என் மலர்tooltip icon

    வழிபாடு

    • தஞ்சையில் வடபத்ரகாளியாக அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.
    • அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள்.

    அன்னை பராசக்தியானவள், துர்க்கையாக, காளிதேவியாக என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து, தீமையின் உருவமாகத் திகழ்ந்த பல அரக்கர்களை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் சொல்கிறது.

    வாழ்வில் வெற்றி, தோல்வி சகஜம் என்றாலும், அனைவரும் தெய்வத்திடம் வேண்டுவது 'செய்யும் செயல்களில் வெற்றிபெற அருள்புரிய வேண்டும்' என்பதைத்தான். அப்படி சோழர்களுக்கு வெற்றியை தேடித் தந்து இன்றும் தஞ்சையில் வடபத்ரகாளியாக பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டு இருப்பவள்தான், நிசும்பசூதனி.

    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர்.

    அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள்.

    இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர்.

    சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார்.

    பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

    சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. கருவறையில் 7 அடி உயரத்தில், மெலிந்த தேகம், உடல் சதையற்று எலும்புகள் வெளியே தெரியும்படியான தோற்றத்தில் காட்சி தருகிறாள்.

    அஷ்ட திருக்கரங்களுடன் திகழும் இந்த அன்னை, திருமுடியில் தீச்சுவாலையைக் கொண்டு அருள்கிறாள். நிசும்பனின் தலையைக் கொய்து, அந்த தலை மீது தன் திருவடியை வைத்து, தெற்று பற்கள், முப்புரி நூலாக மண்டை ஓடுகள், திரிசூலம் ஆகியவற்றை தாங்கியபடி, அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறாள். எட்டு கரங்களில் சூலம், கேடயம், வாள், தனுசு, அம்பு, கபாலம், பாசம், மணியை தாங்கி இருக்கிறாள்.

    இந்த கோவில் முன் மண்டபம், கருவறையுடன் கூடிய விமானத்துடன் அமைந்துள்ளது. முன்மண்டப முகப்பில் அம்மனின் அமர்ந்த கோலத்திலான உருவம் காணப்படுகிறது. 55 ஆண்டுகளுக்குப் பின்னர் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2016-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    இக்கோவிலுக்கு தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபாடு செய்தால், ராகு - கேது தோஷங்களான தார தோஷம், செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், திருமணத் தடை போன்றவற்றுக்கு நிவர்த்தி கிடைக்கும்.

    இதேபோல, தொழில், வேலை போன்ற காரியத்தில் தடைகள் இருந்தாலும், தொடர்ந்து 9 வாரங்கள் செவ்வாய் அல்லது வெள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும். பெரிய இன்னல்கள் ஏற்படும்போது, பசும்பாலால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தியாகிவிடும்.

    இக்கோவிலில் தை மாதம் முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி கடைசி வெள்ளிக்கிழமை வரை, 21 நாட்களுக்கு ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெறும். இதில் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி ஏந்துதல், அலகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல, ஆடி வெள்ளிக்கிழமைகள், மாசி மகம், நவராத்திரி, பவுர்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை ஆகிய நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் 11 மணிவரையும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழவாசல் பகுதிக்குச் சென்று பூமால் ராவுத்தர் கோவில் தெரு வழியாக இக்கோவிலை சென்றடையலாம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஏறத்தாழ 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

    • வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.
    • பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும்.

    சத்தியவதன் என்ற அரசனின் வழியில் வந்தவன், சத்ரஜித். இவன் சூரிய பகவான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். சூரிய பகவானை தினமும் வழிபாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அவனுக்கு சூரிய பகவானும் அருள்புரிந்து வந்தார்.

    ஒரு சமயம் சத்ரஜித்துக்கு, சூரிய பகவான் காட்சி கொடுத்தார். மிகுந்த ஒளியுடன் காணப்பட்டதால் சூரிய பகவானின் முழு உருவத்தையும் சத்ரஜித்தால் பார்க்க முடியவில்லை.

    அவன் சூரிய பகவானைப் பார்த்து, "இறைவா.. நீங்கள் மிகுந்த ஒளியுடன் இருக்கிறீர்கள். ஆகாயத்தில் பார்க்கும் பொழுது, உங்களின் முழு உருவத்தையும் என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் உங்களை தரிசனம் செய்ய முடியாத வருத்தம் எனக்கு ஏற்படுகிறது. உங்களின் திருவடி முதல் சிரசு வரை நான் தரிசிக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்" என்று வேண்டினான்.

