என் மலர்
நீங்கள் தேடியது "கேரட்"
- கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது.
- கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும்.
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இவை இரண்டும் சுவையான, ஆரோக்கியமான காய்கறிகளாக உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. இயற்கையான இனிப்புச்சுவை கொண்ட இந்த இரண்டு வேர் காய்கறிகளும் எளிதாக சமைப்பதற்கும், ருசிப்பதற்கும் ஏற்றவை. கண் பார்வையை மேம்படுத்தும், இதயத்தை பாதுகாக்கும் 'ஆரோக்கிய சக்தி மையங்களாக' இவை கருதப்படுகின்றன. இருப்பினும் கண்களுக்கும், இதயத்துக்கும் இவை வழங்கும் நன்மைகள் வேறுபடுகின்றன. அது பற்றி தெரிந்து கொள்வோமா?
கண் ஆரோக்கியம் காக்கும்
கேரட், கண் ஆரோக்கியம் காக்கும் பிரபலமான காய்கறியாக அறியப்படுகிறது. இதில் இருக்கும் அதிக அளவிலான பீட்டா-கரோட்டின் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவிடும். கண் பார்வை திறனுக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் பீட்டா-கரோட்டின் அதிக அளவில் உள்ளது. அதன் ஆரஞ்சு நிறமே அதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.
கேரட்டை விட சர்க்கரைவள்ளிக்கிழங்கில் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளது. இரவு நேர பார்வையிழப்பு தன்மை ஏற்படுவதை தடுப்பதிலும், ஒட்டுமொத்த கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறப்புற்று விளங்குகிறது. குறிப்பாக உணவில் வைட்டமின் ஏ குறைவாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உட்கொள்வது சிறந்தது.
கண் செல்களை பாதுகாக்கும்
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள், ஆக்சிஜனேற்ற அழுத்தம் காரணமாக ஏற்படும் கண் செல்களின் சேதத்தை தடுக்க உதவுகின்றன. கேரட்டில் லூட்டின், ஜியாசாந்தின் போன்ற சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகளில், ஆந்தோசியானின் அதிகம் உள்ளன. அவை நீண்ட கால கண் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ரத்த அழுத்தத்தை காக்கும்
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியம், உடலில் அதிகமாக சேரும் சோடியத்தை சமநிலைப்படுத்தக்கூடியது. அதன் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவிடும். கேரட்டிலும் பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னிலை வகிக்கிறது.
கொழுப்பை கட்டுப்படுத்தும்
கேரட்டில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து குடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த உதவும். செரிமான மண்டலத்தில் சேமித்துவைத்து, ஆரோக்கியமான கொழுப்பை தொடர்ந்து பயன்படுத்த வழிவகை செய்யும்.
அழற்சியை குறைக்கும்
இதய நோய்கள் ஏற்படுவதற்கு அழற்சி முக்கிய காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள சேர்மங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகளும் அழற்சியால் ஏற்படும் சேதங்களை தடுக்க துணைபுரிகின்றன.
ரத்த நாளங்களை பாதுகாக்கும்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு இரண்டும் ரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படாமல் காக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளன. குறிப்பாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு ரத்த நாளங்களை நெகிழ்வாக வைத்திருக்க உதவும். கேரட் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை குறைக்க வித்திடும்.
சாப்பிட எது எளிது?
கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். எங்கும் எடுத்து சென்று எப்போதும் சாப்பிடலாம் என்பதால், தினசரி உணவில் கேரட்டை சேர்ப்பது மிகவும் எளிது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல. அதிக ஸ்டார்ச் உள்ளடக்கம் காரணமாக வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் வேகவைத்து சாப்பிடுவதே நல்லது.
எது சிறந்தது?
கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டுமே கண், இதய ஆரோக்கியத்திற்கு நலம் சேர்ப்பவை. எனினும் கேரட்டில் கண் ஆரோக்கியத்திற்கு நேரடியாக பயனளிக்கும் ஊட்டச்சத்துகள் அதிகம் காணப்படுகிறது. இதயத்தை பாதுகாக்கும் தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிகம் உள்ளன.
