search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ சோதனை"

    • இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    பனைக்குளம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற ராமேசுவரம் கபே உணவகத்தில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகப்படும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று 5 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் உள்ள ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

    சேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆயுதங்கள் வைத்திருந்தால், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய்தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகளில் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

    மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. சேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் தாவூத் வீட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
    • குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

    சென்னை:

    பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 2 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி இருந்து சதி திட்டம் தீட்டியது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக 1000 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ள போலீசார் இருவரும் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள்? என்பது பற்றிய தகவல்களை ரகசியமாக திரட்டி வைத்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை உள்பட 5 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் மண்ணடி விநாயகர் கோவில் தெருவில் ஒரு வீட்டில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். மண்ணடி மூட்டைக்காரன் தெருவிலும், திருவல்லிக்கேணியில் லாட்ஜ் ஒன்றிலும் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றது.

    சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்டி இருப்பதாக கூறப்படுகிறது. பெங்களூரு குண்டு வெடிப்பு குற்றவாளிகள் இருவரும் சென்னையில் தங்கி இருந்த போது பல்வேறு இடங்களுக்கு சென்றிருந்தனர். அதன் அடிப்படையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்றைய சோதனையை நடத்தி உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் பழங்கோட்டை தெருவில் ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் இன்று காலை சுமார் 7 மணி முதல் தேசிய புலனாய்வு முகமை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது.

    ஷேக் தாவூத் மீது கடந்த 2018 மற்றும் 2020 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஆயுதங்கள் வைத்திருத்தல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு பண பரிவர்த்தனை செய் தது, இளைஞர்களுக்கு மூளை சலவை செய்து பயிற்சி அளித்தது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில்தான் பெங்களூரு ராமேசுவரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக எழுந்த சந்தேகத்தின் பெயரில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஷேக் தாவூத் மற்றும் அவரது தந்தை வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

    மேலும் இவர் இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர வலியுறுத்தியதாகவும், கடற்கரை பகுதியில் வைத்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. ஷேக் தாவூத் வீட் டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று முறைக்கு மேல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராஜா முகமது என்பவர் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டில் கேரளாவை சேர்ந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உதவி செய்தவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்திலேயே இந்த சோதனையும் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பயங்கரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
    • பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    கனடா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் இந்தியாவில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருட்கள் கடத்தல், சதி செயலில் ஈடுபடுதல் என பல்வேறு குற்றச்செயல்களை அவர்கள் செய்து வருகிறார்கள்.

    இந்த பயங்கரவாத அமைப்புடன் இந்தியாவில் உள்ள சில மாபியா கும்பல்கள் தொடர்பில் உள்ளனர். பயங்கரவாதிகளுக்கு தேவையான உதவிகளை அவர்கள் இந்தியாவில் இருந்து கொண்டு செய்து வருகின்றனர்.

    இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக பயங்கரவாத கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிரபல ரவுடிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் சண்டிகரில் உள்ள 30 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட முகில் சந்திரா கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னை கொரட்டூர் ரெட்டேரி கேனல் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகில் சந்திரா. குறும்பட இயக்குனரான இவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மாவோயிஸ்ட்டு வழக்கு ஒன்று தொடர்பாக சோதனை நடத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் கொரட்டூர் பகுதியில் வசித்து வருகிறார். இதையடுத்து அங்கு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தொடர்பாகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோதனையின்போது முகில் சந்திரா பயன்படுத்திய செல்போன் மற்றும் ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சோதனை முடிவில்தான் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது பற்றி விவரங்கள் வெளிவரும் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

    சென்னை:

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விசாரணைக்காக ஆஜராகினர்.

    இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள் அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022-ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

    இதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுத போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.

    அதன் அடிப்படையில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாம் தமிழர் கட்சி தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார் (33), நாம் தமிழர் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன் (40), மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர் பொறியாளர் பாலாஜி (33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.

    அதைதொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரட்டிய ஆவணங்களின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை சாட்டை துரைமுருகன், ரஞ்சித்குமார், இசை மதிவாணன், விஷ்ணு பிரதாப், பாலாஜி ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று சாட்டை துரை முருகன், இசை மதிவாணன், முருகன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

    • முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம்.
    • நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டு வருவதற்கு அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சீமான் 'மாலை மலர்' நிருபர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டவர்கள் மீது மத்திய அமைப்புகளை ஏவிவிட்டு விசாரணை நடத்துவது புதிது அல்ல. அந்த வகையில் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பரப்பி வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்கு தேசிய புலனாய்வு அமைப்பை ஏவி விட்டுள்ளனர்.

    முறைப்படி பதிவு செய்து கட்சி நடத்தும் நாங்கள் எல்லா விஷயங்களையும் அனுமதி பெற்றே செய்து வருகிறோம். சட்ட விரோதமாக பணம் வருவதாக கூறியே இந்த சோதனை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இதுபோன்ற பொய்யான விஷயங்களை கூறி எங்களை மிரட்ட வேண்டும் என்கிற எண்ணத்திலேயே என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்றுள்ளது.

    இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். பாரதிய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழர் விரோத நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்றே கருத வேண்டியுள்ளது.


    பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த சோதனையை பார்க்கிறோம்.

    நாங்கள் சரியான திசையில் பயணிப்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    எங்கள் கட்சி பிள்ளைகளை தொந்தரவு செய்வதன் மூலமாக அவர்களின் அரசியல் பணிகளை முடக்கிப் போட்டுவிடலாம் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. ஏதாவது தகவல்கள் வேண்டும் என்றால் என்னிடமே கேட்கலாம்.

    நேரடியாக என்னை அழைத்து விசாரணை நடத்த வேண்டியதுதானே? அதில் என்ன தயக்கம் என்றும் தெரியவில்லை. இதுபோன்ற சோதனைகளால் நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி விடலாம் என்று நினைத்தால் அது பாரதிய ஜனதா கட்சி போடும் தப்புக்கணக்காகவே அமையும். நாட்டை கொள்ளையடித்தவர்களே பயப்படாமல் இருக்கும் போது நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

    சென்னை:

    தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், நிதி திரட்டி பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், என்.ஐ.ஏ. சோதனையிடுவதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் வக்கீல்கள் சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்தனர்.

    என்.ஐ.ஏ. சோதனை தொடர்பாக வழக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவை பிற்பகலில் விசாரிப்பதாக கூறி அனுமதி அளித்துள்ளார்.

    • கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது.
    • கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர்.

    பெங்களூரு:

    ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் சர்வதேச அளவில் மிக பயங்கரமான தீவிரவாத இயக்கமாக கருதப்படுகிறது.

    அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் ரகசியமாக செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து அடிக்கடி என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆங்காங்கே அதிரடி சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருப்பதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரத்தை தூண்டவும் அந்த இயக்கத்தினர் சதி செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் உளவுத்துறைக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர்கள் மத்திய உள்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்த தகவலின் அடிப்படையில் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இரு மாநிலங்களிலும் 44 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    கர்நாடகாவில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் 31 இடங்களில் அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தினார்கள்.

    புனேயில் 2 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பயாந்தர் நகரிலும் ஒரு இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முற்றுகையிட்டு சோதனை நடத்தி வருகிறார்கள். மத்திய துணை நிலை ராணுவ பாதுகாப்புடன் இந்த சோதனை நடந்து வருகிறது.

    உள்ளூர் போலீசாரும் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளனர்.

