என் மலர்
வழிபாடு
- குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும்.
- தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் செல்வம் செழித்தோங்க குபேர பூஜை செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். பணம் உள்ளிட்ட செல்வம் செழிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, வீட்டில் தீமைகள் விலகி நன்மைகள் பெருகி மகிழ்ச்சி பெருக வேண்டும் என்பதற்காக இந்த பூஜை செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருகிறது. பொதுவாக குபேரருக்கு வியாழக்கிழமை பூஜை செய்வது உகந்தது ஆகும். குபேரரை தனியாக மட்டுமின்றி லட்சுமியுடன் சேர்த்து பூஜை செய்வது மிகவும் சிறப்பானது ஆகும்.

குபேர பூஜையை பொதுவாக அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி மாலை 4.29 மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது.
அமாவாசை திதியானது நவம்பர் 1-ந்தேதி மாலை 6.25 மணி வரை உள்ளது. நவம்பர் 1-ந்தேதி கவுரி விரதமும் வருகிறது. தீபாவளி தினத்தில் குபேர பூஜை செய்வது சிறப்பாகும்.
தீபாவளி நாளில் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடுவது வழக்கம் ஆகும். அவ்வாறு அசைவம் சாப்பிடுபவர்கள் அடுத்த நாள் குபேர பூஜை செய்வது நல்லது. ஏனென்றால் அடுத்த நாள் மாலை வரை அமாவாசை திதி இருப்பதால் அன்றைய தினம் செய்யலாம். ஆனாலும், தீபாவளி நாளிலே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது ஆகும்.
குங்குமம், மகாலட்சுமி படம், குபேரர் படம், 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் ஒரே மாதிரியான 9 அல்லது 108 நாணயங்கள், மலர்கள் (தாமரை இருந்தால் சிறப்பு), துளசி, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, அட்சதை ஆகியவை பூஜைக்கு தேவையான பொருட்கள் ஆகும்.

குபேரருக்கு உரிய வட திசையில் சிறிய மனை வைக்க வேண்டும். அதில் குபேரர் சிலை வைக்க வேண்டும். குபேரர் படம் அல்லது சிலையை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும்.
மனைப்பலகையின் ஒரு ஓரத்தில் குபேர யந்திரம் வரையப்பட்டிருக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து இருக்க வேண்டும்.
பின்னர் குல தெய்வத்தை வழிபட்டு விட்டு குபேர மற்றும் லட்சுமியை வணங்கி மகாலட்சுமியின் 108 போற்றிகளையும் கூறி குங்குமம், மலர்கள் அல்லது அட்சதை தூவி அர்ச்சனை செய்ய வேண்டும்.
லட்சுமி குபேர பூஜையின் பிரசாதத்தை மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மறுநாள் பூஜையில் பயன்படுத்திய நாணயங்களை எடுத்து ஒரு துணியில் கட்டி உங்கள் வீட்டில் பணம் வைக்கும் பீரோ ஆகிய இடத்தில் வைக்க வேண்டும்.
- முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்.
- பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலங்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டுக் கான மண்டல பூஜை டிசம்பர் 26-ந்தேதியும், மகரவிளக்கு பூஜை வருகிற ஜனவரி மாதம் 14-ந்தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகளை திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சிரமமின்றி சபரிமலைக்கு வந்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக்கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. அதற்கான பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சாமி தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவசம்போர்டு மந்திரி வாசவன் கூறியிருப்ப தாவது:-
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்தில் சபரிமலைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள். அவர்கள் சரிபார்க்கப்படும் போது ஆதார் அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
அவர்களின் பதிவு எப்படி செய்யப்பட வேண்டும்? என்பதை காவல்துறையும், தேவசம்போர்டும் கூட்டாக முடிவு செய்யும். அது தொடர்பான முடிவு நவம்பர் 10-ந்தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும்.
பதினெட்டாம்படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15,500 வாகனங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படும். பம்பை வரை சிறிய வாகனங்கள் செல்ல கோர்ட்டின் அனுமதி கோரப்பட்டுள்ளது.
பம்பையில் இருந்து சபரி மலைக்கு ஏறிச்செல்லும் பக்தர்கள் அமருவதற்காக 1,000 இரும்பு நாற்காலிகள் பொருத்தப்படும்.
மேலும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் மின் கழிப்பறைகள் வசதி செய்யப்படும். யாத்திரை காலங்களில் 13,600 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.
- 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார்
சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருக்கும் இடம், கயிலாய மலை. அங்கே சிவ-பார்வதியை தரிசிப்பதற்காக, அனுதினமும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும் வந்து செல்வார்கள். அவர்களில் பிருங்கி முனிவர் ஒருவர். ஆனால் அவர் சிவ-பார்வதியை இணைத்து வணங்காமல், சிவனை மட்டுமே வணங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இதனால் வருத்தம் கொண்ட பார்வதி, அதுபற்றி சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு ஈசன், "தேவி.. பிருங்கி முனிவருக்கு, எந்த பாக்கியங்களும் தேவையில்லை. அவருக்கு மோட்சம்தான் விருப்பம். எனவேதான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்து வழிபடுகிறார்" என்று விளக்கம் அளித்தார்.
சிவபெருமான் சொன்ன விளக்கத்தில், பார்வதிக்கு திருப்தி ஏற்படவில்லை. எனவே அவர் பிருங்கி முனிவரிடமே, "உன் தேகத்திற்கு தேவையான சக்தி அனைத்தும் நான் வழங்கியவை. ஆனால் என்னை வழிபட மறுக்கிறாய். அப்படியானால் சக்திக்கு தேவையான ரத்தம், தசை, நரம்பு போன்றவற்றை திருப்பிக்கொடு" என்றார்.
பிருங்கி முனிவரும் அப்படியே செய்தார். இதனால் எலும்பும், தோலும் மட்டும் கொண்டு வலுவிழந்து தடுமாறினார். சிவபெருமான் அவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி நிற்கச் செய்தார்.
இதனால் கோபம் கொண்ட பார்வதி, கயிலாயத்தை விட்டு பூலோகம் வந்தார். அப்படி அவர் வந்து சேர்ந்த இடம் ஒரு நந்தவனம். அந்த நந்தவனம், 12 ஆண்டுகளாக மழை இன்றி வறண்டு காணப்பட்டது.
பார்வதி தேவி வந்ததும் மழை பெய்து, அந்த நந்தவனம் புத்துயிர் பெற்றது. பல அரிய பூக்கள் பூத்தன. அதன் வாசத்தை நுகழ்ந்து அங்கு வந்த வால்மீகி முனிவர், அம்பிகையை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது பார்வதி தேவி, "முனிவரே.. நான் மீண்டும் ஈசனுடன் சேருவதற்கு, அனைத்து விரதங்களையும் விட மேலான விரதம் ஒன்று வேண்டும். அப்படியொரு விரதம் இருக்கிறதா?" என்று கேட்டார்.
அதற்கு வால்மீகி முனிவர், "தாயே.. இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு 'கேதாரீஸ்வரர் நோன்பு' என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்" என்றார்.
அதன்படி அம்பிகை, அந்த விரதத்தை முறை தவறாமல் கடைப்பிடித்தார். இதையடுத்து விரதத்தின் 21-ம் நாள் அன்று, தேவ கணங்கள் சூழ அம்பிகைக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயம் சென்றார். அம்பிகையே விரதம் இருந்த காரணத்தால், இது 'கேதார கவுரி விரதம்' என்று அழைக்கப்படுகிறது.

விரதம் இருப்பது எப்படி?
கேதார கவுரி விரதம் பொதுவாக, 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம். புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதியில் தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.
தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து, சிவ பூஜை செய்ய வேண்டும். நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவ-பார்வதியாக வழிபடப்படுகின்றது.
இந்த விரதம் இருப்பவர்கள், தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்பார்கள். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார், சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.
இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி, பட்டு வஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும்.
மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும். அதோடு இறைவனின் 16 நாமங்களைச் சொல்லி தூப, தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

