search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "air force officer"

    • சகஸ்ரநாமம் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    கோவை,

    கோவை வடவள்ளி அருகே உள்ள பொம்மனம்பாளையம் டான்சா நகரை சேர்ந்தவர் சகஸ்ரநாமம் (வயது 70). இவர் இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    சகஸ்ரநாமம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்தநிலையில் இவரது வீட்டில் இருந்து தூர்நாற்றம் வந்தது.இதனால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர் இது குறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று எங்கு இருந்து துர் நாற்றம் வருகிறது என பார்த்தனர். அப்போது சகஸ்ரநாமம் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதை போலீசார் கண்டு பிடித்தனர். அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து போலீசார் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். வீட்டிற்குள் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி இறந்து கிடந்தார். அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று சகஸ்ரநாமம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #Abhinandan #BringBackAbhinandan
    சென்னை:

    பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

    இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை கைது செய்துள்ளோம். அவருடைய சர்வீஸ் எண் 27981. அவர் இப்போது எங்கள் ராணுவத்திடம் உள்ளார் என பாகிஸ்தான் தெரிவித்தது.



    இதற்கிடையே, பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தன் வர்த்தமான், சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் எனவும், இவரது தந்தை விமானப்படை முன்னாள் அதிகாரி என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

    இந்நிலையில், பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்டுள்ள சென்னையை சேர்ந்த விமானப்படை அதிகாரியான அபினந்தனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அபினந்தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சுற்றி  எனது நினைவுகள் தற்போது உள்ளது என தெரிவித்துள்ளார். #MKStalin #Abhinandan #BringBackAbhinandan
    விமானப்படை அதிகாரி வீட்டில் 137 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 59). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் குடும்பத்தோடு திருவனந்த புரத்திலும், மகள் இரணியல் அருகே மல்லங்கோடு பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

    வேணுவின் மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். வேணு நேற்று காலை மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் இருந்த நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 137 பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ் பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கி உள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளை சம்பவம் குறித்து வேணு கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    வேணு வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த வேணுவினுடைய நாயும் குறைக்க வில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் தெரிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ×