search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கொட்டப்படும் கோழிகள்
    X

    வெள்ளாற்றில் கொட்டப்பட்டு உள்ள கோழிக்கழிவுகளை படத்தில் காணலாம். 

    திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கொட்டப்படும் கோழிகள்

    • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மர்மமான முறையில் கோழிகள் கொட்டப்படுகின்றன.
    • அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அருகே ஆவினங்குடி அருகாமையில் உள்ள வெள்ளாற்றில் குவியலாக இறந்து கிடைக்கும் பிராய்லர் கோழிகள். இந்த பிராய்லர் கோழிகளை மர்ம நபர்கள் வெள்ளாற்றில் கொட்டி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியாக பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கு செல்லும் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் முகத்தில் துணியை வைத்து மூடிக்கொண்டு துர்நாற்றம் தாங்காமல் சென்று வருகின்றனர். ஒரே சமயத்தில் ஏராளமான கோழிகள் இறந்தது எப்படி அல்லது கோழிகள் நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதேனும் தொற்று நோய் காரணமாக என சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

    இதனால் அப்பகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்கள் கோழிகள் இழுத்துச் சென்று போடுவதால் தற்போது சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. மர்மமான முறையில் கோழிகளை ஆற்றில் கொட்டி சென்றவர்கள் யார் என்று கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து கிடக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×