பின்னர் அம்மி குழவியை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசேஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ நாமம் செய்து பூஜிக்க வேண்டும். தூப, தீப ஆராதனைகள், நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு வணங்கி, வீட்டில் உள்ள பெரியவர்கள் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்பது ஐதீகம்.
- இன்று இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தி ஸ்நானம்.
- மாத சிவராத்திரி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-13 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திரயோதசி பிற்பகல் 2.22 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 8.48 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று இரவு நான்காம் ஜாமத்தில் நரக சதுர்த்தி ஸ்நானம். மாத சிவராத்திரி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம். பிள்ளைலோகாச்சாரி யார் உற்சவம் ஆரம்பம். வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர் அபிஷேகம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-பயணம்
கடகம்-தாமதம்
சிம்மம்-சாந்தம்
கன்னி-வெற்றி
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பரிவு
மகரம்-வெற்றி
கும்பம்-நட்பு
மீனம்-சிறப்பு
- ஆனித்தேரோட்டமும், ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
- இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
நெல்லை:
நாயன்மாா்களால் பாடப்பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லை யப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும், அம்பாளுக்கு ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 18-ந்தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
கடந்த 10 நாட்களாக தினமும் காலை, மாலை நேரங்களில் காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா புறப்பாடும் நடைபெற்றது.
நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடை பெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை பிரம்ம முகூா்த்தத்தில் அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லை யப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தாா். முதலில் மூலவா் காந்திமதிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது. விழா மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புது வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, காப்பு கட்டி திருஷ்டி கழித்தனா். அதன்பின் மாலை மாற்றும் வைபவம் என திருமண சடங்குகள் நடைபெற்றன.
சுவாமி நெல்லைப்பருக்கு காந்திமதி அம்பாளை தாரைவார்த்து கொடுத்ததும் பக்தா்களின் ஹரஹர சிவசிவ கோஷங்கள் முழங்க மங்கல இசை இசைக்க திருமாங்கல்ய தாரணம் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு நலுங்கு இட்டு பாலும், பழமும் கொடுத்து சப்தபதி பொரியிடுதல் போன்றவை நடைபெற்றன. வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவா மூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் . திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் பக்தர் பேரவை சார்பில் திருக்கல்யாண விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
பொங்கல், கேசரி, பிரசாத பைகள் உள்ளிட்டவை வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இன்று முதல் 3 நாட்களுக்கு அம்பாள் ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேசம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், அறங்காவல் குழுவினா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனர்.
- திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள்.
- பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முன்தினமான திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையின் அளவில் வீட்டின் பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அது என்ன எம தீப தானம் என்கிறீர்களா ?.. அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை யாருக்காவது தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை துதியை திதி சிறப்புக்குரியது. ஏனெனில் ஒரு முறை இந்த திதியின் தினத்தில், எமதர்மன் தன்னுடைய சகோதரியான யமுனையின் வீட்டில் விருந்து சாப்பிடச் சென்றார்.
விருந்து சாப்பிட்டு முடித்ததும், தன் சகோதரிக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை வழங்கினார்.
அப்போது யமுனை, ஐப்பசி வளர்பிறை துதியை திதி அன்று, சகோதரிகளின் வீட்டில் விருந்து சாப்பிடும் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்ற வரத்தை எமதர்மனிடம் இருந்து பெற்றாள்.
அதன்படி இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் சகோதரர்களுக்கு, நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும்.
- மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
- தீபாவளி தினத்தில் மட்டும் வெந்நீரில் நீராடலாம்.
தீமை என்னும் இருளை நீக்கி, மனதில் தூய்மை எண்ணங்களை பரவச் செய்யும் தினமே 'தீபாவளி'. தீபங்களை வரிசைப்படுத்தி வைத்து வழிபாடு செய்யும் நாளாக இதனை போற்றுகிறோம்.

நரகாசுரன் என்னும் அசுரனை அழித்த தினத்தையே தீபாவளியாக கொண்டாடுவதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நரகாசுரனையே, மனதின் தீமைகளோடு ஒப்பீடு செய்கிறார்கள்.
இரண்யாசுரன் என்ற அசுரன், பூமியை கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான். அதை மீட்பதற்காகவே மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்தார். இரண்யாசுரனை அழித்து, பூமியை தன் இரு கொம்புகளுக்கு இடையில் வைத்து தூக்கிக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்தார்.
அப்போது வராகருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவனே 'நரகாசுரன்'. பிரம்மாவிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற நரகாசுரன், 'தன் தாயாலேயே அழிவு வரவேண்டும்' என்ற வரத்தையும் பெற்றிருந்தான். அந்த வரத்தால் தனக்கு அழிவே இல்லை என்று நரகாசுரன் நம்பினான்.
ஆனால் மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த போது, பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார்.
இந்த நிலையில் பிரம்மனிடம் இருந்து வரத்தைப் பெற்ற நரகாசுரன், மூவுலகங்களையும் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். அவன் அசாமில் உள்ள பிரக்ஜோதிஷபுரம் என்ற இடத்தை தலைமையிடமாகக் கொண்டு தன்னுடைய ராஜ்ஜியத்தை நடத்தி வந்தான்.
அவனது துன்பத்தால் துவண்டு போன தேவர்களும், முனிவர்களும், மக்களும், கிருஷ்ணரிடம் தங்களின் குறைகளை போக்கும்படி வேண்டினர்.
அவர்களுக்கு உதவ நினைத்த கிருஷ்ணர், சத்யபாமாவையும் உடன் அழைத்துக் கொண்டு, நரகாசுரன் ஆட்சி செய்த இடத்திற்குச் சென்றார். அவனது ராஜ்ஜியத்தின் காவலாக இருந்த கிரி துர்க்கம், அக்னி துர்க்கம், ஜல துர்க்கம், வாயு துர்க்கம் என்னும் கோட்டைகளை அழித்து நகருக்குள் நுழைந்தார்.

