search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏஜெண்டுகள்"

    • ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம்.
    • ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது.

    ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி வழக்கு தொடர்பாக, 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    7000 ஏஜெண்டுகளை கண்டறிந்து, மோசடி செய்யும் நோக்கில் பொதுமக்களை ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்த 500 ஏஜெண்டுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    500 ஏஜெண்டுகளில் 400 பேருக்கு சம்மன் அனுப்பி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் கமிஷனாக பெற்று சேர்த்த 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது.

    ஏஜெண்டுகளின் 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.2,438 கோடி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரூ.96 கோடி வங்கி கணக்கு மற்றும் 103 அசையா சொத்துக்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நான் உயர் ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வருபவர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையத்தை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் ரூ.1 லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தார். இதற்காக தனி அலுவலகம், ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடமிருந்து 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளை பெற்றார். இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக தலைமறை வானார். சென்னையில் பதுங்கியிருந்த ஷமீர் அகமதுவை கண்டறிந்த ஏஜெண்டுகள், அவரிடம் லாவகமாக பேசி மூரார்பா ளையத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஓப்ப டைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்க ளிடம் இருந்து முதலீடு களை பெற ஷமீர் அகமது கையாண்ட யுக்திகள் குறித்த தகவல்கள், அவரது ஏஜெண்டுகள் மூலமாக வெளியாகியுள்ளது. பொது மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் ஷமீர் அகமது வீடியோ எடுத்துக் கொள்ளார்.

    தன்னை நம்பி எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது பாருங்கள் என முதலீடு செய்ய வருபவர்களிடம் காண்பித்துள்ளார். உயர்ரக கார்களான ஆடி, வோல்ஸ் வேகன், பி.எம்.டபள்யு, ஜாகுவார் போன்ற வாகனங்களை வாங்கி அதில் பயணம் செய்வது. இதனை வீடியோ எடுக்கும் ஷமீர் அகமது, நீங்கள் அளிக்கும் பணத்தை சினிமா தொடர்புடையவர்களுக்கு வட்டிக்கு அளிக்கிறேன். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு பாதி தருகிறேன். மீதியை வைத்துதான் நான் உயர்ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வரு பவர்களிடம் கூறியுள்ளார். மேலும், உயர்ரக கார்கள், மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று வருவதால் முதுகு வலி ஏற்படு வதாகவும், விரைவில் ஹெலி காப்டர் வாங்க உள்ளதாகவும் கூறி யுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த மொத்தபண மான ரூ.70 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். மேலும், விரைவில் நடை பெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடனாக பணம் கேட்பதாகவும், நிறைய முதலீடுகளை பெற வேண்டுமென்று ஏஜெண்டு களிடம் கூறியுள்ளார். இவை யனைத்தையும் நம்பிய பொதுமக்கள் பல கோடி ரூபாயினை ஷமீர் அகமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது.
    • கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருச்சி:

    மது குடிக்கும் பழக்கத்தால் ஒருபுறம் இளைய தலைமுறை தள்ளாடி கொண்டிருக்க கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளால் மாணவர் சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது.

    முன்பெல்லாம் திருச்சி மாநகரில் தினமும் ஓரிரு கஞ்சா வழக்குகள் மட்டுமே பதியப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கும் கும்பல் அதிகம் பிடிபடுகிறது.

    ஆனால் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்யும் புள்ளிகள் எளிதில் தப்பி விடுகிறார்கள்.

    சமீபத்தில் திருச்சி மாநகரில் கஞ்சா வழக்கில் திருச்சி ராம்ஜி நகர் புது காலனி பகுதியைச் சேர்ந்த முழுமதி என்ற 60 வயது மூதாட்டி பிடிபட்டார். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதேபோன்று 110 கிராம் கஞ்சாவுடன் சுசிலா என்ற 43 வயது பெண்மணியும் போலீஸ் பிடியில் சிக்கினார்.

