என் மலர்
வழிபாடு
- கோவர்த்தன விரதம்.
- மெய்கண்ட நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-5 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பிரதமை இரவு 7.40 மணி வரை
பிறகு துவிதியை இரவு 9.44 மணி வரை
நட்சத்திரம் : சுவாதி நள்ளிரவு 2.02 மணி வரை. பிறகு விசாகம் நள்ளிரவு கடந்து அதிகாலை 4.36 மணி வரை.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று கந்தசஷ்டி விழா தொடக்கம்
இன்று கோவர்த்தன விரதம். கந்தசஷ்டி விழா தொடக்கம். சிக்கல் சிங்காரவேலவர் விழா தொடக்கம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு. மெய்கண்ட நாயனார் குருபூஜை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிந்தனை
ரிஷபம்-நன்மை
மிதுனம்-பக்தி
கடகம்-வரவு
சிம்மம்-உற்சாகம்
கன்னி- பரிசு
துலாம்- சாந்தம்
விருச்சிகம்-உயர்வு
தனுசு- லாபம்
மகரம்-புகழ்
கும்பம்-நற்செயல்
மீனம்-பயணம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
ரிஷபம்
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். உடல்நலனில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
புகழ் கூடும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். உடன்பிறப்புகள் வழியில் உற்சாகமான தகவல் உண்டு. வழக்குகளில் இருந்த தேக்க நிலை மாறும்.
கடகம்
சொன்ன சொல்லை நிறைவேற்றும் நாள். சுபநிகழ்ச்சிகளில் புதியவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல தகவல் வந்து சேரும்.
சிம்மம்
உற்சாகம் அதிகரிக்கும் நாள். கைமாத்தாகக் கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையை இன்று முடிப்பீர்கள்.
கன்னி
வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு.
துலாம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். குடும்பச்சுமை கூடும். விரயங்களைச் சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். நட்பு பகையாகலாம். மருத்துவச் செலவு உண்டு.
விருச்சிகம்
நண்பர்களின் ஒத்துழைப்பால் நலம் காணும் நாள். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோக உயர்வு உண்டு.
தனுசு
நல்ல சம்பவம் நடைபெறும் நாள். சவால்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல்நலனில் கவனம் தேவை. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மகரம்
சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திசை திருப்பங்கள் ஏற்படும். தொழிலை விரிவுசெய்ய முன்வருவீர்கள்.
கும்பம்
ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்றுக் கொள்வது பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும்.
- தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை.
- திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று தீபாவளி ஆஸ்தானம் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஏழுமலையான் சர்வ பூபால வாகனத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்தார். ஏழுமலையானின் படைத்தளபதி விஸ்வக்சேனர் மற்றொரு பல்லக்கில் பவனி வந்தார்.
அர்ச்சகர்கள் சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையானுக்கு சகஸ்ர தீப அலங்கார சேவை நடந்தது.
தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் நடைபெறவில்லை. தோமாலா அர்ச்சனை சேவை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் காஞ்சி காமகோடி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் கலந்துகொண்டு பின்னர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து காத்திருப்பு அறைகள் நிரம்பியது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காத்திருந்தனர்.
திருப்பதியில் விட்டு விட்டு மழை பெய்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,026 பேர் தரிசனம் செய்தனர். 23,304 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3. 86 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருஷ்ண தேஜா விருந்தினர் மாளிகை வரை பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.
