search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "motor cycle fire"

    • ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை அருகே தோவாளைபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன்கள் செந்தில் முருகன் (வயது 32), அருள் அய்யப்பன் (28). செந்தில் முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    நேற்று வழக்கம்போல் செந்தில் முருகன் சவாரிக்கு சென்று விட்டு ஆட்டோவை இரவு தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அருள் அய்யப்பன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

    இன்று அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்த செந்தில் முருகன், அருள் அய்யப்பன் இருவரும் வெளியே வந்து பார்த்தனர். ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    ஆனால் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். ஆட்டோ, மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இது தொடர்பாக செந்தில் முருகன், அருள் அய்யப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இருவருக்கும் யாருடனாவது முன்விரோதம் இருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும், இவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் உடனே அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் எரிப்புக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தோவாளையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே எம். சவேரியார்புரத்தை சேர்ந்தவர் ராஜபிரதீப் (வயது21). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளை, முன் விரோதம் காரணமாக மர்மநபர்கள் தீ வைத்து எரித்து விட்டதாக முத்தையாபுரம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். மேலும் மோட்டார் சைக்கிள் எரிந்த போது அருகில் இருந்த வாஷிங் மெஷின், பெயிண்ட் உள்ளிட்ட பொருட்களும் எரிந்து விட்டதாக புகாரில் அவர் கூறி உள்ளார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவைத்து எரித்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ராஜ்குமார் (வயது 29). இவர் மதுரை மாநகர ஆயுதப்படை போலீசில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று நள்ளிரவு 2 மணியளவில் இவரது வீட்டின் வாசலில் ஏதோ தீபற்றி எரிவதுபோல் திடீரென வெளிச்சமாக தெரிந்தது. இதையடுத்து அவர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிளுக்கு யாரோ மர்மநபர்கள் தீ வைத்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொள்ளாச்சியில் நள்ளிரவில் பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி சீனிவாசபுரம் நேதாஜி கார்டனை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் இந்த பகுதியின் பா.ஜனதா செயலாளராக உள்ளார்.

    நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார். வீட்டில் தூங்கியபோது நள்ளிரவு மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்தது.

    சத்தம்கேட்டு எழுந்த சிவக்குமார் மோட்டார் சைக்கிள் கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.

    எனினும் மோட்டார் சைக்கிள் பாதி எரிந்து சாம்பலானது. விசாரணையில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமார் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    பா.ஜனதா நிர்வாகியின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரித்த சம்பவம் தெரியவந்ததும் கட்சியினர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை அருகே மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள புராணி காலனியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது (வயது 26). சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுந்தர் கணேஷ் என்பவர் கணவன்-மனைவி ஆகியோரை சமாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்தாக் அகமது, சுந்தர் கணேசின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவானார்.

    இது குறித்து சுந்தர் கணேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தாக் அகமதுவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சேலம் கோட்டை பெருமாள் கோவில் அருகே 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சேலம்:

    சேலம் கோட்டை பெருமாள் கோவில் பின் பகுதியில் சின்னசாமி தெரு உள்ளது.

    இந்த தெருவில் வசிக்கும் கவுதீப்முகைன் என்பவர் நேற்றிரவு வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டிற்குள் புகை வாடை வருவதை அறிந்த அவர் சமையல் அறைக்கு சென்று பார்த்தார்.அப்போது அங்கிருந்து புகை வரவில்லை என்பதை உணர்ந்த அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

    வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்.

    அப்போது 5 வீடுகளை தாண்டி ஒரு டிரான்ஸ்பார்மரின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளும் தீப்பிடித்து எரிவதை பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். உடனே சத்தம்போட்டு அவர்களை எழுப்பினார்.

    அதிகாலை 2.30 மணி என்பதால் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்களான ரகுமத்துல்லா, சர்தீன், சுல்தான், முபாரக், சானாஷ் மற்றும் சைக்கிள் உரிமையாளரான ரி‌ஷன் (19) மற்றும் அவர்களது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்த படி வெளியே ஓடி வந்தனர்.

    பின்னர் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களால் அருகில் செல்ல முடியவில்லை. இதனால் அந்த மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர்கள் கதறினர். மேலும் மர்ம நபர்கள் பெட்ரோலை ஊற்றி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததாக அவர்கள் புகார் கூறினர்.

    தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு திரண்ட அந்த பகுதியினர் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த மர்மநபர்களை உடனே பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஏதாவது கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது அதில் மர்ம நபர்கள் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    சேலம் மாநகரின் முக்கிய பகுதியான கோட்டையில் ஒரே நேரத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் இன்று அதிகாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரையில் 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்ததாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை சிம்மக்கல், வைகை தென்கரையைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 25). மொபைல் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளை வைகை கரையோரம் இரவில் நிறுத்துவது வழக்கம். அந்தப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலரும் இதே போல் மோட்டார் சைக்கிள்களை அங்கு நிறுத்தியிருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஒரு வாலிபர் 3 மோட்டார் சைக்கிள்களின் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர்.

    இதனால் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். திலகர் திடல் போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தவர் அனுமார் கோவில் படித்துறையைச் சேர்ந்த ஜனார்த்தனன் (28) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    5 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் சக்திகணபதி 2-வது தெருவில் வசித்து வருபவர் சங்கர்கணேஷ். தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சங்கர் கணேசின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது மனைவியின் மொபட்டை தீ வைத்து எரித்தனர்.

    இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இதேபோல் அருகில் உள்ள சண்முகம் தெருவில் கொத்தனார் கணேசன் வீட்டு முன்பு நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கலைஞர் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளும் தீவைத்து எரிக்கப்பட்டது.

    அடுத்தடுத்து 5 மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×