    இருவரும் குறைந்த அளவு கஞ்சா வைத்திருந்ததாக உடனடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவை சேர்ந்த பிராங்கிளின் ஜோசப் 28 என்ற இளைஞர் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் சிக்கினார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் நபர்களில் வெகு சிலரே ஜெயிலுக்கு செல்கிறார்கள். ஒரு கிலோவுக்கு கீழாக கஞ்சா வைத்திருப்பவர்கள் உடனடி ஜாமீனில் தப்பிக்க சட்டம் வழிவகை செயதுள்ளது. . இதனால் அவர்கள் மறுபடியும் களத்துக்கு வந்து விடுகிறார்கள்.

    இவ்வாறு கஞ்சா விற்பனையில் பிடிபடும் பெரும்பாலானவர்கள் திருச்சி ராம்ஜி நகர் பகுதியை மையமாக கொண்டு வசிப்பவர்களாக இருக்கின்றனர்.

    திருச்சி மாநகரில் பல இடங்களில் கணவன் மனைவி, குழந்தை குட்டிகள் என குடும்ப தொழிலாக, கூட்டுத் தொழிலாக செய்கின்றனர். இந்த கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் கல்லூரி மாணவர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள.

    செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்பினால் வாடிக்கையாளரை தேடிச் சென்று கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை சப்ளை செய்யப்படுகிறது. இதற்கு போலீசார் கடிவாளம் போட்டுவிட்டதால் கஞ்சா விற்பனை ஏஜெண்டுகள் புதிய யுக்திகளை கையாள தொடங்கியுள்ளனர்.

    காந்தி மார்க்கெட் போன்ற தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் சாதாரண இட்லி கடைகள், தள்ளுவண்டியில் பழம்விற்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலருக்கும் கஞ்சா பொட்டலங்கள் சப்ளை செய்து அவர்கள் மூலமாக விற்பனை ஜோராக நடத்தும் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளன.

    திருச்சி மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை வரை 118 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 136 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் வசம் இருந்து 51.9 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேலும் 3 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்த கஞ்சா வேட்டை தொடர்பாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்ய பிரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது;-

    திருச்சி மாநகருக்கு பெங்களூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுகிறது. பஸ்கள் மற்றும் கார்களில் கடத்தி வருகின்றனர்.

    கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக 32 இடங்களை ஹாட் ஸ்பாட் ஆக அடையாளம் கண்டு 24 மணி நேரமும் ரோந்து போலீசார், ஹைவே பேட்ரோல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அதுமட்டுமல்லாமல் திருச்சி மாநகரில் இருக்கும் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு கிளப்புகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    நடப்பாண்டில் மட்டும் 755 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் 29 பேருக்கு சரித்திர பதிவேடு திறக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 4 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த ஆன்ட்டி டிரக்ஸ் கிளப்புகளில் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், போதை மீட்புமைய பணியாளர்கள், மனநல மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இதில் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பவர்கள் மீட்கப்படுகிறார்கள். தொடக்க நிலையில் இருப்பவர்கள் அடிமை ஆவதற்கு முன்பாக அந்த மாய வலையில் இருந்து மீட்கப்படுகிறார்கள்.

    மாநகரப் பொருத்தமட்டில் குடிசை பகுதிகள் மற்றும் காந்தி மார்க்கெட் பகுதிகளில் அதிகம் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. கஞ்சா கிடைக்காத பட்சத்தில் ஒரு சில இளைஞர்கள் போதை ஊசி செலுத்தும் வழக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

    இது மிகவும் அபாயகரமானது. இதனை விற்பனை செய்யும் நபர்கள் மருந்து கடைகளுக்கு சென்று வலி மாத்திரைகளை வாங்கி அதை பொடியாக்கி வேறு சில போதை வஸ்துக்களை கலந்து ஊசியாக விற்பனை செய்கிறார்கள்.

    இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில் மருந்து கடை விற்பனையாளர்கள் தரப்பிலும் சிலரை பங்கேற்க வைத்தோம். மருத்துவர்களின் குறிப்பு இல்லாமல் போதை அளிக்கும் மருந்துகளை மாத்திரைகளை விற்பனை செய்தால் உரிமத்தை ரத்து செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    மேலும் கஞ்சா விற்பனையில் அதிகம் ஈடுபடும் பகுதியில் மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்த மாநில அரசுக்கு பரிந்துரை செய்யவும் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் பெரும்பாலும் மதுவுடன் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

    இதன் மூலம் நிதானம் இழந்து என்ன செய்கிறோம் என்று தெரியாமல் பல கொடூரங்களை அரங்கேற்றுகிறார்கள். ஆகவே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையை தடுக்க மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.
    • ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம்.

    செம்பட்டு:

    வெளிநாட்டு வேலையில் அதிக சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்து ஏராளமானோர் வெளிநாடு சென்று அங்கு ஏமாற்றப்படுவது வாடிக்கையாக உள்ளது. அதுமட்டுமின்றி பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஏமாற்றப்படுகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இவ்வாறு ஏமாற்றப்பட்ட திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 186 பேர் மலேசியா நாட்டில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

    பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏஜெண்டுகள் மூலமாக சுற்றுலா விசாவில் மலேசியா சென்ற அவர்கள் அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். இதை கண்டறிந்த மலேசிய அரசு சுற்றுலா விசா மூலமாக இங்கு வேலைக்கு வரக்கூடாது என கூறி, அவர்களை ஒரு அறையில் அடைத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரையும் திரும்பி செல்ல அறிவுறுத்தி இருக்கிறது. மேலும் அவர்களுக்கு முறையாக சாப்பாடு வழங்காமலும், சரியான வசதிகள் செய்து கொடுக்காமலும், குடிப்பதற்கு கழிப்பிட நீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வற்புறுத்தியதாக மலேசியாவில் இருந்து திரும்பியவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறியதாவது:-

    ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு யாரும் செல்ல வேண்டாம். அவ்வாறு சென்றால் பணத்தை இழப்பதுடன் அவமானப்படுத்தப்படுவோம். எனவே யாரும் ஏஜெண்டுகளை நம்பி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டாம். ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை கொடுத்து மலேசியாவிற்கு சென்றோம். தற்போது பணத்தை இழந்து பரிதவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோவையில் ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலில் ஒருவரான கிதர் முகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரிகள் போல நடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார். #FakeCurrency
    கோவை:

    கோவையில் பிடிபட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(68) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

    இக்கும்பல் கடந்த 2 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியது.

    இதைத்தொடர்ந்து கிதர் முகமதுவிடம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கோவை-கேரள எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் சுந்தர், கிதர் முகமது ஆகியோர் அதிக நாட்கள் இருந்துள்ளனர். எனவே அங்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த கும்பல் வியாபாரிகள் போல நடித்து கள்ள நோட்டுகளை மோட்டார் சைக்கிள்களில் எளிதாக கடத்தி சென்று புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்ற சம்பவம் அடிக்கடி நடந்தது. இச்சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் யார்-யார்? என்பது குறித்து கிதர் முகமதுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு பட்டியல் தயாரித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் போலீசில் பிடிபட்ட தகவலறிந்து ஏஜெண்டுகள் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கடைசியாக யார்- யாரிடம் பேசினார்கள்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

    மத்திய அரசு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு இந்த கும்பல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுந்தர் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் மீது கோவை போத்தனூர், சரவணம்பட்டி, வெரைட்டிஹால் போலீஸ் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி. பிரிவு மட்டுமல்லாது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல் மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது.

    கோவை பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டு கண்டுகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தா கீர்(40) என்பவர் தலைமையில் காரில் வந்த 6 பேர் கும்பல் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது எங்குமே மாற்ற முடியாது என்ற நிலையிலும் அவர்கள் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாய் பாபா காலனியில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது தெரியாமல் இந்த கும்பல் பழைய நோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் எனவும், கோவை வந்த பிறகு தகவல் கிடைக்கவே அவர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    ×