என் மலர்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி"
- பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
- உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் அவர் செய்த கேவலமான சாதனை.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில் பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் என திமுக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பச்சைப் பொய்கள் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு கிடைத்ததற்கு, வெட்கமே இல்லாமல் தான்தான் காரணம் என்று பெருமை பேசுகிறார் பழனிசாமி. உண்மையில் வழக்குக்கூட பதிவு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றத் துடித்ததுதான் அவர் செய்த கேவலமான சாதனை.
அமித்ஷாவைப் பார்க்கப் போகிறேன் என்பதைச் சொல்லக்கூட திராணி இல்லாமல், டெல்லியில் கட்சி அலுவலகத்தைப் பார்க்கப் போகிறேன் என்று சொன்னாரே கோழைசாமி, அதுதான் Original பித்தலாட்டம்.
என ரகுபதி கூறினார்.
- குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
- அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.
பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. ஒரு கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்குக்கான தீர்ப்பை நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். அதில் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்தார். குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், நெல்லையில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக எம்.பி.கனிமொழி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம் அதிமுக அரசு நிற்கவில்லை. இந்த வழக்கில் அதிமுகவினர் சிலருக்கு தொடர்பு இருந்ததால் வழக்குப்பதிவு கூட செய்யவில்லை.
வழக்குப்பதிவு செய்து முறையாக விசாரணை செய்து இருந்தால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.. சிபிஐக்கு மாற்றியதை இபிஎஸ் பெருமையாக நினைக்காமல் வெட்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
- மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம் இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? என்று ஊட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
தனது ஊட்டி போட்டோஷூட்டுக்கு இடையே ஒரு பேட்டி (கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி வழக்கில், கைது செய்ததும், CBI-க்கு மாற்றியதும் அஇஅதிமுக அரசு; விசாரித்தது CBI, தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்! இதில் மாநில திமுக அரசுக்கோ, ஸ்டாலினுக்கோ என்ன பங்கு இருக்கிறது? ஏன் கூச்சமே இல்லாமல் மார்தட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இவர் கையில் பொள்ளாச்சி வழக்கு இருந்திருந்தால் எந்த லட்சணத்தில் நடத்தியிருப்பார் என்பதற்கு அண்ணா பல்கலை. மாணவி வழக்கும், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்குமே சாட்சி!
கொடநாடு வழக்கில் வழக்கு பதிந்ததும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அஇஅதிமுக அரசு!
கொடும் குற்றம் புரிந்தகேரளாவைச் சேர்ந்த குற்றவாளிகளுக்காக வாதாடியவர் திமுகவைச் சார்ந்த வழக்கறிஞர்! ஜாமீன்தாரர் திமுகவை சார்ந்தவர்! வெளிமாநில குற்றவாளிகளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு…?
தான் ஆளுங்கட்சி என்பதையே மறந்துவிட்டு, இன்னும் தன்னை எதிர்க்கட்சித் தலைவராகவே நினைத்துக் கொண்டிருக்கிறாரா? இதையெல்லாம் பார்க்கும் போது, உங்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது என்று மக்கள் பேசுவது உண்மை தானோ? என்று கேட்கத் தோன்றுகிறது.
அஇஅதிமுக வலியுறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான 100 நாள் வேலைத் திட்டம், சென்னை மெட்ரோ 2-ம் கட்டம் ஆகியவற்றிற்கான நிதியை விடுவித்தது என்பதை Humbug, பித்தலாட்டம் என்று புலம்புகிறார்.
திரு. ஸ்டாலின் அவர்களே- நான்கு ஆண்டுகளாக நீங்கள் நடத்துவதற்கு பெயர் ஆட்சி என்று சொல்வது தான் ஆகப்பெரிய Humbug!
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி, நதிநீர் உரிமை முதல் நிதி உரிமை வரை தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்றுத் தந்திருக்கின்ற இயக்கம் அதிமுக.
நான் எப்போது மத்திய அமைச்சர்களை சந்தித்தாலும், மாநில நலன் குறித்து பேசுவேன்; நிதிகளைக் கேட்டுப் பெறுவேன்! அது என்னுடைய மாநில உணர்வு.
மறந்திருந்தால், டெல்லி விமான நிலையத்தில் நான் அளித்த பேட்டியைப் பாருங்கள். இருமொழிக் கொள்கை முதல் கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம் வரை பல்வேறு மாநிலக் கோரிக்கைகளை நான் பேசியிருக்கிறேன். நீங்கள் கூறி தான் பேசுகிறோம் என்றெல்லாம் மாயக் கோட்டை கட்டவேண்டாம்!
இத்தனை நாட்கள் "என்னால் நிதியைக் கேட்டுப் பெற முடியுமா?" என்று கேலி பேசியவர், நிதியைப் பெற்றுத் தந்ததும் அதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
இது தானே OG பித்தலாட்டம்?
மாநிலத்தில் ஆட்சி, மத்தியில் 39 எம்.பி.க்கள் வைத்தும் தன்னால் சாதிக்க முடியாததை, அஇஅதிமுக செய்துவிட்டதே என்ற வயிற்றெரிச்சல் முதல்வருக்கு இருக்கிறது போலும். மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை நடப்பதைக் கூட ஏற்க முடியாத உங்களை, 2026-ல் நிச்சயம் மக்கள் ஏற்கப்போவது இல்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
- கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் கவியருவி(குரங்கு நீர்வீழ்ச்சி) உள்ளது.
இங்கு தினமும் கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் இங்குள்ள அருவியில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து விட்டு, அருகே உள்ள ஆழியார் அணை மற்றும் பூங்காவை சுற்றி பார்த்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாகவும், மக்கள் கூட்டம் அதிகமாகவும் காணப்படும்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையால் கவியிருவியில் பல நாட்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
வெள்ளம் குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அனுமதி அளிக்கப்பட்டதை அறிந்து, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கவியருவிக்கு வருகின்றனர்.விடுமுறை தினமான நேற்று கவியருவியில் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக கார், வேன் உள்ளிட்டவற்றில் வந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
பின்னர் ஆழியார் அணைக்கு சென்று அணையை பார்வையிட்டனர். மேலும் ஆழியார் பூங்காவில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
கடந்த 2 நாளில் மட்டும் கவியருவிக்கு 2 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 950க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்தனர். சோதனை சாவடி மூலம் வனத்துறையினருக்கு ரூ.47 ஆயிரம் வரை கட்டண தொகை வசூலாகியுள்ளது.






