என் மலர்
நீங்கள் தேடியது "newyear"
- இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
- வீடுகளில் விதவிதமான உணவுகள் தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர். கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர்.
திருப்பூர்:
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.திருப்பூர் குமரன் சாலையில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேத்தரின் தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதேப்போல் திருப்பூர் குமார் நகர் சி.எஸ்.ஐ., ஆலயம், ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் உள்ள சூசையப்பர் ஆலயம், கோர்ட்டு அருகில் உள்ள டி.இ.எல்.சி.ஆலயம், அவிநாசி புனித தோமையார், சி.எஸ்.ஐ., இம்மானுவேல் ஆலயம், சேவூர் புனித லூர்து அன்னை ஆலயம், பல்லடம் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சி.எஸ்.ஐ., புனித ஜான் ஆலயம் உட்பட மாவட்டத்தின் அனைத்து இடங்களில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனால் அந்த ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டன.
உடுமலை நகரில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சிஎஸ்ஐ. இம்மானுவேல் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. காங்கயம் நகரம் கரூா் சாலையில் உள்ள குறைகள் தீா்க்கும் குழந்தை மாதா அருள்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல காங்கயம் களிமேடு பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. இயேசு ரட்சகா் ஆலயம், வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. இன்று காலையும் ஆலயங்களில் வழிபாடு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். மேலும் வீடுகளில் விதவிதமான உணவுகள் தயாரித்து நண்பர்கள், உறவினர்களுக்கு வழங்கினர். கேக் உள்ளிட்ட இனிப்புகளையும் வழங்கினர். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வீடுகள் களை கட்டி காணப்பட்டன. வீடுகள், ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.
- புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்ட நகரமாக புதுவை மாறியுள்ளது.
நாடு முழுவதும் இருந்து புத்தாண்டை கொண்டாட டிசம்பர் மாத இறுதியில் கிறிஸ்துமஸ் முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கி விடுவர். சாதாரண விடுதிகள் முதல் நட்சத்திர விடுதிகள் வரை சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும். இதற்கான முன்பதிவு நவம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடும்.
விடுதிகள், திறந்தவெளி மைதானங்களில் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். புத்தாண்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலம் புதுவையில் பிரம்மாண்டமான வர்த்தகம் நடைபெறும்.
தானே புயல் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி வீசியது. அந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் சீர்குலைந்தது. தற்போது ஃபெஞ்சல் புயல் புதுவையை தாக்கியுள்ளது. புயல் தாக்கி 10 நாட்களாகியதை தொடர்ந்து புதுச்சேரி மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது.
புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பொது நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்த நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்காக வருகிற 20-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புத்தாண்டுக்கு கூடும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது ஃபெஞ்சல் புயலில் மீண்டு புத்தாண்டுக்கு தயாராகி வரும் புதுச்சேரி வியாபாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
- தைவானுக்கு ஆதரவளிக்கும் பல்வேறு நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பீஜிங்:
சீனாவில் இருந்து 1949-ல் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் தைவான் பிரிந்தது. ஆனாலும் சீனா தனது ராணுவ பலத்தின் மூலம் தைவானை அடைய தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் தைவானுடன் பல்வேறு நாடுகள் தங்களது தொடர்பை வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி, தைவானுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சீன தொலைக்காட்சியில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு செய்தி வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், தைவான் ஜலசந்தியின் இருபுறமும் உள்ள சீனர்களான நாங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
தைவானை தனது பிரதான நிலப்பகுதியின் ஒரு பகுதியாக சீனா உரிமை கோருகிறது. மாற்றம் மற்றும் கொந்தளிப்பு ஆகிய இரண்டும் உள்ள உலகில் சீனா ஒரு பொறுப்பான பெரிய நாடாக, உலகளாவிய நிர்வாக சீர்திருத்தத்தை தீவிரமாக ஊக்குவித்து, உலகளாவிய தெற்கிடையே ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குகிறது என தெரிவித்தார்.
புத்தாண்டின் கூட்டுத் தொகை (2+0+1+9=12, (1+2)=3 என்ற) குருவிற்குரிய எண் ஆதிக்கத்தில் வருவதால் குருவருளும், திருவருளும் நமக்குக் கிடைக்க குரு பகவான் வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், அறுபத்துமூவர் வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.
