டது.

    அதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபெற்றது. மழை நின்றபின் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. அப்போது இலங்கை அணி 17 ஓவரில் 183 ரன்கள் அடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி 35 பந்தில் 72 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கோடு இலங்கை களம் இறங்கியது.

    இலங்கை அணி 15.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா 3-0 என இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
    இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இம்ரான் தாஹிரின் சிறப்பாக பந்து வீச்சால், சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. #SAvSL
    தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் டிக்வெல்லா (0), பெர்னாண்டோ (16), குசால் மெண்டிஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    கமிந்து மெண்டிஸ் 41 ரன்களும், உடானா 6 பந்தில் 12 ரன்களும் அடிக்க இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. டி காக் (13), டு பிளிசிஸ் (21), வான் டெர் டஸ்சன் (34), டேவிட் மில்லர் (41) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் தென்ஆப்பிரிக்கா எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இலங்கை அணியின் துல்லியமான சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்ஆப்பிரிக்கா இறுதிக் கட்டத்தில் திணறியது. இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இரு அணிகளின் ஸ்கோரும் சமமாக இருந்ததால், சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. மில்லர் மற்றும் டஸ்சன் ஆகியோர் பேட்டிங் செய்ய மலிங்கா பந்து வீசினார். மில்லர் 3-வது பந்தில் சிக்சரும், 5-வது பந்தில் பவுண்டரியும் விளாசினார். இதனால் இலங்கை அணிக்கு ஒரு ஓவரில் 15 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் பந்து வீச இலங்கையின் அவிஷ்கா பெர்னாண்டோ, திசாரா பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.

    இம்ரான் தாஹிரின் துல்லியமாக பந்து வீசினார். இதனால் இலங்கை வீரர்களால் பவுண்டரியோ, சிக்சரோ அடிக்க முடியவில்லை. ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணி சூப்பர் ஓவரில் அசத்தல் வெற்றி பெற்றது.
    ×