search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on fire"

    • கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 40). இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. 2 மகள்கள் உள்ளனர்.

    கடந்த 10 வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்ற மீனாட்சி, பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் மீனாட்சிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மீனாட்சி நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, மண்ணெண்ணையை எடுத்து மொட்டை மாடிக்குச் சென்றார். பின்னர் உடலில் அதை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்தார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் வருவதற்குள், உடல் முழுவதும் தீ பரவி, மீனாட்சி சுருண்டு கீழே விழுந்தார். உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சி பரிதமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுக்குடிக்க பணம் தராததால் மன வேதனையில் வாலிபர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா என்ற செந்தில்குமார்(48). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி(45). நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார். செந்தில்குமார் அவரது அம்மா பத்மாவுடன் வசித்து வந்தார்.

    செந்தில்குமாருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், கடந்த 3-ந் தேதி மதுகுடிக்க அவரது அம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்ததால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் வீட்டில் இருந்த மண் எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

    செந்தில் குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×