search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிகள்"

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • முத்தையாசாமி தனது தோட்டத்தில் 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.
    • கோழிகளை திருடியது கார்த்தி, சதீஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது

    நெல்லை:

    கடையநல்லூர் அருகே உள்ள அச்சன்புதூரை அடுத்த பார்வதியாபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் முத்தையாசாமி. இவருக்கு சொந்தமான தோட்டம் அச்சன்புதூரில் உள்ளது. அங்கு 72 நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை அவர் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த நாட்டுக்கோழிகளை காணவில்லை. அவை அனைத்தும் திருடப்பட்டிரு ப்பதை அறிந்த முத்தையாசாமி, அச்சன்புதூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழிகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    அதில், கோழிகளை திருடியது அதே ஊரில் வடகாசி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் கார்த்தி(வயது 19), அவரது நண்பர் சதீஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து 10 கோழிகளை பறிமுதல் செய்தனர். மேலும் கோழிகளை விற்ற பணம் ரூ.14 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது.
    • ரம்ஜான் பண்டிகை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்துள்ளது.

    பல்லடம் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. கோடை வெயில் தாக்கம் காரணமாக கோழி கள் அதிக அளவில் இறக்கி ன்றன.இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:- வழக்கமாக கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது. தற்போது ரம்ஜான் பண்டி கை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்து ள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொறுத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இரு க்கும். வெப்ப அலற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்கு காரணமாகிறது.

    இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்க பண்ணைகளை காற்றோ ட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பண்ணையை சுற்றி மரங்கள் வளர்த்தல் என தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • விவசாயப் பயிர் சாகுபடி கைவிடும் காலங்களிலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.
    • தற்போது ஒருசில மதுப்பிரியர்கள் கோழிகளை திருடி சென்று சைட் டிஷ் ஆக சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.மேலும் அதனைச் சார்ந்து ஆடு,மாடு,கோழி வளர்ப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயப் பயிர் சாகுபடி கைவிடும் காலங்களிலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு கைகொடுத்து வருகிறது.இந்தநிலையில் சமீப காலங்களாக உடுமலை சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக கோழிகள் திருடப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-நாட்டுக்கோழி வளர்ப்பு என்பது லாபகரமான தொழிலாக உள்ளது.பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை விட வீடுகள் மற்றும் விவசாய பூமிகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் ஆரோக்கியமான சூழலில் வளர்கின்றன.மேலும் அவை இயற்கையான புழு,பூச்சி மற்றும் தானியங்களை தின்று வளர்வதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன.இதனால் அசைவப்பிரியர்கள் இந்தவகை நாட்டுக்கோழிகளை தேடி சென்று வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் பண்ணை நாட்டுக்கோழிகளை விட இந்தவகை நாட்டுக்கோழிகள் நல்ல விலைக்கு விற்பனையாகின்றன.இதுதவிர நாட்டுக்கோழி முட்டைகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.ஒருசிலர் சண்டைசேவல்களை வளர்த்து பல ஆயிரம் ரூபாய்களுக்கு விற்பனை செய்கின்றனர்.

    இதனால் தற்போது ஒருசில மதுப்பிரியர்கள் கோழிகளை திருடி சென்று சைட் டிஷ் ஆக சமைத்து சாப்பிட்டு விடுகின்றனர்.ஒருசில இடங்களில் கோழிகளைத் திருடி விற்று மது வாங்கும் நபர்களும் உள்ளனர்.இதுதவிர கோழிகளை திருடி விற்று பணம் சேர்க்கும் நோக்கில் ஒருசில நபர்கள் சுற்றி வருவதாகவும் தெரிகிறது.இதுபோன்ற நபர்கள் ஈரத்துணியை கோழிகள் மீது போட்டு அவை சத்தம் எழுப்பாத வகையில் திருடிச் செல்வதாகத் தெரிகிறது.இவ்வாறு ஆங்காங்கே தொடர்ச்சியாக நடந்து வரும் கோழித்திருட்டு பற்றி விவசாயிகள் போலீசில் புகார் தெரிவிக்க விரும்புவதில்லை.ஒருசில இடங்களில் ஆடுகள் திருடப்படும் போது கூட புகார் தெரிவிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.இது திருடர்களுக்கு சாதகமானதாக மாறி விடுகிறது.எனவே விவசாயிகள் விழிப்புணர்வுடன் இருந்து தங்கள் கால்நடைகளை பாதுகாத்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என்ற தகவல் தற்போது விவசாயிகளிடையே சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

    • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கோழிகள் கொட்டப்படுகின்றன.
    • அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஆவினங்குடி அருகாமையில் உள்ள வெள்ளாற்றில் குவியலாக இறந்து கிடைக்கும் பிராய்லர் கோழிகள். இந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வெள்ளாற்றில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் முகத்தில் துணியை வைத்து மூடிக்கொண்டு துர்நாற்றம் தாங்காமல் சென்று வருகின்றனர். ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி அல்லது கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் காரணமாக என சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் கோழிகள் இழுத்துச் சென்று போடுவதால் தற்போது சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மர்மமான முறையில் கோழிகளை ஆற்றில் கொட்டி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து கிடக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    ×