போருக்கான சங்கை முழங்கினார். சங்கொலி கேட்டு கோட்டையில் இருந்து வெளியே வந்த நரகாசுரன், தன் சாம்ராஜ்ஜியத்திற்குள் நுழைந்த கிருஷ்ணனை கண்டு ஆத்திரமடைந்தான். அவருடன் போரிட்டான். அப்போது நரகாசுரன் எய்த அம்பு ஒன்றால் தாக்கப்பட்டது போல நடித்து, தேரில் சாய்ந்து விழுந்தார் கிருஷ்ணர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபாமா தன்னுடைய கணவருக்காக, நரகாசுரனுடன் போரிட்டு அவனை வதம் செய்தாள். நரகாசுரன் பெற்ற வரத்தின்படியே, தன் தாயின் கரத்தாலேயே அழிவை சந்தித்தான்.
இந்த கதையில் 4 கோட்டைகளை உடைத்தெறிந்து, 5-வது கட்டமாக நரகாசுரனின் நகருக்குள் கிருஷ்ணன் நுழைந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இது பஞ்சபூதங்களால் ஆன நமது உடலின் உள்ளே புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கு இறைவன் அருள்பாலிப்பதை உணர்த்துகிறது.
இதில் 'கிரி துர்க்கம்' நிலத்தையும், 'அக்னி துர்க்கம்' நெருப்பையும், 'ஜல துர்க்கம்' நீரையும், 'வாயு துர்க்கம்' காற்றையும் குறிப்பதாகும். பஞ்ச பூதங்களில் 4 இங்கு கூறப்பட்டுள்ளதால் 5-வதான ஆகாயமும் சேர்ந்தே வரும்.
நரகாசுரனை வதம் செய்த பின்னர் பூமாதேவியின் அம்சமான சத்யபாமாவுக்கு, மகனை இழந்த துக்கம் ஏற்பட்டது. அதே நேரம் 'மகன் இறந்தது தன் ஒருத்திக்கான துக்கம் மட்டுமே. ஆனால் அவனுடைய இறப்பு, மக்களுக்கான மகிழ்ச்சி' என்பதை புரிந்து மனதைத் தேற்றினாள்.
இருந்தாலும், அவள் கண்ணனிடம், "என் மகனை இழந்த துக்கம் எனக்கு இருந்தாலும், உலக மக்களுக்கு எவ்வித துக்கமும் இருக்கக்கூடாது. அன்று எல்லோரும் கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, விருந்து உண்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்கு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினாள்.
அதன்படியே தீபாவளி பண்டிகையின்போது, அனைவரும் எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்பாக எழுந்து நீராட வேண்டும். அதிகாலையில் நீர் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால், தீபாவளி தினத்தில் மட்டும் வெந்நீரில் நீராடலாம் என்று சொல்லப்பட்டது.
அன்றைய தினம் மாலையில் வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
- 31-ந்தேதி தீபாவளி பண்டிகை.
- 1-ந்தேதி அமாவாசை.
29-ந்தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் அதிகாலை திருக்கல்யாணம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (புதன்)
* திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்
* சமநோக்கு நாள்.
31-ந்தேதி (வியாழன்)
* தீபாவளி பண்டிகை.
* முகூர்த்த நாள்.
* திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றுதல்.
* சமநோக்கு நாள்.
1-ந்தேதி (வெள்ளி)
* அமாவாசை.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
* வீரவநல்லூர் மரகதாம்பிகை ஊஞ்சல் உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
2-ந்தேதி (சனி)
* மதுரை பழமுதிர் சோலை முருகப்பெருமான் மகா அபிஷேகம், அன்ன வாகனத்தில் பவனி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ஊஞ்சல் உற்சவ சேவை,
* வள்ளியூர் முருகப்பெருமான் பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (ஞாயிறு)
* குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
* வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும் வீதி உலா.
* பழமுதிர்சோலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்திலும், இரவு வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணியர் தங்க ரதத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.
4-ந்தேதி (திங்கள்)
* சிக்கல் சிங்காரவேலர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் பவனி.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.
* திருவட்டாறு சிவபெருமான் பவனி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- இன்று பிரதோசம்.
- தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி நண்பகல் 12.20 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 8.48 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். நெல்லை ஸ்ரீசுவாமி ஸ்ரீ அம்பாள் புஷ்பப் பல்லக்கில் பட்டணப் பிரவேசம். இரவு ஊஞ்சலில் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நன்மை
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-திடம்
கடகம்-கவனம்
சிம்மம்-பரிசு
கன்னி-பாசம்
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-வரவு
தனுசு- தெளிவு
மகரம்-பக்தி
கும்பம்-லாபம்
மீனம்-செலவு
- பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை.
- சப்த கன்னியர் ஆலயங்களை நகர்ப்புறங்களில் காண முடியும்.

