search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐக்கிய அமீரகம்"

    தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவியை ஏற்க வேண்டும் என மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFlood #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    கேரள மழை வெள்ளத்துக்கு நிவாரணமாக ஐக்கிய அமீரக அரசு ரூ.700 கோடி தருவதாக கூறியது. ஆனால், பேரிடர் சமையத்தில் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதில்லை என மத்திய அரசு கொள்கை முடிவு வைத்துள்ளதாக கூறப்பட்டு ஐக்கிய அமீரகத்தின் நிதியுதவியை ஏற்க மறுப்பதாக தகவல்கள் வெளியானது.

    இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசுகையில், கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட வீரர்களுக்காக ஆகஸ்ட் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். மற்றொரு நாடு நல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.

    2016 தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைப்படி வெளிநாட்டு நிதியை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், இது தொடர்பாக மத்திய அரசு பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. முடிவெடுக்கும் போது பார்க்கலாம் என கூறினார்.
    பணி அனுமதிக்காலம் முடிந்து தங்கியுள்ள வெளிநாட்டினர் எவ்வித தண்டனையும் இன்றி நாடு திரும்பும் பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. #UAEAmnesty2018
    துபாய்:

    எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான ஐக்கிய அமீரகத்தில் சுமார் 2.8 மில்லியன் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். 

    இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர்.

    பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி அனுமதிக்காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு வேலை நீட்டிப்பு மற்றும் ஊதியத்தை வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மறுத்துவிட்டன. 

    இது தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. விசாக்காலம் முடிந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் அவர்கள் தாய்நாடு திரும்புவதிலும் சிக்கல் இருந்தது.



    இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அமீரக அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த பொதுமன்னிப்பு திட்டம் மூலம் சட்டவிரோதமாக இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நலனாக இருக்கும். இப்போதைய திட்டப்படி அவர்கள் நாட்டைவிட்டு அபராதம் எதுவும் செலுத்தாமல் வெளியேறலாம்.

    மேலும், வேலை இல்லாதவர்கள் வேலையை தேடிக்கொள்ள 6 மாதங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. இன்று முதல் பொதுமன்னிப்பு அமலாகியுள்ளதால் பலர் தங்களது சொந்த நாடு திரும்ப தங்களது நாட்டு தூதரகத்தில் குவிந்தனர். இன்று முதல் நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாய்நாடு திரும்ப விண்ணப்பித்தனர்.

    மூன்று மாதங்களுக்கு இந்த பொதுமன்னிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ஐக்கிய அமீரகத்தின் துபாய் லாட்டரியில் இந்தியர்களில் ஒருவர் ரூ.6.8 கோடியும், மற்றொருவர் பி.எம்.டபிள்யூ காரும் வென்றுள்ளனர். #DubaiLottery
    துபாய்:

    ஐக்கிய அமீரகத்தில் பிரபலமான துபாய் லாட்டரியில் அவ்வப்போது இந்தியர்களுக்கு பரிசுமழை விழுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. பரிசாக கிடைக்கும் பொருளோ, பணமோ அதற்கு வரி இல்லை என்பதால், அமீரகத்தில் இந்த லாட்டரிக்கு கிராக்கி அதிகம்.

    இந்நிலையில், குவைத்தை சேர்ந்த இந்தியரான சந்தீப் மேனன் என்பவருக்கு ரூ.6.8 கோடி லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்துள்ளது. “வாழ்க்கையில் என்னைக்குமே எதையும் ஜெயிச்சது கிடையாது. ஆனால், இப்போது லாட்டரியில் பணம் ஜெயித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறியுள்ளார் சந்தீப் மேனன்.

    மற்றொரு இந்தியரான சாந்தி போஸ் என்ற பெண், பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வென்றுள்ளார். 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த லாட்டரியில் இதுவரை 132 இந்தியர்கள் பரிசு வென்றுள்ளதாக கலீஜ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

    கடந்த மாத தொடக்கத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் தாய்நாட்டுக்கு கிளம்பும் நேரத்தில் சுமார் 6 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 
    ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர், தான் குடும்பத்துடன் சிறைக்கைதிகளை போல அவதிப்படுவதாகவும் அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    துபாய்:

    கேரளாவை சேர்ந்த மதுசூதனன் கடந்த 1979-ம் ஆண்டு ஷார்ஜா வந்துள்ளார். அங்கு கூலி வேலை செய்த அவர் 1988-ம் ஆண்டில் இலங்கையிலிருந்து வந்து அங்கு கூலி வேலை செய்த ரோகினி என்பவரை திருமணம் செய்துள்ளார். மூன்றாண்டுகளில் அவரது பணி அனுமதிக்காலம் முடிந்ததால் அவர் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

    ஆனால், ஒரு குழந்தை பிறந்து விட்ட நிலையில் குடும்பத்தை பிரிய முடியாது என்பதால் அவர் அங்கேயே சட்டவிரோதமாக தங்க தொடங்கினார். அதன் பிறகு சரியான வேலை கிடைக்காமல் குடும்பத்தை ஓட்டிய அவருக்கு அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்தன.

    முதல் குழந்தைக்கு மட்டுமே அவரால் பாஸ்போர்ட் பெற முடிந்தது. மதுசூதனன் மற்றும் அவரது மனைவி இரண்டு பேரும் சட்டவிரோதமாக தங்கியுள்ளதால், மற்ற குழந்தைகளுக்கு எவ்வித ஆவணமும் பெற முடியவில்லை. பள்ளிக்கு கூட அனுப்ப முடியவில்லை.

    இதனால், பள்ளி செல்லாமலேயே வளர்ந்த 4 குழந்தைகளுக்கும் அவரது தாயார் வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேற பல முறை அரசு பொது மன்னிப்பு வழங்கினாலும், தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டும் என்பதால் அவர் அங்கிருந்து வெளியேறவில்லை.

    மனைவி இலங்கையை சேர்ந்தவர், குழந்தைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லை இதனால், அவர் இந்தியாவுக்கும் திரும்ப முடியாது. வெறும் பிரெட் மற்றும் தண்ணீரை குடித்து சிறைக்கைதிகளை போல தங்களது வாழ்க்கை நடந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ள மதுசூதனன், அமீரக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    ×