search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CSKvGT"

    • ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் விளாசினர்.
    • தீபக் சாஹர், முஸ்டாபிஜூர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

    ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி ) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர், முஸ்டா பிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், டேரில் மிட்செல், பதிரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.

    ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    குஜராத் அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன் கில் கூறும்போது 'இந்த தோல்வி மூலம் நாங்கள் பாடம் கற்றோம். மாறுபட்ட அனுபவம் கிடைத்தது' என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. குஜராத் 3-வது போட்டியில் அதே தினத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

    • இதுவரை ஆறு போட்டிகளிலும் போட்டியை நடத்தும் அணிகள்தான் வெற்றி பெற்றுள்ளது.
    • இன்று சென்னையில் சிஎஸ்கே- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் மோதின. இதில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி முல்லன்புரில் உள்ள பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான புதிய மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிராக பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    3-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா 208 ரன்கள் குவித்தது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இலக்கை எட்டி வீறுநடை போட்டது. எனினும் 4 ரன்னில் வெற்றி வாய்ப்பை தழுவியது.

    4-வது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக எல்.எஸ்.ஜி. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    5-வது போட்டி குஜராத் மாநில அகமதாபாத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 168 ரன்கள் அடித்தது, மும்பை அணிக்கு கடைசி 5 ஓவரில் 43 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்த போதிலும் சேஸிங் செய்ய முடியாமமல் 6 ரன்னில் தோல்வியைத் தழுவியது.

    6-வது போட்டி நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் அதிரடியால் ஆர்சிபி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், சொந்த மைதானத்தில் (Home Ground- அணிக்குரிய சொந்த மைதானமாக கருதப்படும் இடம்) விளையாடிய அணிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

    இன்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மைதானம் சிஎஸ்கே-யின் சொந்த மைதானம் (Home Ground) ஆகும். இதனால் "ஹோம் டீம் வின்" டிரெண்ட் இன்றைய போட்டியிலும் தொடர வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    சிஎஸ்கே-ஆர்சிபி போட்டி (கோப்புப்படம்)

    அதேவேளையில் பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் மும்பைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்கள். இதனால் இன்றைய போட்டியிலும் அவர்கள் சிஎஸ்கே அணிக்கு கடும் சவாலாக விளங்குவார்கள் என எதிர்பார்க்கலாம்.

    குஜராத் அணியில் சாய் சுதர்சன், சாய் கிஷோர், விஜய் சங்கர் என மூன்று தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களுக்கு சேப்பாக்கம் மைதானம் அத்துப்பிடி. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருது வென்று என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்நிலையில், மழை காரணமாக களத்தில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • ஜடேஜா 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
    • தீபக் சாஹர் சுப்மான் கில் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல். முதல் குவாலிபையரில் குஜராத் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இதன் மூலம் இந்த சீசனில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் பெற்றுள்ளது.

    இதற்கு முன் 9 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சி.எஸ்.கே. 4 முறை சாம்பியன் கோப்பையை முத்தமிட்டுள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி 6 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 6 முறையில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

    ஆர்.சி.பி. அணி 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் கோப்பையை தவறவிட்டுள்ளது.

    சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 87 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 60 ரன்கள் விளாசினார்.

    • அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 60 ரன்கள் சேர்த்தார்.
    • குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

    சென்னை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார். மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

    ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • தோற்கும் அணி லக்னோ-மும்பை இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) மோதும்.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31-ந் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

    நேற்று முன்தினம் லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

    ஐ.பி.எல். போட்டியில் இன்னும் 4 ஆட்டங்களே இருக்கிறது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு குவாலிபையர் சுற்று இன்று நடக்கிறது.

    சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும், தோற்கும் அணி லக்னோ-மும்பை இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) மோதும்.

    இந்நிலையில் குரு சிஷ்யன் காம்போவிற்கு நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என சிஎஸ்கே அணி டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது.

     

    அந்த புகைப்படத்தில் ஒரு காரில் டோனி மற்றும் பாண்ட்யா இருக்கிறார்கள். நம்பர் பிளேட்டில் 07vs33 என இருந்தது. 7 என்பது டோனியின் ஜெர்சி நம்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 33 ஹர்திக் பாண்ட்யா ஜெர்சி நம்பராகும். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    நான் எப்போதுமே டோனியின் ரசிகன் என ஹர்திக் பாண்ட்யா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முகமது சமி, ரஷித்கான் சென்னை அணிக்கு சவாளாக இருப்பார்கள்.
    • சொந்த மண்ணில் விளையாடுவது சென்னை அணிக்கு கூடுதல் பலமாகும்.

    முதல் இரண்டு இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சேப்பாக்கத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் பலப்பரீட்டை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இர்ணடு அணி வீரர்களும் முடிந்தவரை தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்துவார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது சொந்த மைதானம் என்றாலும் குஜராத் அணியை எளிதில் வீழ்த்திவிட முடியாது. கீழ் குறிப்பிட்டுள்ள மூன்று கடுமையான தடைகளை கடக்க வேண்டும்.

