search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் தாமோ அன்பரசன்"

    • குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும்.
    • மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்க்க வாரம் ஒரு நாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மாவட்ட கலெக்டர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களின் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதன்படி நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 217 மனுக்கள் பெறப்பட்டன. இதில் முக்கியமாக சாலை வசதிகள், இடுகாடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டு மனைப் பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும்.

    குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரி செய்ய வேண்டும், மின் கம்பங்கள் மாற்றப்பட வேண்டும், சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது. அதனை சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    இதில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரங்களும், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், கல்வித்துறை சார்பில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட 4 பள்ளிகளுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சிறப்பு பரிசளிப்பு தொகைக்கான காசோலையும், கூட்டுறவுத் துறை சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.70.06 லட்சம் மதிப்பீட்டில் கடன்களும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.07 கோடியில் வங்கி கடன் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கு.செல்வப்பெருந்தகை, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்றார்.
    • பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதற்க்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் மறைமலைநகர் பேரமனூர் பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிகளிடம் மின் பற்றாக்குறை குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    மேலும் தமிழ்நாடு மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் சிவலிங்கராஜன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக காஞ்சிபுரம் மண்டல தலைமை பொறியாளர் காளிமுத்து ஆகியோருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டத்தில் காஞ்சிபுரம் பாரளுமன்ற உறுப்பினர் செல்வம், எம். எல். ஏ.க்கள் சுந்தர், இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி,

    பாபு மற்றும் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்த குமாரி, மறைமலைநகர் நகர் மன்ற தலைவர் சண்முகம் மற்றும் உள்ளாட்சி பிரதிகள் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ. 8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
    • ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார்.

    சென்னையை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.72 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9,000 சதுர அடி பரப்பளவில் ரூ.2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடி மதிப்பீட்டில் 1.31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை பார்வையிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், ரூ.1.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.47 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை ஆய்வு மேற்கொண்டார்.

    • கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், நெய்வேலி தொகுதியில் ஏற்றுமதி தொழிற் பயிற்சி மையம் அமைக்க அரசு முன்வருமா எனவும், முந்திரி ஏற்றுமதி அதிக அளவில் செய்யப்படுவதால் ஏற்றுமதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக தொழில் மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி செய்யும் பொருட்களை கண்டறிந்து, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ஓசூர், கோவை, மதுரை திருச்சி ஆகிய 4 இடங்களில் 16 கோடியே 69 லட்சம் ரூபாய் செலவில் ஏற்றுமதி மையம் தொடங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், ஏற்றுமதியை ஊக்குவிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி மையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.
    • படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடைபெற்றது.

    காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்துள்ள இந்த படகுப்போட்டியில் 20 மீனவ கிராமங்களை சேர்ந்த 160 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

    படகுப்போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். கரைக்கு திரும்பும் போட்டியாளர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படகுப்போட்டியில் போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    • 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.
    • அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் 559 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.44.91 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    நம் சமுதாயத்தில் ஆண்களை போல பெண்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தர்மபுரி மாவட்டத்தில் 1989-ம் ஆண்டு மகளிர் சுயஉதவி குழு திட்டத்தை தொடங்கினார்.

    காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2022-2023 ஆண்டிற்கு வங்கிக் கடன் உதவி ரூ.500 கோடி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 5,884 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.324 கோடியே 91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    மாநில அளவில் கடந்த 2021-22ம் ஆண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 392 கோடியே 52 லட்சம் கடன் உதவி வழங்கபட்டுள்ளது.

    இதன்மூலம் 4 லட்சத்து 8 ஆயிரத்து 740 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பயன் அடைந்துள்ளனர். 2022-2023ல் ரூ.25 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.14 ஆயிரத்து 120 கோடியே 44 லட்சம் வங்கிக் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1 லட்சத்து 17 ஆயிரத்து 617 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். இதில் 15 லட்சத்து 88 ஆயிரத்து 309 மகளிர் பயனடைந்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,559 சுய உதவிக் குழுக்களில் உள்ள 16,474 உறுப்பினர்களின் ரூ.37.75 கோடி கடன் தள்ளுபடி வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் பெண்களுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தி அந்த திட்டங்கள் மூலம் பல பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. செல்வம், உத்திரமேரூர் எம்.எல்.ஏ.சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் படப்பை மனோகரன், உத்திரமேரூர் ஒன்றியக்குழுத் தலைவர் ஹேமலதா ஞானசேகர், துணைத்தலைவர் வசந்தி குமார் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தா.மோ. அன்பரசன் நடமாடும் உணவு வாகனத்தையும், மரச்செக்கு எண்ணெய், குறைந்த விலை குடிநீர் ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வைத்தார்.
    • விழாவில் பல்லாவரம் இ. கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ்நாடு கேட்டரிங் மற்றும் கேண்டின் சேவை தொழிற் கூட்டுறவு சங்கம் சார்பில் கலைஞர் நடமாடும் நியாய விலை உணவகம், மரச்செக்கு எண்ணெய், சிறுதானிய உணவு வகைகள், குறைந்து விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆகியவை அறிமுக விழா சென்னை பரங்கி மலையில் நடந்தது. விழாவுக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கா. சு. வீரமணி தலைமை தாங்கினார். விக்னேஷ் பாசிமர்ஸ், சிவகுமார், சுஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்துகொண்டு நடமாடும் உணவு வாகனத்தையும், பொதுமக்களுக்கு விற்பனை செய்ய உள்ள சிறு தானிய உணவு வகைகள், மரச்செக்கு எண்ணெய், குறைந்த விலை குடிநீர் ஆகியவற்றையும் அறிமுகம் செய்து வைத்தார்.

