என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
    • ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர்.

    ராமேசுவரம்:

    தென்னகத்து காசியாக போற்றப்படும் ராமேசுவரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர், வெளியூர், வட மாநிலங்களில் இருந்து வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். குறிப்பாக அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்.

    அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதனைதொடர்ந்து, ராமநாதசுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அதிகளவில் பக்தர்கள் வருகையை முன்னிட்டு போலீஸ் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேலும் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்திடும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்புடன் வரிசையாக சென்று தரிசனம் செய்தனர். மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை.
    • பாதாள லிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

    சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது பாதாள லிங்கம்.

    இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்' என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங்கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது.

    ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

    மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழிபட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும்.

    ஷோடச லிங்க பலன்கள்

    * புற்று மண் லிங்கம் - முக்தி கிடைக்கும்

    * ஆற்று மணல் லிங்கம் - பூமி லாபம் உண்டு

    * பச்சரிசி லிங்கம் - பொருள் பெருக்கம் ஏற்படும்

    * சந்தன லிங்கம் - இன்பங்கள் வந்துசேரும்

    * மலர்மாலை லிங்கம் - நீண்ட வாழ்நாள் அமையும்

    * அரிசி மாவு லிங்கம் - உடல் வலிமை பெறும்

    * பழம் லிங்கம் - நல்லின்ப வாழ்வு

    * தயிர் லிங்கம் - நல்ல குணம்

    * தண்ணீர் லிங்கம் - மேன்மைகள் உண்டாகும்

    * சோறு (அன்னம்) லிங்கம் - உணவு பெருக்கம்

    * முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) - முக்தி கிடைக்கும்

    * சர்க்கரை வெல்லம் லிங்கம் - விரும்பிய இன்பம் கிடைக்கும்

    * பசுவின் சாணம் லிங்கம் - நோயற்ற வாழ்வு அமையும்

    * பசு வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்ச்சி பெருகும்

    * ருத்திராட்ச லிங்கம் - நல்ல அறிவு

    * திருநீற்று விபூதி லிங்கம் - ஐஸ்வரியம் வந்துசேரும்

    • செவ்வாய்க்கிழமை நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபடலாம்.
    • குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடலாம்.

    * குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள், பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்து, அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபட்டு, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து வணங்கினால், குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும்.

    * கிருத்திகை, சஷ்டி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நித்திய கல்யாண முருகருக்கு இரண்டு மாலைகள் சாற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.

    * ஒரு சில பெண்கள் ருதுவாவது தள்ளிப்போகும். அந்த குறைபாடு உள்ளவர்கள், ஸ்ரீநிதீஸ்வரர் ஆலயத்தில் தொடர்ச்சியாக 5 வியாழக்கிழமைகளில், சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து, வெள்ளி நாணயத்தை பிரசாதமமாகப் பெற்றுச் செல்கின்றனர். இந்த பரிகாரத்தால் நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளும் நீங்குகிறதாம்.

    * வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, பூச நட்சத்திரம், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் சுவாமிக்கு சொர்ண புஷ்ப அர்ச்சனை செய்து வழிபட்டால், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். அதோடு மன அமைதி, வீடு, வாகன யோகம், திருமண வரம், குழந்தை வரம், தொழில் அபிவிருத்தி, உத்தியோகம் ஆகியவற்றையும் பெற்றிடலாம்.

    * மேற்குமுகமாக வீற்றருளும் கால பைரவரை, தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி அல்லது ராகு காலங்கள், அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 நெய் தீபம் ஏற்றி, செவ்வரளியால் அர்ச்சனை செய்து வணங்கினால், பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதாக நடந்தேறும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற செய்வினைகள் அகலும்.

    * பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ஸ்ரீநிதீஸ்வரருக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சனை, ஐந்து நெய் தீபமேற்றி, ஐந்து முறை ஆலய வலம் வந்து வழிபட்டால், அந்த பாதிப்புகள் நீங்குவதுடன், பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும். மேலும் அவர்களின் இல்லத்தில் நிலவும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.

    • ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது.
    • கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார்.

    இன்றைய உலகில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது, நிதிதான். பணத்தேவை இருப்பவர்களே இன்று அதிகம். சிலருக்கோ நிதியை சேகரிப்பதில் சிக்கல். பலருக்கு நிதியை பாதுகாப்பதில் சிக்கல். இதற்கெல்லாம் விடை தருபவராக இருக்கிறார், விழுப்புரம் மாவட்டம் அன்னம்புத்தூரில் உள்ள ஸ்ரீநிதீஸ்வரர். இத்தல இறைவனை பிரம்மதேவரும், நிதிகளுக்கு அதிபதியான குபேரனும் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அந்த ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     தல வரலாறு

    அன்ன வாகனன் என்றழைக்கப்படும் படைப்பு கடவுளான பிரம்மதேவரும், காக்கும் கடவுளான திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று போட்டியிட்டனர். ஈசனின் அடியையும், முடியையும் காண்பர்களே வெற்றி பெறுவர் என்று கூறபட்பட்டதும், பிரம்மன் அன்னமாக மாறி, சிவபெருமானின் முடியைத் தேடியும், திருமால் வராக உருவெடுத்து ஈசனின் திருவடியைத் தேடியும் பயணித்தனர். ஒரு கட்டத்தில் ஈசனின் திருவடியை காண முடியாமல், தன் தோல்வியை ஒப்புக் கொண்டார், திருமால்.

    ஆனால் பிரம்மனோ, மகாதேவரின் முடியை கண்டு விட்டதாக பொய் சொன்னார். அதற்கு சாட்சியாக, ஈசனின் தலையில் இருந்து விழுந்து பூமி நோக்கி வந்து கொண்டிருந்த தாழம்பூவை கூட்டு சேர்த்துக் கொண்டார்.

    இதை அறிந்த ஈசன் கடும் கோபம் கொண்டு, பிரம்மனை அன்னப்பறவையாகவே இருக்கும்படி சாபம் கொடுத்தார். அந்த சாபத்திற்கு விமோசனம் தேடி பிரம்மன், அன்னப் பறவையின் தோற்றத்திலேயே பல உலகங்களுக்குச் சென்றார்.

    இறுதியில் பூலோகம் வந்து, ஒரு பொய்கையை உருவாக்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தைச் செய்து, அதற்கு தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து வந்து அபிஷேகித்து வழிபட்டார்.

    பல காலமாக பிரம்மன் செய்த பூஜையால் மனமுருகிய சிவபெருமான், ரிஷப வாகனத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து, அவரது சுய உருவை மீண்டும் கொடுத்தார். அன்னப் பறவையின் வடிவத்தில் பிரம்மன், இங்கு வழிபாடு செய்த காரணத்தால், இந்த திருத்தலத்திற்கு 'அன்னம்புத்தூர்' என்ற பெயர் வந்தது.

    ஒருமுறை இத்தலத்திற்கு வந்த குபேரன், தன்னிடம் அள்ள அள்ள குறையாத செல்வம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நான் தனாதிபதியாக விளங்கிட வேண்டும் என்று கேட்டு, இத்தல இறைவனை வழிபட்டான்.

    அதன்படியே குபேரனுக்கு, அவனை விட்டு என்றும் நீங்காத நவ நிதிகளையும் இறைவன் வழங்கியதாக இத்தல மகாத்மியம் கூறுகிறது. குபேரன் வழிபட்டதால், இத்தல இறைவன் 'ஸ்ரீநிதீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    ஆலய அமைப்பு

    ஊருக்கு மேற்கே உள்ள ஏரியின் எதிரில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ராஜகோபுரம் இல்லை. கிழக்கு நோக்கியபடி சுவாமி சன்னிதியும், தெற்கு பார்த்தவாறு அம்பாள் சன்னிதியும் உயரமான மேடை மீது அமைக்கப்பட்டுள்ளன. ஆலயம் முழுவதும் கல் கட்டிடமாக உள்ளது.

    கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி ஸ்ரீநிதீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பிரம்மனும், குபேரனும் வணங்கிய ஈசனை நாமும் வணங்குகின்றோம் என்று நினைக்கும்போதே மெய் சிலிர்ப்பதை உணர முடியும்.

    ஆலய மகா மண்டபத்தில் வீற்றருளும் கணபதி, தன் கையில் பாடலிக் கொடியுடன் காட்சியளிக்கிறார். பாடலிபுத்திரம் என்று அழைக்கப்பட்ட பாட்னாவில் இருந்து, இந்த கணபதியின் சிலை கொண்டுவரப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது.

    தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் கனக திரிபுரசுந்தரி அம்மன் அருள்பாலிக்கிறார். இந்த அன்னைக்கு இரண்டு கரங்கள் மட்டுமே இருக்கின்றன.

    ஆலய வளாகத்துக்குள் தென்மேற்கு மூலையில் லட்சுமி கணபதியும், வடமேற்கில் வள்ளி - தெய்வானையுடன் கல்யாண சுப்பிரமணியரும் தனித்தனியே சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் தனியாக உள்ள சன்னிதியில் மிகப் பழமை வாய்ந்த துர்க்காதேவியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக புதிய சிலையில் இருக்கிறது.

    கிழக்குப்புறத்தில் பைரவருடன், தனா ஆகர்ஷண பைரவரும் காட்சி தருகிறார். ஆலயத்தின் பின்புறம் பிரம்மதேவன் உண்டாக்கிய பிரம்ம தீர்த்தம் உள்ளது. இவ்வாலயத்தின் தல விருட்சம், கொன்றை மரம் ஆகும்.

    ஆயிரம் ஆண்டு பழமையான இந்த ஆலயத்தை, ராஜராஜ சோழன் கண்டு வியந்து பல்வேறு திருப்பணிகள் செய்ததற்கான கல்வெட்டு இங்கே காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிதலமடைந்து மண்மூடிப் போன இந்த ஆலயமானது, பக்தர்களின் அர்ப்பணிப்பு காரணமாக கற்கோவிலாக எழுப்பப்பட்டு, 2014-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்த ஆலயமானது, தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற இடம் உள்ளது. இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, அன்னம்புத்தூர்.

    • இன்று சர்வ அமாவாசை.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை நாளை விடியற்காலை 5 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: திருவாதிரை நாளை விடியற்காலை 5.01 மணி வரை. பிறகு புனர்பூசம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ அமாவாசை. ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவள்ளுர் தலங்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் தெப்போற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்- பொறுமை

    சிம்மம்-லாபம்

    கன்னி-உதவி

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-உற்சாகம்

    தனுசு- விருத்தி

    மகரம்-மேன்மை

    கும்பம்-பாராட்டு

    மீனம்-ஊக்கம்

    • ஓர் ஆண்டில் நடராஜருக்கு 6 நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.
    • இதில் மூன்று நட்சத்திர நாட்கள், மூன்று திதி நாட்கள் ஆகும்.

    சிதம்பரம்:

    பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை நடைபெறும். தேவர்களும் இதேபோல 6 கால பூஜையை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது நமக்கு ஒரு ஆண்டு. தட்சிணாயணம், உத்தராயணம் என இருவகை காலப்பிரிவுகள் அவர்களுக்கு உண்டு.

    தை முதல் ஆனி வரை (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை) உத்தராயணம்.

    ஆடி முதல் மார்கழி வரை (மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை) தட்சிணாயணம்.

    அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது நமக்கு மார்கழி. காலைப் பொழுது மாசி மாதம். மதியம் சித்திரை திருவோணம். மாலைப் பொழுது ஆனி. இரவு நேரம் ஆவணி. அர்த்தஜாமம் புரட்டாசி. இதன் பொருட்டே நடராஜ பெருமானுக்கு 6 அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

    சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

    ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    புரட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராசசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.

    மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம் நடைபெறும்.

    இந்தக் குறிப்பிட்ட ஆறு தினங்களிலும் அபிஷேகங்கள் நடைபெறும்போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிக விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இன்று மாத சிவராத்திரி.
    • திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆனி-20 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திரயோதசி காலை 6.27 மணி வரை பிறகு சதுர்த்தசி. நாளை விடியற்காலை 4.55 மணி வரை பிறகு அமாவாசை.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் நாளை விடியற்காலை 4.35 மணி வரை பிறகு திருவாதிரை

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று மாத சிவராத்திரி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம். திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பரிவு

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-கவனம்

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- களிப்பு

    மகரம்-துணிவு

    கும்பம்-சுபம்

    மீனம்-வரவு

    • சுருட்டப்பள்ளி பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற சிறந்த தலம்.
    • இங்கு சயன கோலத்தில் காட்சி தரும் சிவனை தரிசிக்கலாம்.