    1. முகமது ஷமி

    குஜராத் அணியின் பந்து வீச்சில் முதுகெலும்பாக இருப்பது முகமது ஷமி. சீம்-ஐ பயன்படுத்தி தனது நேர்த்தியான பந்து வீச்சால் பவர்-பிளேயில் அசத்துகிறார். இதனால் லீக் போட்டிகள் முடிவில் 14 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை பெற்றுள்ளார்.

    சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட், கான்வே ஆகியோர் இவரை சமாளித்து ரன்கள் சேர்த்து விட்டால் சென்னை அணியின் ஸ்கோர் வெகுவாக உயரும் என்பதில் ஐயமில்லை.

    2. ரஷித் கான், முகமது நூர்

    பவர்பிளே ஓவர்களை கடந்த பின் சென்னை அணிக்கு சவால் கொடுக்க ரஷித் கான், நூர் முகமது காத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்கிறார்கள். சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து 'ஸ்லோ' ஆக இருக்கும் என்பதால் இவர்கள் இருவருடைய பந்து வீச்சில் அதிக ரன்கள் குவிப்பது எளிதானது அல்ல. ரஷித் கானும் 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். நூர் முகமது 10 போட்டியில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    3. சுப்மான் கில்

    இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு சதங்களுடன் 680 ரன்கள் குவித்துள்ளார். இவரது சதத்தால் ஆர்.சி.பி. அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டது. எந்தவொரு சூழ்நிலையிலும் விளையாடக் கூடியவர். இவரை ஆடுகளத்தில் நிற்க விட்டுவிட்டால், நேரம் செல்ல செல்ல துவம்சம் செய்து விடுவார். இவரை தொடக்கத்தில் அவுட்டாக்கிவிட்டால் குஜராத் அணியின் ரன்குவிப்பை தடுக்கலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இந்த மூன்று தடங்களையும் முறியடித்துவிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் குவாலிபையர்-1ல் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    • இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் குஜராத் வெற்றி பெற்றுள்ளது.
    • சொந்த மண்ணில் விளையாடுவது சி.எஸ்.கே. அணிக்கு கூடுதல் பலமாகும்.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் 31-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது.

    10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. ஒவ்வொரு அணியும் 14 போட்டியில் விளையாடின.

    லீக் முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் 20 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை தலா 17 புள்ளிகள் பெற்றன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி 2-வது இடத்தையும், லக்னோ 3-வது இடத்தையும் பிடித்ததன. இந்த 3 அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தன.

    நேற்றைய போட்டி முடிவில் மும்பை இந்தியன்ஸ் 4-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 5-வது இடத்தையும் (14 புள்ளிகள்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6-வது இடத்தையும் (14), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 7-வது இடத்தையும் (12), பஞ்சாப் கிங்ஸ் 8-வது இடத்தையும் (12), டெல்லி கேப்பிட்டல்ஸ் 9-வது இடத்தையும் (10), சன்ரைசர்ஸ் ஐதராபாத் கடைசி இடத்தையும் (8) பிடித்து வெளியேறின.

    இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் 2 போட்டி நடக்கிறது.

    இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான முதல் தகுதி சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-1), வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.

    2-வது தகுதி சுற்று ஆட்டமும் (குவாலிபையர்-2), இறுதிப்போட்டியும் அகமதாபாத்தில் நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நாளை (23-ந் தேதி) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணி குவாலிபையர்-2 ஆட்டத்தில் விளையாடும்.

    24-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ-மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும். குவாலிபையர்-2 ஆட்டம் 26-ந் தேதியும், இறுதிப்போட்டி 28- தேதியும் நடக்கிறது.

    நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அணி குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்று இருந்தது. அதற்கு பதிலடி கொடுத்து 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    குஜராத் அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் முழு திறமையை பயன்படுத்த வேண்டும்.

    சி.எஸ்.கே. அணி இந்த சீசனில் மும்பை, டெல்லியை 2 முறையும், லக்னோ, பெங்களூர், ஐதராபாத், கொல்கத்தாவை ஒரு தடவையும் வீழ்த்தியது. ராஜஸ்தானிடம் 2 முறையும், குஜராத், பஞ்சாப் கொல்கத்தாவுடன் ஒரு முறையும் தோற்றது. லக்னோவுடன் மோதிய மற்றொரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    சி.எஸ்.கே. அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    தொடக்க ஜோடி பேட்டிங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. கான்வே 6 அரை சதத்துடன் 585 ரன் எடுத்து 5-வது இடத்தில் இருக்கிறார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 3 அரை சதத்துடன் 504 ரன்கள் எடுத்து உள்ளார்.

    இது தவிர ஷிவம் துபே (385 ரன்), ரகானே, கேப்டன் டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் அணியில் உள்ளனர். மொய்ன் அலி, அம்பதிராயுடு ஆகியோர் தங்களது ஆட்டத்தை மேம்படுத்துவது அவசியமாகும்.

    பந்து வீச்சில் துஷார் தேஷ் பாண்டே (20 விக்கெட்), ஜடேஜா (17), பதிரனா (15) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்கத்திலும், கடைசி ஆட்டத்திலும் ரன்களை கொடுக்காமல் இருப்பது முக்கியமானதாகும்.

    சொந்த மண்ணில் விளையாடுவது சி.எஸ்.கே. அணிக்கு கூடுதல் பலமாகும். இதை வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது. சி.எஸ்.கே.வை விட குஜராத்தின் பேட்டிங், பந்து வீச்சு மிகவும் நன்றாக இருக்கிறது.

    குஜராத் அணியில் சுப்மன்கில் (680 ரன்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, விஜய்சங்கர், விருத்திமான் சகா, மில்லர், திவேதியா போன்ற அதிரரடி பேட்ஸ்மேன்களும் முகமது ஷமி, ரஷீத்கான (தலா 23 விக்கெட்), மோகித் சர்மா (17 விக்கெட்), போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் குஜராத் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அந்த அணி சி.எஸ்.கே.வை அதன் சொந்த மண்ணில் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும்.

    சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளை ரசிகர்கள் திரண்டுவந்து ரசிக்கிறார்கள் ஒவ்வொரு ஆட்டத்திலும் சி.எஸ்.கே. வீரர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். நாளைய போட்டியிலும் ரசிகர்களின் கோலாகலத்துக்கு பஞ்சம் இருக்காது.

    • நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
    • எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    பெங்களூரு:

    பெங்களூரு அணி வெளியேறுவதற்கு குஜராத் தொடக்க வீரர் சுப்மன்கில் காரணமாக இருந்தார். அவரது அதிரடி சதத்தால் குஜராத் 198 ரன் இலக்கை எடுத்து பெற்றது. அவர் 52 பந்தில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற சுப்மன்கில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை சென்னையில் சந்திக்கிறோம். சி.எஸ்.கே.வை சென்னையில் எதிர்கொள்வது பரபரப்பாக இருக்கும். சேப்பாக்கம் ஆடுகளத்தில் எங்களது பந்துவீச்சு சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஏற்றதாக இருக்கும்.

    நாங்கள் 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. பெங்களூர் அணிக்கு எதிரான சதம் சிறப்பானது. எனது ஷாட் மிகுந்த திருப்தியை அளித்தது.

    இவ்வாறு சுப்மன்கில் கூறியுள்ளார். அவர் இந்த சீசனில் 680 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

    • முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 178 ரன்கள் குவித்தது.
    • ருதுராஜ் கெயிக்வாட் 4 பவுண்டரி, 9 சிக்சர் உள்பட 92 ரன்கள் எடுத்தார்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 23 ரன்னும், ஷிவம் துபே 19 ரன்னும், டோனி 7 பந்துகளில் 14 ரன்னும் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது. விரித்திமான் சகா 25 ரன்னும், சாய் சுதர்சன் 22 ரன்னும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். அவர் 36 பந்தில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 7 ரன்னும் எடுத்தனர். விஜய் சங்கர் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். 19வது ஓவரில் ரஷீத் கான் சிக்சர் உள்பட 15 ரன்கள் கிடைத்தது.

    இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    சென்னை அணி சார்பில் ஹங்கர்சேகர் 3 விக்கெட் வீழ்த்தினார். ரவீந்திர் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் இன்று வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். 23 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் மொயீன் அலி 23 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்கள், அம்பதி ராயுடு 12 ரன்கள் சேர்த்தனர்.

    தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது. அதன்பின்னர் ரவீந்திர ஜடேஜா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 19 ரன்னில் வெளியேறினார்.

    கேப்டன் டோனி

    கேப்டன் டோனி

     

    அதன்பின் கேப்டன் டோனியுடன் சான்ட்னர் இணைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய கேப்டன் டோனி 7 பந்துகளில் 14 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்குகிறது.

    • தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
    • துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் பிரமாண்டமான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாண வேடிக்கைகளுடன் இன்று தொடங்கியது. தொடக்க விழா குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. விழாவில் நடிகைகள் தமன்னா, ராஷ்மிகா ஆகியோரின் கண்கவர் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

    துவக்க விழா நிறைவடைந்ததும் போட்டி தொடங்கியது. துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது. துவக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர்.

    சிஎஸ்கே அணி: எம்.எஸ்.டோனி (கேப்டன்), தேவன் காவேன், ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, மிட்ச் சான்ட்னர், தீபக் சாகர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (அறிமுகம்).

    குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), ஷுப்மன் கில், விர்திமான் சகா, கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ் லிட்டில், அல்சாரி ஜோசப், யாஷ் தயாள்.

    ×