search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருப்பு பேட்ஜ்"

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்ட இணை செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் பூமிநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, கருவூல கணக்குத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி, பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பாளர் அப்துல் நஜ்முதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    • ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட கோரி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
    • பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் பணியா ற்றும் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட கோரி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள், உதவி ஆசிரியர் பரத் ஆகியோர் தாக்கப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிடக் கோரி வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

    • கடலாடி அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 42 ஆண்டு பழமையான அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அது தற்போது சேதமடைந்த நலையில் உள்ளது.

    இதனால் மாணவ- மாணவிகள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்களுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். வகுப்பறையில் கருப்பு பேஜ் அணிந்து பாடங்களை கற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிரா மத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் என்பதால் சேதமடைந்துள்ளது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

    பல முறை ேகாரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இவர்கள் போராட்டத்துக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்காலில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செருமாவிலங்கையில், பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து கல்லூரி பேராசிரியர் தாமோதரன் கூறியதாவது:-

    2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பேராசிரியர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் அளிக்கவில்லை. எனவே பேராசிரியர் கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரியில் அமைந்துள்ள என்ஜினியரிங் கல்லூரியில் அங்குள்ள பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

    ×