search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farms"

    • கிலோ 350 முதல் 400 ரூபாய் வரை விலை போனது.
    • ரத்த கழிச்சல், வெள்ளை கழிச்சல் ,பச்சை கழிச்சல் போன்ற நோய் தாக்கி இறக்கும் கோழிகளை சிலர் திறந்த வெளியில் நீர் நிலைகளில் வீசுகின்றனர்.

    திருப்பூர்:

    கோழிகளை தாக்கும் கொள்ளை நோய்களால் பல நாட்டு கோழி பண்ணைகள் துவங்கிய வேகத்தில் மூடப்படுகின்றன. இதனால் நாட்டு கோழி வளர்ப்பில் விவசாயிகள் பெரிய அளவில் சோபிக்க முடிவதில்லை.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    திறந்த வெளியில் வளர்வதால் ஆபத்து அதிகம். கிலோ 350 முதல் 400 ரூபாய் வரை விலை போனது. பி.ஏ.பி., பாசனம் நடந்த போது நோய் தாக்கிய பண்ணை கோழிகள் தண்ணீரில் வீசப்பட்டதால் நோய் பரவி பல ஆயிரம் கோழிகள் இறந்தன.தட்டுப்பாடு காரணமாக இன்று கிலோ 500 ரூபாய்க்கு விலை போகிறது. நாட்டு கோழிகளுக்கு அம்மை, சளி, வெள்ளை கழிச்சல் நோய்கள் தான் பேரிழப்பை ஏற்படுத்தும்.

    குறிப்பாக ரத்த கழிச்சல், வெள்ளை கழிச்சல் ,பச்சை கழிச்சல் போன்ற நோய் தாக்கி இறக்கும் கோழிகளை சிலர் திறந்த வெளியில் நீர் நிலைகளில் வீசுகின்றனர்.இதனால் நோய் பரவி கோழிகளை காவுவாங்குகிறது. இறந்த கோழிகளை திறந்த வெளியில் வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது.
    • ரம்ஜான் பண்டிகை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்துள்ளது.

    பல்லடம் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தியாகின்றன.தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்ப டுகின்றன. கோடை வெயில் தாக்கம் காரணமாக கோழி கள் அதிக அளவில் இறக்கி ன்றன.இது குறித்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது:- வழக்கமாக கோடை வெயில் காலத்தில் கோழி களின் எடை குறைகிறது. தற்போது ரம்ஜான் பண்டி கை காரணமாக கறிக்கோழி விற்பனை மேலும் குறைந்து ள்ளது.கோடை வெயில் தாக்கம் காரணமாக 10 சதவீதம் வரை கோழிகள் இறக்கின்றன. பண்ணைகள் அமைவிடத்தை பொறுத்து சில இடங்களில் இறப்பு சதவீதம் கூடுதலாக இரு க்கும். வெப்ப அலற்சி காரணமாக ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கமும் கோழிகளின் இறப்புக்கு காரணமாகிறது.

    இது போன்ற பாதிப்புகளால் இழப்பு ஏற்படாமல் இருக்க பண்ணைகளை காற்றோ ட்டமாக வைத்திருக்க வேண்டும். தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்தல், பண்ணையை சுற்றி மரங்கள் வளர்த்தல் என தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ×