search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "VVIP Chopper case"

    ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை முன்கூட்டியே ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்கும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    புதுடெல்லி:

    ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


    ஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.

    இதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி? என்பது குறித்து விளக்கம் கேட்டு  செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.
     
    இந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை  11-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.

    மைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. #VVIPChoppersCase #AgustaWestland #ChristianMichel
    சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் தன்னை மிரட்டியதாக வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் பேர ஊழலில் கைதான இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் டெல்லி கோர்ட்டில் இன்று தெரிவித்தார். #RakeshAsthana #ChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
     
    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் இருந்ததால் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.
     
    இதைதொடர்ந்து, கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மூன்றுமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

    அகஸ்ட்டா வெஸ்ட்லேன்ட் நிறுவனத்திடம் இருந்து இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் சுமார் 225 கோடி ரூபாய் கமிஷனாக பெற்றதாக அவரே வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

    திகார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கிறிஸ்டியன் மைக்கேலை காஷ்மீர் பயங்கரவாதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் அடைத்துள்ளதாகவும், இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியிடம் நேற்று தெரிவித்தார்.

    இதற்கிடையில், திகார் சிறையில் இருக்கும் கிறிஸ்டியன் மைக்கேலிடம் சிறைக்கு சென்று மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டிருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் கிறிஸ்டியன் மைக்கேல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறையில்படும்  அவதிகள் தொடர்பாக அவர் வாக்குமூலம் அளித்தார்.



    காஷ்மீரில் கைதான பத்துக்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்களுடன் என்னை ஒரே அறைக்குள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். மேலும், எனக்கு அடுத்த அறையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் வைக்கப்பட்டுள்ளார். பல கொலைகளை செய்த இதைப்போன்ற கொடுங்குற்றவாளிகளுடன் என்னை எதற்காக அடைத்து வைத்துள்ளனர்? என்பது புரியவில்லை.

    சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ. முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா துபாயில் என்னை சந்தித்து ‘உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்’ என்று மிரட்டி இருந்தார். தற்போது திகார் சிறையில் நடப்பதை வைத்துப் பார்க்கும்போது அவர் கூறியதன் அர்த்தம் புரிகிறது என மைக்கேல் வாக்குமூலம் அளித்தார்.

    இதைதொடர்ந்து, எந்த சூழ்நிலையில் உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு கிறிஸ்டியன் மைக்கேல் மாற்றப்பட்டார்? என்பது தொடர்பாக சிறையில் உள்ள வீடியோ பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, திகார் சிறைக்குள் நாளையும், நாளை மறுநாளும் காலையில் அரைமணி நேரம், மாலையில் அரைமணி நேரம் மைக்கேல் கிறிஸ்டியனிடம் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.

    திகார் சிறை அதிகாரி முன்னிலையில் நடத்தப்படும் இந்த விசாரணையின்போது மைக்கேல் கிறிஸ்டியனின் வழக்கறிஞரும் உடன் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #RakeshAsthana #RakeshAsthanathreatened #ChristianMichel
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் கைதான வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த ஜாமின் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. #VVIPChopper #Delhicourt #ChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    துபாயில் இருந்த அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் கடந்த 22-12-2018 அன்று துபாயில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

    சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த இருமாத காலமாக அடுத்தடுத்து ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

    கிறிஸ்டியன் மைக்கேலை ஜாமினில் விடுவிக்கக்கோரி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனு தாக்கல் செய்திருந்தார்.



    இந்த மனு விசாரணைக்கு வந்தபோது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை ஜாமினில் விடுதலை செய்தால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விடுவார். எனவே அவரை ஜாமினில் விடுவிக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து,கிறிஸ்டியன் மைக்கேலின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் இன்று இன்று தள்ளுபடி செய்தார். #VVIPChopper #Delhicourt #ChristianMichel #Michelbailplea
    வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் ஊழலில் சிக்கிய வெளிநாட்டு இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலை அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதித்தது. #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel
    புதுடெல்லி:

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து இங்குள்ள முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

    இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் தீர்மானித்தனர்.

    துபாயில் இருக்கும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என துபாய் அரசாங்கத்துக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

    துபாயில் இருந்து விமானம் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவரிடம் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பலமணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஐந்தாம் தேதி அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 

    கிறிஸ்டியன் மைக்கேலை 5 நாள் காவலில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அந்த விசாரணை காலம் முடிவடைந்ததால் கிறிஸ்டியன் மைக்கேல் கடந்த பத்தாம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த ஊழல் தொடர்பான விசாரணையில் உரிய ஒத்துழைப்பு அளிக்க மைக்கேல் மறுப்பதாகவும், சில கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்காமல் மழுப்பலாக பேசுவதாகவும் நீதிபதியிடம் குறிப்பிட்ட சி.பி.ஐ. வழக்கறிஞர், அவரை மேலும் 9 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கேட்டு கொண்டார்.

    இதைதொடர்ந்து, மைக்கேலை மேலும் 5 நாள் (15-ம் தேதிவரை) சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். பின்னர், அவர் ஒருவார காலம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். டெல்லி திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மைக்கேல் தனக்கு சிறையில் சிறப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கையை சிறை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

    அந்த காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் அவர் இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என மைக்கேல் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    அப்போது கோர்ட்டில் ஆஜரான பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் மைக்கேல் தொடர்பான வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பாக அவரிடம் விசாரிப்பதற்காக 15 நாட்கள் தங்களது காவலில் ஒப்படைக்குமாறு கேட்டு கொண்டனர்.

    அமலாக்கத்துறை அதிகாரிகள்  கிறிஸ்டியன் மைக்கேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அரவிந்த் குமார் அனுமதி அளித்துள்ளார். #VVIPchoppercase #EDarrests #ChristianMichel #EDarrestsChristianMichel 
    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி உள்ளிட்ட மூவர் ஆஜராக டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. #AgustaWestland #VVIPChopperCase
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. 

    இதில் ரூ.362 கோடி லஞ்சப் பணம் இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

    இதில், விமானப்படை முன்னாள் தளபதி எஸ்பி தியாகி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இதே விவகாரத்தில் சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் இந்தியாவுக்கு வந்துள்ளதாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை கடந்த 18-ம் தேதி துணை குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 

    இந்த குற்றபத்திரிகையில் இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த 34 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் பின்மெக்கானிகா நிறுவன இயக்குநர்கள் கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகியோரை சட்டவிரோத பணப்பறிமாற்ற சட்டத்தின் கீழ் தண்டிக்க போதிய 
    ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.

    வாதங்களை கேட்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், எஸ்.பி தியாகி, கியுசெப்பே ஓர்சி, புர்னோ ஸ்பாக்னோலினி ஆகிய மூவர் செப்டம்பர் 12-ம் தேதி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், இடைத்தரகர்களாக செயல்பட்ட கார்லோ ஜெரோசா, கைடோ ஹாஷ்கே, துபாய் வாழ் இந்தியரான ராஜீவ் சக்சேனா ஆகிய மூவருக்கு எதிராக ஜாமினில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    ×