search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா ஜாஸ் பட்லர்?
    X

    விருது பட்டியலில் இடம்பிடித்துள்ள வீரர்கள்

    நவம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா ஜாஸ் பட்லர்?

    • ஐ.சி.சி.யின் பிளேயர் ஆஃப் தி மன்த் விருது பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் ஷா அப்ரிடி இடம்பிடித்துள்ளார்.
    • சிறந்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து அணியின் 2 வீரர்கள் இடம் பெற்றனர்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்கள் பெயரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பந்துவீச்சாலர் ஷாஹின் ஷா அப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், அடில் ரஷீத் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

    பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாஹின் ஷா அப்ரிடி டி20 உலக கோப்பை தொடரில் தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் பல விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் இடம் பிடித்துள்ளார்.

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷீத் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியன் மூலம் இந்தப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

    இந்த மூன்று வீரர்களில் ஒருவர் ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    Next Story
    ×