என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம்.
    • திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தபசுக் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி காலை 8.54 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: மகம் மாலை 4.10 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தீர்த்தம். இரவு தங்க சப்பரத்தில் தபசுக் காட்சி. வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை, தென்காசி ஸ்ரீ உலகம்மை கோவில்களில் திருவீதியுலா. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாளமாமுனிகள் உற்சவம் ஆரம்பம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருப்போரூர் முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகனுக்கும், ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-இன்பம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- பரிவு

    மகரம்-லாபம்

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-புகழ்

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-9 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி காலை 7.44 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ஆயில்யம் பிற்பகல் 2.22 மணி வரை பிறகு மகம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன், பத்தமடை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவில்களில் புறப்பாடு. உத்திரமாயூரம் ஸ்ரீ வள்ளலார் சந்நிதியில் ஸ்ரீ சந்திரசேகரர் புறப்பாடு. நெல்லை ஸ்ரீ காந்திமதியம்மன் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன அலங்கார சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-தனம்

    கடகம்-ஆர்வம்

    சிம்மம்-வரவு

    கன்னி-ஊக்கம்

    துலாம்- ஈகை

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- முயற்சி

    மகரம்-இன்பம்

    கும்பம்-நிறைவு

    மீனம்-மகிழ்ச்சி

    • கந்த சஷ்டி 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும்.

    திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் வருகிற 2-ந் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படு கிறார். 7மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு,வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது,

    2-ந் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 3,4,5,6 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    3.30மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது.

    காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை ஆகி பின்னர் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சி யான சூரசம்ஹாரம் வருகிற 6-ம் திருவிழாவான 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படு கிறது 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

    காலை 6மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

    பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 8-ந் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம்,4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

    8-ம் திருவிழா அன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12-ம் திருவிழா அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    • வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும்.
    • சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.

    கோவில் தோற்றம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது, திருநெய்வணை என்று அழைக்கப்படும் திருநெல்வெண்ணெய் திருத்தலம். இவ்வாலயத்தின் இறைவன் 'சொர்ணகடேசுவரர்' என்றும், இறைவி 'நீலமலர்கன்னி' என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆலய தீர்த்தம், பெண்ணெயாறு. ஆலய தல விருட்சம், புன்னை மரம்.


    தல வரலாறு

    முன்னொரு காலத்தில் வயல்கள் நிறைந்த இப்பகுதியில் விவசாயம் செழித்திருந்தது. அதனால் மக்கள் அனைவரும் குறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். வசதியான வாழ்க்கை காரணமாக, ஒழுக்கம் தவறியதுடன் இறை வழிபாட்டையும் முழுமையாக மறந்தனர்.

    அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணிய சிவன் ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். வருணனிடம் சொல்லி இப்பகுதியில் மட்டும் இடைவிடாத தொடர்மழை பொழியும்படி செய்தார். முதலில் மழையை கொண்டாடியவர்கள், விடாத மழையால் திண்டாடினர்.

    தொடர்ந்து பெய்த மழையால் ஊருக்கு மத்தியில் இருந்த பெரிய ஏரி உடைந்து, ஊருக்குள் வெள்ளம் பாய்ந்தது. விவசாய பயிர்கள் அழிந்தன.

    அடுத்தகட்டமாக தங்களது உடமைக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்தவர்கள், அதுநாள் வரை மறந்திருந்த இறைவழிபாட்டை நினைத்து, ஒன்றுகூடி சிவபெருமானை தொழுதனர்.

    இதையடுத்து ஒரு வாலிபன் உருவில் அங்கு வந்த சிவபெருமான், ஒவ்வொருவர் வீட்டிலும் வைத்திருந்த நெல் மூட்டைகளை கேட்டுப் பெற்றார். அந்த நெல் மூட்டைகளைக் கொண்டு, ஏரியின் கரையை பலப்படுத்தி வெள்ளத்தைத் தடுத்தார்.

    பின்னர் வருணபகவானை அழைத்து மழையை நிறுத்தும்படி பணித்தார். தக்க சமயத்தில் வந்து தங்கள் உடமைகள், பொருள்களை காத்ததுடன், அனைவரின் உயிரையும் காத்த அந்த வாலிபனிடம், "நீதான் எங்கள் தெய்வம்" என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.