- அமாவாசை
- திருத்தணி முருகன் பாலாபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-4 (செவ்வாய்கிழமை)
திதி : அமாவாசை திதி மாலை 5.46 மணிக்கு மேல் பிரதமை திதி
நட்சத்திரம் : சித்திரை நட்சத்திரம் இரவு 11.35 மணிக்கு மேல் சுவாதி நட்சத்திரம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று அமாவாசை
இன்று அமாவாசை. முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். கேதார கவுரி விரதம். வள்ளியூர் முருகன் பவனி. திருத்தணி முருகன் பாலாபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-போட்டி
ரிஷபம்-கவனம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-நட்பு
சிம்மம்-சோர்வு
கன்னி-விருத்தி
துலாம்- களிப்பு
விருச்சிகம்-தொல்லை
தனுசு- முயற்சி
மகரம்-பயம்
கும்பம்-பரிசு
மீனம்-விவேகம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
முன்னோர் வழிபாட்டால் முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
ரிஷபம்
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். கண்டும் காணாமலும் சென்ற உறவினர்கள் வலிய வந்து உறவாடுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் திருப்தி தரும்.
மிதுனம்
மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனைகள் மேலோங்கும். பொருளாதார நலன்கருதி வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கடகம்
பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம்.
சிம்மம்
முன்னேற்றத்திற்கு வழிவகை செய்து கொள்ளும் நாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். கல்யாண முயற்சி கைகூடும்.
துலாம்
வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும்.
விருச்சிகம்
பெரியோர்களின் ஆசியால் பெருமைகள் சேரும் நாள். வருமானம் திருப்தி தரும். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.
தனுசு
வரவு திருப்தி தரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். பயணங்கள் பலன்தருவதாக அமையும்.
மகரம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப்பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. உத்தியோக மாற்றம் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
கும்பம்
மனச்சுமை அகலும் நாள். வீட்டைச் சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். புதிதாகத் தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீனம்
ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச்சமாளிக்கப் பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
- வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
- சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-3 (திங்கட்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி மாலை 4.14 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : அஸ்தம் இரவு 9.26 மணி வரை பிறகு சித்திரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று தீபாவளி பண்டிகை, சுப முகூர்த்த தினம், சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்
இன்று தீபாவளி பண்டிகை. சுபமுகூர்த்த தினம் (எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம் விடியற்காலை 3.30 மணிக்கு மேல் 6 மணிக்குள்). வள்ளியூர் ஸ்ரீ முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம். வெள்ளி மயில் வாகனத்தில் பவனி. மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் வைரக்கிரீடம் சாற்றியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-சாந்தம்
மிதுனம்-மகிழ்ச்சி
கடகம்-லாபம்
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- அன்பு
மகரம்-வரவு
கும்பம்-போட்டி
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும்.
ரிஷபம்
இல்லம் தேடி இனிய தகவல் வரும் நாள். பிள்ளைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இடம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பாதை புலப்படும். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டைப் பராமரிப்பதில் ஆர்வம் கூடும்.
கடகம்
கோவில் வழிபாட்டால் குதூகலம் கூடும் நாள். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். எதிரிகள் விலகுவர். எந்தச் செயலையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். விருந்தினர் வருகை உண்டு. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். முயற்சி கைகூடும்.
கன்னி
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். வீடு வாங்குவது பற்றி யோசிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். பணவரவு திருப்தி தரும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
செல்வாக்கு அதிகரிக்கும் நாள். திடீர்ப் பயணம் திகைக்க வைக்கும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். உறவினர் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
மகரம்
தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம்
எதிரிகளின் பலம் கூடும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள் வரலாம். கூட்டாளிகள் குழப்பத்தை உருவாக்குவர்.
மீனம்
பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வருமானம் உயரும். உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.
- கேதார கவுரி விரதத்தை வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம்.
- கேதார கவுரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்குகிறது.
சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது கேதார கவுரி விரதம். இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை வரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்கிறார்கள். கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் இந்த விரதத்தை இருப்பார்கள்.
கயிலாய மலையில் வீற்றிருக்கும் சிவனையும், பார்வதி தேவியையும் அங்கு வரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வணங்கி செல்வது வழக்கம். அவர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தீவிரமான சிவ பக்தர். இவர் சிவபெருமானை தவிர வேறு எந்த கடவுளையும் வணங்க மாட்டார்.