    அதற்கு சூரிய பகவான், "என் கழுத்தில் உள்ள சியாமந்தக மணி அதிக ஒளியை வெளிப்படுத்துவதால்தான், உன்னால் என்னை பார்க்க முடியவில்லை" என்று கூறி, தன் கழுத்தில் இருந்த சியாமந்தக மணியை கழற்றி வைத்தார்.

    அதன்பிறகு சூரிய பகவானை முழுமையாக தரிசனம் செய்யும் பாக்கியம், சத்ரஜித்துக்கு கிடைத்தது. சூரியனின் கழுத்தில் கிடந்த சியாமந்தக மணி தனக்கு கிடைக்க வேண்டும் என்று சத்ரஜித் விரும்பினான். அவனது விருப்பத்தை அறிந்து கொண்ட சூரிய பகவானும், சியாமந்தக மணியை அவனுக்கு பரிசாக அளித்து விட்டு மறைந்தார்.

    இந்த சியாமந்தக மணி, ஒரு நாளைக்கு 8 பாரம் (ஒரு கழுதையால் சுமக்கக் கூடிய அளவு) பொன்னை அளிக்கக்கூடியது. இந்த மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு, சூரிய பகவானே நடந்து வருவது போல் துவாரகையை நோக்கி நடந்து சென்றான் சத்ரஜித். துவாரகை மக்கள் "சூரிய பகவானே வருகிறார்" என்பதாக பேசிக் கொண்டனர்.

    இதை அறிந்த கிருஷ்ண பகவான், 'இந்த ரத்தினம் நல்லவர்கள் கையில் இருக்க வேண்டியது, சத்ரஜித் கழுத்தில் இருப்பது தகாது. இது இருக்க வேண்டியது உக்கிரசேன அரசனின் அரண்மனை பொக்கிஷத்தில்தான்' என்று எண்ணினார்.

    இந்த எண்ணத்தை தெரிந்து கொண்ட சத்ரஜித், கிருஷ்ணரால் தனக்கு ஏதாவது துன்பம் வரலாம் என்று நினைத்து, சியாமந்தக மணியை தன்னுடைய தம்பி பிரசேனனிடம் கொடுத்து வைத்தான்.

    சியாமந்தக மணிக்கு ஒரு குணம் உண்டு. தகுதி இல்லாதவர், சுத்தமற்றவர் கையில் அது சென்றால், அது அந்த நபருக்கு கெடு பலன்களையே ஏற்படுத்தும்.

    பிரசேனன், சியாமந்தக மணியை தன் கழுத்தில் அணிந்து கொண்டு கம்பீரமாக காட்டில் வேட்டையாடச் சென்றான். ஒளி வீசும் அந்த மணியைக் கண்ட ஒரு சிங்கம், பிரசேனனையும், அவனது குதிரையையும் கொன்று விட்டு, சியாமந்தக மணியை ஏதோ ஒரு மாமிசம் என்று எண்ணிக் கொண்டு வாயில் கவ்விச் சென்றது.

    அந்த நேரத்தில் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் அங்கு வந்தார். அவர் சிங்கத்தின் வாயில் இருந்த சியாமந்தக மணியை கண்டதும், சிங்கத்தைக் கொன்று விட்டு, அதை எடுத்துச் சென்று தன் மகன் சுகுமாரன் விளையாடுவதற்காக அவன் தூங்கும் தொட்டிலில் கட்டி வைத்தார்.

    இதற்கு இடையில் காட்டிற்குச் சென்ற பிரசேனன், பல நாட்களாக திரும்பி வராததால், சியாமந்தக மணிக்காக கிருஷ்ணன்தான், பிரசேனனைக் கொன்று விட்டதாக அனைவரும் நினைத்தனர். இந்த வீண் பழி, கிருஷ்ணனின் காதிற்கும் சென்றது.

    அவர் 'இதை இப்படியே விடக்கூடாது. தன் மீது விழுந்த பழியை நீக்க வேண்டும்' என்று நினைத்து, தன் யாதவ சேனைகளுடன் காட்டிற்குச் சென்று பிரசேனனை தேடினார். அப்பொழுது பிரசேனனின் குதிரையின் காலடி தடம் இருப்பதைக் கண்டார்.

    அதை பின்பற்றிச் சென்றபோது, பிரசேனனும், அவன் குதிரையும் ஒரு இடத்தில் கொல்லப்பட்டதைக் கண்டனர். அதைத் தொடர்ந்து ஒரு சிங்கத்தின் காலடித் தடம் இருப்பதைப் பார்த்தனர்.