    44 இடங்களில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது அங்கிருந்த 15 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். பிறகு அவர்களை மேலும் விசாரிப்பதற்காக அழைத்து சென்றனர். அவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கைதான 15 பேரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் ரகசிய தொடர்பில் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதற்கான ஆவணங்களையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இது தவிர சோதனை நடந்த இடங்களில் இருந்து லேப்டாப்புகள், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கைதான 15 பேரும் சமீப காலமாக ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினருடன் பல்வேறு வகைகளில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இந்த 15 பேர் மூலம் இந்தியாவின் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் நடத்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    இன்று நடந்த சோதனை மூலம் மிகப்பெரிய நாச வேலை சதி திட்டம் முறியடிக்கப்பட்டு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம்தான் புனே நகரில் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் இந்தியாவில் நாசவேலை செய்ய நிதி திரட்டியதும், பயிற்சி பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இன்றைய சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த அக்டோபர் மாதம் டெல்லியில் சில ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் தானே மாவட்டத்தில் நடந்த சோதனையிலும் ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர்களிடம் இருந்து ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர்.

    அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை போல போலியான ஆதார் அட்டை தயாரித்து சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் போலி அடையாள அட்டை தயாரித்து வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்த கும்பலை கைது செய்ய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

    இதேபோல் புதுச்சேரி, திரிபுரா, காஷ்மீர், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம், தெலுங்கானா, அரியானா மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று ஒரே நாளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    இந்த சோதனையின்போது அதிகாரிகளுடன், அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வேலை பார்த்து வந்த சகாபுதீன் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த அவர், போலி ஆதார் அட்டை மூலம் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

    இவர் கடந்த சில மாதங்களாக அதே கடையின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் நேற்று காலை ஒரு வீட்டில் திடீரென சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு தங்கியிருந்த முன்னா, மியான் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த முன்னா திரிபுரா மாநிலத்தில் வசிப்பது போல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னாவை கைது செய்தனர்.

    சென்னை பள்ளிக்கரணை பகுதியிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்காளதேச நபரின் புகைப்படத்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காண்பித்து அந்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால் வங்காளதேச நபர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்காததால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    அதேபோல் பல்லடம் அறிவொளிநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பெயர் பதிவு கொண்ட பட்டியலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் தேடி வந்த வங்காளதேச நபர் சில மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வங்காளதேசம் சென்று விட்டாரா? அல்லது வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறாரா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    அதன்பின்னர் ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லி அவர் வேலை செய்கிறாரா? என்று ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அவரும் பணியில் இருந்து நின்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நபர்கள் மீண்டும் அந்த பகுதியில் நடமாடினால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திச்சென்றனர்.

    புதுச்சேரி 100 அடி ரோட்டில் எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பழைய பொருட்கள் வைக்கும் குடோனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியுடன் நேற்று சென்றனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி சோதனை செய்தபோது, கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே.பாபு (வயது 26) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அவர் புதுச்சேரியில் கட்டிட வேலை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்திய செல்போன், 3 சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். புதுச்சேரியில் அவருடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா? வெளிநாடுகள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தஞ்சம் அடைந்தவர்களுக்கு, போலியான அடையாள அட்டை தயாரித்து தென் இந்தியாவில் யாராவது கட்டுமான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? என்றும் விசாரணை நடத்தினர்.

    அவர் வைத்திருந்த ஆதார் அட்டை எண்ணை போலீசார் சரிபார்த்தபோது, அதுபற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. எனவே அது போலியான ஆதார் அட்டையா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உண்மையான பெயர் பாபு என்பது தானா? என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கைதானவர் வங்காளதேசத்தை சேர்ந்தவரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே மேல் விசாரணைக்காக அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    இதற்கிடையே நேற்று நடந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் மாலையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஆள்கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் 2 பேரும், புதுச்சேரியில் ஒருவரும், திரிபுராவில் 21 பேரும், கர்நாடகாவில் 10 பேரும், அசாமில் 5 பேரும், மேற்கு வங்காளத்தில் 3 பேரும், தெலுங்கானா, அரியானாவில் தலா ஒருவரும் என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள், ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இவ்வாறு என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர்.
    • கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லை பிள்ளை சாவடியில் 100 அடி சாலையில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே ஆசிரமத்துக்கு சொந்தமான பகுதி உள்ளது.