ஒரு முறை பிருங்கி முனிவர் சிவபெருமானை வழிபட வேண்டி கயிலாய மலைக்கு வந்தார். அப்போது சிவனும், பார்வதி தேவியும் சேர்ந்து காட்சியளித்தனர். இருப்பினும், பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து, இருவருக்கு இடையே சுற்றி சிவபெருமானை மட்டும் வழிபட்டார். இதனால் மிகுந்த கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி முனிவரிடம், "உன் உடலுக்கு தேவையான சக்தி அனைத்தையும் நானே தருகிறேன். ஆனால் நீ என்னை வழிபட மறுக்கிறாய். என்னை வழிபடாத உனக்கு என்னுடைய சக்தி மட்டும் எதற்கு. அதனால் சக்திக்கு தேவையான ரத்தம், நரம்பு, சதை போன்றவற்றை திருப்பிக் கொடுத்துவிடு" என்றார்.
உடனே சிறிதும் யோசிக்காத பிருங்கி முனிவர், தன் உடலில் இருந்த சக்தி அனைத்தையும் பார்வதி தேவி கேட்டபடியே கொடுத்தார். இதனால் வலுவிழந்த அவர் எலும்பும், தோலுமாக காட்சியளித்தார். அவர் நிற்க முடியாமல் கீழே விழ நிலைதடுமாறினார். இதைக் கண்ட சிவபெருமான் மனம் இரங்கி பிருங்கி முனிவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி அருளினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, "என்னை மதிக்காத பிருங்கி முனிவருக்கு நீங்கள் உதவி செய்யலாமா" என்று கயிலாயத்தை விட்டு வெளியேறினார்.
பின்பு, பூலோகம் வந்த பார்வதி தேவி, பல வருடங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்ட நந்தவனத்துக்கு சென்றார். பார்வதி தேவி நந்தவனம் வந்ததும் பாலைவனம் போல காட்சியளித்த அந்த இடம் பூக்கள் பூத்து சோலைவனமாக மாறியது. அப்போது அங்கு வந்த வால்மீகி முனிவர், பார்வதி தேவியை தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.
பின்பு, வால்மீகி முனிவர் பார்வதி தேவியிடம் "தாயே, தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன" என்று கேட்டார். பார்வதி தேவி "நான் மீண்டும் ஈசனுடன் சேர வேண்டும். அதற்கான வழி இருந்தால் கூறுங்கள்" என்றார். இதையடுத்து பல சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்த முனிவர், "அனைத்து விரதங்களிலும் மேலான ஒரு விரதம் உள்ளது. அந்த விரதத்தை கடைப்பிடித்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும்" என்றார். பின்பு, கேதாரீஸ்வரர் நோன்பு' என்ற விரதத்தை பார்வதி தேவிக்கு விளக்கி கூறினார்.
முனிவர் கூறியபடி, பார்வதி அந்த விரதத்தை தவறாது கடைப்பிடித்து வந்தார். இவ்வாறு விரதத்தை கடைப் பிடித்த 21-வது நாள் தேவ கணங்கள் சூழ சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்தார். அதன்பின்பு சிவ பெருமான், தன்னுடைய இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயத்துக்கு திரும்பினார். இவ்வாறு பார்வதி தேவி கடைப்பிடித்த விரதம் என்பதால் இவ்விரதம் 'கேதார கவுரி விரதம்' எனப் பெயர் பெற்றது.
கேதார கவுரி விரதத்தை வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். சிவனின் அருளையும், அம்பிகையின் அருளையும் ஒரு சேர பெற வைக்கும் மிக அற்புதமான விரதம் இதுவாகும். கேதார கவுரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்குகிறது. விரதம் இருப்பவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்து சிவனை பூஜை செய்ய வேண்டும்.
