search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
    X

    கருணாநிதி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தி.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் கருணாநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தி.மு.க. ஒன்றிய ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. முன்னாள் அவைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் தொடங்கிய கூட்டத்தில் ஜெரீனாக்காடு கிளை செயலாளர் குணசேகரன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு பேசியதாவது:-

    வருகிற 3-ந் தேதி கழக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் அனைத்து கிளைகளிலும் விமர்சையாக கொண்டாடப்பட வேண்டும், அங்குள்ள கொடிகம்பங்களில் கொடியேற்றி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட வேண்டும், மேலும் வருகிற 17-ந் தேதி ஏற்காட்டில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ''

    இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் கட்சியை சேர்ந்த கிளை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய துணை செயலாளர்வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவா, அவை தலைவர் சின்னதம்பி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×