என் மலர்
நீங்கள் தேடியது "air force officer"
- தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார்.
- இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.
பெங்களூரு:
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா விமானப்படை தளத்தில் விங் கமாண்டர் ஆக பணியாற்றி வருபவர் ஷிலாத்தியா போஸ். இவரது மனைவி மதுமிதா தத்தா. இவர் பெங்களூரு ராமன் நகரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டி.ஆர்.டி.ஓ) சொந்தமான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ஷிலாத்தியா போஸ் பெங்களூருவில் உள்ள தனது மனைவியை பார்க்க வந்திருந்தார். நேற்று காலை 6 மணியளவில் போஸ் உடல் நிலை சரியில்லாத தனது தந்தையை பார்ப்பதற்காக கொல்கத்தாவுக்கு செல்ல வேண்டி பெங்களூரு விமான நிலையத்திற்கு மனைவியுடன் காரில் புறப்பட்டார். காரை மதுமிதா ஓட்டினார்.
விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பு மோட்டார்சைக்கிள் ஒன்று காரை முந்தி சென்றது.
அப்போது கார், மோட்டார்சைக்கிள் மீது உரசியது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்கள் திரும்ப வந்து காரை வழிமறித்தனர். பின்னர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி காரில் இடது பக்கத்தில் அமர்ந்திருந்த போஸை கையால் தாக்கினர்.

மேலும் அருகில் கிடந்த கல்லால் தலையில் பலமாக தாக்கப்பட்டார். வாலிபர்கள் தாக்கியதில் சிலாத்தியா போசின் தலை, மூக்கில் காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து போஸ் கர்நாடகம் ஏன் இப்படி ஆனது. என்னால் நம்பவே முடியவில்லை. கடவுள் நமக்கு உதவுவார். தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய வேண்டும்.
போலீசார் சரியாக பதிலளிக்கவில்லை என்று கூறி ஒரு வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.
இதுகுறித்து போஸின் மனைவி மதுமிதா தத்தா பையப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரில் வாலிபர்கள் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளின் பதிவு எண்ணை குறிப்பிட்டு இருந்தார்.
விசாரணையில் போஸ் மீது தாக்குதல் நடத்தியவர் தனியார் நிறுவனத்தில் தொழில் நுட்ப வல்லுநராக பணியாற்றும் என்ஜினீயர் விகாஸ்குமார் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் விமானப்படை அதிகாரி ஷிலாத்தியா போஸ் தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கிய புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வீடியோவில் போஸ் விகாஸ்குமாரின் சட்டை காலரை பிடித்து கையை கொண்டு பல முறை குத்தியதும், விகாஸ்குமார் கீழே விழுந்த பிறகும் நிற்காமல் கால்களை கொண்டு உதைத்த காட்சிகளும் பதிவாகி இருந்தது.
அதோடு இல்லாமல் விகாஸ்சின் மோட்டார்சைக்கிளின் சாவியையும் பறித்து எறிந்தார். தொடர்ந்து 2 வாலிபர்களையும் ஓட ஓட விரட்டி தாக்கினார். உள்ளூர் மக்கள் சண்டையை விலக்கி விட போராடும் காட்சிகளும் அதில் பதிவாகி இருந்தன.
இதையடுத்து விமானப்படை அதிகாரி போஸ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பையப்பனஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பெங்களூரு கிழக்கு பிரிவு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறுகையில், விமானப்படை விங் கமாண்டர் ஷிலாத்தியா போஸ் மீது மொழி பிரச்சினை தொடர்பாக தாக்குதல் நடைபெறவில்லை.
காரும், மோட்டார்சைக்கிளும் உரசியதால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது என தெரிவித்தார்.
ஷிலாத்தியா போஸ், தொழில்நுட்ப வல்லுநர் விகாஸ்குமாரை கொடூரமாக தாக்கி விரட்டியடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சகஸ்ரநாமம் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
- வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் டான்சா நகரை சேர்ந்தவர் சகஸ்ரநாமம் (வயது 70). இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.
சகஸ்ரநாமம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் இவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வந்தது.இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று எங்கு இருந்து துர் நாற்றம் வருகிறது என பார்த்தனர். அப்போது சகஸ்ரநாமம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனையடுத்து போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். வீட்டிற்குள் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி இறந்து கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சகஸ்ரநாமம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இரணியல்:
இரணியல் அருகே வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 59). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் குடும்பத்தோடு திருவனந்த புரத்திலும், மகள் இரணியல் அருகே மல்லங்கோடு பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.
வேணுவின் மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். வேணு நேற்று காலை மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் இருந்த நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த 137 பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ் பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினார்கள்.
கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கி உள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொள்ளை சம்பவம் குறித்து வேணு கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
வேணு வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த வேணுவினுடைய நாயும் குறைக்க வில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் தெரிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.