விரதம் தொடங்கும் நாளில், கலசத்தை 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் சுற்றி அமைத்து, அதை சிவ-பார்வதியாக வழிபடுவர். பார்வதி தேவி 21 நாட்கள் விரதம் இருந்ததால் பூஜையின்போது 21 என்ற எண்ணிக் கையில் பழம், பாக்கு, வெற்றிலை, பூஜை பொருட்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடியும் நாளில் நோன்பு கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்வர். பின்பு, 21 வகையான காய் கறிகளால் உணவு சமைத்து உறவினருக்கு கொடுத்து விரதத்தை முடிப்பர்.
- தீபாவளி தினத்தன்று நண்பர்களை வீட்டுக்கு வரவழையுங்கள்.
- வீட்டுக்கு அருகில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
தீபாவளி பண்டிகை... மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்
தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் என்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம். இந்த மகிழ்ச்சியை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். எப்படி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும் என்று கேட்கலாம். அதற்கான பதில் இதோ!
* தீபாவளி தினத்தன்று நண்பர்களை வீட்டுக்கு வரவழையுங்கள்.
* பெற்றோர், நண்பர்கள் என அனைவரும் வீட்டில் செய்த பலகாரங்களையும், உணவுகளையும் பகிர்ந்து உண்ணுங்கள்.
* தீபாவளி கொண்டாட முடியாத சூழலில் இருக்கும் நண்பர்களுக்கு ஆடை வாங்கி கொடுக்கலாம்.
* உங்கள் வீட்டுக்கு அருகில் ஆதரவின்றி இருக்கும் பெரியவர்களுக்கு உணவு கொடுக்கலாம்.
நாம் செய்யும் இந்த செயல்பாடுகளால் தீபாவளி மகிழ்ச்சி மற்றவர்களுக்கு பகிரப்படுகிறது. மகிழ்ச்சியாக இருங்கள். பிறரையும் மகிழ்ச்சிப்படுத்துங்கள். பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள்.
- சுப பலன்களால் மனம் மகிழும் வாரம்.
- திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
மேஷம்
தன வரவில் தன் நிறைவு உண்டாகும் வாரம். மேஷ ராசிக்கு ஆறாம் அதிபதி புதன் வார இறுதியில் அஷ்டம ஸ்தானத்தில் மறைய போகிறார். இது கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும்.
அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் வரனை தேர்வு செய்வதில் சற்று நெருடல் இருக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். 23.10.2025 இரவு 10.06க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும்.தொழில் உத்தியோகத்தில் நிதானம் தேவை. குல, இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும்.
ரிஷபம்
எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சம் பெற்று சனி பார்வையில் உள்ளார். இந்த கிரக சம்பந்தம்தன வரவை அதிகரிக்கும். திருமணத்தடையை அகற்றும். காதல் திருமணத்திற்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தம்பதிகள் ஒற்றுமையாக இருப்பார்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை தீபாவளி ஆபரில் வாங்குவதால் சுப விரயங்கள் அதிகமாகும்.
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் மன தடுமாற்றம் ஏற்படலாம். பிறவிக்கடன், பொருள் கடன் தீர்க்க உகந்த காலம். அமாவாசையன்று முன்னோர்களுக்கு உரிய வழிபாடு செய்வதன் மூலம் பாக்கிய பலம் அதிகரிக்கும்.
மிதுனம்
விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் வார இறுதியில் ருண, ரோக சத்ரு ஸ்தானம் செல்கிறார். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். தொழில் பங்காளிகளை சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசாங்க வேலையில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்ப
பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். வீடு, வாகன முயற்சி ஜெயமாகும். திருமணம் கைகூடும். மாமியார் நாத்தனாரால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் வெற்றி தரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். தீபாவளி போனசில் முக்கிய குடும்பத் தேவைகளை நிறைவு செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படலாம். நண்பர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்க்கவும். தீபாவளி விடுமுறையில் ஆன்மீக யாத்திரை சென்று வருவீர்கள். முன்னோர்கள் வழிபாட்டில் மனநிறைவு கூடும்.
