என் மலர்tooltip icon

    வழிபாடு

    • திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.
    • திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.

    இந்த வார விசேஷங்கள்

    22-ந் தேதி (செவ்வாய்)

    * பிரதோஷம்.

    * நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.

    * நயினார்கோவில் அன்னை சவுந்திர நாயகி அம்மானை ஆடி வரும் காட்சி.

    *சமநோக்கு நாள்.

    23-ந் தேதி (புதன்)

    * திருவாடானை சிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் பவனி.

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி வேணுகான கிருஷ்ண மூர்த்தி அலங்காரம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷ வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    24-ந் தேதி (வியாழன்)

    * ஆடி அமாவாசை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஐந்து பெரிய திருவடி சேவை.

    * காரையார் சொரி முத்தையனார் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் தீர்த்தாபிஷேகம்.

    * மதுரை கள்ளழகர் கருட சேவை.

    * சமநோக்கு நாள்.

    25-ந் தேதி (வெள்ளி)

    * திருவாடனை சிநேகவல்லியம்மன் வெண்ணெய் தாழி சேவை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    26-ந் தேதி (சனி)

    * நயினார்கோவில் சவுந்திரநாயகி சிவலிங்க பூஜை காட்சி.

    * நாகப்பட்டினம் நீலாயதாட்சியம்மன் இரவு மகிசாசூரசம்காரம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகப் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    27-ந் தேதி (ஞாயிறு)

    * மதுரை மீனாட்சி முளைக்கொட்டு விழா தொடக்கம்

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் புஷ்பப் பல்லக்கிலும், ரெங்க மன்னார் குதிரை வாகனத்திலும் புறப்பாடு.

    * ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் ரத உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    28-ந் தேதி (திங்கள்)

    * ஆடிப்பூரம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம்.

    * திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் முளைக்கொட்டு ஊஞ்சல்.

    * மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்தில் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    • அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.
    • அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது.

    அமாவாசை நல்ல நாளா?, கெட்ட நாளா? என்பதிலே பலருக்கும் மாற்றுக் கருத்து உண்டு. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் இந்த நாளில், சுப காரியங்கள் செய்வதோ, ஒரு காரியத்தை தொடங்குவதோ கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம். இறைவனால் உண்டான இந்த உலகத்தில் நாம் வாழும் ஒவ்வொரு தினமும் நல்ல தினம்தான். அந்த வகையில் அமாவாசை தினமும் நல்ல நாளே.

    சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் ஒன்றையொன்று சந்திக்கும் தினம், அமாவாசை. இந்த நாளில் இறந்து போன நம் முன்னோர்களின் ஆன்மாக்கள், புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு வரும். தங்களது தலைமுறைகளை சூட்சமமான முறையில் கண்காணித்து, அவர்கள் தொடங்கும் காரியங்களை கணிவோடு பார்ப்பார்கள். அந்த காரியம் வெற்றிபெற ஆசிர்வதிப்பார்கள். எனவே இந்த நாளும் நல்ல நாள்தான்.

    எனவே பித்ருக்கள் என்று அழைக்கப்படும் நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யும் அமாவாசை தினத்தில், புதிய காரியங்களைத் தொடங்கினால், அது நிச்சயம் நல்லவிதமாகவே நடைபெறும். அமாவாசை மாதம் தோறும் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது. அதில் ஆடி அமாவாசை வரும் வியாழக்கிழமை வரப்போகிறது.

    அந்த நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதோடு, வீடு, வாசல் இல்லாத ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். ஆடி அமாவாசை என்று இல்லாமல், ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை போன்ற ஜீவராசிகளுக்கும் உணவு அளிக்க வேண்டும்.

    அமாவாசை பிதுர் தர்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றை குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவர்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். அதுவும் இயலாதவர்கள் வீட்டில் வைத்து செய்யலாம். வீட்டில் செய்ய நினைப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்து குளித்து உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அன்று அரை நாள் விரதம் இருந்து புரோகிதரை வைத்து தர்ப்பணம் கொடுக்கலாம். அதுவும் முடியாதவர்கள் எள்ளும், தண்ணீரும் இறைத்து வழிபடலாம். அதன் பிறகு சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். அன்னதானம் செய்ய முடியாதவர்கள், ஒரு பசு மாட்டிற்கு 9 வாழைப்பழத்தை வழங்கலாம்.

    முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசியை பெறுவதுடன், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்தும், பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

    அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் உள்ள கடல் அல்லது நதியில் நீராடலாம். ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அது முடியாதவர்கள், ஆடி அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்தாலே, ஆண்டு முழுவதும் தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைத்து விடும்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    எதிரிகள் விலகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் ரீதியான பயணங்கள் உண்டு. மாற்று வைத்தியத்தால் உடல் நலம் சீராகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம்.

    ரிஷபம்

    யோகமான நாள். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. மங்கலச் செய்தியொன்று வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு தொகை கிடைக்கும்.