    அப்போது வாலிபனாக இருந்த சிவபெருமான், "உங்களின் அனைத்து உயர் நிலைக்கும் இறைவனே காரணம். இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நல்வழியை கைவிடாதபடி வாழுங்கள். அதோடு இறைவனையும் மறக்காதிருங்கள்" என்று கூறினார்.

    மேலும் சொர்ணம் நிரம்பிய குடங்களை அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து, 'இழந்த பொருட்களை இதன் மூலம் மீட்டுக்கொள்ளுங்கள்' என்று கூறி அனைவருக்கும் தான் யார் என்பதை காட்டி மறைந்தார்.

    பரவசம் அடைந்த மக்கள் அனைவரும் அந்த இறைவனுக்கு அங்கே ஒரு ஆலயம் எழுப்பினர். சிவனே வந்து நெல் மூட்டைகளைக் கொண்டு அணை கட்டிய தலம் என்பதால், இந்த ஊர் 'நெல் அணை' என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி காலப்போக்கில் 'நெய்வணை' என்றானதாக சொல்கிறார்கள்.

    இத்தல இறைவனுக்கு 'நெல்வணை ஈசர்' என்றும், 'பொற்குடநாதர்' என்றும் பெயர்கள் உண்டாயின. இத்தல ஈசனை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தங்களின் தேவாரப் பாடலால் போற்றியுள்ளனர்.

    2 ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் கொண்ட இக்கோவில் யாரால் கட்டப்பட்டது என்ற குறிப்பு இல்லை. ஆனால் சோழமன்னர்களில் முதலாம் குலோத்துங்கசோழன், விக்கிரமசோழன், பல்லவமன்னர் சகலபுவன சக்கரவர்த்தி கோப்பெருஞ்சிங்கதேவர், விஜயநகர மன்னர் கிருட்டிணதேவ மகாராயர் ஆகியோரால் இவ்வாலயத்திற்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.


    ஆலய அமைப்பு

    ஆலயத்தின் முன்பாக திருக்குளம் உள்ளது. முகப்பு வாசல், அதற்கு முன்பாகவே நந்தி, கொடிமரம், பலிபீடம் உள்ளன. கோவிலின் உள்ளே மகா மண்டபம், அதில் பலிபீடம், நந்தியம்பெருமான் இருக்கின்றனர். இந்த அதிகார நந்தி இரண்டு கால்களையும் இணைத்து கைகூப்பி வணங்குவது போன்ற அமைப்பில் இருக்கிறது.

    இடதுபுறமாக விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னிதியின் வாசலுக்கு வெளியே, திருமகளுடன் சங்கு-சக்கரம் ஏந்தியபடி திருமால் வீற்றிருக்கிறார்.

    அர்த்த மண்டபத்தில் துவாரபாலகர்கள் காவல்புரிய, கருவறையில் மூலவரான நெல்வணை நாதர், சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க வடிவத்தில் ருத்ராட்ச பந்தலின் கீழ் அருள்கிறார். பிரமாண்டமான இந்த பந்தலில் 7 ஆயிரத்து 500 ருத்ராட்சங்கள் இருக்கிறது.

    சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகிய நால்வரும் சுவாமியை வணங்கிய நிலையில் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் நடராஜருக்கு தனிச் சன்னிதியும், உற்சவருக்கான சன்னிதியும் உள்ளன. சூலத்தின் மத்தியில் நின்ற கோலத்தில் உற்சவர் அருள்பாலிக்கிறார்.

    சிவமும் சக்தியும் இணைந்த அர்த்தநாரீசுவரர் வடிவத்தை இந்த வடிவம் உணர்த்துகிறது. கருவறைக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தி, கிழக்கில் லிங்கோத்பவர், வடபுறத்தில் துர்க்கை, பிரம்மா வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு எதிரில் சண்டிகேசுவரர் சன்னிதி உள்ளது.

    தென்கிழக்கில் செல்வ விநாயகர், தொடர்ந்து வள்ளி- தெய்வானை உடனாய சுப்பிரமணியர் வீற்றிருக்கின்றனர். அடுத்ததாக மகாவிஷ்ணு, கைகூப்பிய கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியை இடது மடியில் அமர்த்தியபடி லட்சுமி நாராயணராக தனிச் சன்னிதியில் அருள்கிறார்.


    இவர்கள் இருவரும் கண்களை மூடி தியானத்தில் இருப்பது தனிச்சிறப்பு. இந்தச் சன்னிதிகளுக்கு பின்புறம் பாலமுருகனும், விசாலாட்சி உடனாய விசுவநாதரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி, தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. நீலமலர்கன்னி அம்மன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    இவ்வாலய மூலவருக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், பாவங்கள் நீங்கும், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிவனுக்கு சாத்தப்படும் வெண்ணெய் காப்பு மறுநாள் வரை உருகாமல் இருக்கிறது.