கடகம்
சுப பலன்களால் மனம் மகிழும் வாரம். ராசியில் உள்ள அதிசார உச்ச குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானம் மற்றும் பாக்கிய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். சிரமமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். முக்கிய குடும்பத் தேவைகள் செய்வீர்கள். மனதில் இருந்த கவலைகள் சஞ்சலங்கள் குறைய துவங்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அடுத்த 48 நாட்களுக்குள் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பூர்வீகம் சார்ந்த செல்களில் ஏற்பட்ட தடைகள் அகலும்.
பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள். தொழில் நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும்.வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சச்சரவுகள் சீராகும். ஞாபக மறதி பிரச்சினை குறையும். நண்பர்கள் தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்கள் வாழ்க்கை துணையால் ஆதாயம் உணடாகும். ஜென்ம குருவின் காலம் என்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆன்மீகப் பெரியோர்களை வழிபடவும்.
சிம்மம்
மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாரம். ராசி அதிபதி சூரியன் மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் நீச்சமடைகிறார். நல்ல மாற்றங்களை தரக்கூடிய 3ம் இடத்திற்கு சூரியன் செல்வதால் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தை சந்திப்பீர்கள். சிலருக்கு இடமாற்றம் கவலையைத் தரும். வரவும், செலவும் சீராக இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் போனஸ் மனதை மகிழ்விக்கும். பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வார்.
வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. காதல் விவகாரங்கள் அவமானத்தை தரும். ஆன்மீக வழிபாட்டில் ஈடுபட மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். விரய ஸ்தானத்தில் அதிசார குரு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.
கன்னி
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டா கும் வாரம். ராசி அதிபதி புதன் சகாய வெற்றி ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பணப்புழக்கமும் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய தொழில் முயற்சியை துவங்குவீர்கள். வியாபாரத்தை விரிவு செய்யும் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். சுப விசேஷங்களில் இருந்த தடைகள் விலகும். வெளியில் சொல்ல முடியாமல் தவித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கண்டகச் சனியின் காலம் என்பதால் மனம் மற்றும் உடலை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பது நல்லது. மனதிற்கு பிடித்த வரன் அமையும். தீபாவளிக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.மன அமைதிக்கு தீபாவளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். கணவன், மனைவி உறவு மேம்படும். தீபாவளி அன்று இனிப்பு தானம் வழங்கவும்.
துலாம்
புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.தடைகள் தகறும். நிறைய நன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி நிறைந்து இருக்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவார்கள்.
தீபாவளி ஆபரில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அமாவாசை அன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும் வாரம்.ராசியில் உள்ள புதனுக்கு குரு பார்வை உள்ளது. முயற்சிகளில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடை, தாமதங்கள் விலகும். எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்மாமன் வழி ஆதாயம் உண்டாகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
மறு திருமண முயற்சி சாதகமாகும். இளவயதினருக்கு புத்திர பிராப்தி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.செயற்கை முறை கருத்தரிப்பு வெற்றி தரும்.இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தம்பதிக ளிடையே இணக்கமான சூழல் நிலவும். தீபாவளி யன்று உணவு உடை தானம் வழங்கவும்.
தனுசு
உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்திற்கு உச்ச குருவின் பார்வை இருப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். இதனால் பெண்களுக்கு மன நிம்மதியும், முன்னேற்றமும் உண்டாகும். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது.
மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். சிலர் பூர்வீக சொத்து தொடர்பான வழக்குகளை சந்திக்க நேரும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்ட தன லாபம் கிடைத்து அதன் மூலம் சட்ட நெருக்கடியும் ஏற்படலாம். வைத்தியத்தில் ஆரோக்கியம் சீராகும். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியும் போனசும் கைக்கு வரும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். தீபாவளி அன்று வயது முதிர்ந்தவர்களின் தேவை அறிந்து உதவவும்.
மகரம்
புண்ணிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசிக்கு குருவின் சம சப்தம பார்வை உள்ளது.தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய காரியங்கள் தான தர்மங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். பணி சார்ந்து சில பயணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். வீண் செலவுகள் கட்டுப்படும். கடன்பட்டு சொத்து வாங்குவீர்கள். கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கும்.