    சுருட்டப்பள்ளி:

    பிரதோஷத்திற்கு பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்று சுருட்டப்பள்ளி. இது ஆந்திரா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது.

    சிவபெருமானை பார்வதியின் மடியில் தலை வைத்து சயனக்கோலத்தில் காட்சி தரும் சிவனை சுருட்டப்பள்ளி திருத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தலம் உருவானதே பிரதோஷத்தை ஒட்டி தான். பிரதோஷத்திற்கு பிரசித்தி பெற்ற தலம் என்பதை உணர்த்தும் வகையில் கோவிலின் எதிரே பெரிய நந்தி அமைந்துள்ளது.

    துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தார் இந்திரன். அசுரர்கள் இந்திரனின் அரசை கைப்பற்றினர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெறவேண்டும் என தேவகுரு பிரகாஷ் பத்தி தெரிவித்தார். அதன்படி திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர்.

    அப்போது வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தைக் கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து அதிலிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என சிவபெருமானை வேண்டினர்.

    சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்துவரும்படி கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி கொண்டு வந்து சிவபெருமானிடம் தந்தார். அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும், உலகமும் அழிந்துவிடும். எனவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எங்களைக் காத்திடுங்கள் என சிவனிடம் மன்றாடினர்.

    உடனே சிவன் அந்தக் கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி தேவி, சிவனை தன் மடியில் கிடத்திக் கொண்டு சிவபெருமானின் வாயில் இருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கழுத்தின் பகுதியில் கைவைத்து அழுத்தினார். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. இதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் அமுதாம்பிகை ஆனார். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார்.

    அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும், ஸ்கந்த புராணமும் கூறுகிறது.

    சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இந்தியாவில் எந்த இடத்திலும் பார்க்க முடியாது.

    சிவபெருமான் சுருட்டப்பள்ளி ஆலயத்தில் அம்மன் மடியில் படுத்தவாறு இருப்பதைப் பார்க்கலாம். இந்தத் தலத்தில் சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

    ஒவ்வொரு மாதம் நடைபெறும் பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கிய செல்வங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கையாக இருக்கின்றது.

    • ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

    விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.

    இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.

    ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம்.
    • மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு, ஆனி 19 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி காலை 7.45 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ரோகிணி நாளை விடியற்காலை 4.52 மணி வரை. பிறகு மிருகசீரிஷம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். பிரதோஷம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சிதம்பரம் ஆவுடையார் கோவிலில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-மேன்மை

    கடகம்- நன்மை

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-வாழ்வு

    துலாம்- ஆர்வம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- வெற்றி

    மகரம்-லாபம்

    கும்பம்-சுகம்

    மீனம்-பரிவு

    • கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும்.
    • சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் பிரவேசித்துக்கொண்டு இருப்பார்.

    இதில் நான்காவதாக இருக்கும் கடகத்திற்கு வருகிறார். அது சந்திரனின் இடம். இது அம்பாளுக்கு உரிய இடம். அம்பாள் தவம் இருந்து சிவனை அடைந்த இடமாகவும், சிவன் போய் சேரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவியான சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

    ஆனால் நம் முன்னோர்கள் கணவன் மனைவி சேரக்கூடாது என்று கூறிவைத்துள்ளார்கள். இதில் பகுத்தறிவான விஷயம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் நம் முன்னோர்கள் இதனை கூறி வைத்துள்ளனர்.

    ஆடி மாதத்திற்கு உள்ள சிறப்புகள்:

    ஆடி மாதத்தில் தான் தட்சாயணம் காலம் ஆரம்பிக்கிறது.

    குழந்தை பாக்கியம், திருமணத்தடை, தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வெற்றிழை வைத்து பிரசன்னம் பார்ப்போம். வெற்றிலை வைத்து பார்க்கும் போது இதில் 5-வதாக வைத்த வெற்றிழை கிழிந்து இருந்தால் அது குழந்தை பாக்கியம் பிரச்சினை. இதற்கு சிறந்த தீர்வு குலதெய்வ வழிபாடு தான்.