    மறுநாள் அந்த வெண்ணெயை பக்தர்களுக்கு வழங்க, அவர்கள் வீட்டில் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கபட்டிருக்கும்.

    அமைவிடம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, திருநெய்வணை திருத்தலம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக குறிப்பிடப்படுபவள் துர்க்கை அம்மன்.
    • வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம்.

    தீய செயல்களை அழிக்கும் தெய்வமாக புராணங்களில் குறிப்பிடப்படுபவள், துர்க்கை அம்மன். இந்த அன்னையை ஒன்பது வகை துர்க்கையாக பிரித்து வழிபடுபவர்களும் இருக்கிறார்கள்.

    வன துர்க்கை, சூலினி துர்க்கை, ஜாதவேதோ துர்க்கை, சாந்தி துர்க்கை, சபரி துர்க்கை, ஜ்வாலா துர்க்கை, லவண துர்க்கை, தீப துர்க்கை, ஆசுரி துர்க்கை ஆகியோரே, 'நவ துர்க்கை' என்று அழைக்கப்படுகின்றனர்.


    வன துர்க்கை:

    பண்டைத் தமிழ் இலக்கியங்களில் 'கொற்றவை' என்ற பெயரால் குறிப்பிடப்பட்டவள் வனதுர்க்கை. அகத்திய முனிவரும், ராவணனும் இந்த தேவியை வழிபட்டதாக கூறப்படுகிறது.

    ராவணனை வதைத்திடும் வல்லமையைப் பெறுவதற்காக, அகத்தியரின் ஆலோசனைப்படி ராமபிரான் இந்த துர்க்கையை வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.

    வன துர்க்கை வழிபாடு ஆந்திரப் பிரதேசத்திலும் பிரசித்தம். லலிதா சகஸ்ரநாமத்தில் 'மகாவித்யா' என்ற வரி வரும். அது வன துர்க்கையை குறிப்பிடுவதே ஆகும்.

    தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கதிராமங்கலம், மயிலாடு துறைக்கு அருகில் உள்ள தருமபுரம் என அபூர்வமாகவே வன துர்க்கை கோவில்கள் காணப்படுகின்றன.


    சூலினி துர்க்கை:

    துர்க்கையின் வடிவங்களில் இவள் மிகவும் சக்தி படைத்தவள். சரபேஸ்வரரின் இறக்கை ஒன்றில் இவள் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. சிவனின், உக்ரவடிவ தேவி இவள். திருவாரூர் மாவட்டம் பேரளம் எனும் ஊருக்கு அருகில் உள்ளது, அம்பர் மாகாளம் எனும் பாடல் பெற்ற தலம்.

    இங்கே மாகாளி அன்னை, சூலினி துர்க்கையாக காட்சி தருகிறாள். இவளது திருமேனியை அர்ச்சகர்கள் கூட தொட்டு பூஜை செய்வதில்லை. ஒரு சிறிய கோலின் துணையாலேயே மாலை மற்றும் ஆடைகளை அணிவிக்கிறார்கள்.


    ஜாதவேதோ துர்க்கை:

    சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவையே முருகனாக மாறின. நெற்றிக் கண்ணில் உருவான தீப்பொறிகளை ஏற்றுக் கொண்டு கங்கை நதியில் சேர்த்ததால் இந்த துர்க்கைக்கு 'ஜாதவேதோ துர்க்கை' என்று பெயர்.

    யஜுர் வேதத்தில், துர்க்கா ஸுக்தம் என்ற பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஸுக்தம் ஜாத வேதஸே என்றே தொடங்குகிறது.


    சாந்தி துர்க்கை:

    இறை வழிபாட்டால் விளையும் பயன்களில் மிகவும் சிறந்தது உள்ளத்துக்கு கிடைக்கும் அமைதியே ஆகும். 'ஓம் சாந்தி.. சாந்தி..' என்றே வேதங்களும் பிரார்த்திக்கின்றன. தன்னை வழிபடுபவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி வாழ்வில் சாந்தி நிலவச் வழிசெய்பவள் சாந்தி துர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.


