search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நத்தம் அருகே அங்கன்வாடி மையம், பள்ளி வகுப்பறை கட்டும் பணி
    X

    குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகளை கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    நத்தம் அருகே அங்கன்வாடி மையம், பள்ளி வகுப்பறை கட்டும் பணி

    • கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நத்தம் அருகே ஊராளிப்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டிடம், ரூ.41,000 மதிப்பீட்டில் சமையல் அறை கட்டுமான பணி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நடைபெறும் விண்ணப்பதிவு சிறப்பு முகாம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:-

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருந்து வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டமானது சமுதாயத்தில் அனைத்து குழந்தைகளின் நலனும் கவனிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்ததிட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

    பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு, கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசி, சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளும் மருத்துவ பரிந்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, அங்கன்வாடி மையங்களில் சுகாதாரம், சத்தான உணவு வகைகள், சுகாதாரமான முறையில் சமையல் செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதேபோல், பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.30.75 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளன. மேலும் இங்கு ரூ.41,000 மதிப்பீட்டில் சத்துணவு சமையல் கூடம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

    Next Story
    ×