என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    ரிஷபம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.

    மிதுனம்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை உண்டு

    கடகம்

    வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.

    சிம்மம்

    கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தானே தேடிவரும்.

    கன்னி

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும். வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் சீராக நடைபெறும்.

    துலாம்

    வருமானம் உயரும் நாள். இடம், பூமி வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அயல்நாட்டிலிருந்து உத்தியோகம் சம்பந்தமாக வரும் அழைப்புகள் ஆச்சரியமூட்டும்.

    விருச்சிகம்

    மகிழ்ச்சி கூடும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். உறவினர் வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். உடல் நலம் சீராகும். உத்தியோக உயர்வு உண்டு.

    தனுசு

    தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியவேண்டிய நாள். தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என்று விரும்புவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    மகரம்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். பிள்ளைகளால் பெருமைகள் ஏற்படும். அலைபேசி வழியில் அனுகூலத் தகவல் வந்து சேரும்.

    கும்பம்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள்.

    மீனம்

    சச்சரவுகள் அகலும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நெடுநாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரலாம். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-18 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி பின்னிரவு 2.50 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : பூராடம் இரவு 10.28 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை, பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீசோமசுந்தரர் புட்டுத் திருவிழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி, திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்கடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை.

    கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீஅபய பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம் பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-இன்சொல்

    கடகம்-பரிசு

    சிம்மம்-உறுதி

    கன்னி-நற்சொல்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பக்தி

    கும்பம்-விவேகம்

    மீனம்-ஆர்வம்

    • ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது.
    • சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

    ஜோதிட ரீதியாக பல்வேறு தோஷங்கள் இருந்தாலும் கிரகண தோஷம் சிலரின் வாழ்வில் மீள முடியாத இன்னல்களை ஏற்படுத்திக் கொண்டுதான் உள்ளது. தோராயமாக ஒரு ஆண்டில் வருடத்திற்கு நான்கு கிரகணங்கள் ஏற்படுகிறது. ஸ்வஸ்தி ஸ்ரீ மங்களகரமான விசுவாவசு வருடம் ஆவணி 22ம் நாள் ஞாயிற்றுகிழமை 7.9.2025 அன்று 9.56 இரவு முதல் 8.9.2025 அன்று 1.26 நள்ளிரவு வரை பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். சந்திர கிரகண நாளில் 12 ராசியினரும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

    கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்.

    சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி புனர்பூசம், விசாகம். கிரக தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்துவிட்டு சிவன் கோவில் சென்று வருவது நல்லது.

    மேஷம்: மேஷ ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. நான்காம் அதிபதி சந்திரன் 11ம் இடமான லாப ஸ்தானத்தில் கிரகணம் அடைகிறார்.

    இதற்கு குரு பார்வை இருக்கிறது கால்நடை வளர்ப்பவர்கள், விவசாயிகள், பண்ணையாளர்கள் ஆதாயமான பலன் பெறுவார்கள். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் நல்லது. அன்று போரிங் போடுதல் கிணறு வெட்டுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    தாயையும் தாய்வயதில் உள்ளவர்களை மதிப்பதும் ஆசிர்வாதம் பெறுவதும் இன்னல்களை நீக்கும்.

    ரிஷபம்: ரிஷப ராசிக்கு பத்தாமிடமான ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. அன்று உங்களின் மூன்றாம் அதிபதி சந்திரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கிறார். தகவல் தொடர்பு சாதனங்களான பேஸ்புக் யூடியூப் இன்ஸ்டாகிராம், பத்திரிக்கை துறை எழுத்துத் துறையினரின் வாழ்வாதாரம் உயரும்.

    இந்த நாளில் ஜாமீன் போடுவது தேவையற்ற வெளியூர் பயணங்கள், முக்கிய ஒப்பந்தங்கள், சிற்றின்பம் இவைகளை தவிர்த்தால் நன்மைகள் மிகுதியாகும். இளைய சகோதரன் சகோதரி போன்றவர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்வதன் மூலம் உங்களுக்கு உயர்வு உண்டாகும்.

    மிதுனம்: மிதுன ராசியினருக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. உங்களின் தன ஸ்தான அதிபதி சந்திரன் மேன்மையான பலன்களை தரக்கூடிய ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிப்பதால் அனுபவ ஆற்றல் அதிகமாகும். பேச்சை மூலமாக கொண்டவர்கள், பேங்கிங் 'ஆடிட்டிங்' டீச்சிங் புரோகிதம், ஜோதிடம் மந்திர உபதேசம் ஆகியவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

    இன்றைய நாளில் செயற்கை முறை கருத்தரிப்பு, தூர தேசப் பிரயாணங்களை ஒத்தி வைக்க வேண்டும். கடுமையான மாத்ரு தோஷம் உள்ளவர்கள் பித்ரு தர்ப்பணங்கள் செய்யலாம். தந்தை, தந்தை வழி முன்னோர்களை வழிபடுவதால் வாழ்க்கை ஒளிமயமாகும்.

    கடகம்: ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் ராகு சேர்க்கையுடன் கிரகணம் சம்பவிக்கிறது ராசி அதிபதி சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் நின்று சந்திராஷ்டமத்துடன் கிரகணம் சம்பவிப்பதால் வழக்குகள், அறுவை சிகிச்சை, வெளியூர் வெளிநாட்டுப் பயணம் கொடுக்கல் வாங்கல், வீண் வாக்குவாதங்கள் சண்டை சச்சரவு, தற்பெருமை சுய கவுரவம் எதிர்பார்ப்பது, ஆகியவற்றை தவிர்ப்பதால் இன்னல்கள் குறையும்.

    ஆரோக்கியத்தை காக்கும் மிதமான உணவுகளை சாப்பிட வேண்டும். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவை அறிந்து உதவி செய்வதால் உங்களின் தேவைகள் நிறைவேறும்.

    ஐ.ஆனந்தி

     

    சிம்மம்: ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. தொழில் தொடர்பான புதிய முயற்சிகள், திருமணம், திருமண ஒப்பந்தம், விவாகரத்து வழக்குகளை விசாரித்தல், வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் இவைகளை சில நாட்களுக்கு தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் தொல்லைகள் வரலாம். வாழ்க்கை துணை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களை பகைக்க கூடாது. சிற்றின்பம், நண்பர்கள் சுற்றம் சூலத்துடன் விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வது அன்றைய நாட்களுக்கு தகாத செயலாகும். நலிந்தவர்களின் வாழ்வாதாரம் உயரத் தேவையான உதவிகளை செய்வது நல்லது.

    கன்னி: கன்னி ராசிக்கு ஆறாம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இன்றைய நாளில் கடன் தீர்ப்பதால் நிரந்தரமாக கடன் தொல்லை குறையும். அஜீரண சக்தி குறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. விலை உயர்ந்த பொருட்கள், ஆபரணங்கள் நகைகளை கவனமாக கையாளவேண்டும். பிறகுக்கு கடன் கொடுப்பது கடன் பெறுதல் நல்லதல்ல. பல வருடங்களாக தீராத தீர்க்க முடியாத நோய்யுள்ளவர்கள் மிருத்யுஞ்ஜெய மந்திரம், ஸ்ரீ ருத்ரம் படிப்பது கேட்பதால் ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பய உணர்வு அகலும். தாய் மாமா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு ஆடைதானம் வழங்கி ஆசீர்வாதம் பெறுவது நல்லது.

    துலாம்: ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும்.

    குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும். குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும். காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம். ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது நன்னடத்தையுடன் நடந்து கொள்வது சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.

    விருச்சிகம்: உங்கள் ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. பாக்யாதிபதி சந்திரன் சுகஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தாய் தந்தை, தந்தை வழி உறவுகளுடன் மோதல் கருத்து வேறுபாடு வரலாம். தாய் தந்தையரை அனுசரித்துச் செல்வதால் அவர்களின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.

    சொத்து வாங்குவது விற்பது ஆகியவற்றில் தவறான விலை நிர்ணயம் ஏற்படலாம். முதல் முறையாக நோய்க்கு வைத்தியம் செய்வது நல்லதல்ல. தாயின் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் வரலாம். பெற்றோர்கள் பெரியோர்கள் முன்னோர்களின் நல்லாசிகளை பெறுவதால் சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும்.

    தனுசு: தனுசு ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. அஷ்டமாதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும். வீடு மாற்றுவது,வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது.முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும்.

    சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். சாலையோரம் வசிப்பவர்களின் தேவையறிந்து உதவுவது நல்லது.

    மகரம்: ராசிக்கு இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது. பேச்சை மூலமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். 7ம் அதிபதி சந்திரன் 2ம் இடத்தில் நிற்பதால் நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால்,வேற்று மதத்தினர் வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு.

    சிலருக்கு உணவு ஒவ்வாமை. அலர்ஜி, கண் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். காரசாரமான விவாதங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெளிவான மனக் குழப்பமற்ற பேச்சுகளால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். அடிப்படை வசதிகள் அற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும்.

    கும்பம்: கும்ப ராசியில் சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைவதால் கடன் நோய் எதிரி சார்ந்த பாதிப்புகள் வரலாம். தவிர்க்க முடியாத கடுமையான உடல் பாதிப்பு உள்ளவர்கள் அன்று வைத்தியம் செய்யலாம். சுய வைத்தியம்.

    சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பெரிய பணப் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் காரியங்கள் முயற்சிகளில் கடை தாமதங்கள் இருக்கும். சுயக்கட்டுப்பாடு மிக அவசியம். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனதின் எண்ண ஓட்டங்களை கட்டுப்படுத்துவது நல்லது. மன வளர்ச்சியற்றவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது நல்லது.

    மீனம்: ராசிக்கு 12ம் மிடமான அயன சயன விரய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சந்திரனுடன் ராகு இணைந்து கிரகண தோஷம் ஏற்படுகிறது. தூக்கம் சற்று குறைவுபடும். மனசஞ்சலம் பய உணர்வும் இருக்கும். குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக இருப்பீர்கள். அதிர்ஷ்டம் சார்ந்த செயல்களில் ஆதாயம் குறைவுபடும். பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி சீட்டு போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கை, கால் மூட்டு வலி, பாதம், இடது கண் போன்றவற்றில் பாதிப்பு இருக்கும்.

    கண், மூட்டு அறுவை சிகிச்சைகளை ஒத்தி வைக்கவும். ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய உணவு சாப்பிடுவது நல்லது. கண் அறுவை சிகிச்சை செய்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

    கிரகண காலங்களில் செய்யக்கூடாதவை

    ஞாயிற்றுக்கிழமை 7.9.2025 மாலை 4.00 மணிக்கு பிறகு உணவு உண்ணக் கூடாது. கிரகண நேரத்தில் சமையல் செய்யவோ, சாப்பிடவோ கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்ப்பையை போட்டு வைக்க வேண்டும்.

    கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    உயிர் காக்க தேவையான நிலையில் அறுவை சிகிச்சை செய்யலாம். மற்றவர்கள் ஒரு நாள் கழித்து அறுவை சிகிச்சை செய்யலாம் . அறுவை சிகிச்சை அவசியம் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பவர்கள் கால பைரவரை வழிபட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம்.

    கிரகண காலங்களில் செய்யக் கூடியவை

    ராகு கேதுக்களின் பாதையில் பூமி, சூரியன், சந்திரன் நேர்கோட்டில் வரும் அந்த நொடிகள் அமானுஷ்யமான விசயங்களை உண்டாக்கும். அந்த நேரத்தில் நாம் இறைவனை சரணடைந்து வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும். கிரகண காலங்களில் செய்யப்படும் வழிபாடுகள் பல மடங்கு புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும். சுய ஜாதகத்தில் உள்ள கிரகண தோஷ வீரியம் குறையும். கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்யலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்.

    செல்: 98652 20406

    • மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.
    • திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மரியா இறைவனின் அன்னை விழா மற்றும் திருக்காட்சி திருவிழாவில் பங்கில் உள்ள சிறுவர்,சிறுமியர்களுக்கு புது நன்மை வழங்குதல்.

    பிப்ரவரி 2- ஆண்டவரை காணிக்கையாக ஒப்பு கொடுத்தல் விழா. முதல் திருப்பலி முடிந்ததும் மெழுகுவர்த்திகள் மந்திரிக்கப்படும்.

    பிப்ரவரி 11- லூர்து அன்னை விழா, மாலை மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திருப்பவனி.

    மார்ச் 25- கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு விழா.

    மே மாதம் - மாதாவிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட மாதம். காலை 5.45 மணிக்கு தமிழில் திருப்பலி, மாதா சொரூப ஆசீர்.

    காலை 7 மணிக்கு தமிழில் பாடல் திருப்பலி, மாலை 5.30 மணிக்கு மரியாவின் வணக்க மாதம். படித்தல் நவநாள் ஜெபம். அன்னையின் திருத்தேர் பவனி, திருப்பலி.

    மே 30- மாதாவிற்கு முடிசூட்டும் விழா ஆடம்பரமாக நடைபெறும்.

    மே 31- காலை 7 மணிக்கு பாடல் திருப்பலி முடிந்ததும் திவ்ய நற்கருணை செய்யப்பட்டு பகல் முழுவதும் ஆராதனை நடைபெறும்.

    மாலை 6 மணிக்கு மாதா குளத்தில் திருப்பலி, மாதா குளத்தில் இருந்து திருத்தலத்திற்கு திவ்ய நற்கருணை பவனி, திரு உரை திவ்ய நற்கருணை ஆசீர்.

    ஜூன் மாதம்- இயேசு திரு இருதயத்துக்கு ஒப்பு கொடுக்கப்பட்ட மாதம். அன்றைய மாதம் தினமும் மாலை 5.45 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெப மாலை, இயேசுவின் திரு இருதய ஜெபம், திவ்ய நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி.

    ஜூன் 30- இயேசுவின் இருதய திருத்தேர் பவனி.

    ஜூலை 6- மாலை கார்மேல் அன்னை கொடியேற்றம்.

    ஜூலை 15- மாலை கார்மேல் அன்னை திருத்தேர் பவனி.

    ஜூலை 16- கார்மேல் அன்னை திருவிழா.

    ஆகஸ்டு 15- மரியாவின் விண்ணேற்பு பெருவிழா.

    ஆகஸ்டு 29- ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம், தொடர்ந்து 30-ந் தேதி முதல் செப்டம்பர் 6 -ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    செப்டம்பர் 7- பெரிய தேர்பவனி

    செப்டம்பர் 8- அன்னை மரியாள் பிறந்தநாள்.

    செப்டம்பர் 15- புனித வியாகுல மாதா திருவிழா.

    அக்டோபர் 7- புனித ஜெபமாலை அன்னை திருவிழா.

    நவம்பர் 21- புனித கன்னி மரியாவை காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல் விழா.

    டிசம்பர் 8- புனித கன்னி மரியாவின் அமர் மேற்பவ பெருவிழா.

    டிசம்பர் 24- நள்ளிரவு 11.45 தமிழில் பாடல் திருப்பலி.

    டிசம்பர் 25- கிறிஸ்துமஸ் பெருவிழா.

    டிசம்பர் 28- மாசிலா குழந்தைகள் விழா

    மேற்கண்ட திருவிழாக்கள் வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    • வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும்.
    • கொடியேற்றத்தின் போது, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் திரண்டு வருவார்கள்.

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் கொடி மரம் ஆலயத்தின் அடையாளமாகவும், பக்தியின் வெளிப்பாடாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் இந்த கொடிமரத்தில் தான் கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த கொடி மரம் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையையும், மரியன்னையின் அருளையும் குறிக்கிறது.

    திருவிழாக்களில்...

    வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நடைபெறும் திருவிழாக்களில் கொடியேற்றம் மிக முக்கியமான நிகழ்வாகும். இந்த நாளில், ஆலயத்தின் கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. இது விழாவின் தொடக்கத்தை குறிக்கிறது. கொடி மரம் பக்தர்கள் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படுகிறது. கொடி அசைவதன் மூலம், அன்னை மரியாளின் ஆசீர்வாதம் ஆலயத்திற்குள் வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    முக்கிய அடையாளம்

    கொடி மரம், வேளாங்கண்ணி பேராலயத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். இது ஆலயத்தின் முகப்பில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது, மேலும் இது ஆலயத்திற்கு வரும் பக்தர்களை வரவேற்கிறது. கொடி மரத்திற்கு ஆன்மிக ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பல அர்த்தங்கள் கூறப்படுகின்றன.

    ஆலயத்தின் வாயிலில் உள்ள இந்த கொடி மரம், பக்தர்களை உள்ளே வரும்போது புது மனிதர்களாகவும், புத்துணர்ச்சியுடன் ஆலயத்திற்குள் செல்லவும் வைப்பதாக கருதப்படுகிறது. கொடியேற்றத்தின் போது, ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் திரண்டு வருவார்கள்.

    அணிவகுப்புகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சிலைகளும் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

    • வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
    • கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளுக்காக தீர்வு கிடைக்க வேண்டி தர்மலிங்கேஸ்வரரை நாடி வருகிறார்கள்.

    தர்மலிங்கேஸ்வரை வழிபட்டு தொடர்ந்து கிரிவலம் சென்றால் குழந்தை பாக்கியம், தொழில் பிரச்சினை, வீடு கட்ட உள்ள தடை மற்றும் திருமண தடை போன்ற தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம். தர்மர் வந்து வழிபட்டதால் நியாயம், தர்மம், வழக்குகளில் வெற்றி மற்றும் நீதி வேண்டுபவர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்தும், மலர்கள் வாங்கி கொடுத்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    நினைத்த காரியம் கைகூடும்: தர்மலிங்கேஸ்வரரை வழிபட்டால், நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்.

    திருமணத்தடை நீங்கும்: திருமணத்திற்காக காத்திருப்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    குழந்தை பாக்கியம்: குழந்தைப்பேறு இல்லாதவர்கள், இங்கு வந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    தொழில் விருத்தி: தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, விருத்தி அடையும்.

    கஷ்டங்கள் நீங்கும்: வாழ்வில் உள்ள கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.

    நோய் நீங்கும்: உடல் உபாதைகள் மற்றும் நோய்கள் நீங்கி, ஆரோக்யம் மேம்படும்.

    பாவங்கள் நீங்கும்: இங்கு வந்து வழிபட்டால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும்.

    சகல தோஷங்களும் நீங்கும்: கிரக தோஷங்கள், திருமண தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கும்.

    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் விறகு விற்ற திருவிளையாடல்.
    • ஓணம் பண்டிகை.

    இந்த வார விசேஷங்கள் (2-9-2025 முதல் 8-9-2025 வரை)

    2-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல்.

    * விருதுநகர் சுவாமி நந்தி வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.

    * குறுக்குத்துறை முருகப் பெருமான் திருவீதி உலா.

    * கடையம் விசுவநாதர் தெப்ப உற்சவம்.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந் தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமந்து அருளிய லீலை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந் தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் விறகு விற்ற திருவிளையாடல்.

    * விருதுநகர் சொக்கநாதர் ரத உற்சவம், இரவு ஏகாந்த சேவை.

    * திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    5-ந் தேதி (வெள்ளி)

    * ஓணம் பண்டிகை.

    * பிரதோஷம்.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந் தேதி (சனி)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், காரமடை அரங்கநாதர், ராமகிரிப்பேட்டை கல்யாண நரசிங்க பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    7-ந் தேதி (ஞாயிறு)

    * பவுர்ணமி.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமானுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந் தேதி (திங்கள்)

    * மகாளய ஆரம்பம்.

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    ரிஷபம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் செலவுகள் ஏற்படலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    மிதுனம்

    எண்ணிய காரியம் எளிதில் நிறைவேறும் நாள். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியை கொண்டுவந்து சேர்ப்பர். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கடகம்

    நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண் டியநாள். நாடுமாற்றம், வீடு மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    சிம்மம்

    பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும் நாள். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பயணம் பலன்தரும்.

    கன்னி

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணப் பேச்சுகள் முடிவிற்கு வரும்.

    துலாம்

    இனிய செய்தி இல்லம் தேடிவரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தாய்வழி ஆதரவு உண்டு. வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

    விருச்சிகம்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    தனுசு

    யோகமான நாள். உடன்பிறப்புகள் வழியே உதவி கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும். ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பணிபுரிவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    மகரம்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரம்பத்தில் அச்சுறுத்தலாக தோன்றிய தகவல் முடிவில் ஆதாயத்தைக் கொடுக்கும். உடல்நலம் சீராகும்.

    கும்பம்

    குறைய விரயங்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும்.

    மீனம்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொலைதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.

    • கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-17 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : மூலம் இரவு 9.04 மணி வரை பிறகு பூராடம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. தென்காசி ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

    குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-ஜெயம்

    மிதுனம்-தெளிவு

    கடகம்-பண்பு

    சிம்மம்-உண்மை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-லாபம்

    தனுசு- களிப்பு

    மகரம்-சுபம்

    கும்பம்-வரவு

    மீனம்-செலவு

    • வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான்.
    • சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம்.

    மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலையில் இருப்பதாலும், மலையை சுற்றி வனப்பகுதி என்பதாலும் வனவிலங்குகளின் நடமாட்டம் இருக்கும். இதை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள்.

    அதன்படி தினந்தோறும் மாலை 4 மணிக்கு மேல் சாமியை தரிசிக்க மலையேற அனுமதி இல்லை. மாலை 4.30 மணிக்கு நடை அடைக்கப்படும் வரை மட்டுமே பக்தர்கள் சிவனை தரிசனம் செய்ய முடியும். இரவு நேரங்களில் சுவாமியை தரிசிக்க முடியாது.

    அதற்கு ஒரே ஒரு நாள் மட்டும் விலக்காக உள்ளது. அதுதான் மகா சிவராத்திரி அன்று மட்டும் விடிய, விடிய பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அன்று இரவு விடிய, விடிய கோவிலில் பூஜைகள் நடக்கிறது. மொத்தம் 4 கால பூஜைகள் நடக்கின்றன. கடந்த மகாசிவராத்திரி அன்று 12 ஆயிரம் பக்தர்கள் இரவில் மலையேறி தர்மலிங்கேஸ்வரரை தரிசனம் செய்துள்ளனர்.

    மகத்துவம் வாய்ந்த மகா சிவராத்திரி

    மகா சிவராத்திரி நாளில் சிந்தையில் அமைதியுடன் ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.; ஒரு பிரளய காலத்தின்போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் பார்வதி தேவி, சிவபெருமானை நினைத்து பூஜை செய்தாள். அதோடு நான்கு ஜாமங்களிலும் ஆகம விதிப்படி அர்ச்சனையும் செய்தாள். சூரிய அஸ்தமன நேரம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை, பார்வதிதேவி பூஜை செய்த காலமே, 'மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.

     

    வழிபாட்டின் முடிவில் பார்வதிக்கு காட்சி தந்தார், சிவபெருமான். அவரிடம் பார்வதிதேவி, "ஐயனே.. சிவராத்திரி தினத்தில் நான்கு ஜாமம் முழுவதும் தங்களை (சிவன்) நினைத்து வழிபடுபவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் தந்தருள வேண்டும். மேலும் அவர்களின் வாழ்நாள் இறுதியில் முக்தியையும் அளிக்க வேண்டும்" என்றாள். ஈசனும், அதன்படியே பார்வதிக்கு அருள் செய்தார்.

    மாதம்தோறும் சிவராத்திரி தினம் வந்தாலும், அம்பிகையால் வழிபடப்பட்ட மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை 'மகா சிவராத்திரி' என்று கொண்டாடுகிறோம்.

    ஒரு முறை மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் இடையே 'தங்களில் யார் பெரியவர்?' என்ற போட்டி உருவானது. அப்போது சிவபெருமான், அடிமுடி காண முடியாத ஜோதிப் பிளம்பாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். 'ஈசனின் முடியையோ, அடியையோ யார் முதலில் காண்கிறார்களோ, அவர்களே பெரியவர்' என்று சொல்லப்பட்டது.

    இதையடுத்து அன்னப் பறவை உருவம் எடுத்த பிரம்மன், ஈசனின் முடியைத் தேடியும், வராக வடிவம் எடுத்த மகாவிஷ்ணு, பாதாளத்தைத் தோண்டியபடி ஈசனின் அடியைத் தேடியும் புறப்பட்டனர். இந்த கோலத்தையே, 'லிங்கோத்பவர் கோலம்' என்பார்கள். மகாசிவராத்திரி நாளில்தான், இந்த திருக்காட்சி காணக் கிடைத்தது என்கிறார்கள்.

    சிவராத்திரி விரதம் இருப்பதால், தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைப்பிடிக்கலாம். வருடம் முழுவதும் விரதம் மேற்கொள்வது, நூறு அஸ்வமேத யாகம் செய்வது, பலமுறை கங்கையில் நீராடுவது ஆகியவை கூட, ஒரு மகா சிவராத்திரி விரதத்திற்கு ஈடாகாது. அந்த அளவுக்கு மகாசிவராத்திரி விரதம், மகத்துவம் வாய்ந்தது.

    விரதம் இருப்பது எப்படி?

    சிவராத்திரிக்கு முன்தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரிய உதயத்தின் போது வீட்டில் பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று, மூலவர் சிவலிங்கத்தை வணங்கிவர வேண்டும். மாலையில் வீட்டில் பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்கான பொருட்களுடன் சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

    அங்கு நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு, சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகம், அலங்காரங்களை கண்டுகளிக்க வேண்டும். அப்போது இறைவனின் திருநாமத்தைத் தவிர வேறு எதையும் உச்சரிக்கக் கூடாது. இரவு முழுவதும் கண் விழித்து இருக்க வேண்டும். ஆலயத்திற்குச் சென்றுதான் கண்விழித்து இருக்க வேண்டும் என்று கிடையாது.

    வீட்டிலும் கூட மகா சிவராத்திரி அன்று, நான்கு ஜாமங்களிலும் முறைப்படி பூஜை செய்து, ஈசனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்வது உரிய பலனைத் தரும். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். சிந்தையில் அமைதியுடன், சிவபுராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும்.

    பற்றற்று இருப்பதுடன், பேராசைகளைக் கைவிட்டு, பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான 'சிவாய நம' என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோவில்களுக்கு வாங்கிக் கொடுப்பதும் நன்மையை அளிக்கும்.

    வீட்டில் மகா சிவராத்திரி பூஜை செய்யும் போது, சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா, பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து, இறைவனை பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்கள், ஆலயத்தை வலம் வந்து, சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    நான்கு ஜாம பூஜைகளும் முடிந்த பிறகு, மறுநாள் காலையில் நீராடி, காலையில் செய்யும் காரியங்களையும், உச்சிகாலத்தில் முடிக்க வேண்டிய காரியங்களையும் அப்போதே முடிக்க வேண்டும். பின்னர் இறைவனுக்கு படைத்த நைவேத்தியங்களை தானம் அளித்து, விரதம் இருப்பவர்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    சிவராத்திரி நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத் துதிகளைச் சொல்லியும், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டும், அந்த இரவை கழிக்கலாம். தொடர்ச்சியாக 24 வருடங்களுக்கு சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், சிவகதி அடைவார்கள் என்பது ஐதீகம். அத்துடன் அவர்களின் 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தி கிடைக்கப்பெறும் என்கிறார்கள்.

    நான்கு கால பூஜைகள்

    மகாசிவராத்திரி நாளில், இரவு முழுவதும் கண் விழித்து, நான்கு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும், சிவபெருமானுக்கு அபிஷேகம், ஆராதனை, நெய்வேத்தியம் போன்றவை செய்யப்படும்.

    முதல் காலம்:மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, இரண்டாம் காலம்:இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, மூன்றாம் காலம்:நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, நான்காம் காலம்:அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை இந்த நான்கு கால பூஜைகளும் சிவபெருமானின் அருளைப் பெறவும், பாவங்கள் நீங்கவும், முக்தி அடையவும் செய்யப்படுகின்றன.

    • சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-16 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : நவமி நள்ளிரவு 1 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம் : கேட்டை இரவு 7.14 மணி வரை பிறகு மூலம்

    யோகம் : சித்த/ அமிர்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு சோமவார அபிஷேகம்

    சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் வளையல் விற்றருளிய காட்சி. இரவு சுவாமிக்கு பட்டாபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமாள் புறப்பாடு. கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.

    திருவிடை மருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி. திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட் நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் அலங்கார திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பாலாபிஷேகம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-துணிவு

    மிதுனம்-தாமதம்

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-பணிவு

    கன்னி-நலம்

    துலாம்- சுகம்

    விருச்சிகம்-விருத்தி

    தனுசு- ஆக்கம்

    மகரம்-பரிசு

    கும்பம்-தனம்

    மீனம்-இன்பம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.

    ரிஷபம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இடம், வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இனிமை தரும் விதம் இடமாற்றம் அமையும்.

    கடகம்

    எதிரிகள் விலகும் நாள். எதிர்பாராத தொகை இல்லம் வந்து சேரும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடி நடைபெறும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கன்னி

    தைரியத்தோடும், தன்னம்பிகையோடும் செயல்படும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    துலாம்

    பிள்ளைகள் வழியில் பெருமைக்குரிய செய்தி கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். அன்பு நண்பர்கள் ஆதரவு தருவர்.

    விருச்சிகம்

    தேடிய வேலை திடீரென கிடைக்கும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க தகவல் வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.

    தனுசு

    பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

    மகரம்

    விரயங்கள் கூடும் நாள். விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.

    கும்பம்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மீனம்

    உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் பங்குதாரர்கள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். நூதன பொருள் சேர்க்கை உண்டு.

    ×