    சபரி துர்க்கை:

    ஒரு சமயம் சிவபெருமான் வேடுவன் உருவத்தைத் தாங்கியபோது, பார்வதி தேவி வேடுவப் பெண்ணாக வடிவம் கொண்டு அவருடன் வந்தாள். வேடுவச்சி உருவம் எடுத்த துர்க்கையையே, 'சபரி துர்க்கை' என்று அழைக்கிறார்கள்.


    ஜ்வாலா துர்க்கை:

    அன்னை ஆதிபராசக்தி பண்டாசுரன் என்ற அசுரனுடன் கடும்போர் புரிந்தபோது, மற்ற எதிரிகள் பார்வதி தேவிக்கு அருகில் வராமல் தடுப்பதற்காகத் துர்க்கை தேவி அக்னி ஜ்வாலையுடன் கூடிய மிகப்பெரிய நெருப்பு வட்டத்தை அமைத்தாள். இந்த செயலை செய்த துர்க்கை தேவியே, 'ஜ்வாலா துர்க்கை' எனப்படுகிறாள்.


    லவண துர்க்கை:

    ராமாயண காலத்தில் லவணாசுரன் என்றொரு அரசன் இருந்தான். அந்த அசுரனை அழிக்க புறப்பட்ட லட்சுமணன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு வழிபட்ட துர்க்கையே 'லவண துர்க்கை' ஆவாள். லவணாசுரன் அழிவதற்குக் காரணமாக இருந்ததால், இவள் லவண துர்க்கை எனப்பட்டாள்.


    தீப துர்க்கை:

    தீபமாகிய விளக்கு புற இருளை அகற்றி ஒளி வழங்குகிறது. பக்தர்களின் மனத்தில் இருக்கும் அஞ்ஞானம் என்னும் அக இருளை நீக்கி மெய் ஞானமான ஒளியை வழங்கும் தீபலட்சுமியே 'தீப துர்க்கை' என்று போற்றப்படுகிறாள்.


    ஆசுரி துர்க்கை:

    பக்தர்களிடம் உள்ள காமம் முதலான குணங்களை அழித்து மோட்சத்துக்கு அழைத்துச் செல்பவள், ஆசுரி துர்க்கை ஆவாள்.

    • படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.
    • இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அஷ்டமி காலை 7.06 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: பூசம் நண்பகல் 1 மணி வரை. பிறகு ஆயில்யம்.

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் அபிஷேகம் அலங்காரம் வழிபாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத்சுந்தர குசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை தலங்களில் திருவீதி உலா. சோளிங்கபுரம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஸ்ரீபக்தோசிதப் பெருமாள் திருக்கல்யாணம். கரூர் தோன்தோன்றி மலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. படை வீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-நலம்

    மிதுனம்-லாபம்

    கடகம்-பரிவு

    சிம்மம்-நன்மை

    கன்னி-திடம்

    துலாம்- தனம்

    விருச்சிகம்-பணிவு

    தனுசு- ஆக்கம்

    மகரம்-நற்செயல்

    கும்பம்-அமைதி

    மீனம்-சாதனை

    • மாசி மாத பிரதமை உத்தமமானது.
    • அமாவாசை, பவுர்ணமி, அடுத்து வரும் நாள் பிரதமை.

    அமாவாசை, பவுர்ணமி, அடுத்த நாள் பிரதமை. சித்திரை கார்த்திகை மாத விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.

    வலக்கையில் ஜபமாலை, கரண்டி, இடக்கையில் கமண்டலம், உத்தரிணி கொண்டு ஜபம் இருக்க வேண்டும். அன்றைய தினம் விரதமிருந்து பகவானுக்குப் பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம். அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

    இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும். மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றைய தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

    பிரதமை திதியை பாட்டிமை என்றும் சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு சந்திரன் குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள்.

    பவுர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டியமை. அதாவது பிரதமை திதி. அமாவாசையாக இருந்தாலும், பவுர்ணமியாக இருந்தாலும் அடுத்த நாள் பிரதமை திதி.

    பிரதமை திதியில் எதுவும் செய்யக் கூடாது என்பார்கள். இதனை ஒவ்வொரு கிராமத்திலும் பாட்டிமை, பாட்டிமுகம் என்றெல்லாம் பலவாறாக அழைப்பார்கள்.

    கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று எதையும் செய்யக் கூடாது என்பார்கள். இருந்தாலும் அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது. அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்பார்கள்.

    போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

    சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும்.

    அதனால்தான் கிராமங்களில், அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோகாரகன், உடலுக்கான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசவுகரியம் உண்டாகும். திடீர் மாரடைப்பு எல்லாம் உண்டாகும்.