மதுராந்தகம்
மதுராந்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஏரிகாத்த ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வெள்ளைக்காரர்கள் இந்தியாவில் இருந்தபோது அப்போதைய கலெக்டரால் உருவாக்கப்பட்டு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்து இருக்கிறது. இந்த கோவிலிருந்து மதுராந்தகம் ஏரி கலங்கல் செல்லும் வழியில் மதுராந்தகம் கிராம மக்களால் சப்தகன்னிகள் கோவில் உருவாக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் ஆடி மாதம் ஐந்தாம் வாரம் அல்லது ஆவணி முதல் வாரம் கோவிலில் பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பால் அபிஷேகம் செய்தல், சாமி வீதி உலா போன்றவற்றை கிராம மக்கள் ஆண்டு தோறும் செய்து வருகின்றனர்.
மேலும் அமாவாசை நாளில் இக்கோவிலுக்கு வந்து பூஜை செய்தால் நினைத்த காரியம் நடக்கும். நன்மைகள் நடைபெறும் என்று மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது இந்த கோவில்.
மதுராந்தகம் அடுத்த முதுகரை கிராமத்தில் குளக்கரையில் அமைந்துள்ள சப்த கன்னிகள் ஆலயத்தில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் விசேஷ வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இதனால் பெண்கள் தங்களுடைய தாலி பாக்கியம், குழந்தை வரம் வேண்டியும் வழிபட்டு வருவதனால் அங்கு கூட்டம் அலை மோதுகிறது.
இதுபோன்று சுற்று வட்டார பகுதிகளில் சித்தாமூர், இலத்தூர், செய்யூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சப்த கன்னிகள் கோவில்கள் அமைந்துள்ளதால் மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.

மேல்மருவத்தூர்
புற்று மண்டபத்தின் வலப்புறம் சப்த கன்னியர் கோவில் ஒன்று உள்ளது. ஏழு கன்னிக்கும் அமைந்த கோவிலாதலின் இதனைக் கன்னி கோவில் என்றே மக்கள் வணங்குகின்றனர்.
பொதுவாக கன்னி கோவில்களில் மேற்கூரை போட்டு முகடு அமைப்பது இல்லை. அதன்படியே கன்னி கோவிலின் நான்கு புறத்திலும் சுற்றுச்சுவர் மட்டுமே எழுப்பப்பட்டுள்ளது.
அன்னை சப்த கன்னியர் கோவிலைக் கட்டுமாறு தன் பக்தர் ஒருவருக்கு ஆணையிட்டாள். "எந்த குலம் இதுவரை ஆலயத்தின் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லையோ, அக்குலத்தைச் சேர்ந்த நீயே இந்த கோவிலைக் கட்டு.
எந்த சமுதாயம் உன்னைத் தள்ளி வைத்ததோ, அந்த சமுதாயமே நீ கட்டிய கோவிலுக்குள் வந்து வணங்கப் போகிறது பார்" என்றாள் அன்னை. இது சாதி சமயங்களைக் கடந்த சித்தர் நெறி ஆகும். ஆகம விதிகளையெல்லாம் கடந்த ஒரு நெறியைக் கொண்ட கோவில் என்பதற்கு இதுவும் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

