search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rakesh Asthana"

    சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் தன்னை மிரட்டியதாக வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி கோர்ட்டில் இன்று தெரிவித்தார். #RakeshAsthana #ChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
     
    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    திகார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கிறிஸ்டியன் மைக்கேலை காஷ்மீர் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அடைத்துள்ளதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், திகார் சிறையில் இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேலிடம் சிறைக்கு சென்று மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறையில்படும்  அவதிகள் தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார்.



    காஷ்மீரில் கைதான பத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்களுடன் என்னை ஒரே அறைக்குள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், எனக்கு அடுத்த அறையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ளார். பல கொலைகளை செய்த இதைப்போன்ற கொடுங்குற்றவாளிகளுடன் என்னை எதற்காக அடைத்து வைத்துள்ளனர்? என்பது புரியவில்லை.

    சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை சந்தித்து ‘உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்’ என்று மிரட்டி இருந்தார். தற்போது திகார் சிறையில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதன் அர்த்தம் புரிகிறது என மைக்கேல் வாக்குமூலம் அளித்தார்.

    இதைதொடர்ந்து, எந்த சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கிறிஸ்டியன் மைக்கேல் மாற்றப்பட்டார்? என்பது தொடர்பாக சிறையில் உள்ள வீடியோ பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, திகார் சிறைக்குள் நாளையும், நாளை மறுநாளும் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் மைக்கேல் கிறிஸ்டியனிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    திகார் சிறை அதிகாரி முன்னிலையில் நடத்தப்படும் இந்த விசாரணையின்போது மைக்கேல் கிறிஸ்டியனின் வழக்கறிஞரும் உடன் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #RakeshAsthana #RakeshAsthanathreatened #ChristianMichel
    ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவு பொது இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்தது. #SC #RakeshAsthana
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு இருந்த ராகேஷ் அஸ்தானாவை விமான போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில்  பொது இயக்குநராக மத்திய அரசு ஜனவரி 18-ஆம் தேதி நியமித்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று தள்ளுபடி செய்துள்ளது.

    மூத்த வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

    முன்னதாக, ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி ஐகோர்ட், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை 10 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என ஜனவரி 11-ஆம் தேதி உத்தரவிட்டது நினைவிருக்கலாம். #SC #RakeshAsthana
    ராகேஷ் அஸ்தானா சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது. #RakeshAsthana #CBI
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசால் கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்றார். பின்னர் அவரை மத்திய அரசு தீயணைப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமித்ததால், அவர் பணியில் இருந்து விலகி விட்டார்.

    இதேபோல் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு, அவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. இந்தநிலையில், ராகேஷ் அஸ்தானா நேற்று திடீரென்று சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.



    சி.பி.ஐ. இணை இயக்குனரான அருண்குமார் சர்மா, டி.ஐ.ஜி. மனிஷ் குமார் சின்கா, சூப்பிரண்டு ஜெயந்த் ஜே நாயக்னாவரே ஆகிய மேலும் 3 அதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.  #RakeshAsthana #CBI

    தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தொடுத்த வழக்கை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #CBI #RakeshAsthana
    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் எனக்கூறி உள்ளார்.

    அந்தப் புகாரின் பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. அவரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.



    இதற்கிடையே, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும், தன்மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனவும் கூறி இருந்தார். கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்து வந்தது. 

    இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ சிறப்பு இயக்குநர் அஸ்தானா மற்றும் தேவேந்திர குமார் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #CBI #RakeshAsthana
    மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா அந்தப் பதவியில் தொடர சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #CBIDirector #AlokVerma
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இதைதொடர்ந்து, அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எடுத்த இந்த நடவடிக்கையால் அவரை கட்டாய விடுப்பில் வைத்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில், தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது.

    சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்கி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோரை கொண்ட அமர்வு உத்தரவிட்டது

    எனினும், அவர் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் நடத்திவரும் விசாரணை முடிவடையும்வரை அவர் கொள்கை அடிப்படையிலான எவ்விதமான முக்கிய முடிவும் எடுக்கக்கூடாது என கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

    இவ்விவகாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆகியோரை கொண்ட தேர்வு குழுவின் முடிவுக்கு விட்டிருக்கலாம் எனவும் கோர்ட் சுட்டிக்காட்டியது.

