என் மலர்
இந்தியா

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்- 8 மாநிலங்களில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
- தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
- ரகசிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த மோதிராம் ஜாட் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மோதிராம் பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை கசியவிட்டது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
டெல்லி, மராட்டியம் (மும்பை), அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் சத்தீஸ்கர், அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 8 மாநிலங்களில் 15 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பல மின்னனு சாதனங்கள், முக்கியமான நிதி ஆவணங்கள், குற்றவியல் பொருட்கள் இந்த சோதனையின்போது கைப் பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
Next Story






