search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐசிசி விருது"

    • நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.
    • 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நடுவரான மரைஸ் எராஸ்மஸ், சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2006-ம் ஆண்டு இவர் தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நடுவராகப் பணியாற்றினார்.

    அதுமுதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் நடுவராக பணியாற்றியுள்ளார். 3 முறை ஐசிசி-யின் சிறந்த நடுவர் விருதை இவர் வென்றுள்ளார்.

    தற்போது 61 வயதாகும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட்டில் தன்னுடைய பங்களிப்பு இருக்கும் எனக் கூறியுள்ளார்.

    • டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.
    • ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும்.

    மும்பை:

    2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

    இவர் 2022-ம் ஆண்டில் 31 டி20 போட்டிகளில் விளையாடி 1164 ரன்கள் குவித்துள்ளார். 46.56 சராசரி மற்றும் 187.46 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டில் சூர்யகுமார் யாதவ் 68 சிக்சர்களை விளாசியுள்ளார். 2 சதங்கள் மற்றும் 9 அரை சதங்களை பதிவு செய்துள்ளார்.

    மொத்தம் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 1578 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும் 13 அரை சதங்களும் அடங்கும்

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் ஷா அப்ரிடி இடம்பிடித்துள்ளார்.
    • சிறந்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் 2 வீரர்கள் இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாலர் ஷாஹின் ஷா அப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அடில் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி டி20 உலக கோப்பை தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷீத் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.
    • பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய வீரர் அக்சர் பட்டேல், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்திய ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ள ரிஸ்வான் ஆசிய கோப்பை மற்றும் பாகிஸ்தான் மண்ணில் நடந்து முடிந்த 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அதிக ரன்கள் அடித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல், பெண்களுக்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இந்திய துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் வங்காளதேச அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இந்திய டெஸ்ட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் #ICC #RishabhPant
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஐசிசியின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் ஆகிய 3 விருதுகளுக்கு தேர்வாகி உள்ளார். மூன்று விருதுகளையும் வெல்லும் முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.



    2018-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ரிஷப் பந்த் தேர்வாகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராகவும், ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் சதம் அடித்து அசத்தியவர் ரிஷப் பந்த். அத்துடன் ஒரு டெஸ்டில் அதிக கேட்ச் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

    21 வயதாகும் ரிஷப் பந்த் நாட்டிங்காமில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2 சதம், 2 அரைசதங்களுடன் 696 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 49.71 ஆகும். டெஸ்ட் போட்டியில் 40 கேட்ச்கள் பிடித்ததுடன், இரண்டு ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.
    2018-ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார். #ICC #ViratKohli
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர்களுக்கான விருதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி 3 ஐசிசி விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

    2018-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் (சோபர்ஸ் டிராபி), சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை தட்டிச் சென்றுள்ளார். இதன் மூலம் விராட் கோலி புதிய வரலாறு படைத்தார். ஒரே ஆண்டில் (சிறந்த வீரர், டெஸ்ட், ஒரு நாள் போட்டி) 3 ஐசிசி விருதுகளை பெற்ற முதல் வீரர் ஆவார்.

    மேலும் 2018-ம் ஆண்டின் டெஸ்ட் கேப்டன் மற்றும் ஒரு நாள் போட்டி கேப்டனாகவும் விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார்.



    கோலி கடந்த ஆண்டில் 13 டெஸ்டில் விளையாடி 1,322 ரன் எடுத்தார். சராசரி 55.08 ஆகும். இதில் 5 சதம் அடங்கும். 14 ஒரு நாள் போட்டியில் விளையாடி 1,202 ரன் எடுத்தார். இதில் 6 செஞ்சூரிகள் அடங்கும். சராசரி 133.55 ஆகும். பத்து 20 ஓவர் போட்டியில் விளையாடி 211 ரன் எடுத்துள்ளார்.

    கடந்த ஆண்டில் அவர் டெஸ்ட், மற்றும் ஒரு நாள் போட்டியில் மிகவும் அபாரமாக விளையாடியதால் ஆண்டின் சிறந்த வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் என 3 விருதுகளை அள்ளிச் சென்றுள்ளார்.
    ×