    அந்த தடத்தை பின்பற்றி செல்கையில், ஓரிடத்தில் சிங்கம் இறந்து கிடந்தது. அதற்கு அருகில் கரடியின் காலடித் தடம் தென்பட்டது. அதை பின்பற்றிச் செல்கையில், அது ஒரு குகையின் வாசலில் போய் முடிந்தது.

    குகைக்குள் சென்று பார்க்க அனைவரும் தயங்கினர். உடனே கிருஷ்ண பகவான் தனியாக அந்த குகைக்குள் சென்றார். அப்பொழுது ஒரு பெண், ஜாம்பவானின் மகனை கையில் வைத்துக்கொண்டு, சியாமந்தக மணியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனை பார்த்தவுடன் பயந்து அலற, அந்த சப்தம் கேட்டு ஜாம்பவான் அங்கு ஓடி வந்தார்.

    கிருஷ்ண பகவானுக்கும், ஜாம்பவானுக்கும் யுத்தம் ஆரம்பமாயிற்று. அவர்கள் இருவரும் 21 நாட்கள் தொடர்ந்து யுத்தம் செய்தனர். ஒருவருக்கொருவர் கைகளால் அடித்துக் கொண்டு மல்யுத்தம் புரிந்தனர். இறுதியில் ஜாம்பவான் தன் மேல் விழும் அடி அத்தனையும் ராமபிரானின் அரவணைப்பு போல் தோன்றுவதை உணர்ந்தார்.

    வந்துள்ளது நாராயணனின் அவதாரம் என்பதை அறிந்து கொண்ட அவர், கிருஷ்ண பகவானிடம் சரணடைந்தார். கிருஷ்ணனும் ஜாம்பவானிடம் மகிழ்ச்சியாக பேசினார். ஜாம்பவான், சியாமந்தக மணியை கிருஷ்ண பகவானிடம் கொடுத்துவிட்டு, தன் வளர்ப்பு மகள் ஜாம்பவதியையும் கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த கதையை படிப்பவர்களுக்கு, வீண் பழியால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பெண்களுக்கு திருமணத் தடை விலகி, விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம்.

    • இன்று சர்வ ஏகாதசி.
    • திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி காலை 9.24 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பரணி காலை 6.33 மணி வரை பிறகு கார்த்திகை நாளை விடியற்காலை 4.51 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. கார்த்திகை விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வெற்றி

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-போட்டி

    கன்னி-நிறைவு

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-புகழ்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-பரிசு

    • இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.
    • நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    திங்கள், புதன், வெள்ளி போன்ற நாட்களை நல்ல காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களாக பலரும் கருதுகின்றனர். ஆனால் செவ்வாய்க் கிழமையை எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கும் ஏற்ற தினமாக எவரும் பார்ப்பதில்லை. உண்மையில் செவ்வாய் கிழமைக்கு எந்த ஒரு மகிமையும் இல்லையா? இதுகுறித்து நமது ஆன்மிகம் கூறுவது என்ன? செவ்வாய்க்கிழமையில் நாம் எதை எல்லாம் செய்து என்னென்ன பலன்களை அடையலாம்? இப்படி பல தகவலைகளை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

    நவகிரகங்களுக்குள் மிகச்சிறந்தது செவ்வாய் கிரகமாகும். செவ்வாய் கிரகத்திற்கு மங்கள காரகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. செவ்வாய் என்றாலே மங்கலமான நாள் என்று நம் முன்னோர்கள் கூறுவதுண்டு. செவ்வாய்க்கிழமையன்று எந்த ஒரு காரியத்தையும் செய்ய விரும்பாதவர்கள் வாழ்க்கையில் முழு பலனையும் அடைய முடியாது என்றும் சொல்வார்கள்.


    முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையில் தான் மௌன அங்காரக விரதம் ஒன்று பின்பற்றப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தில் இதை பற்றி மிகவும் சிறப்பாக விரிவாக கூறப்பட்டுள்ளது. ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று மௌன விரதம் அனுஷ்டித்தால் யாகம் செய்த பலனை அடைய முடியும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடுகிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெரிய பிரச்சனையாகவே மாறிவிடும்.

    செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், கடன் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் செவ்வாயன்று விரதம் மேற்கொண்டு முருகனை பூஜை செய்தால் தோஷம் நீங்கும். அவர்களின் கடன் சுமையும் விரைவாகவே தீர்ந்துவிடும். அதேபோல் மங்களகரமான பொருட்கள் வாங்குவதற்கும், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் செய்வதற்கும் செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும். இந்த தினத்தில் எந்த ஒரு சுபகாரியங்கள் மேற்கொண்டாலும் அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

    கடன் பிரச்சனையால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் செவ்வாய் ஓரையில் சிறிது சிறிதாக கடனை திருப்பிக் கொடுத்து வர உங்களது கடன் விரைவில் அடைந்து அந்தப் பிரச்சினையில் இருந்து விரைவாக வெளிவர முடியும். ஏதேனும் நோயினால் அவதிப்படுபவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் மேற்கொண்டால் விரைவிலேயே நோயிலிருந்து விடுபடுவீர்கள்.

    முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமை அன்று முருகன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் நோய் நொடியில்லாமல் நிறைவான செல்வங்கள் பெற்று இனிமையான வாழ்வினை அடைய முருகப் பெருமான் திருவருள் புரிவார். அதிலும் செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் இதனை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

    • 11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.
    • சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அக்டோபர் 4-ந்தேதி அதிகாலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    5-ந்தேதி காலை சின்ன ஷேச வாகனம், இரவு அம்ச வாகனம், 6-ந் தேதி சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல் வாகனம், 7-ந் தேதி கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகன உற்சவம் நடக்கிறது.

    8-ந்தேதி காலை மோகினி அவதாரத்தில் எழுந்தருளுகிறார். இரவு கருட சேவை நடக்கிறது. தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    9-ந் தேதி காலை 6 மணிக்கு தங்கத்தேர் பவனி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அனுமந்த வாகனத்திலும், இரவு கஜ வாகனத்திலும், 10-ந் தேதி சூரிய பிரபை வாகனமும், இரவு சந்திர பிரபை வாகன உற்சவம் நடைபெற உள்ளது.

    11-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு குதிரை வாகனத்திலும், 12-ந் தேதி புஷ்ப பல்லுக்கு வாகன சேவை நடைபெறுகிறது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    சாதாரண பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யும் வகையில் பிரமோற்சவ விழா நாட்கள் நடைபெறும் நாட்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-17 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 11.26 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: அசுவினி காலை 7.45 மணி வரை பிறகு பரணி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் ஸ்ரீ வரகுணமங்கை ஸ்ரீ பரமநாதன், வரகுணவல்லி சென்று தரிசித்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-விவேகம்

    ரிஷபம்-பொறுமை

    மிதுனம்-நிறைவு

    கடகம்-இன்பம்

    சிம்மம்-இரக்கம்

    கன்னி-சிரமம்

    துலாம்- செலவு

    விருச்சிகம்-கவனம்

    தனுசு- உற்சாகம்

    மகரம்-ஓய்வு

    கும்பம்-முயற்சி

    மீனம்-புகழ்

    • ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது.
    • மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே இரண்டு கி.மீ. தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி தலம். இங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் பிராணநாதேஸ்வரர். மங்களநாதர் என்றும் இவரை அழைப்பார்கள். இந்தக் கோவிலில் எல்லாம் மங்களகரமானவையே! இறைவி 'மங்களநாயகி'. விநாயகர் 'மங்கள விநாயகர்'. விமானம் 'மங்கள விமானம்'. கோவில் 'மங்கள கோவில்'. தீர்த்தம் 'மங்கள தீர்த்தம்'.தல வரலாறு : எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி. ஆனால் இன்னொரு பெண்ணோ இறைவனுடன் போராடி தன் கணவனை மீட்டாள்.

    என்ன கதை அது? முதலாம் குலோத்துங்கசோழனிடம், அலைவாணர் என்ற அமைச்சர் இருந்தார். இவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர். தான் வணங்கும் சிவபெருமானுக்கு தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவாலயம் ஒன்று அமைக்க ஆர்வம் கொண்டார். ஆனால் அதற்கு நிறையப் பணம் வேண்டுமே! என்ன செய்வது? என்று யோசித்தார். வரி வசூலில் வரும் பணம் யாவும், அலைவாணர் மூலமே கஜானாவுக்குச் செல்ல வேண்டும். தவறு என்று தெரிந்தும் சிவபெருமானின் மேல் இருந்த பக்தியால் அலைவாணர் அந்தத் தவறை செய்யத் துணிந்தார். ஆம்! வரி வசூலில் வசூலான பணம் முழுவதையும், கோவில் கட்டுவதில் செலவழிக்கத் தொடங்கினார். கோவிலும் கட்டி முடிக்கப்பட்டது. அரசின் வரிப்பணத்தை அமைச்சர் கோவில் கட்ட செலவிடுகிறார் என்று கேள்விப்பட்ட மன்னன் கோபம் கொண்டான். மன்னனின் கோபத்துக்கு அஞ்சிய அமைச்சர் தன் உயிரை தானே மாய்த்துக் கொண்டார்.

