search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School classroom"

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.
    • ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நகர பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர் ஒருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார்.

    வகுப்பு தொடங்கியதும் தனது புத்தகப்பையை அந்த மாணவர் எடுக்க முயன்றார். அப்போது புத்தக பையில் பாம்பு ஒன்று நெளிவதை கண்டு அதிர்ச்சியில் அந்த மாணவர் கூச்சலிட்டார்.

    அதை கேட்டதும் மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் வகுப்பறையில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறை ஊழியர்கள் கண்ணதாசன், வேலாயுதம் ஆகியோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து வந்து மாணவரின் புத்தகப்பையில் இருந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர்.

    இதன் பின்னரே மாணவர்களும் ஆசிரியர்களும் நிம்மதியடைந்தனர். பின்னர் வழக்கம் போல் வகுப்பு தொடங்கியது.

    இது குறித்து வனத்துறை ஊழியர்கள் கூறும் போது பிடிப்பட்ட பாம்பு விஷம் இல்லாத சாரை பாம்பு. வளர்ந்த பெரிய சாரைப் பாம்புகளின் கடி வலி மிகுந்ததாக இருந்தாலும் விஷதன்மை அற்றது. ஆபத்தை விளைவிக்காது. தவளை, எலிகளை பிடிக்க பள்ளிக்குள் நுழைந்து இருக்கலாம். புத்தக பைகளை எடுக்கும் போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் அருகே ஊராளிப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடம், ரூ.41,000 மதிப்பீட்டில் சமையல் அறை கட்டுமான பணி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது சமுதாயத்தில் அனைத்து குழந்தைகளின் நலனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி, சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ பரிந்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அங்கன்வாடி மையங்களில் சுகாதாரம், சத்தான உணவு வகைகள், சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு ரூ.41,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    • மேல்நிலை குடிநீர் தொட்டியை , தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்
    • அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் திருப்பூர் கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் முன்னிலையில், பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

    வெள்ளகோவில் பஸ் நிலைய வளாகத்தில் ஆவின் பாலகம், டி. ஆர்.நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியையும், வெள்ளகோவில் நகராட்சி, காடையூரான்வலசில் 15வது நிதி குழு மானியம் 2020-2021 திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியையும், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். முன்னதாக அறிஞர் அண்ணா அனைத்து வியாபாரிகள் நல சங்கத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்.

    இதில் நகர மன்ற தலைவர் மு .கனியரசி , ஆணையாளர் ஆர்.மோகன் குமார்,திமுக. ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன் உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

    • முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்.
    • தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் முத்தூர் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 16.50 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

    அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் மற்றும் முத்தூர் பேரூராட்சித்தலைவர் சுந்தராம்பாள் உள்ளனர்.

    சேதமடைந்ததால் சீரணி அரங்கத்தில் பள்ளி வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இதையடுத்து புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    எஸ்.புதூர்:

    எஸ்.புதூர் அருகே உள்ள வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இங்குள்ள 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட கட்டிடம் பழுதடைந்து முற்றிலும் சேதமடைந்த நிலையில் வகுப்புகள் நடத்த இயலாமல், அங்குள்ள சீரணி அரங்கத்தில் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் கூறினார்.

    தற்போது பெய்து வரும் தொடர்மழையை கருத்தில் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டிடம் அமைத்து தருமாறு ஊராட்சி தலைவர், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×