    இதன் காம்பவுண்டு சுவரையொட்டி ஒரு சிறிய கேட் உள்ளது. இதற்குள் பழைய பொருட்கள் போட்டு வைத்துள்ள குடோன் உள்ளது.

    இதன் மாடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியோடு இன்று சோதனை செய்தனர்.

    அங்கு தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. பாபு (வயது 26) என்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணி முதல் 11 மணி வரை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின்போது, பாபுவிடம் இருந்து ஐபோன், ஆவணங்கள் ஆகியவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் அவரை கைது செய்து காரில் ஏற்றி அழைத்துச்சென்றனர். கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அவரை கொண்டுசென்று விசாரணை நடத்தினர். அவர் வெளிநாட்டிலிருந்து நபர்களை கடத்தி வந்து புதுவை உட்பட வெளி மாநிலங்களில் கொத்தடிமையாக விற்பனை செய்துள்ளாரா?

    எத்தனை பேரை அழைத்து வந்தார்? எங்கு விற்றுள்ளார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளோடு தொடர்புள்ளதா? ஏதேனும் சதி செயலில் ஈடுபட்டனரா? பயங்கரவாத செயல்களுக்கு துணை போனாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தாவில் செய்த குற்றத்தின் காரணமாக பாபுவை கைது செய்துள்ளதாக உள்ளூர் போலீசாரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுவையில் அவர் கட்டிட வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் வைத்திருந்த ஆதார் எண்ணை உள்ளூர் போலீசார் சோதனையிட்டதில் எந்த தகவலும் காட்டவில்லை. இதனால் அவரது பெயர், ஆதார் எண் அனைத்தும் போலியாக இருக்கக்கூடும் என தெரிகிறது.

    புதுவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வடமாநில வாலிபர் ஒருவரை கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர்.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மேலும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வங்கதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலி ஆதார் அட்டைகள் தயாரித்து, அதனை பனியன் நிறுவனங்களில் கொடுத்து பணியாற்றி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி போலி ஆதார் அட்டை மூலம் பணிபுரியும் தொழிலாளர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் பல்லடம் பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்றும் 3 பனியன் நிறுவனங்களில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சரி பார்த்து சோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரங்கள் மற்றும் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தும் பனியன் நிறுவனங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மதுரை:

    மதுரையில் இஸ்லாமிய இளைஞரிடம் தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் சிம் கார்டை பறிமுதல் செய்தனர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய அமைப்புகள் மற்றும் நபர்களிடம் தேசிய சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார்கள்

    தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அடிக்கடி சோதனை நடத்தி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள காஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜூதீன் (வயது 26) என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை சந்தேகத்தின்பேரில் அழைத்து சென்று போலீஸ் கிளப்பில் வைத்து விசாரணை நடத்தினர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பீகாருக்கு சென்றபோது சந்தேகத்துக்குரிய சிலரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக முகமது தாஜூதீனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    2 மணிநேர விசாரணை முடிவடைந்த நிலையில் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் சிம்கார்டை பறிமுதல் செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

    முகம்மது தாஜூதீனின் செல்போனில் பதிவான பல்வேறு தகவல்கள் ஆய்வுக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தாஜூதீன் யார், யாரிடம் அடிக்கடி பேசி உள்ளார் என்ற விபரத்தையும் சேகரிக்க திட்டமிட்டுள்ள தேசிய புலனாய்வு அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் தாஜூதீனிடம் விசாரனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனை தொடர்பாக முகமது தாஜூதீன் கூறியதாவது:-

    நான் பீகாருக்கு செல்லாத நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி எனது செல்போன், சிம் கார்டை எடுத்துச் சென்றுள்ளனர். இது போன்று இஸ்லாமிய இளைஞர்களை அச்சுறுத்துவதற்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையை முன்னிட்டு அந்த பகுதியில் உள்ளூர் போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ×