

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேசம் , பஞ்சாப்- அரியானா, டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 13 முதல் பஞ்சாப்- அரியானா எல்லையான ஷம்புவில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை டெல்லி நோக்கி முன்னேற விடாமல் போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் தடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் இன்று [புதன்கிழமை] பஞ்சாபில் பல இடங்களில் ரயில் பாதைகளை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இந்த ரெயில் மறியல் போராட்டத்தில் பஞ்சாப் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தன.
கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், மதியம் 12 மணி முதல் விவசாயிகள் பல இடங்களில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து மதியம் 3 மணி வரை அங்கேயே இருப்பார்கள் என்று தெரிவித்தார்.
குர்தாஸ்பூரில் உள்ள மோகா, ஃபரித்கோட், கடியான் மற்றும் படாலா, ஜலந்தரில் பில்லூர்; ஹோஷியார்பூரில் தண்டா, தசுயா, மகில்பூர்; ஃபெரோஸ்பூரில் மகு, தல்வண்டி பாய், லூதியானாவில் சாஹ்னேவால், பாட்டியாலாவில் ஷம்பு, மொஹாலி, மற்றும் சங்ரூரில் சுனம் மற்றும் லெஹ்ரா ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதன்படி விவசாயிகள் ரெயில்வே தண்டவாளத்தில் நின்றும்,படுத்தும் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அம்மாநிலத்தில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பஞ்சாப் விவசாயி தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கிடையேயான கானௌரி எல்லைப் பகுதியில் கடந்த மூன்று வாரங்களாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
Dr. Swaiman Singh's team at 5 Rivers Heart Association has been providing continuous medical support at the Khanauri border. Since Sardar Jagjit Singh Dallewal's hunger strike, his health is being closely monitored with real-time updates on pulse, BP, and sugar levels. pic.twitter.com/meGhhbCy2a