    அதனால்தான் உடல்நலம் குன்றி இருப்பவர்கள் பற்றி பேசும்போது, அமாவாசையை தாண்டுமா என்று சொல்கிறார்கள்.

    பிரதமை என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

    அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது என பொருள்படும்.

    15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது. 30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் பூரணை ஈறாக உள்ள காலம் சுக்கில பட்சம் எனப்படும் வளர்பிறைக் காலத்தின் முதல் நாளும், பூரணையை அடுத்து வரும் நாளிலிருந்து அமாவாசை முடிய உள்ள காலம் கிருஷ்ண பட்சம் எனப்படும் தேய்பிறைக் காலத்தின் முதல் நாளுமாக இரண்டு முறை பிரதமைத் திதி வரும்.

    அமாவாசையை அடுத்துவரும் பிரதமையைச் சுக்கில பட்சப் பிரதமை என்றும், பூரணையை அடுத்த பிரதமையைக் கிருஷ்ண பட்சப் பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

    பிரதமைத் திதியில் வரும் பண்டிகைகளும், விரதங்களும் பின்வருமாறு:

    சந்திர ஆண்டுப் பிறப்பு (சந்திரமான யுகாதி) - சித்திரை மாதச் சுக்கில பட்சப் பிரதமை.

    சக்திக்குரிய பூஜையாகிய நவராத்திரி பூஜைத் தொடக்கம் - ஐப்பசி மாத சுக்கில பட்சப் பிரதமைத் திதி.

    விநாயகருக்கான கார்த்திகைச் சஷ்டி விரதத் தொடக்கம் - கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமைத் திதி.

    • தசமி திதி 'தசஹர தசமி' என்றும் ‘பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.
    • தசமி அன்று சேதுவில் நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது விதியாகும்.

    வைகாசி மாதம் அமாவாசைக்குப் பின் வரும் தசமி திதி 'தசஹர தசமி' என்றும் 'பாவ ஹர தசமி' என்றும் கூறப்படுகிறது.

    இந்நாளில்தான் 'இலங்கை வேந்தன் ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ஸ்ரீராமபிரான் மணலில் லிங்கப் பிரதிஷ்டை செய்து, சேதுக் கரையில் வழிபட்டார் என்று ஸ்ரீஸ்காந்தம் என்னும் நூல் கூறுகிறது.

    மேலும், வைகாசி சுக்ல பட்ச தசமி திதியானது பத்து வித பாவங்களை போக்கும் என்று பழம் நூல்கள் கூறுகின்றன.

    அந்நாளில் சேது என்று போற்றப்படும் ராமேஸ்வரம் அக்னித் தீர்த்தத்திலும் கோவிலுக்குள் இருக்கும் புனிதநீர் நிலைகளிலுமே நீராடினால் பாவங்கள் நீங்கி அளவற்ற புனிதம் கிட்டும் என்று சொல்லப்படுகிறது.


    வாக்கினால் செய்வது நான்கு. சரீரத்தால் செய்வது மூன்று, மனத்தால் இழைப்பது மூன்று. ஆக, இந்த பத்து பாவங்களும் தெரிந்தோ, தெரியாமலோ செய்தால் இவைகளைப் போக்கிக் கொள்ள இந்த பாவஹர தசமி உதவுகிறது.

    கடுஞ்சொல், உண்மையில்லாத பேச்சு, அவதூறாகப் பேசுவது, அறிவுக்குப் பொருந்தாமல் ஏடாகூடமாக பேசுவது.

    நமக்குக் கொடுக்கப்படாத பொருட்களை நாம் எடுத்துக் கொள்வது, அநியாயமாகப் பிறரைத் துன்புறுத்துவது, பிறர் மனைவிக்கு ஆசைப்படுவது.

    மற்றவர்கள் பொருளை அடைய திட்டமிடுவது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைத்தல், பிறபொருட்களிடமும், மனிதர்களிடமும் பொய்யான ஆசை கொள்ளுதல்.

    இந்த பத்து பாவங்களும் குறிப்பிட்ட புண்ணிய காலமான வைகாசி அமாவாசைக்குப்பின் வரும் தசமி அன்று சேதுவில் நீராடினால் நீங்கும் என்பது விதியாகும்.

    ராமேஸ்வரம் செல்வது என்பது எல்லோராலும் முடியாத காரியம். எனவே அந்தப் புண்ணிய காலத்தில் நீங்கள் வசிக்கும் ஊரின் அருகாமையில் உள்ள புனித நதியிலோ, ஆற்றிலோ குளத்திலோ நீராடலாம்.