கண் ஆரோக்கியத்திற்கு கேரட் சிறந்த தேர்வாக இருந்தாலும், இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு முன்னணியில் இருக்கிறது. எனவே இரண்டையும் சமநிலையாக உணவில் சேர்த்துக்கொள்வதே முழுமையான ஆரோக்கியத்தை பேணுவதற்கு சிறந்த வழியாகும்.
- கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
கோத்தகிரி:
மலை மாவட்டமான நீலகிரியில் மலை காய்கறி பயிர்களில் கேரட் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
மாவட்டத்தில் பல ஏக்கர் பரப்பில் கேரட் பயிர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோத்தகிரி பகுதியில் கேரட் அதிகமாக பயிரிடப்படுகிறது.
இங்கு விளையும் கேரட் மேட்டுப்பாளையத்தில் உள்ள மண்டிக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்து, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள கேரட் மண்டிக்கு நீலகிரியில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவிலான கேரட் வருகிறது. அதுவும் தினமும் ஆயிரம் டன் வரை மேட்டுப்பாளையம் மண்டிக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களாகவே கேரட் விலை மண்டிகளில் ரூ.100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 50 ரூபாய்க்கு விற்பனையானது.
தற்போது கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநில கேரட் வரத்து மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிக்கு அதிகமாக வருவதால் விலை உச்சத்தில் இருந்த கேரட் தற்போது வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது மேட்டுப்பாளையம் மண்டிகளில் கேரட் ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இதனால் கேரட் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, விலை தொடர்ந்து குறைந்து வருவதால், கேரட் உற்பத்தி செய்யும் செலவு, தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம், ஏற்றுமதி, வண்டி வாடகை என உற்பத்தி செலவு கூட மிஞ்சவில்லை என்றனர்.
- மலை காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்து.
- கிலோ ரூ.4க்கு விற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டது. அப்போது மஞ்சூர், தங்காடு, மணலாடா, இத்தலார், எம்.மணியட்டி, எமரால்டு உள்ளிட்ட பகுதிளில் மாற்றுப் பயிராக கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காளிபிளவர், முள்ளங்கி, பீன்ஸ், மேராக்காய், உகு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மட்டுமல்லாமல் பழ வகைகளும் பயிரிடப்பட்டன.
இந்த காய்கறிகளுக்கு ஊட்டி, கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல விலை கிடைத்து வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
தினமும் ஊட்டி மார்க்கெட்டுக்கு, சராசரியாக, 50 டன் மலை காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக, 30 டன் அளவுக்குத்தான் விற்பனைக்கு வருகின்றன.
உறைபனி விழுவதால் மலை காய்கறிகளை பாதுகாக்க காலை நேரங்களில், 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. உறைபனி தாக்கத்தால் முட்டைகோஸ் பயிர் நிறம் மாறியுள்ளது.
முட்டைகோசுக்கு நல்லவிலை கிடைத்து வந்தநிலையில் தற்போது அதன் விலை குறைந்து காணப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டது.
ஆனால் படிப்படியாக விற்பனை விலையில் சரிவு ஏற்பட்டு தற்போது கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். போதிய விலை கிடைக்காததால் பல விவசாயிகள் முட்டைகோஸ் அறுவடை செய்யாமல் விட்டுவிடும் நிலை காணப்படுகிறது
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:-
ஊட்டியில் பயிரிடப்படும் கேரட், பீட்ரூட் உள்பட பல்வேறு மலைகாய்கறிகள் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் கொண்டு செல்லப்படுகிறது.
தற்போது பிற மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வருவதால், நீலகிரி மலை காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. நேற்று ஊட்டி மார்க்கெட்டில் முட்டைகோஸ் கிலோ 4 ரூபாய்க்கு தான் விற்பனையானது.