    மிதுனம்

    முன்னேற்றம் கூட முக்கிய முடிவெடுக்கும் நாள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும். வரன்கள் வாயில் தேடி வரும்.

    கடகம்

    போட்டிகளை சமாளிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். காரியமொன்று சுறுசுறுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    சிம்மம்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும். மக்கள் செல்வாக்கு பெற்றவர் ஒருவர் உங்கள் காரிய வெற்றிக்கு கைகொடுத்து உதவுவார்.

    கன்னி

    பிரச்சனைகள் தீரும் நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் வளர்ச்சி பெருமை தரும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

    துலாம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். பணிச்சுமை காரணமாக உத்தியோகத்திலிருந்து விடுபடலாம் என்று சிந்திப்பீர்கள்.

    விருச்சிகம்

    பேச்சிலும், செயலிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப் போகலாம்.

    தனுசு

    பாசமிக்க உறவினர்கள் பக்கபலமாக இருக்கும் நாள். பல நாட்களாக நடைபெறாத காரியம் இன்று நடைபெறலாம். தொழில் முயற்சிகளில் ஏற்பட்ட தடுமாற்றம் அகலும்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ளத் திட்டமிடுவீர்கள். மாலை நேரம் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    கும்பம்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணைபுரியும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    மீனம்

    எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் நடைபெறும் நாள். சுபச் செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். தொழில் நலன் கருதி முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    • நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி.
    • சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : துவாதசி காலை 6.45 மணி வரை பிறகு திரயோதசி பின்னிரவு 3.57 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 7.52 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்

    இன்று பிரதோஷம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பூந்தேரில் பவனி. நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் பெரிய கிளி வாகனத்திலும், மாலை வேணுகோபால அலங்கா ரத்திலும் காட்சி. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகி அம்மன் ஆடி வரும் திருக்கோலமாய்க் காட்சி. திரு மயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் ஸ்ரீ சுவாமி அம்பாள் மாலை ரிஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-தேர்ச்சி

    சிம்மம்-நன்மை

    கன்னி-நலம்

    துலாம்- பொறுமை

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- நற்செய்தி

    மகரம்-இன்சொல்

    கும்பம்-லாபம்

    மீனம்-பாராட்டு

    • இன்று சர்வ ஏகாதசி.
    • நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-5 (திங்கட்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : ஏகாதசி காலை 8.56 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : ரோகிணி இரவு 9.06 மணி வரை பிறகு மிருகசீரிஷம்

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

    இன்று சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்பம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. நயினார்கோவில் ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் ராஜாங்க அலங்கார காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி,

    திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. நத்தம் வர குணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-நிறைவு

    கன்னி-முயற்சி

    துலாம்- தனம்

    விருச்சிகம்-உயர்வு

    தனுசு- புகழ்

    மகரம்-சுகம்

    கும்பம்-அமைதி

    மீனம்-பொறுமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    வருமானம் திருப்தி தரும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.

    ரிஷபம்

    தொடரும் வெற்றிகளால் துணிவு ஏற்படும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

    மிதுனம்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல் நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட உதவி கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கும்.

    கடகம்

    யோகமான நாள். உடல் நலம் சீராகும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் துணையாக விளங்குவர்.

    சிம்மம்

    போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    கன்னி

    சுறுசுறுப்பாகச் செயல்படும் நாள். எடுத்த காரியங்களை முடிக்க இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் விவாகப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    துலாம்

    காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். கவலைக்குரிய தகவல் வந்து சேரலாம். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    விருச்சிகம்

    யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    தனுசு

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். உங்களை பொல்லாதவர்கள் விட்டு விலகுவர். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும்.

    மகரம்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்தைப் பெறுவீர்கள்.

    கும்பம்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். தடம் மாறிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.

    மீனம்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்துசேரும்.

    • விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
    • ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
    • ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-4 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : தசமி காலை 11.19 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : கார்த்திகை இரவு 10.36 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருத்தணி முருகன் கோவிலில் தெப்பம், பார்த்தசாரதி கோவில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் மகாலட்சுமி அலங்காரம். திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் பல்லக்கில் பவனி. நயினார் கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகி பல்லாங்குழி ஆடிவரும் கோலாகலக்காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-கவனம்

    கடகம்-பொறுப்பு

    சிம்மம்-பொறுமை

    கன்னி-ஆக்கம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- மேன்மை

    மகரம்-நற்சொல்

    கும்பம்-உழைப்பு

    மீனம்-கடமை

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    நினைத்த காரியம் நிறைவேறும் நாள். தொழில் பங்குதாரர்கள் இணக்கமாக நடந்து கொள்வர். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். பாக்கிகள் வசூலாகி பணவரவை கூட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. உடல் நலம் சீராகும். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    கடகம்

    அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும் நாள். தொழில் சம்பந்தமாக தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் மகிழ்ச்சி தரும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    சிம்மம்

    போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட பகை மாறும். சங்கிலித் தொடர் போல வந்த கடன் சுமை குறையும்.