    நதியிலும், ஆற்றிலும் நீர் இல்லாது போனாலும் சிவபெருமானையும் திருமாலையும் மனதில் நினைத்து 'இனிமேல் பாவங்கள் செய்ய மாட்டேன்' என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு, வடக்கு நோக்கி வீட்டில் குளித்தாலும் பாவங்கள் நீங்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

    இந்த புண்ணிய நாளில் தான் கங்கா தேவி தேவலோகத்தில் இருந்து பூலோகத்திற்கு வந்தாள் என்று புராணம் கூறுகிறது. அன்று கங்கா தேவியை நினைத்து நீராடினாலும் நம்முடைய பாவங்கள் நீங்கும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.


    'வைகாசி அமாவாசைக்குப் பின், பிரதமையிலிருந்து தசமி வரை கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் நீங்கி, அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும்' என்று கந்த புராணம் கூறுகிறது.

    இந்நாளில் முன்னோர்களுக்குப் பிதுர் பூஜை செய்வது போற்றப்படுகிறது. ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் செய்தால் கூடுதல் புனிதம் கிட்டுவதுடன் குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று வேதநூல்கள் கூறுகின்றன.

    • அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள்.
    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானது.

    சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் 'சங்கடஹர சதுர்த்தி' விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது.

    நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க்கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.


    அங்காரக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது என்பதை பார்க்கவ புராணம் நமக்கு விளக்குகிறது.

    பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக்கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள்.

    அந்த குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம் போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள்.

    குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்வாஜரிடம் கொண்டு போய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.

    உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்கு போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.

    அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாத கமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.

    அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.


    அங்காரகன் அருள் பெற்ற அந்த புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும். சங்கடங்கள் எல்லாம் பறந்தோடும் பக்தர்களது துயர் நீங்கும் வாழ்க்கை வளம் பெருகும்.

    எனவே அங்காரகனின் நாளான செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.

    அங்காரகனால் தொடங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தை கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.

    கடன், வியாதி, பகை அகலும், செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.

    • தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்.
    • சக்தி நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஐப்பசி-7 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 6.59 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: புனர்பூசம் நண்பகல் 12.10 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ காந்திமதியம்மன் தவழும் கண்ணன் திருக்கோலம். இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு. பத்தராசலம் ஸ்ரீராம பிரான் புறப்பாடு. சக்தி நாயனார் குரு பூஜை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சாந்தம்

    ரிஷபம்-உயர்வு

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பொறுமை

    சிம்மம்-உதவி

    கன்னி-தனம்

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-களிப்பு

    தனுசு- செலவு

    மகரம்-உறுதி

    கும்பம்-நேர்மை

    மீனம்-துணிவு 

    • சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம்.
    • ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

    வானில் தோன்றும் நட்சத்திரங்கள் அத்தனையையும் 27 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் நவகிரகங்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய ஜீவராசிகளும், மரம்செடிகொடிகளும், மலைகளும் ஏற்றத்தாழ்வு பெறுகின்றன.

    நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் ஆகிய ஐந்தும் தான் ஆதாரமாக உள்ளன.

    இதைத்தான் பஞ்சாங்கம் (பஞ்ச+அங்கம்) என்று சொல்கிறார்கள். இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும்.

    விரோதிகள் வலுவிழப்பார்கள். கெட்ட கனவு மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் கிடைக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.

    தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும்.

    பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு அதன் பின்னர் குளித்து விட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.

    பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்த திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.

    திதி என்ற வடமொழி சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை திதி என்கிறோம். மொத்தம் திதிகள் 15 ஆக அமைகின்றன. அமாவாசைக்குப் பிறகும் பவுர்ணமிக்கு பிறகும் இந்த திதிகள் ஒன்றுக்கு பின் ஒன்றாக வருகின்றன.

    பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி, பவுர்ணமி மீண்டும் பிரதமை, துவிதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரியோதசி, சதுர்த்தசி அமாவாசை ஆகியவை திதிகளாகும்.

    திதிகள் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு விஷேசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன.

    விநாயகர் சதுர்த்தி, ரிஷி பஞ்சமி, கந்த சஷ்டி, ரத சப்தமி, கோகுலாஷ்டமி, ராம நவமி, விஜய தசமி, வைகுண்ட ஏகாதசி, சிரவண துவாதசி, நரக சதுர்த்தசி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவைகள் திதிகளுடன் இணைந்த விசேஷ நாட்களாகும்.

    வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு.

    பிரதமை:

    வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

    துவிதியை:

    அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.

    திருதியை:

    குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி).

    சதுர்த்தி:

    முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது. எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

    பஞ்சமி:

    எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். இது விசேஷமான திதி ஆகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம்.

    விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

    சஷ்டி:

    சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.

    இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

    சப்தமி:

    பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்க லாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.

    இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்.

    அஷ்டமி:

    பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள லாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

    நவமி:

    சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

    தசமி:

    எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிக பணிகளுக்கு உகந்த நாள். பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.

    ஏகாதசி:

    விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.

    துவாதசி:

    மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.

    திரயோதசி:

    சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புகள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

    சதுர்த்தசி:

    ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

    பவுர்ணமி:

    ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

    அமாவாசை:

    பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். எந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

    ஆன்மிகம், இறை வழிபாடு, ஐதீகப்படியான பரிகாரங்கள், பிரார்த்தனைகள் பற்றி நீங்கள் எத்தனையோ புத்தகங்களைப் படித்து இருப்பீர்கள். இவற்றுக்கு அடிப்படையாக, அச்சாரமாக இருப்பது பஞ்சாங்க குறிப்புகள் தான். இந்த குறிப்புகளைக் கொண்டே உற்சவங்கள், விழாக்கள், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

    அதிலும் பஞ்சாங்கத்தின் ஒரு அங்கமான திதிகள், ஆன்மிக வழிபாட்டுக்கு நமக்கு கலங்கரை விளக்காகத் திகழ்கின்றன. இதை வழிபாடுகளில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். திதிகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வழிபாடுகள் செய்தால், துல்லியமான, முழுமையான பலன்களை சிந்தாமல், சிதறாமல் 100 சதவீதம் அப்படியேப் பெறலாம்.

    ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் பொதுவான இறைவழிபாடுகள், பரிகார பூஜைகளில் ஈடுபடுகிறோமேத் தவிர திதிகளை அறிந்து கொண்டு தினமும் அதற்கு ஏற்ப வழிபாடுகளையோ, பரிகாரங்களையோ செய்வதில்லை.

    தமிழ்நாட்டு மக்களிடையே இனியும் அந்த குறை இருக்கக் கூடாது என்பதற்காகவே, உங்களுக்கு உதவும் வகையில் திதிகள் மற்றும் அது தொடர்பான வழிபாடுகள் பற்றிய தகவல்கள் கொண்ட இந்த தொகுப்பை மாலைமலர் உங்களுக்குத் தருகிறது.

    பொதுவாக நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பதற்கு நாம் பஞ்சாங்கத்தைப் பார்க்கிறோம். பஞ்ச அங்கங்களைத் தன்னிடம் கொண்டதால் அது பஞ்சாங்கம் எனப்படுகிறது. அந்தப் பஞ்ச அங்கங்கள் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவையாகும்.

    ஒவ்வொரு நாளும் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற இந்த ஐந்து அங்கங்களை யார் தெரிந்து கொள்கிறார்களோ அவர்களுக்குப் பாவம் கிடையாது. மேலும் அவர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

    திதியைத் தெரிந்து கொள்வதால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். இதனால் செல்வம் பெருகும்.

    வாரத்தைத் தெரிந்து கொள்வதால் தீர்க்கமான ஆயுள் கிடைக்கும். ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைத் தெரிந்து கொள்வதால் முற்பிறவியில் செய்த பாவம் போகும்.

    யோகத்தைத் தெரிந்து கொள்வதால் ஆரோக்கியம் உண்டாகும். வியாதிகள் போகும்.

    கரணத்தைத் தெரிந்து கொள்வதால் அன்றைய காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

    தினமும் காலையில் காலண்டர், பஞ்சாங்கம் அல்லது தினசரி நாளிதழ்களில் இருந்து இவற்றைத் தெரிந்து கொள்வது நன்மை பயக்கும். இதற்கு அதிக நேரமும் ஆகாது. எனவே தினமும் இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

    குறிப்பாக பஞ்சாங்கத்தில் மறக்காமல் இன்றைக்கு என்ன திதி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அந்த திதியை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அன்றைய தினத்தில் அதற்குரிய தெய்வ வழிபாடுகளை செய்தல் வேண்டும். இதனால் தினமும் வாழ்வில் வெற்றி பெறலாம்.