திருமண விஷயங்கள் சித்திக்கும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் வழங்குவது நல்லது.
கும்பம்
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசியில் ராகுவும், ஏழில் கேதுவும் நிற்கிறார்கள். வேற்று மத இன நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். குறுக்கு வழியில் முன்னேறும் எண்ணம் மிகுதியாகும். ராசிக்கு தற்போது குரு பார்வை இல்லாததால் திருமண விசயத்தில் கவனம் தேவை. உடல் உபாதைகளால் மன சஞ்சலம் அதிகமாகும்.குறைந்த சம்பளத்திற்கு அதிக நேரம் வேலை பார்ப்பீர்கள். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள்.
தொழில் உத்தியோக நிமித்தமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வாகன வசதிகள் மேம்படும். வாரிசு உருவாகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். தீபாவளி ஆபரில் புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 21.10.2025 அன்று காலை 9.36 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் தொடர்பாக சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. 9ல்சூரியன் நீச்சமாக இருப்பதால் அமாவாசையன்று பித்ருக்கள் தர்ப்பணம் செய்து வழிபட வேண்டும்.
மீனம்
கடன் தொல்லைகள் குறையும் வாரம். ராசியில் உள்ள சனிக்கு குருவின் ஐந்தாம் பார்வை உள்ளது. இது தர்மகர்மாதிபதி யோகம். அடுத்த ஒன்றரை மாதத்திற்குள் கடன் தொல்லையை கட்டுப்படுத்த கூடிய அளவிற்கு நல்ல சந்தர்ப்பங்களில் கூடிவரும். வரா கடன்கள் வசூலாகும். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். காலம் தாழ்த்தாமல் நிச்சயித்த திருமணத்தை உடனே நடத்த வேண்டும். ஜென்ம சனியை மீறிய சில நல்ல பலன்கள் நடக்கும். இதுவரை நிலையான தொழில் உத்தியோகம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடி வரும்.
படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். மாணவர்களுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலபமாகும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். 21.10.2025 அன்று காலை 9.36 முதல் 23.10.2025 இரவு 10.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை இருக்கும். ஐப்பசி மாசம் நீர் நிலைகளில் நீராடுவதால் ஆன்ம பலம் பெருகும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406
- தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும்.
- உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம்.
இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் வந்தாலும் மிகவும் பிரமாண்டமாக, ஏழை, பணக்காரர், சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி. 'தீப ஒளி திருநாள்' எனப்படும் தீபாவளி, உலகம் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. பட்டாசு, புத்தாடை, இனிப்பு, வழிபாடு என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஆனந்தப்படுத்தும் நாளாக தீபாவளி திருநாள் உள்ளது.
'தீபம்' என்றால் 'விளக்கு' என்றும், 'ஆவளி' என்றால் 'வரிசை' என்றும் பொருள். விளக்குகளை வரிசையாக அடுக்கி வைத்து வழிபடும் நாளே தீபாவளி எனப்படும். வாழ்வில் இருள் எனும் தீமை நீங்கி, நன்மை எனும் ஒளியை பரவச் செய்யும் தினமாகவே தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. ராமாயணத்தில் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த ராமன், ராவணனை அழித்துவிட்டு வனவாசம் முடிந்து, மனைவி சீதா தேவி, தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பினார். ராமன் திரும்பி வருவதை வரவேற்கும் வகையில் அயோத்தி மக்கள் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த நாள்தான் தீபாவளி என்று கொண்டாடப்படுவதாக சிலர் கூறுகிறார்கள்.

இருப்பினும், நரகாசுரன் எனும் அரக்கனை அழித்த தினமே தீபாவளி என பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. ஒரு முறை இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை தூக்கிச் சென்று கடலுக்குள் மறைத்து வைத்தான். பூமியை மீட்பதற்காக மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார். அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே பவுமன் எனும் இயற்பெயர் கொண்ட 'நரகாசுரன்'.
வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் என்றாலும், அசுர வதத்தின்போது பிறந்தவன் என்பதால் இயல்பாகவே அசுர சுபாவத்துடன் இருந்தான். நரன் என்றால் மனிதன் என்று பொருள். மனிதனாக இருந்தாலும் அசுர குணங்கள் கொண்டவன் என்பதால் 'நரகஅசுரன்' எனப்பட்டான். அப்பெயரே 'நரகாசுரன்' என்றானது.
நரகாசுரன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். இவன் மக்களையும், முனிவர்களையும் மிகவும் கொடுமைப்படுத்தினான். மிகவும் சக்தி படைத்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகை தாண்டி விண்ணுலகையும் ஆள வேண்டும் என்று ஆசைப்பட்டான். தேவர்களை அழிக்க வேண்டும் என்றால் சாகா வரம் பெற வேண்டும் என்று எண்ணிய நரகாசுரன், பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்தான். அவன் தவத்தில் மகிழ்ந்த பிரம்ம தேவர், அவன்முன் தோன்றினார். நரகாசுரன் பிரம்ம தேவரிடம், ''சாகா வரம் வேண்டும்'' என்று கேட்டான்.
பிரம்ம தேவர், ''உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் இறப்பு என்பது உண்டு. அதனால் வேறு ஏதேனும் வரம் கேள்'' என்றார். உடனே, ''நான் என் தாயின் கையாலே இறக்க வேண்டும்'' என்ற வரத்தை கேட்டான். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது அவனின் எண்ணம். பிரம்ம தேவரும் அவ்வாறே வரத்தை வழங்கினார். இதையடுத்து, தன்னை யாராலும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் மேலும் பல கொடுமைகளை செய்தான், நரகாசுரன். மக்கள், முனிவர்கள், தேவர்கள் என அனைவரையும் துன்புறுத்தினான். இதனால் மனம் வருந்திய தேவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
கிருஷ்ணரும் நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். கிருஷ்ணர், நரகாசுரனை அழிக்க அவன் ஆட்சி செய்த இடத்துக்கு புறப்பட்டார். கிருஷ்ணரின் மனைவியான சத்தியபாமாவும் உடன் சென்றாள். நரகாசுரனின் ராஜ்ஜியத்துக்கு காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்துவிட்டு நகருக்குள் நுழைந்தார், கிருஷ்ணர்.
பின்பு நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணர், நரகாசுரன் எய்த அம்பினால் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்தது போல் நடித்தார். கிருஷ்ணர் தேரில் சாய்ந்து விழுந்ததை கண்ட சத்தியபாமா, மிகவும் கோபம் கொண்டாள். தன் கணவருக்காக நரகாசுரனுடன் போர் புரிந்து, அவனை வதம் செய்தாள். நரகாசுரன், தான் பெற்ற வரத்தின்படியே தன் தாயின் கையாலேயே மரணத்தை பெற்றான். நரகாசுரன், இறக்கும் தருவாயில்தான், தன் தாயான பூமாதேவியின் அவதாரம் தான் சத்தியபாமா என்பதை அறிந்தான்.
நரகாசுரனை வதம் செய்த பின்புதான், சத்தியபாமாவுக்கும் தன் மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. இருப்பினும், தன் மகனின் இறப்பு மக்களுக்கான மகிழ்ச்சி என்பதை புரிந்த கொண்டாள். சத்தியபாமா கிருஷ்ணரிடம், ''இன்றைய தினம், மக்கள் அனைவரும் துன்பங்கள் நீங்கி, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்'' என்று வேண்டினாள். அவ்வாறே கிருஷ்ணரும் அருள்புரிந்தார். அதன்படி, நரகாசுரன் எனும் அரக்கன் அழிந்து மகிழ்ச்சி பொங்கிய நாளாக, தீபாவளி கொண்டாடப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று, அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். தீபாவளி புனித நாளில் எண்ணெய் தேய்த்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூஜை அறையை சுத்தம் செய்து, புத்தாடை உடுத்தி இறைவனின் படத்துக்கு முன்பாக விளக்கேற்றி, இனிப்புகள், பலகாரங்கள் செய்து படைத்து வழிபட வேண்டும். உறவினர் மற்றும் நண்பர்களின் இல்லங்களுக்கு சென்று இனிப்புகள் வழங்கி கொண்டாடலாம். தொழில் செய்வோர் தங்களிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கு புத்தாடை, இனிப்பு, பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்கள்.
