search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "black badge"

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர் பேசினார். மாவட்ட இணை செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் பூமிநாதன், மாவட்ட செயலாளர் முனியசாமி, சிவகங்கை மாவட்ட முன்னாள் தலைவர் சுரேஷ்குமார், கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி, கருவூல கணக்குத்துறை மாவட்ட செயலாளர் ஜெனிஸ்ட்டர், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாலுசாமி, பொதுப்பணித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்பாளர் அப்துல் நஜ்முதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    • அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
    • வருகிற 4-ந் தேதி ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று இம்மானுவேல் கூறினார்.

    நெல்லை:

    ஆவின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி இன்று நெல்லை ரெட்டியார்பட்டி யில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். போராட்டத்திற்கு விற்பனை பிரிவை சார்ந்த இம்மானுவேல் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    பெரும்பாலான துறை களை சார்ந்த அரசு ஊழி யர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு விட்டது. நாங்கள் எங்களுக்கு வழங்கப்படாததை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக பொங்க லுக்கு முன்னதாக அடை யாள போராட்டம் நடத்தி னோம். ஆனால் எங்களுக்கு அகவிலைப்படி வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே அகவிலைப்படி உயர்வு கேட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுடைய கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் வருகிற 4-ந் தேதி நெல்லை பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் ரெட்டியார் பட்டி ஆவின் வாயில் முன்பு ஒருநாள் அடையாள உண் ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலாடி அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே 42 ஆண்டு பழமையான அரசு பள்ளிக்கூடம் உள்ளது. அது தற்போது சேதமடைந்த நலையில் உள்ளது.

    இதனால் மாணவ- மாணவிகள் புதிய கட்டிடம் கட்டித் தரக்கோரி பெற்றோர்களுடன் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். வகுப்பறையில் கருப்பு பேஜ் அணிந்து பாடங்களை கற்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலாடி அருகே ஆதஞ்சேரி கிராமத்தில் மீனவர்கள், கூலி தொழிலாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த கிரா மத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடம் கடந்த 42 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடம் என்பதால் சேதமடைந்துள்ளது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று மாணவர்கள் கருதுகின்றனர்.

    பல முறை ேகாரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு வந்தனர். இவர்கள் போராட்டத்துக்கு பெற்றோர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இவர்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரைக்காலில் கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த செருமாவிலங்கையில், பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 30-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கடந்த 20 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வை வலியுறுத்தி நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து கல்லூரி பேராசிரியர் தாமோதரன் கூறியதாவது:-

    2007 ஆம் ஆண்டுக்கு பிறகு பேராசிரியர்களுக்கு எந்தவித பதவி உயர்வும் அளிக்கவில்லை. எனவே பேராசிரியர் கான பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். புதுச்சேரியில் அமைந்துள்ள என்ஜினியரிங் கல்லூரியில் அங்குள்ள பேராசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஒரு வார காலமாக வகுப்புகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

    விருத்தாசலம் அருகே ஊதிய உயர்வு வழங்க கோரி பள்ளியில் தலைமை ஆசிரியர் கருப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பாலை கொல்லை புதுப்பேட்டையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த 150 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் நிர்வாகியாக வெள்ளையன் உள்ளார். இவரது மகன் கிருஷ்ணசாமி (வயது 41) தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    பள்ளியின் நிர்வாகி வெள்ளையனுக்கும் வட்டார கல்வி அலுவலருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக வட்டார கல்வி அலுவலர் கடந்த 1.4.2018 முதல் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமிக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. மேலும் பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவ- மாணவிகளுக்கு சீருடை மற்றும் முதல் பருவ பாட புத்தகங்களும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனை கண்டித்தும், தனக்கு ஊதிய உயர்வு வழங்க கோரியும் தலைமை ஆசிரியர் கிருஷ்ணசாமி இன்று பள்ளியில் உள்ள தனது அறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மேலும் அவர் தனது சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.

    தலைமை ஆசிரியர் கருப்புபேட்ஜ் அணிந்து உண்ணாவிரதம் இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×