search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi's birthday"

    • முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மத்திய பேருந்து நிலைய தொ. மு.ச., ஆட்டோ நண்பர்கள் ஏற்பாட்டில் வசந்தம் முதியோர் இல்லத்தில் இனிப்பு மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான செல்வராஜ் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    வாலிபாளையம் செயலாளர் மு.க. உசேன், தி.மு.க., மாநகர நிர்வாகிகள் சிவபாலன், திலகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சசிகுமார், வாலிப்பாளையம் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சதிஷ்குமார் மற்றும் மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகளும், மத்திய பேருந்து நிலைய தொ.மு.ச., ஆட்டோ நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.
    • சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.

    மங்கலம்:

    முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் 100 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், பூமலூர் ஊராட்சி-கிடாதுறை பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் தலைமையிலும் தி.மு.க.வை சேர்ந்த கிடாதுறை கே.பி.சீனிவாசன் ஏற்பாட்டிலும் 400 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.பின்னர் முத்தமிழ் அறிஞர் பூங்கா வனம் என பெயரிடப்பட்டு பெயர்ப்பலகை திறக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நடுவேலம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.17,62,000 மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகளுக்கான கட்டிடத்தை செல்வராஜ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    பின்னர் சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ., ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. பல்லடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.மேலும் கட்சியின் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் வக்கீல்குமார், மாவட்ட மகளிர்அணி துணைச்செயலாளர் நந்தினி, பல்லடம் ஒன்றியகுழு தலைவர் தேன்மொழி, மாவட்ட பிரதிநிதியும், பூமலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான செந்தில்தியாகராஜன், பூமலூர் ஊராட்சி மன்றத்தலைவர் பிரியங்கா, பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், அவைத்தலைவர் பரமசிவம், பூமலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் தங்கராஜ் , தி.மு.க. சரண்சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது.
    • ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. திருப்–பூர் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. புதிய உறுப்பினர் சேர்க்கை பணி குறித்தும், கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் குறித்தும் விளக்கி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான முறை–யில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணநிதியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

    கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, ஏப்ரல் மாதம் முதல் அறிவிக்கப்பட்டு 1 கோடி புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்குடன் பணியாற்றி வருகிறோம். தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர ஒன்றிய, பகுதி, பேரூர் செயலாளர்கள் முனைப்புடன் செயல்பட்டு ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வருகிற 30-ந் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை பணியை முடிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உரிமையை பெற்று தந்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் இந்த கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் துணை செயலாளர்கள் குமார், நந்–தினி, சேகர், பொருளாளர் சாமிநாதன், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை பொதுக்–குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    பண்ருட்டி:

    பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி காந்தி பூங்காவில் இருந்து தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், பண்ருட்டி நகர கழக செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத் சிவா, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள்தணிகை செல்வம், ஆனந்தி, மாவட்ட மாணவரணி தென்னரசு, நகர தி.மு.க. பொருளாளர் கவுன்சிலர் ராமலிங்கம், முத்து வேல் நகர துணை செயலாளர்கவுரி அன்பழகன் வழக்கறிஞர் அணி பரணிசந்தர், இளைஞரணி சம்பத், பாலச்சந்தர் பார்த்திபன், மதியழகன், ரஜகிரி, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    ×