    இன்றைய தீர்ப்பு தொடர்பாக டெல்லி போலீசாருக்கான சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசின் உயரதிகாரம் கொண்ட குழு இன்னும் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வரும் 31-ம் தேதியுடன் தனது இரண்டாண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அலோக் வர்மா இந்த உத்தரவு மூலம் அதுவரை மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  #CBIDirector  #AlokVerma 
    சி.பி.ஐ. இயக்குநருக்கு லஞ்சப்பணம் கைமாறிய விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநராக முன்னர் இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    அலோக் வர்மா சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். லஞ்சப்பணம் கைமாறிய இவ்விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மனோஜ் பிரசாத் என்பவரை கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணை காவலில் அடைத்து வைத்திருந்தனர்.

    ராகேஷ் அஸ்தானா

    தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனோஜ் பிரசாத் முன்னர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில்,  மனோஜ் பிரசாத்தை இன்று ஜாமினில் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி சந்தோஷ் ஸ்நேஹி மான் உத்தரவிட்டுள்ளார். #Delhicourt #ManojPrasad #ManojPrasadbail #briberycase
    சிபிஐ அதிகாரி லஞ்சம் பெற்றதாக புகார் கொடுத்த ஐதராபாத் தொழிலதிபருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    புதுடெல்லி:

    ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறியிருந்தார்.

    அந்தப் புகாரின் அடிப்படையில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேவேந்தர் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது புகார் அளித்த சதீஷ் சனா, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் சிபிஐ சிறப்பு இயக்குனர் மீது புகார் அளித்ததால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் ஐதராபாத் போலீசார் தனக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலதிபர் சதீஷ் சனாவுக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.பட்நாயக் முன்னிலையில் தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற சதீஷ் சனாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

    மேலும், ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக லஞ்ச வழக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்ட சிபிஐ சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர். #CBIVsCBI #BriberyCase #RakeshAsthana #BusinessmanSatishSana
    சிபிஐ இயக்குனர் மீதான நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சிபிஐ அலுவலகங்கள் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    புதுடெல்லி:

    சிபிஐ அமைப்பில் லஞ்ச ஊழல் தொடர்பான மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

    ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை அலோக் வர்மா சேகரித்து வந்த நிலையில், அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியதைக் கண்டித்து நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்தது. டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.


    அதன்படி இன்று நாடு முழுவதிலும் உள்ள சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரசார், முகமூடி அணிந்தும், கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். பாட்னாவில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பும் ஏராளமான காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் காரணமாக சிபிஐ அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.  #CongressProtests #AlokVerma #CBIVsCBI
    சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ இன்று அறிவித்துள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI
    புதுடெல்லி:

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியது.

    மொயின் குரேஷி மீதான வழக்கை விசாரித்து வந்த ராகேஷ் அஸ்தானா, இவ்வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர் சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக புகார் அளித்தார். அதன்பின்னர் சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

    இவ்வாறு மோதல் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இரண்டு இயக்குனர்களும் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. தற்காலிக இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டு உடனடியாக பொறுப்பேற்றுள்ளார். வழக்கை விசாரித்த முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீதான வழக்கை விசாரிக்கும் புதிய குழுவை சிபிஐ அறிவித்துள்ளது. டிஐஜி தருண் கவுபா, எஸ்பி சதீஷ் தாகர், இணை இயக்குனர் வி.முருகேசன் ஆகியோர் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #CBI #RakeshAsthana #CBIVsCBI 
    சிபிஐ அமைப்பில் ஏற்பட்டுள்ள அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 இயக்குனர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. என்பது நாட்டின் மிக உயர்ந்த புலனாய்வு விசாரணை அமைப்பாகும். மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை கட்டுப்பாட்டின் கீழ் இது இயங்குகிறது.

    முக்கியத்துவம் வாய்ந்த ஊழல், கொலை, ஆள் கடத்தல், தீவிரவாதம் போன்ற வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. மேலும் குறிப்பிடத்தக்க சில வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டும், மாநில ஐகோர்ட்டுகளும் சி.பி.ஐ.க்கு பரிந்துரைப்பது வழக்கம். அந்த அளவுக்கு நேர்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் சி.பி.ஐ.க்கு என்று தனி மதிப்பு, மரியாதை இருக்கிறது.