    ஆடிமாதம், பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில்  11 பேரிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும்.

    என் வம்சம் தழைக்க என் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோவிலில் குறைந்தது 6 மணிநேரமாவது உட்கார்ந்து விட்டு வர வேண்டும்.

    மேலும் பித்ருக்கள் சாபம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தடைபடும். அப்போது பித்ருக்களுக்கு உகந்தது ஆடி அமாவாசை. யாரெல்லாம் முன்னோர்களுக்கு கொல்லி வைத்தார்களோ அவர்கள் எல்லாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் அளிக்கும் போது பித்ருக்கள் சாபம் நீங்கி வம்சம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

    குலதெய்வமே தெரியாதவர்கள் என்னசெய்வது?

    முதலில் விநாயகர் வழிபாடு செய்யலாம். வெற்றிலை பிரசன்னத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

    தர்ப்பணம் பெண்கள் கொடுக்கலாமா?

    எள், தண்ணீர் இரைக்கும் செயலை சுமங்கலிகள் செய்யக்கூடாது. பெண்கள் சுமங்கலியாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மருமகன்கள் இதனை செய்யலாம். யாருமே தர்ப்பணம் கொடுக்க இல்லை என்றாலும், தர்ப்பணம் கொடுப்பதற்கு ஒரு பிராமணன் இருப்பார். அவரிடம் சென்று தர்ப்பணம் கொடுக்க சொல்லலாம்.

    திருமணத்தடை நீங்க ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கலாம்?

    சிவனும், அம்பாளும் சேர்ந்த ஒரு அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம் இந்த மாதத்தில் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணத்தடை இருந்தால். முத்துமாரி அம்மன், காமாட்சி அம்மன் அல்லது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மல்லிகைப்பூ போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

    யாருடைய வீட்டிலாவது பெண்கள் கல்யாணத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை கன்னி தெய்வம் என்று சொல்வார்கள். இவர்களை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அந்த முறைப்படி கும்பிட்டு வந்தால் திருமண வாழ்க்கை கூடிவரும்.

    ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று முருகனுக்கும், அம்மனுக்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு அந்த மாலையை திருமணத்தடை உள்ளவர்கள் மாலையை போட்டு வழிபட்டு விட்டு அந்த மாலையை வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்யாணம் கைகூடியவுடன் இரண்டு மாலையாக முருகனுக்கு செலுத்திவிட வேண்டும்.

    ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்தப்படுவதில்லை?

    ஆடி மாதத்தில் லக்கணமும், கோச்சார பலனும் நன்றாக இருப்பதில்லை என்பதினால் திருமண காரியங்களை செய்வதில்லை. சர ராசி, சிர ராசி, உபய ராசி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு உபய ராசியில் சந்திரன் இருக்கும் காலக்கட்டத்தில் புதுமனை புகுவிழா செய்யக்கூடாது. அதுபோல ஆடி மாதத்தில் தெய்வத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்கள்?

    பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இருக்கும். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் இதனை நைவேத்தியம் செய்யலாம். மனமுருகி வழிபட்டாலும் தெய்வ அனுக்கிரகம் இருக்கும்.


    • 5-ந்தேதி அமாவாசை.
    • நாளை பிரதோஷம்

    2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை)

    * சர்வ ஏகாதசி.

    * திருவரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    3-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்

    * பிரதோஷம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு,

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (வியாழன்)

    * சிதம்பரம் சிவபெருமான் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (வெள்ளி)

    * அமாவாசை.

    * ஆவுடையார்கோவில் சிவபெருமான் திருவீதி உலா.

    * ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (சனி)

    * ராமநாதபுரம் கோதண்டராமசுவாமி உற்சவம் ஆரம்பம்.

    * திருவில்லிபுத்தூர் திருவி பெரியாழ்வார் விழா தொடக்கம்

    * திருநள்ளார் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் சந்திர பிரபையில் புறப்பாடு.

    * ஆவுடையார் கோவில் சிவபெருமான் பவனி.

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி சிம்ம வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    8-ந்தேதி (திங்கள்)

    * ராமநாதபுரம் கோதண்ட ராம சுவாமி அனுமன் வாகனத்தில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * திருத்தணி முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    * கீழ்நோக்கு நாள்.

    ×