என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 23 டிசம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம்
- குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-8 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 11.30 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : திருவோணம் (முழுவதும்)
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்
இன்று திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ஸ்ரீஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம், பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-போட்டி
மிதுனம்-தனம்
கடகம்-லாபம்
சிம்மம்-மேன்மை
கன்னி-நிறைவு
துலாம்- கண்ணியம்
விருச்சிகம்-போட்டி
தனுசு- இன்பம்
மகரம்-பயணம்
கும்பம்-உயர்வு
மீனம்-சிறப்பு






