search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி
    X

    கோத்தகிரியில் கேரட் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி

    • தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
    • லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அரவேணு

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது.

    இதற்கு அடுத்தபடியாக ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், உள்பட பல்வேறு காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

    கோத்தகிரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கேரட் பயிரிட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    அறுவடைக்கு தயாரான கேரட் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து விவசாயி கள் கேரட்டை அறுவடை செய்து, காய்கறி கழுவும் மையங்களுக்கு கொண்டு சென்று கழுவி, அதனை மூட்டைகளில் நிரப்பி காய்கறி மண்டிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட கேரட் கிலோவு க்கு ரூ.70 வரை காய்கறி மண்டிகளில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மேட்டுப்பாளையம் காய்கறி மாண்டிகளில் ரூ.40 முதல் ரூ.50 வரையும், கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு ரூ.45 ரூபாய் முதல் ரூ.60 வரை மட்டுமே கொள்முதல் செய்யபடுகிறது.

    கொள்முதல் விலை வீழ்ச்சியடை ந்துள்ளதால் அதை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாவிட்டாலும், லாபம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×