யோகம்பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள்
இந்தப் புத்தாண்டு குருவின் ஆதிக்கத்தில் பிறப்பதால் குருவிற்குரிய நட்சத்திரங்களாக விளங்கும் விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கும், 3 எண் ஆதிக்கத்தில் பிறப்பதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.
மற்ற ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும், தங்கள் சுய ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் யோக வாய்ப்புகள் அனைத்தும் அடுக்கடுக்காக வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்
இந்தப் புத்தாண்டில் 13.2.2019-ல் ராகு-கேது பெயர்ச்சியும், 28.10.2019-ல் குருப்பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. முரண்பாடான கிரக சேர்க்கை காலத்திலும், கிரகப்பெயர்ச்சி காலங்களிலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.
வெற்றி தரும் வழிபாடு
ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமானை வழிபட்டு அதன்பிறகு சிவாலயம், விஷ்ணு ஆலயம், குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களையும் வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
பொதுவான புத்தாண்டு உறுதிமொழிகள்
உலகளவில் எடுக்கப்படும் புத்தாண்டு உறுதிமொழிகள் என்பது உடல் நலத்தை மேம்படுத்துதல், உடல் எடை குறைப்பு, உடற்பயிற்சி செய்தல், மது, புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களை குறைத்தல் போன்றவையாகும். அதுபோல் நேர்மறை எண்ணங்களை வளர்க்க செய்வது, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், அதிக மகிழ்ச்சி மற்றும் சந்தோஷமான சூழலை பேணுதல் போன்றவாறு நமது உடல் நலம் மற்றும் மனநலனை பாதுகாக்கும் வகையிலான உறுதிமொழிகள் எடுக்கப்படுகின்றன.
பொருளாதாரத்தை மேம்படுத் தும் வகையில் அதிக செலவுகளை கட்டுப்படுத்துதல், கடன்களை அடைத்தல், நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள், கடன்கள் பெறாமல் வாழ்க்கையை நடத்துவது போன்றவையும், செய்யும் பணி சார்ந்த உறுதி மொழிகள் எடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் தான் செய்கின்ற பணியில் முன்னேற்றம் பெறுவது, பதவி உயர்வது, அதிக சம்பளம் பெறுவது போன்ற லட்சியங்களை அடைய ஏற்ற உறுதிமொழிகளை ஆண்டின் தொடக்கத்தில் எடுத்துக் கொள்கின்றனர்.
தொழில் செய்வோர் தங்கள் தொழிலை இந்தாண்டு கூடுதல் லாபத்துடன் செய்ய முயற்சிப்பது, தொழிலை விரிவு படுத்துவது, புதிய கூடுதல் தொழில்களை உருவாக்குவது, போன்ற புதிய உறுதிமொழிகளை புத்தாண்டில் எடுத்துக் கொள்கின்றனர். புத்தாண்டு உறுதிமொழிகள் என்பவை நம் வாழ்வை வளப்படுத்துவது, மேம்படுத்துவதுடன் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு உந்துதலாகவும் அமைகின்றன.
பிரபலமான புத்தாண்டு தீர்மானங்கள்
தினமும் அதிகாலையில் எழுந்திடுவேன், நேர மேலாண்மையை கடைபிடிப்பேன், புத்தாண்டில் என் உடல் எடையை குறைத்து கொள்வேன். ஆக்கமுடன் படிக்க முயல்வேன், என் அலுவலகம் மற்றும் வீட்டை சுத்தமாக வைத்திருப்பேன், குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பேன். தினசரி நடைபயிற்சி மேற்கொள்வேன், இந்தாண்டில் புதிய வீடு வாங்குவேன், குடும்பத்தினர் உடன் புதிய இடங்களுக்கு சுற்றுலா செல்வேன், புதிய கல்வி சார்ந்த விஷயங்களை கற்றுக் கொள்வது, சமூக நலப்பணிகளை மேற்கொள்வது என்பது போன்ற புத்தாண்டு தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. உடலினை அழகுபடுத்துதல், உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற தீர்மானங்கள் அதிகளவில் எடுக்கப்படுகின்றன.