தீபாவளி என்பது வாழ்வின் புது தொடக்கமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அனைவரிடமும் சகோதர உணர்வுடன் மகிழ்ச்சியை பகிர்வோம். தீபாவளியையொட்டி அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதில் குடும்பத்தோடு கலந்துகொண்டு இறைவனை வழிபட வேண்டும். அன்றைய தினம் கிருஷ்ணரை வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
தீபாவளி நன்னாளில் இல்லங்களில் விதவிதமான வண்ண பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடித்து சிதறுவது போல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் வெடித்து சிதறி இன்பம் பரவட்டும்.
- ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
- சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து வைத்துத் தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையின் போது குபேர யந்திரத்தை வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
பெரும் செல்வத்தை அளிக்கும் இந்த குபேர யந்திரத்தை, தீபாவளித் திருநாளில் மட்டுமன்றி, வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நாளிலும் செய்யலாம். குபேர யந்திரம் வரைவது எப்படி என்பதை அறிவோம்.
புரசு இலையில் பலாச மலர்ச் சாறும் கோரோசனையும் சேர்த்து நாணல் தட்டையினால் எழுத வேண்டும். புரசு இலையும் பலாச மலரும் கிடைக்காதவர்கள் சந்தனம், பால் குங்குமம் கலந்த குழம்பால் எழுதலாம். அல்லது 3x3 அளவுள்ள தாமிரம், வெள்ளி அல்லது தங்கத் தகட்டில் யந்திரத்தை எழுதலாம்.
சிவப்பு நிற பட்டுத் துணியின் மீது யந்திரத்தை வைத்து தாமரை மலரைக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின்போது, கட்டாயமாக 5 முகங்கள் கொண்ட குத்துவிளக்கில் நெய் தீபம் ஏற்ற வேண்டும்.

இந்த வழிபாட்டை தீபாவளியில் தொடங்கி தொடர்ந்து 72 நாட்கள் பூஜை செய்துவர கோடி நன்மை கிடைக்கும். ஒவ்வொரு நாளும் குபேர மந்திரத்தை 1008 முறை உச்சரிக்க வேண்டும். 72 நாட்கள் பூஜை செய்ய முடியாதவர்கள் குபேர யந்திரத்தையும், லட்சுமி குபேரர் படத்தையும் வைத்து 48 நாட்கள் பூஜை செய்யலாம். இப்படி செய்துவர செல்வப் பெருக்கம் அதிகரிக்கும். இந்த யந்திர பூஜைக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
வடக்கு முகம் நோக்கி அமரந்து பால் நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேர பூஜையுடன் தனலட்சுமி அல்லது சவுபாக்ய லட்சுமி படத்தையும் வைத்து பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீலட்சுமி குபேர பூஜையுடன் நவகிரக பூஜையையும் செய்யலாம். கோதுமையில் சூரியனையும், நெல்லில் சந்திரனையும், துவரையில் அங்காரகனையும், பச்சைப் பயறில் புதனையும், கொண்டைக் கடலையில் குரு பகவானையும், மொச்சையில் சுக்கிரனையும், கறுப்பு எள்ளில் சனீஸ்வர பகவானையும், கறுப்பு உளுந்தில் ராகுவையும், கொள்ளில் கேதுவையும் ஆவாகனம் செய்து, நவகிரக ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்து பூஜிக்கலாம்.






