search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Strike"

    • மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல்.
    • பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.

    மார்ச் 10ம் தேதி நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

    டெல்லிக்குள் பேரணி நடத்தும் திட்டத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

    அதன்படி, மார்ச் 10ம் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளது.

    இதற்காக, வரும் 6ம் தேதி விமானம், ரெயில், பேருந்துகள் மூலம் விவசாயிகள் டெல்லி செல்ல விவசாயகிள் திட்டமிட்டுள்ளனர்.

    எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடுவாஞ்சேரி:

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 5 பேர் தடுப்பு சுவரில் மோதி பலியானார்கள்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டு வந்த திருமால்பூர் பாஸ்ட் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது. அந்த ரெயில் மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாள பாதையில் இயக்கப்பட்டது.

    எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாதையில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நிற்பதால் அலுவலகம் செல்பவர்கள் இந்த மின்சார ரெயிலில் அதிகமாக பயணம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இன்று காலை பயணிகள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். எக்ஸ்பிரஸ் பாதையில் மீண்டும் மின்சார ரெயில்களை இயக்கக்கோரி போராட்டம் நடத்தினார்கள்.

    சென்னை நோக்கி வந்த காக்கிநாடா எக்ஸ்பிரஸ் ரெயிலையும், மின்சார ரெயிலையும் மறித்தனர். இதனால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    பயணிகள் போராட்டம் காரணமாக புதுவை எக்ஸ்பிரஸ் ரெயில் சிங்கபெருமாள் கோவிலிலும், திருமால்பூர் ரெயில் மறைமலைநகரிலும் நிறுத்தப்பட்டன. மேலும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியல் செய்தவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு பயணிகள் மறியலை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம்போல் மின்சார ரெயில் போக்குவரத்து நடந்தது. #tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து வில்லியனூரில் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியினர் 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

    வில்லியனூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இதற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தி.மு.க. மற்றும் கூட்டணிகட்சிகள் கடையடைப்பு போராட்டம் அறிவித்திருந்தன.

    இதையடுத்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. அதைபோல் வில்லியனூர் விடுதலைசிறுத்தை கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து விடுதலைசிறுத்தை கட்சியின் தொகுதி செயலாளர் தமிழ்வழவன், அலுவலக செயலாளர் எழில் மாறன், வாகையரசு, தமிழரசன் உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வில்லியனூர் எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 10 மணிக்கு கூடினார்கள். அவர்கள் சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் ரெயிலை வில்லியனூர் ரெயில் நிலையத்தில் வைத்து ரெயில் மறியலில் ஈடுபட அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ஊர்வலம் ரெயில் நிலையம் வந்தடைந்தது. போலீசார் ரெயில் வருவதற்கு முன்பே விடுதலைசிறுத்தை கட்சியினர் 95 பேரையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் ரெயில் வந்து சென்றது.

    ×