15 ரூபாய்க்கு மேல் விற்றால் தான் கட்டுபடியாகும். பீட்ரூட், கேரட் விலையும் இதுபோன்று குறைந்து தான் காணப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய பகுதி கிராம பகுதிகளில் அதில்பேரிகை, அத்தி முகம், காமன் தொட்டி, பி.எஸ். திம்மசந்திரம், காட்டு நாயக்கன தொட்டி, உலகம், மேலுமலை, காளிங்காவரம், உத்தனப்பள்ளி, மேடுபள்ளி, கொல்லப்பள்ளி, கும்பளம், மற்றும் பல பகுதிகளில் கேரட்அமோகமாக விளைந்து வருகிறது.
- கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது.
- கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
போரூர்:
கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு ஊட்டி மற்றும் கர்நாடகா மாநிலம் மாலூர் ஆகிய பகுதிகளில் இருந்து கேரட் விற்பனைக்கு வருகிறது. தினசரி 10 லாரிகளில் 80 முதல் 100 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருவது வழக்கம்.
ஆனால் கடந்த சில நாட்களாகவே ஊட்டியில் இருந்து வரும் கேரட் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் கோயம்பேடு மார்கெட்டில் கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ஊட்டி கேரட் ரூ.35-க்கும், மாலூர் கேரட் ஒரு கிலோ ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.
ஆனால் அதையும் வாங்கி செல்ல சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதனால் விற்பனை ஆகாமல் கேரட் மூட்டை, மூட்டையாக தேங்கி வருகிறது.
இதைத்தொடர்ந்து கேரட்டுகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினமும் 10 டன் கேரட் மூட்டை, மூட்டையாக குப்பையில் வீணாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கேரட் மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, வரத்து அதிகரிப்பால் கேரட் விலை வீழ்ச்சி அடைந்துள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே அதன் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடக்கவில்லை.
மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தேக்கமடைந்து கிடக்கும் கேரட் மறுநாளே அழுகி வீணாகி விடுகிறது. இதனால் தினசரி 10டன் அளவிலான கேரட் குப்பையில் கொட்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
- லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரவேணு
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.
கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து விவசாயி கள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவு க்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.
கொள்முதல் விலை வீழ்ச்சியடை ந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
- வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது.
- சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
குதிரையின் சக்தியை 'ஹார்ஸ் பவர்' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது.
வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம்.
கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும்.
டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும்.
-மரிய பெல்சின்
- தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலைகாய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.
எனவே விவசாயிகள் கேரட்டை முன்கூட்டியே அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று, பின்னர் மூட்டைகளில் நிரப்பி, காய்கறி மண்டிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.அங்கு உள்ள காய்கறி மண்டிகளில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரட் கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.120 வரை கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்புகூட கேரட் கிலோவுக்கு ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் ரூ.13 முதல் ரூ.20வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.12 முதல் ரூ.18 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது. கேரட் கொள்முதல்விலை வீழ்ச்சியடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர்.
- 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
- வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இன்று 550-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன.
ஊட்டி கேரட், வெண்டைக்காய், முருங்கைக்காய் ஆகியவை வரத்து குறைவால் அதன் விலை அதிகரித்து உள்ளது. கேரட் கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ், அவரைக்காய் மற்றும் பன்னீர் பாகற்காய் ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் காய்கறிகளின் விலை பல மடங்கு எகிறி உள்ளது. தக்காளி ரூ40-க்கும், உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கும், முருங்கைக்காய் மற்றும் இஞ்சி கிலோ ரூ.120 வரையிலும் விற்கப்பட்டு வருகிறது.
- வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.
நள்ளிரவில் வழக்கம் போல விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேபோல் வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-
தக்காளி-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.20-ரூ.25வரை, ஆந்திரா வெங்காயம்-ரூ.12-ரூ.15வரை, சின்ன வெங்காயம்-ரூ.20-ரூ.40வரை, உருளைக்கிழங்கு-ரூ.22, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.15, அவரைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ70, மாலூர் கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.80, பீர்க்கங்காய்-25, வெள்ளரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.15, காராமணி-ரூ.15, முள்ளங்கி-ரூ15, சவ்சவ்-ரூ.10, நூக்கல்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15, குடை மிளகாய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.25,பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.20, இஞ்சி-ரூ.90.
- விதவிதமான உணவு சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர்.
- குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.
விதவிதமான உணவுகள் சாப்பிடுவதை அனைவரும் விரும்புவர். சைவம், ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது. இனிப்பு வகைகள் பல உள்ளன. அவற்றில் வீட்டிலேயே சுலபமாக செய்யக்கூடிய கேரட், தேங்காய் லட்டு எப்படி செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கேரட்- 3
தேங்காய்- ஒரு கப் (துருவியது)
சர்க்கரை- 250 கிராம்
ஏலக்காய் தூள்- ஒரு ஸ்பூன்
பால் பவுடர்- 100 கிராம்
மெலன் சீட்ஸ்- ஒரு ஸ்பூன்
நெய்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் நெய் சேர்த்து அதில் துருவிய கேரட் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சர்க்கரை நன்றாக உருகி கேரட் வெந்தவுடன் அதில் துருவிய தேங்காயை சேர்க்க வேண்டும்.
பின்னர் அதில் பால் பவுடர் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை சற்று கெட்டியாகி வந்தவுடன் அதில் மெலன் சீட்ஸ் சேர்த்து கிளறி இறக்க வேண்டும். இந்த கலவை ஆறியதும் லட்டுக்களாக உருட்டி எடுத்து பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

- சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம்.
ஆண்கள், பெண்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைவரும் சந்திக்கும் ஒரு தொல்லை, முடி உதிர்வு. குறிப்பாக, இந்த சுட்டெரிக்கும் கோடைக்காலங்களில் முடி உதிர்வு, முடி வறட்சி போன்ற எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்தவகையில், கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இந்த கேரட் ஹேர் மாஸ்கை ஒரு முறை பயன்படுத்திப் பாருங்கள்.
உடலில் ஊட்டச்சத்து குறைவாக இருந்தால்தான், தலைமுடி ஆரோக்கியத்தை இழக்கும். எனவே, அதற்கேற்றவாரு செயற்கை பொருட்களைப் பயன்படுத்தாமல், நாம் வீட்டில் இருந்தப்படியே கூந்தலை கவனிப்பது மிகவும் அவசியம். கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தலை முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும், இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. நல்ல முடி வளர்ச்சியைத் தூண்டவும் கேரட் உதவும். ஒருவேளை உங்களுக்கு கேரட் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கேரட்டின் ஆரோக்கிய நன்மைகளைப் பெற, மாஸ்க் வடிவில் நேரடியாக உங்கள் தலைமுடியில் தடவி வரலாம். இது அவ்வளவு ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

கேரட் மாஸ்க் செய்ய தேவையானப் பொருட்கள்:
கேரட் – 1 அல்லது 2
வாழைப்பழம் – 1
தயிர் – மூன்று டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறை:
முதலில் கேரட்டுகளின் தோல்களை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் வாழைப்பழத்தை உரித்து, அதனையும் ஜாரில் சேர்த்து மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியாக அந்தக் கலவையில், தயிர் மற்றும் பாதாம் சேர்த்து தலை முடியில் நன்றாக தடவ வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளிக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் வாரம் ஒருமுறை தொடர்ந்து இதனை செய்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
இந்த கேரட் மாஸ்க், உங்கள் முடி வறட்சி ஆகாமல் தடுக்கும். அதேபோல் உச்சந்தலையில் வெப்பத்தால் ஏற்படும் வறட்சியை போக்கி, பொடுகை நீக்கும். மேலும் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்துக்கொள்வதோடு, முடி உதிராமாலும் பாதுகாக்கும்.