    ஆனால் சமீபகாலமாக சி.பி.ஐ.யில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கியும், ஒருவருக்கொருவர் மோதல்களில் ஈடுபட்டும் அதன் பெருமையை குறைக்கும் வகையில் செயல்படுவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக அலோக் வர்மா இருந்து வந்தார். இவருக்கு கீழ் அடுத்த நிலையில் சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பனிப்போர்தான் உச்சகட்ட மோதலாக வெடித்துள்ளது.

    சமீபத்தில் மொயின் குரேஷி என்ற இறைச்சி ஏற்றுமதியாளர் சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கினார். இவர் மீதான வழக்கை சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான புலனாய்வு குழு விசாரித்து வந்தது. துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் உள்ளிட்ட சி.பி.ஐ. அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த வழக்கில் ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா, இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இருவரும் வழக்கில் இருந்து தப்பிக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். இதற்காக தெலுங்கு தேச எம்.பி. ஒருவர் மூலம் சி.பி.ஐ. இயக்குனரையும், சிறப்பு இயக்குனரையும் அணுகினார்கள்.

    இந்த நிலையில் வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிக்க சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி பெற்றதாக மத்திய மந்திரி சபை செயலாளருக்கு சிறப்பு இயக்குனர் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    தொழில் அதிபர் சதீஷ் சனா அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் இந்த புகார் கூறப்பட்டது.

    இதற்கு பதிலடியாக சிறப்பு இயக்குனர் அஸ்தானா மீது ரூ.5 கோடி லஞ்சப் புகார் கூறப்பட்டது. இவர் சதீஷ் சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என்று சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா உத்தரவின் பேரில் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வாறு இரு உயர் அதிகாரிகளும் ஒருவர் மீது ஒருவர் லஞ்சப் புகார்களை கூறியதால் மோதல் உச்ச கட்டத்தை எட்டியது.

    இந்த நிலையில்தான் அஸ்தானாவின் விசாரணை குழுவில் இடம் பெற்று இருந்த துணை சூப்பிரண்டு தேவேந்தர் குமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். லஞ்சப் புகாருக்கு ஆளான இவர்தான் சதீஷ் சனாவிடம் இருந்து சி.பி.ஐ. இயக்குனர் தொடர்பாக போலி வாக்குமூலம் பெற்றதாக கூறப்பட்டது.

    முன்னதாக அவரது வீடு- அலுவலகத்தில் சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவரைத் தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் என கருதி சிறப்பு இயக்குனர் அஸ்தானா டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு வருகிற 29-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை அஸ்தானாவை கைது செய்ய டெல்லி கோர்ட்டு தடை விதித்து உள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனர்கள் இடையேயான மோதல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து பிரதமர் மோடி இது தொடர்பாக மூத்த மந்திரிகள் ராஜ்நாத் சிங், அருண்ஜெட்லி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


    இதில் சி.பி.ஐ. இயக்குனர் மற்றும் சிறப்பு இயக்குனர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் பதவியில் இருந்து விடுவித்து உடனடியாக விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது.

    இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை நள்ளிரவில் பிறப்பித்தது. உடனடியாக உத்தரவு அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் அஸ்தானாவும் பொறுப்புகளில் இருந்து விலகினார்கள்.

    அலோக் வர்மாவுக்கு பதில் தற்காலிக இயக்குனராக நாகேஷ்வரராவ் நியமிக்கப்பட்டார். அவர் நள்ளிரவு 2 மணிக்கு சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றார். இவர் இதுவரை இணை இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார்.

