search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி பிறந்த நாள்"

    • தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.
    • டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்ட 2752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவ வடிவில் அணிவகுத்து நின்றனர்.

    டிரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சியில் தத்ரூபமாக அமைந்திருந்த கருணாநிதியின் படம்.

    • பேரணாம்பட்டு ஒன்றியம் சார்பில் கொண்டாட்டம்.
    • ஏராளமானோர் பங்கேற்பு.

    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளையொட்டி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் கொண்டாடப்பட்டது.

    பேரணாம்பட்டு வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்லலகுப்பம். குண்டல பல்லி. சாத்கர் கள்ளிப் பேட்டை அம்பேத்கர் நகர் சின்னதாமல் செருவு . கொத்தப்பள்ளி. பொகலூர். மேல்பட்டி போன்ற இடங்களில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

    இதில் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்களான ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜி.பரசுராமன். ரமேஷ் எம்.வி.குப்பம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர். எஸ் ஒ முல்லா ஏரிகுத்தி சிட்டி பாபு. ஒன்றியக்குழு துணைத்தலைவர் டி.லலிதா டேவிட் சின்னதாமல் தி.மு.க.வை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர்  கொண்டாடினர். 

    திருப்புவனத்தில் நடந்த   பிறந்த நாள் விழாவில்  கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.  

    நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி  தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நாகூர்கனி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    மானாமதுரை நகரில் தி.மு.க.வினர் ஊர்வலமாக  சென்று பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி  படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.   பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது. 

    இதில் மானாமதுரை நகர்மன்ற  தலைவர் மாரியப்பன்கென்னடி,  ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் பாலசுந்தரம்,   கவுன்சிலர்  சதீஷ்குமார் உள்ளிட்ட  நிர்வாகிகள்,ந கராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    மானாமதுரை   அண்ணா சிலை பகுதியில் கருணாநிதி படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மலர் தூவி கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார்.  இளையான்குடி ஒன்றியம்  தாயமங்கலம்  கிராமத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

    அங்கு வசிக்கும் நரிகுறவர் இனமக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  பல கிராம ங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   கொடி  ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க  தலைவர் சுப. தமிழரசன், மாநில மாற்றுதிறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்ப ராஜ்,  சிப்காட் காளியப்பன், தாயமங்கலம் தி.மு.க.  செயலாளர்  சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    விருதுநகர் மாவட்டத்தில் கோட்டாட்டசியர் உள்பட அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளர்ன. அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி சாத்தூர் கோட்டாட்சியராக இருந்த புஷ்பா இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருமங்கலம் கோட்டாட்சியர் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

    அருப்புக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகரன் நரிக்குடிக்கு, திருச்சுழி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி சாத்தூருக்கும், மருத்துவ விடுப்பிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் சத்ய சங்கர் வத்ராயிருப்பிற்க்கும், இங்கு பணிபுரிந்த சத்யாவதி விருதுநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் சிறுசேமிப்பு வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ் நரிக்குடிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    ×