    விழாவில் பல்லாவரம் இ. கருணாநிதி எம்.எல்.ஏ., மண்டல குழு தலைவர் சந்திரன், முன்னாள் கவுன்சிலர் குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுப்பையா நன்றி கூறினார்.

    • குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

    காஞ்சிபுரம்:

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் போது கரையோர பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து அடையாறு ஆற்றுப்பகுதியில் வெள்ளத்தடுப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கரைகளின் உயரமும் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் அடையாறு ஆற்று பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகள் விரைந்து முடிக்க பொதுபணித்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    பின்னர் வரதராஜபுரம் மற்றும் சோமங்கலம் பகுதிகளில் வெளிவட்ட சாலையில் அமைக்கப்பட்டு வரும் கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து ரூ.70 கோடி மதிப்பில் 1800 மீட்டர் வரை அமைக்கப்பட உள்ள கீழ் மட்ட கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்து விரைவில் முடித்திட அறிவுறுத்தினார்.

    இதேபோல் மகாலட்சுமி நகர், வரதராஜபுரம் மற்றும் முல்லை நகர், ராயப்பா நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அகலப்படுத்தும் பணி மற்றும் போரூர் ஏரியின் உபரி நீர் வெளியேற கட்டப்படும் கீழ் மட்ட கால்வாய் பணி, போரூர் ஏரியில் புதிய மதகு அமைக்கும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    குன்றத்தூர் பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குன்றத்தூர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் சுமார் 7000 முதல் 8000 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதிகளில் பெரும் மழை காலங்களில் 4 அடி முதல் 5 அடி வரை தண்ணீர் தேங்கி மக்கள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இதனை முதல் அமைச்சர் நேரில் வந்து பார்வையிட்டு, மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்த திட்டத்திற்கான பணிகள் ஒரு வருட காலத்திற்குள் 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

    இனிவரும் காலங்களில் பெரும் மழை வந்தாலும், பொதுமக்களை எந்த விதத்திலும் பாதிக்காத அளவிற்கு முதல்-அமைச்சர் மழை நீர் வடிவதற்கான திட்டங்கள் தீட்டி இந்த திட்டத்திற்கான பணிகள் செய்து முடித்து தந்திருக்கிறார்.

    ஒரத்தூர் தடுப்பணை பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, ஸ்ரீபெரும்புதூர் சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் துறை அலுவலர் சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வக்குமார், நீர்வளத் துறை உதவி பொறியாளர் குஜராஜ் உடன் இருந்தனர்.

    • 2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு, 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது.
    • குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் உள்ள என்பிஆர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. மாவட்ட சேர்மன் படப்பை மனோகரன், மறைமலைநகர் நகரமன்ற தலைவர் ஜெ.சண்முகம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், துணைத்தலைவர் ஆராமுதன், மறைமலைநகர் துணைத்தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர் ஆப்பூர், சந்தானம், மாவட்ட திட்ட அலுவலர் சற்குணா ஆகியோர் கலந்துகொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைகள் வழங்கி, மாலை அணிவித்து, வளையல்கள் பூட்டப்பட்டு, நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.

    பின்னர் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்துக்கள் கூறினர். மேலும் இந்த விழாவில் ஊட்டச்சத்து மற்றும் ரத்தசோகை குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகை உணவு மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களின் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி பெண்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது.

    2 முதல் 5 வயது 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகின்றது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    பெண்கள் கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடைவுடன் பிறக்கவும், தாய் இரத்தசோகையால் பாதிக்கப்படாமல் இருக்கவும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

    குழந்தை பிறந்த 1/2 மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவும் வழங்க வேண்டும். கர்ப்ப கால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.




    ×