    பதவி ஏற்றதும் உடனடியாக அவர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். முந்தைய இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ.யின் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் 10-வது மற்றும் 11-வது தளங்களில் உள்ள இருவரது அலுவலக அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    நடவடிக்கைக்கு ஆளான இரு இயக்குனர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றியும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை விசாரித்து வந்த பல்வேறு அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் லோக் வர்மாவுக்கு நெருக்கமானவராக இருந்த துணை கண்காணிப்பாளர் ஏ.கே.பஸ்சியும் ஒருவர். இவர் போர்ட் பிளேருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    மேலும் சி.பி.ஐ. தலைமை அலுவலக பாதுகாப்பு பணி மத்திய தொழில் பாதுகாப்பு படை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை சி.பி.ஐ. வட்டாரத்தில் மட்டுமல்லாது. நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சி.பி.ஐ. இயக்குனராக தற்காலிக பொறுப்பேற்றுள்ள நாகேஷ்வர ராவ் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 1986-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். #CBI #AlokVerma #RakeshAsthana #NageswaraRao #CBIVsCBI 
    சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். #CBIVsCBI #CBIExtortionClaim
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்த நிலையில், சி.பி.ஐ.யின் புதிய இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சி.பி.ஐ. இயக்குனருக்கும், சிறப்பு இயக்குனருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவை தற்காலிக சி.பி.ஐ. இயக்குநராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கில் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மொயின் குரேஷி மீதான வழக்கை ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அவ்வழக்கில், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சந்தேகம் எழுந்தது.



    அவரை வழக்கில் இருந்து விடுவிக்க அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா கடந்த ஆகஸ்டு 24-ந் தேதி கடிதம் எழுதினார். அந்த கடிதம், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே, சதீஷ் சனாவை விடுவிக்க இடைத்தரகர் மூலம் லஞ்சம் பெற்றதாக சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இவ்வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. சதீஷ் சனாவின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் மோசடி செய்ததாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுபோல், சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள மற்றவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்று சி.பி.ஐ. ஆராய்ந்து வருகிறது. #CBI #NageswaraRao #CBIVsCBI #CBIExtortionClaim #CBIvsAlokVerma 

    ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் அஸ்தானாவை கைது செய்ய தடை விதித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. #CBI #CVC #CBISpecialDirector #RakeshAsthana #DelhiHighCourt
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குனரான அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.

    இந்த நிலையில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை ராகேஷ் அஸ்தானா குழுவினர் விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் மொயின் குரேஷியுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் சதீஷ் சனா மீது சி.பி.ஐ.யின் சந்தேகப்பார்வை விழுந்தது.



    இந்த வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றார் என மத்திய மந்திரிசபை செயலாளருக்கு ராகேஷ் அஸ்தானா புகார் கடிதம் எழுதினார்.

    ஆனால் இதில் அதிரடி திருப்பமாக சதீஷ் சனா சி.பி.ஐ.யிடம் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிப்பதற்கு இடைத்தரகர் மூலம் ராகேஷ் அஸ்தானா ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் என கூறி உள்ளார்.

    அந்தப்புகாரின்பேரில் ராகேஷ் அஸ்தானா, துணை போலீஸ் சூப்பிரண்டு தேவேந்தர் குமார், மனோஜ் பிரசாத், சோமேஷ் பிரசாத் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.

    இந்த வழக்கில் தேவேந்தர் குமாரை சி.பி.ஐ. நேற்று முன்தினம் கைது செய்தது.

    முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் நேற்று அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.

    இது தொடர்பான சி.பி.ஐ. மனுவை நீதிபதி சந்தோஷ் சினேகி மான் விசாரித்து, தேவேந்தர் குமாரை 7 நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதற்கு மத்தியில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, டெல்லி ஐகோர்ட்டில் தன் மீதான வழக்குக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கைது செய்வதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

    கைது செய்யப்பட்டுள்ள தேவேந்தர் குமார் தரப்பிலும், அவர் மீதான வழக்குக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை நீதிபதி நஜ்மி வாஜிரி விசாரித்தார். அவர், இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு சி.பி.ஐ., சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, இணை இயக்குனர் ஏ.கே. சர்மா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

    மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    அடுத்த கட்ட விசாரணையை நீதிபதி நஜ்மி வாஜிரி 29-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் ராகேஷ் அஸ்தானா விவகாரத்தில் தற்போதைய நிலை தொடரவும், அவரை கைது செய்வதில் இருந்து இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் வழக்கு விசாரணைக்கு தடை இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். 
    ×