காஞ்சிபுரம்
கிராமப்புற மக்களின் வழிபாட்டுத் தெய்வமான சப்த கன்னியரின் வழிபாட்டு இடங்கள் பெரும்பாலும் நகர்புற பகுதிகளில் காண்பது நகரிலுள்ள வேப்ப மரத்தின் அடியில் முற்றிலும் பிரபலமாகாத ஒருசில சப்த கன்னியர் அமைந்துள்ள இடங்களையே நகர்ப்புறங்களில் காண முடியும்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தின் இதயப்பகுதியான காந்தி ரோட்டில் மூலவராக சப்த கன்னியர் அருள் பாலிக்கும் திருக்கோவில் உள்ளது.
காஞ்சிபுரம் காந்தி ரோடு, ரங்கசாமி குளம் பகுதியில் பிரதான சாலையில் சப்த கன்னியரும் வீற்றிருக்கும், ஸ்ரீ ஆகாய கன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. வடக்கு நோக்கி அமைந்துள்ள திருக்கோவிலில் 5 தலை நாகம் படம் விறித்தாட அதன் கீழ் சப்த கன்னியர் மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.
எதிரே திரிசூலத்திற்கு பின்னர் பலிபீடமும் அடுத்து, சப்த கன்னியருக்கு காவலாக சீறி நிற்கும் வேங்கையும் உள்ளது. இத் திருக் கோவிலினை வலம் வரும் போது நவகிரகமும், விநாயகர், முருகர், துர்க்கை, சனிபகவான் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலினுள் ஏறத்தாழ 100 ஆண்டுகள் பழமையான புற்றுடன் கூடிய வேப்பமரத்தின் கீழ் சப்த கன்னியர்கள் திரு உருவமாக எழுந்தருளி உள்ளனர்.
ஆண்டு தோறும் ஆடிமாதம் முழுவதும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீ மிதித்தும் தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றி வரும் இத்திருக்கோவிலில் ஒவ்வொரு அமாவாசையன்றும் அன்னதானம் செய்யப்படுகின்றது.
இத்திருக் கோவிலை பற்றி மேலும் விவரம் வேண்டுவோர் 044-27229159 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

திருத்தணி
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவில்களாக திருவாலங்காடு, மத்தூர், பெரிய நாகப்பூண்டி, சந்தான வேணுகோபாலபுரம் உள்பட 5 சைவ திருக்கோவில்கள் 7 வைணவ திருக்கோவில்கள், 4 சக்தி கோவில்கள், மடாலயம் என மொத்தம் 27 ஆலயங்கள் உள்ளன. இதில் சப்த கன்னிகைகள் கோவில் என்பது ஒன்று.
இது கோவில் என்று மட்டுமல்லாமல், சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. பக்தியை கலந்து விருந்துகள், விழாக்கள் என பண்டிகை காலம் போல் மக்கள் கொண்டாடி வந்தனர்.
காலப்போக்கில் முறையான பராமரிப்பு இல்லாததால் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளே வந்து செல்ல அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முருகன் கோவிலுக்கு தெற்கே கன்னிகாபுரம் எனும் பகுதியில் அடர்ந்த காடாகவும், பசுமையான சோலையாகவும் அமைந்துள்ளது சப்த கன்னிகையர் கோவில்.
சப்தம் என்றால் ஏழு. சப்த ரிஷிகளால் வசிஷ்டர் முதலிய ஏழு முனிவர்கள் இங்கு அமர்ந்து தியானம் செய்த வண்ணம், முருகக்கடவுளை பூஜித்துள்ளனர். அவர்களால் உருவாக்கப்பட்ட கோவில் தான் சப்த கன்னிக்கோவில் என அழைக்கப்படுகிறது.
இங்கு 7 சுனைகளில் தண்ணீர் வந்துக் கொண்டிருந்தது. தற்போது நமத்து போய் புதைந்து 6 சுனைகள் காணாமல் போனது. ஆனாலும் பாறைகளின் நடுவே ஒரு சுனையில் மட்டும் வற்றாமல் தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது.
மொத்தம் 13 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கிற இந்த பூமியில் நிழல் தரும் மரங்களும், செடி, கொடிகளும், இயற்கையாக சுகம் தரும் காற்றோட்ட வசதிகளும் உள்ளதால், திருத்தணி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும் பொழுது போக்க இதை பயன்படுத்தி வருகிறார்கள்.
காதணி விழாக்கள், வன போஜனம் என பல நேரங்களில் விருந்தோம்பல் நடப்பதையும் இங்கு பார்க்க முடிகிறது. குறிப்பாக பெண்கள் இந்த சுனை நீரை எடுத்து சமையல் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சப்த கன்னியர்களை வழிபடுகின்றனர்.
ஏழு கன்னிகைகளும் தனித் தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் கோவில் கொண்டு உள்ளார்கள். தினசரி அம்மன்களுக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த 21.11.1999-ம் ஆண்டு இக்கோவிலுக்கு திரு குட முழுக்கு நடைபெற்றது.