    கணவனின் முடிவை அறிந்த அவரது மனைவி, அவர் கட்டிய கோவிலில் உள்ள இறைவனிடமும், இறைவியிடமும் கண்ணீர் பெருக கதறி அழுதாள். தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை தருமாறு வேண்டினாள். மனமிறங்கினர் இறைவனும், இறைவியும். இறந்து போன அலைவாணர், உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போல எழுந்து வந்தார். தன் பக்தனுக்கு மீண்டும் பிராணனை அருளி உயிர்ப்பித்ததால், இங்குள்ள இறைவன் 'பிராண நாதேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். அமைச்சரின் மனைவியின் மாங்கல்யத்தைக் காத்து அருள் புரிந்ததால் இத்தல இறைவி 'மங்கள நாயகி' என அழைக்கப்படுகிறார்.

    வழிபாடு : திருமங்கலக்குடியில் கோவில் கொண்டுள்ள இறைவனை, திருமால், பிரம்மதேவன், அகத்தியர், சூரியன், காளி ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். இது திருமாங்கல்ய தோஷங்களை நீக்கும் தலம். மங்களாம்பிகைக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷமும், களத்திர தோஷமும் அகலும். இங்கு ஞாயிறு மதியம் உச்சிகால பூஜையில் வெள்ளெருக்கு இலையில் தயிர்சாதம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அன்னையின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு, பெண்களுக்கு பிரசாதமாகத் தரப்படுகிறது. பிராண நாதேஸ்வரருக்கு 11 ஞாயிற்றுக்கிழமைகள் அர்ச்சனை செய்து வந்தால், நவக்கிரக தோஷம், பூர்வஜென்ம தோஷம் அனைத்தும் விலகும்.

    கோவில் அமைப்பு : ஆலயத்தின் முன்பு ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சித் தருகிறது. உள்ளே இரண்டு பிரகாரங்கள். இறைவன் பிராணநாதேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். முன் மண்டபத்தில் தென்திசை நோக்கியபடி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார் மங்களநாயகி. அம்மனின் முன்கரத்தில் மாங்கல்ய சரடுகள் தொங்குகின்றன. தேவகோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர், ஆறுமுகக்கடவுள், பிரம்மன் ஆகியோரது திருமேனிகள் உள்ளன. இந்தக் கோவில் முதலாம் குலோத்துங்கசோழன் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பழமையான கோவிலை சம்பந்தரும், திருநாவுக் கரசரும் தம் தேவாரத்தில் சிறப்புறப் பாடியுள்ளனர். நவக்கிரக நாயகர்கள் சாப விமோசனம் பெற அருளிய, திருமங்கலக்குடி பிராணநாதேசுவரரையும், மங்களாம்பிகையையும் தரி சனம் செய்து விட்டு, அருகில் உள்ள சூரியனார் கோவில் சென்று நவக்கிரக நாயகர்களையும் ஒருமுறை தரிசித்து வரலாமே! தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது திருமங்கலக்குடி.

    • விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.
    • தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    கனவுகளுக்கு உளவியல் ரீதியாக அர்த்தம் சொல்பவர்கள் இருக்கின்றனர். ஆன்மீக ரீதியாகவும் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லலாம். பாம்புகள் அடிக்கடி கனவில் வருவது நல்லதா? கெட்டதா என்று பார்க்கலாம்.

    நமக்கு தினசரியும் ஏதாவது ஒரு விசித்திரமான கனவு வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பாம்புகள் துரத்துவது போல அடிக்கடி கனவில் வரும். சிலருக்கு பாம்புகள் கொத்தி விடும். அந்த கனவு வந்த உடன் அலறியடித்துக்கொண்டு எழுந்து விடுவார்கள். பாம்பு கனவில் வந்தால் குறிப்பாக விரட்டி கொத்தினால் என்ன பலன் என்று பலரும் யோசித்துக்கொண்டிருப்பார்கள்.

    நம்முடைய பிரியமானவர்கள், விலங்குகள், நாய்கள், இறந்து போனவர்களும் அடிக்கடி வருகின்றனர். அந்த கனவு ஏன் வந்தது எதனால் வருகிறது என்பதை நம்மால் உணர முடியாது. நல்லதா கெட்டதா என்பதையும் நம்மால் அறிய முடியாது. ஆனால் கனவுகள் எதையோ உணர்த்துகின்றன.

