என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்
Byமாலை மலர்3 Jun 2022 12:17 PM GMT (Updated: 3 Jun 2022 12:17 PM GMT)
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பண்ருட்டி:
பண்ருட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி காந்தி பூங்காவில் இருந்து தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ.டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன், பண்ருட்டி நகர கழக செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு சென்று நான்கு முனை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நகரமன்ற துணைத் சிவா, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள்தணிகை செல்வம், ஆனந்தி, மாவட்ட மாணவரணி தென்னரசு, நகர தி.மு.க. பொருளாளர் கவுன்சிலர் ராமலிங்கம், முத்து வேல் நகர துணை செயலாளர்கவுரி அன்பழகன் வழக்கறிஞர் அணி பரணிசந்தர், இளைஞரணி சம்பத், பாலச்சந்தர் பார்த்திபன், மதியழகன், ரஜகிரி, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி திருவுருவப் படத்திற்கு நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X