பிடாரி செல்லியம்மன் கோவில்
வேளச்சேரி பிரதான மெயின் ரோட்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகைக்குட்பட்ட பிடாரி செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. சென்னை மாநகரத்தின் வேதஸ்ரேணி என்கின்ற வேளச்சேரியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கிராம எல்லை சப்தமாதாவாக ஸ்ரீசாமுண்டீஸ்வரி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீவராகி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீபிரம்மி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீகவுமாரி ஆகியோர் தேவதைகளாக எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டியவண்ணம் வரங்களை வாரி வழங்கி வருகிறார்கள்.

மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் உள்ள சப்தகன்னியர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோவில்களில் இருக்கும் சப்தகன்னியர் பீடங்களைவிட வித்தியாசமாக இருக்கும். எல்லா கோவில்களிலும் ஏழுகன்னிகள் மட்டும்தான் இருக்கும்.
ஆனால் மாமல்லபுரத்தில் மட்டும்தான் நடுவில் எல்லைகாக்கும் கருக்காத்தம்மனும் வலது பக்கம் மூன்று கன்னிகளும் இடது பக்கம் நான்கு கன்னியரும் கடற்கரை பகுதியை பார்த்த வண்ணம் இருக்கும் பழங்காலத்து சிலையாக பீடங்களை பார்க்க முடியும்.
1956-ல் தொல்லியல்துறை கையகப்படுத்தும் முன்னர் பல ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுரம் கிராமப்பகுதிகளில் ஆங்காங்கே சப்த கன்னியர் உலா வந்ததை கன்னிப் பெண்கள் பார்த்ததாகவும் பார்த்து பயந்ததாகவும் அதனால் கன்னிப் பெண்களுக்கு ஆபத்து வரக்கூடாது என கருக்காத்தம்மனிடம் வழிபட்டு அம்மனை வடிவமைத்து தற்போது இருக்கும் பீடத்தில் முதலில் வைத்து அதை சப்தகன்னியர்கள் கோவிலாக வழிபட்டு வந்துள்ளனர்.
ஏழு கன்னியர் சிலைகளும் மாமல்லபுரம் கிராம சுற்று பகுதிகளில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு அம்மனுடன் வைத்து வருடாவருடம் ஊர் பூஜை, கன்னிபூஜை என சப்த கன்னிமார்களுக்கான பூஜைகளை செய்து வந்துள்ளனர்.
மாலை 6மணிக்கு மேல் கன்னிப்பெண்களை கோவில் தாண்டிச்செல்ல விடமாட்டார்களாம் . அவ்வளவு பயபக்தி. சப்தகன்னியர் சிலைகள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு ஒரே இடத்தில் வைத்துள்ளதாலும் தற்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும் பெயர்களை சின்னமாக வரைந்துள்ளதாலும் இவை பல்லவர் கால சிலைகளாக இருக்கலாம் எனவும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே சப்தகன்னியர் வழிபாடுகளும் இருந்திருக்க வேண்டும் எனவும் பேசப்படுகிறது.
பண்டைய காலத்தில் நடந்த சப்தகன்னிகள் வழிபாடுகள் பூஜைகள் முன்புபோல் தற்போது நடப்பதில்லை. காரணம் இன்றைய கன்னிப் பெண்களிடம் அந்த ஆர்வம் குறைவாலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டாலும் மாமல்லபுரம் சப்தகன்னியர் கோவில் வெளியே தெரியாமல் இருந்து வருகிறது.