    பாம்பு கனவில் வந்தால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். இந்திய மக்கள் காலம் காலமாக நாகங்களை வழிபடுகின்றனர். பெண்கள் அம்மன் ஆலயங்களுக்கு சென்று நாக வழிபாடு செய்து, புற்றுக்குப் பால் வார்த்து வருகின்றனர். சிலரது கனவில் பாம்புகள் அடிக்கடி தென்படும். பாம்புகள் அடிக்கடி கொத்தும். இதனால் ஏதேனும் கெடுதல் நடக்குமே என்று பலரும் பயப்படுவார்கள். சிலருக்கு அடிக்கடி பாம்பு கனவில் வரும். இதன் மூலம் கடன் பிரச்சினை தீரும். தொல்லைகள், துன்பங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கனவில் வந்து தரையில் மூன்று முறை கொத்தினால், ஒருவரைப் பீடித்திருந்த தோஷம், திருஷ்டி ஆகியவை விலகி ஐஸ்வர்யம் சேரும் என்பதை நாம் உணர வேண்டும். கனவில் பாம்பு வந்து நம்மைக் கடித்தால் நம்முடைய கஷ்டம் நம்மை விட்டு விலகும். குறிப்பாக தீராத கடன் தொல்லைப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்குத் தீர்வு கிடைக்கும்.

    ஒற்றைப்பாம்பினை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்பை கனவில் கண்டால் ஆபத்துகள் நீங்கி நன்மை உண்டாகும். கனவில் பாம்பை கொன்றாலோ அல்லது இறந்த பாம்பை கனவில் கண்டாலே உங்களைச் சுற்றி உள்ள பிரச்சினைகள், ஆபத்துகள் நீங்கப்போகிறது என்று அர்த்தம்.

    பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால் அரசு அல்லது தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    அடிக்கடி பாம்பு கனவு வந்தால் அம்மன் கோவிலுக்கும் சிவன், முருகன் ஆலயத்திற்கும் பெருமாள் கோவிலுக்கும் சென்று வணங்கலாம்.

    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
    • ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-16 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி நண்பகல் 1.35 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி காலை 9.10 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரம் சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நற்சொல்

    கன்னி-சுபம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-மேன்மை

    தனுசு- அமைதி

    மகரம்-பரிசு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-இனிமை

    • குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம்.
    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 15 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி பிற்பகல் 3.58 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 10.46 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பாலபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருச்சேறை ஸ்ரீசாரநாதர், திருக்கண்ணபுரம் ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் தலங்களில் அலகங்கார திருமஞ்சன சேவை. கலிக்காம நாயனார் குருபூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீஸ்ரீனிவாசனப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-பயணம்

    கடகம்- பரிவு

    சிம்மம்-பந்தம்

    கன்னி-பாசம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- ஓய்வு

    மகரம்-முயற்சி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-இன்பம்

    • துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
    • சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    மகாவிஷ்ணுவிற்கு உகந்த பொருட்களில் முதலிடத்தில் இருப்பது துளசியாகும். பெருமாள் கோவில்களிலும் துளசியை தனியாக பூஜையும் செய்வார்கள். மேலும் பல்வேறு பிணிகளுக்கு துளசி மிகச்சிறந்த மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர்.

    பிருந்தா, பிருந்தாவனி, விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா. என்று பல்வேறு பெயர்களில் அழைப்பார்கள். துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி. துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.

    சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது.

    துளசியின் கதை:

    கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது.

    இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்துவிட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

    சிறப்பு வாய்ந்த மகாலட்மியின் அம்சமான துளசியை உலகில் உள்ள அனைத்து பெருமாள் திருக்கோவில்களிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக வழிபடுகின்றனர்.

    • உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.
    • காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் மூலவரான ரெங்கமன்னார் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்கிறார். தாயார் ஆண்டாள் என்ற திருநாமத்துடனும், கோதைநாச்சி என்ற பெயருடனும் அருள்பாலிக்கிறார். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இந்த ஆலயம் 90-வது தலமாக திகழ்கிறது.

    இவ்வாலயத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே. இங்குள்ள உற்சவரான பெருமாள், பேண்ட்- சட்டை அணிந்து காட்சி தருகிறார்.

    திருவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார், வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடது கையில் செங்கோல், இடுப்பில் உடைவாள் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார்.

    ×