search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இனிய வாழ்வு தரும் புத்தாண்டு 2019
    X

    இனிய வாழ்வு தரும் புத்தாண்டு 2019

    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
    சுபஸ்ரீ விளம்பி வருடம் மார்கழி மாதம் 17-ந்தேதி (1.1.2019) செவ்வாய்க்கிழமை ஏகாதசி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது. குருமங்கள யோகத்தோடும், புத ஆதித்ய யோகத்தோடும். தைரியகாரகன் செவ்வாய்க்கு உரிய செவ்வாய்க்கிழமையில் புத்தாண்டு பிறப்பதால் எண்ணங்களை நிறைவேற்றி வைத்து இனிய வாழ்வை நமக்கு வழங்கும் ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.

    புத்தாண்டின் கூட்டுத் தொகை (2+0+1+9=12, (1+2)=3 என்ற) குருவிற்குரிய எண் ஆதிக்கத்தில் வருவதால் குருவருளும், திருவருளும் நமக்குக் கிடைக்க குரு பகவான் வழிபாட்டையும், தட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், அறுபத்துமூவர் வழிபாட்டையும் முறையாக மேற்கொண்டால் முன்னேற்றத்தின் முதல்படிக்குச் செல்ல இயலும்.

    யோகம்பெறும் ராசி மற்றும் நட்சத்திரங்கள்

    இந்தப் புத்தாண்டு குருவின் ஆதிக்கத்தில் பிறப்பதால் குருவிற்குரிய நட்சத்திரங்களாக விளங்கும் விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கும், 3 எண் ஆதிக்கத்தில் பிறப்பதால் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இந்தப் புத்தாண்டு பொன்கொழிக்கும் ஆண்டாக அமையப்போகின்றது.

    மற்ற ராசிக்காரர்களும், மற்ற நட்சத்திரக்காரர்களும், தங்கள் சுய ஜாதகத்தில் பாக்ய ஸ்தானத்தின் பலமறிந்து, அதற்குரிய தெய்வ வழிபாடுகளை, யோகபலம் பெற்ற நாளில் தேர்ந்தெடுத்து வழிபட்டு வந்தால் யோக வாய்ப்புகள் அனைத்தும் அடுக்கடுக்காக வந்து சேரும். உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

    கீர்த்தி தரும் கிரக சஞ்சாரம்

    இந்தப் புத்தாண்டில் 13.2.2019-ல் ராகு-கேது பெயர்ச்சியும், 28.10.2019-ல் குருப்பெயர்ச்சியும் நிகழ இருக்கின்றது. முரண்பாடான கிரக சேர்க்கை காலத்திலும், கிரகப்பெயர்ச்சி காலங்களிலும் போராட்டமான வாழ்க்கை பூந்தோட்டமாக மாற சிறப்புப் பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது.

    வெற்றி தரும் வழிபாடு

    ஆண்டின் தொடக்க நாளில் ஆனைமுகப் பெருமானை வழிபட்டு அதன்பிறகு சிவாலயம், விஷ்ணு ஆலயம், குலதெய்வம், இஷ்ட தெய்வம், முன்னோர்களையும் வழிபட்டால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். 
    Next Story
    ×