திருப்போரூர்
சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள செம்பாக்கம் கிராமத்தில் புகழ் பெற்ற அழகாம்பிகை சமேத ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கோவில் சப்த கன்னியர் கோவில் ஆகும்.
இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தின் துணைக் கோவிலாக விளங்குகிறது. திருமணமாகாத கன்னிப்பெண்கள் இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டால் விரைவில் திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது ஐதகீம்.
மேலும் குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வியாபார அபிவிருத்தி பெற இக்கோவிலில் உள்ள சப்த கன்னியர்களை வேண்டி வலம் வந்தால் நினைத்தது விரைவில் கைகூடும் எனவும் சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஒரு சமூகத்தினரின் குலதெய்வமாக இந்த சப்த கன்னியர் கோவில் உள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பலர் இந்த சப்த கன்னியர் ஆலயத்திற்கு வந்து வேண்டி வழிபட்டு செல்கின்றனர்.
- வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று).
- இன்று ஏகாதசி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஐப்பசி-11 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி காலை 10.27 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பூரம் மாலை 6.22 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று ஏகாதசி. வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று). சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருமண வைபவக்காட்சி. திருமாலி ருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருமான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தின கிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மதிப்பு
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-செலவு
கடகம்-அமைதி
சிம்மம்-பரிசு
கன்னி-கவனம்
துலாம்- கவனம்
விருச்சிகம்-சிரத்தை
தனுசு- புகழ்
மகரம்-லாபம்
கும்பம்-பாராட்டு
மீனம்-தெளிவு
- திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது.
- கோவில் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது.
திருச்சியை அடுத்த லால்குடி அருகே மணக்கால் கிராமம் உள்ளது. இந்த ஊரில் அற்புதமாகக் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீநங்கையார் அம்மன்.
பொதுவாகவே, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்கென ஒரு சந்நிதி இருக்கும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் பலவற்றிலும் சப்தமாதர்கள் சந்நிதி கொண்டிருப்பார்கள்.

சப்தமாதர்களும் வடக்கு நோக்கியபடி காட்சி தருவார்கள். ஆனால், இங்கே கிழக்கு நோக்கியபடி காட்சி தருவது சிறப்பு என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இந்த கோவிலை கவுமாரி அம்மன் கோவில் என்றும், நங்கையார் கோவில் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்..
கோவிலில் மதுரைவீரனும் சந்நிதி கொண்டி ருக்கிறார். ஊருக்கு காவல்தெய்வமாகவும் போற்றப்படுகிற இந்த ஆலயம், சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்கிறது ஸ்தல வரலாறு.
மணக்கால் நங்கையார் அம்மன் கோவிலுக்கு வந்து வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்தருள்வாள் அம்மன் என்று சிலாகித்து போற்றுகின்றனர் ஊர்மக்கள். பிராகாரத்தில் யானை மேல் அமர்ந்த அய்யனார், குதிரை மீது அமர்ந்தபடி காட்சி தரும் கருப்பண்ணசாமி ஆகியோரையும் தரிசிக்கலாம்.
கருப்பண்ணசாமிக்கும் அவரின் வாகனமான குதிரைக்கும் மாலை சார்த்தி மனமுருக வேண்டிக் கொண்டால், கொடுத்த கடன் தொகை விரைவில் கைக்கு வந்து சேரும் என்கிறார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பமும் பிரிவினைகளும் விலகும் என்கிறார்கள் பக்தர்கள்!

தெற்குப் பிராகாரத்தில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்து நிற்கிறது நருவுளி மரம். இந்த மரத்தைச் சுற்றி வந்து, இதன் கொழுந்து இலையைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
நவராத்திரியின்போது, பத்தாம் நாளில், தயிர்ப்பாவாடை எனும் வழிபாடு இந்த தலத்தில் வெகு பிரசித்தம். அப்போது, அர்த்தமண்டபத்தில் தயிர்சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டிப் பரப்பி வைப்பார்கள். பிறகு, அம்மனுக்கு தயிர்சாதம் நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குப் பிரசாதத்தை வழங்குவார்கள்.
இந்த பிரசாதத்தைச் சாப்பிட்டு, அம்மனை வேண்டிக்கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.
மாங்கல்ய பாக்கியம் கிடைக்க, மஞ்சள் குங்குமம் நிலைக்கவும், வாராக் கடன் வசூலாக, குடும்பப் பிரச்சனைகள் நீங்கவும், கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கவும், பிரிந்த தம்பதி சேரவும் நங்கையார் அம்மனும் சப்தமாதர்களும் அருள்புரிகிறார்கள்.






