search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்கிரமிப்புகள் அகற்றம்"

    • சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.
    • உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையின் இருபுறங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது.

    குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாக தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

    சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது. மேலும் அப்பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது. இதனை அடுத்து நேற்று நெடுஞ்சாலை துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றிணைந்து ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து எல்லை மாரியம்மன் கோவில் வரை உள்ள 300-க்கும் மேற்பட்ட அக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஈரோடு ஆர்.கே.வி ரோடு, கிருஷ்ணா தியேட்டரில் இருந்து மணிக்கூண்டு, நேதாஜி ரோடு, கச்சேரி ரோடு முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

    அப்போது ஆர்.கே.வி ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருக்கும் போது அந்த பகுதியை சேர்ந்த கடைக்காரர்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்டாமல் அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கலைந்து போக செய்தனர்.

    அதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு பணிகளை பார்வையிட்டனர்.

    • சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.

    சின்னமனூர்:

    சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர்.

    இதையடுத்து, 15-வது நிதிக்குழு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா பிளாக், சிமென்ட் சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக திட்டப் பணிகளை மே ற்கொள்ள முடியவில்லை.

    இந்த நிலையில், திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை யடுத்து சின்னஓவுலா புரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன.

    இதேபோல இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, தெருவின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த முள் தடுப்பு வேலியும் அகற்றப்ப ட்டது. அப்போது சின்ன மனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.
    • கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.

    தேனி:

    தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றான தேனி-பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

    இதனைத் தொடர்ந்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் கணேசன், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடந்தது.

    அப்போது ஆக்கிரமிப்பாளர்களில் பெரும்பாலானோர் தாங்களாகவே முன்வந்து தங்களது கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தகர செட், பெட்டிகள், போர்டுகள் போன்றவற்றை அகற்றி கொண்டனர். இருப்பினும் கடைகள் முன்பு படிகள், பிளாட் பார்ம் போன்ற ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது.

    மேலும் சாலையின் அளவுகள் எவ்வளவு என்று வரைபடத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு சாலையின் அளவு குறைவாக இருக்கும் கட்டிடங்கள் முன்பு எத்தனை மீட்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று அளவீடு செய்யப்பட்டு பெயிண்ட் மூலம் குறிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர்களிடம் ஆக்கிரமிப்பு அளவு குறித்து அறிவுத்தப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி அல்லிநகரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் சலார் அப்துல் நாசர், நகர அமைப்பு ஆய்வாளர் கணேஷ் குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், தேனி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சதிஷ் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    அதுபோல ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தேனி துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
    • ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையில் திறந்து விடப்படும் நீர் செல்லும் ஆற்றுப்பகுதியில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு அதன் மூலம் 9 கண்மாய்களுக்கு நீர் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கெங்குவார்பட்டி அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புது தடுப்பணையின் நீர்த்தேக்க பகுதிகளை ஆக்கிரமித்து சிலர் தென்னை மரம், இலவமரம் மற்றும் எலுமிச்சை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வந்தனர்.

    இதனால் கண்மாய்களுக்கு நீர் கொண்டு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தனர்.

    இதன் அடிப்படையில் கடந்த மாதம் நீதிமன்றம் நீர் நிலை பகுதிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்துள்ள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றி நீர்நிலைப் பகுதிகளை மீட்டெடுக்க உத்தரவிட்டது. அதன் பேரில் பெரியகுளம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சவுந்தரம், மற்றும் உதவி பொறியாளர் கமலக்கண்ணன் தலைமையிலான பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ஜே.சி.பி. மூலம் நீர் நிலை பகுதியில் ஆக்கிரமித்து நடவு செய்யப்பட்ட 120 தென்னை மற்றும் 25 இலவமரங்கள் உள்ளிட்ட மரங்களை வேரோடு பிடுங்கி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    முன்னதாக ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளை, ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்து நிறுத்தி ஜே.சி.பி. வாகனத்தின் முன் அமர்ந்து உள்ளே அனுமதிக்காமல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு அதிகாரிகளை அனுமதிக்கவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசாரின் பாதுகாப்புடன் நீர்நிலை புறம்போக்குகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அனைத்து மரங்களையும் வேருடன் எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதே போல் மஞ்சளாறு அணை நீர் தேக்கப் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு ஆக்கிரமித்துள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
    • வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆஸ்பத்திரி முன் பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் பேரூராட்சி பணியாளர்கள் அக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.

    அப்போது ஆக்கிரமிப் பாளர்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருவம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதன் பேரில் இன்று காலி செய்ய வேண்டுமென போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

    • வியாபாரிகள் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது
    • போலீசார் சமாதானம் செய்தனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் உள்ள அணைக்கட்டு சாலை மிகவும் குறுகி காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசலால் பாதசாரிகள் மற்றும் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதி படுகின்றனர்.

    எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலாஜா நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    அதன்படி சோளிங்கர் சாலை, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த வாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

    இதை தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் சார்பில் நேற்று வாலாஜா- அணைக்கட்டு சாலையில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் ஆக்கிரமிப்பு மேற்கூரைகள், விளம்பர போர்டுகள் மற்றும் கட்டுமானங்கள் ஆகியவை இடித்து அகற்றப்பட்டன.

    வாலாஜா நகராட்சி ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியினை நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கிருந்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • முதுகுளத்தூரில் சாலை பணிகள் நடைபெறுவதால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னிலையில் அகற்றப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூரில் பை பாஸ் சாலை பணிகள் நடை பெற்று வருவதால் நகர் முழுவதும் பேவர்பிளாக் சாலை அக லப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். இதனை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் முது குளத்தூர் தாசில்தார் சடை யாண்டி தலைமையில் டி. எஸ்.பி. சின்ன கன்னு, பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி ஆகியோர் முன்னி லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பின்னர் டி.எஸ்.பி. சின்ன கண்ணு கூறும்போது இனிமேல் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்தால் கடும் நடி வடிக்கை எடுக்கப்படும் என ஆக்கிரமிப்பாளர்களை எச்சரிக்கை செய்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.

    • புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது
    • பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள பெரிய தெரு சந்திப்பு முதல் கிரிவலப்பாதை அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் வரை செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் தற்போது திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த போக்குவரத்து மாற்றத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாக காணப்படுகிறது.

    நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரிய தெரு சந்திப்பு முதல் பச்சை யம்மன் ஆலயம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாலை அமைக்க தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

    அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை அமைக்கும் பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம்மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிந்ததும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உறுதியளித்தார்.
    • எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காத்து வருகிறார்கள்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடை பெற்றது.

    இக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம், நுண்ணீர் பாசன குழாய் மாற்றக் கோரு தல், ஆழ்குழாய் கிணறு அமைத்து தரக்கோரு தல், வரத்துக்கால் மற்றும் வரத்துக்கண்மாய் தூர்வாரக் கோருதல், சிறுதானியம் விளைவிக்கும் உழவர்க்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்க உதவி கோருதல் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகள் தொடர்பாக, மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விவசாயிகளின் தகுதியுடைய கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய களஆய்வுகள் மேற்கொண்டு, உடன் நடவடிக்கை மேற் கொள்ளுமாறும் கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் பேசியதாவது:-

    முதல் அமைச்சர் விவ சாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட் டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வேளாண் பெருங்குடி மக் களின் நலன் காத்து வருகிறார்கள்.

    சிவகங்கை மாவட்டத்தி லுள்ள நீர் நிலையிலுள்ள ஆக்கிர மிப்புக்களை உடன டியாக அகற்றி பயன்பாட்டி ற்கு கொண்டு வரவும், விவசாய நிலங்களை விலங்குகள் சேதப்படுத்தா மல் பாதுகாத்திடவும், தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் மட்டத்தினை பாதுகாத்திட வும், குறிப்பாக நீர்நிலைகளில் கருவேல் மரங்கள் அகற்றுதல் போன்ற விவ சாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், மேலாண்மை இயக்குநர் (மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், மண் டல இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ஜூனு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தன பாலன், வருவாய் கோட்டா ட்சியர் பால்துரை (தேவ கோட்டை) மற்றும் முதல் நிலை அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோபி பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.
    • நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் கோவை, திருப்பூர், மதுரை, தேனி, ராமேஸ்வரம், சேலம், ஈரோடு, திருச்சி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் கோபி பஸ் நிலையம் வந்து செல்கின்றன.

    குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ் நிலையத்தில் செல்வதால் கோபி பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.

    இதனால் நகராட்சி சார்பில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் உள்ள கடை உரிமையாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட வெளியே கடைகளை வைத்தும், பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாத வகையில் பொருட்களை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து இருந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சசிகலா உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், சுகாதாரப்பணியாளர்கள் பஸ் நிலையத்தில் 15 கடை உரிமையாளர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அப்போது கடை உரிமையாளர்கள், நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றப்பட்டன.

    • பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • கோவில் இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    பழனி:

    பழனி அடிவாரம் மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கும்பாபிஷேக பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கோவில் முன்புறம் மற்றும் சன்னதிவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாகவும், அதை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

    • அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
    • உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ். புதுக்கு ப்பத்தில் குட்டையாண்டி குளம் உள்ளது. இந்தக் குளம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு - சத்திரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோஷங்களை எழுப்பினர்.

    தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய் துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் ஆனந்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×