    கன்னி

    யோகமான நாள். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்கு உரிய செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். அயல் நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் கிடைக்கும்.

    துலாம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களின் அனுசரிப்புக் குறையும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. தொழில் பங்குதாரர்கள் தொல்லை தருவர்.

    விருச்சிகம்

    முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    தனுசு

    யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சனைகளைக் கண்டும், காணாமல் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு திடீர் செலவுகள் ஏற்படலாம்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும். விழாக்களில் கலந்துகொள்ள அழைப்புகள் வரலாம். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவீர்கள்.

    கும்பம்

    விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள். அலைச்சல் கூடினாலும் ஆதாயம் கிடைக்கும்.

    மீனம்

    விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    • ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன.
    • அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதன்படி,

    * தை மாதம் வரும் தை கிருத்திகை,

    * கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை

    * ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை

    இந்த மூன்றும் தமிழ்க்கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களாகும்.

    ஆடி மாதக்கிருத்திகை ஏன் விசேஷம் என்றால் மழைக்காலத் தொடக்கமான தட்சணாயனம் பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளுக்கும் ஏற்றதாகவும், உத்தராயனம் திருமணம், உபநயனம், கிரஹப் பிரவேசம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு ஏற்றதாகவும் சொல்லப்படுகிறது.

    ஆடி மாதத்தில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் பண்டிகைகளும், விரதங்களும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப்படும் இந்த மாதத்தில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப்படுகிறது.

    தைமாதக் கார்த்திகையை விட ஆடிக் கார்த்திகையே சிறப்பாகவும் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறுமாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

    ஆடிக்கிருத்திகை தினமான நாளை பெண்கள் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

    ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு விரதம் இருக்கும் முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள்.

    ஆடிக்கிருத்திகை அன்று பழனியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

    இந்நாளில் பக்தர்கள் காவடி எடுத்து தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். அனைத்து முருகன் தலங்களிலும் ஆடிக்கிருத்திகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கயிலை நாதனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதிர்ந்த ஆறு பொறிகள் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக மாற அந்தக் குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள்.

    உலக மக்களின் நன்மைக்காக உதித்த அந்த சரவணனை வளர்த்த கார்த்திகைப் பெண்களையும் சேர்த்து நினைவுகூரும் வகையில் ஆடிக் கிருத்திகை தினத்தன்று முருகனைப் போற்றி பிராத்தனைகள் நிறைவேற்றுவது வழக்கம்.

    குறிப்பாக திருத்தணியில் தெப்ப உற்சவம் ஆடிக்கிருத்திகையன்று ஆரம்பிக்கிறது. அரக்கர்களின் செருக்கழித்து முருகன் ஓய்வெடுத்த திருத்தலம் திருத்தணி ஆகும்.

    அந்த தினத்தில் இங்கு அரக்கர்கள் வீழ்ச்சிக்கும் மக்கள் மகிழ்ச்சிக்கும் வழிவகுத்துக் கொடுத்த இறைவனை நினைத்து பல்வேறு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    • பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
    • பக்தர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    தேனியில் இருந்து 19 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில். சுயம்புவாக எழுந்தருளி மூலவர் நிலையில் உள்ள சனீஸ்வர பகவான் கோவில் என்பதால் தமிழக அளவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.

    முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் இங்கு மூலவர் 6 கண்களுடன் காட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.

    தற்போது கோவில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஆடி மாத வழிபாடு வழக்கமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வசதிக்காக கோவிலின் முன்பு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு கூட்ட நெரிசலில் தரிசனம் செய்ய பாதை வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் சுரபி நதியில் நீராடி பின்னர் சனீஸ்வர பகவானை மனமுருக வழிபட்டு எள்தீபம் ஏற்றி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக தேனியில் இருந்து சிறப்பு பஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல திண்டுக்கல் மலையடிவாரம் சனீஸ்வர பகவான் கோவிலிலும் இன்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அவர்கள் கோவில் முன்பு தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

    ஆடி 18-ம் நாளன்று இங்குள்ள சனீஸ்வர பகவான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆடி-3 (சனிக்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : நவமி நண்பகல் 1.45 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : பரணி நள்ளிரவு 12.13 மணி வரை பிறகு கார்த்திகை

    யோகம் : சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சனிபகவானுக்கு அலங்காரம்

    குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்காரம். நாகப்பட்டினம் ஸ்ரீ நீலாயதாட்சியம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் உற்சவம் ஆரம்பம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். நயினார் கோவில் அன்னை ஸ்ரீ சவுந்திர நாயகியம்மன் உற்சவம் ஆரம்பம். இந்திர விமானத்தில் பவனி வரும் காட்சி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்.

    உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சனம். திருஇந்தளூர் ஸ்ரீ பரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-இன்பம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-நன்மை

    துலாம்- வரவு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-களிப்பு

    மீனம்-உவகை

    ×