    இத்தகைய சிறப்புடைய திதிகளும், வழிபாடுகளும் பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.

    • ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீவித்யை" எனப் போற்றப்படுகிறது.
    • பதினைந்து திதி நித்யாக்களும் பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

    பராசக்தியின் அற்புத லீலைகளை ஆயிரம் பெயர்கள் கொண்டு அற்புதமாக விளக்கி இருக்கிறார்கள். அவற்றில், பிரதமை முதல் பவுர்ணமி வரையிலான திதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

    லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்ர ரூபத்தில் வழிபடும் முறை "ஸ்ரீவித்யை" எனப் போற்றப்படுகிறது. அதில் பிந்துஸ்தானம் எனப்படும் இடத்தில் தேவி காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றியுள்ள முக்கோணத்தைச் சுற்றி பக்கத்திற்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.

    இந்த ஸ்ரீவித்யாவின் தேவதையான நித்யா, ஸ்ரீசக்ரத்தில் பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கின்றாள். அந்த தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.


    ஒரு மாதம் என்பது வளர்பிறை, தேய்பிறை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு அவை பதினைந்து நாட்கள் உடையதாகக் கொள்ளப்படுகிறது.

    மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும் ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் ஆக மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

    தெய்வங்களை திதிகளிலும், நீத்தார் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் உலகை நீத்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம்.

    ஆனால், அதே நாளில் இந்த திதிக்குரிய தேவதைகளை வழிபட மறந்து விடுகிறோம். இதனாலேயே நாம் உரிய பலன்களை பெற முடிவதில்லை.

    அன்றைய திதிகளை பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால் நம்மை வறுமை அணுகாது, அனைத்து சங்கடங்களில் இருந்தும் விடுதலை பெற முடியும்.

    கால ரூபிணியாய் விளங்கும் நித்யா தேவிகளை அந்தந்த குறிப்பிட்ட திதிகளிலே வணங்கி பூஜித்தால் மிகச் சிறந்த பலன்களை பெற முடியும். பிரதமை முதல் பவுர்ணமி வரை அப்பிரதட்சணமாகவும், திரும்பவும் அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரை பிரதட்சணமாகவும் பூஜிக்க வேண்டும். இந்த பதினைந்து தேவிகள் விபரம் வருமாறு:-


    (1) பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி

    (2) துவதியை –பகமாலினி

    (3) திரிதியை – நித்யக்லின்னை

    (4) சதுர்த்தி – பேருண்டா

    (5) பஞ்சமி – வந்நிவாசினி

    (6) ஷஷ்டி – மகாவஜ்ரேஸ்வரி

    (7) ஸப்தமி – சிவதூதி

    (8) அஷ்டமி – த்வரிதா

    (9) நவமி – குலசுந்தரி

    (10) தசமி – நித்ய

    (11) ஏகாதசி – நீலபதாகா

    (12) துவாதசி – விஜயா

    (13) திரயோதசி – சர்வமங்களா

    (14) சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி

    (15) பௌர்ணமி – சித்ராதேவி

    இந்த திதி அன்னையர்களின் தோற்றம், வழிபடும் நாட்கள், பலன்கள் என்னென்ன? என்பதை அறிவோம்.


    (1) காமேஸ்வரி

    "காம" எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள்.

    மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள்.

    பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

    வழிபாடு பலன்கள்:-

    குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.


    (2) பகமாலினி

    இந்த நித்யா தேவியின் மந்திரத்திலும், இவளின் பரிவார தேவதைகளின் மந்திரங்களிலும் "பக" எனும் சப்தம் அடிக்கடி விடுவதால், இவள் பகமாலினி என்று அழைக்கப்படுகிறாள்.

    பகம் என்ற சொல்லுக்கு பரிபூர்ணமான ஐஸ்வர்யம், தர்மம், தேஜஸ், ஞானம், வைராக்யம், வீர்யம், முக்தி என்றெல்லாம் பொருளுண்டு. இவற்றுடன் அம்பிகை கூடியிருப்பதால் பகமாலினி ஆனாள். பகத்தோடு கூடிய சகல பொருட்களும் இவளுடைய அம்சம் ஆதலால் தேவிக்கு பகவதி எனும் பெயரும் உண்டு.

    சிவந்த நிறமுள்ளவள். சிவப்புக் கற்களால் ஆன நகைகளை அணிவதில் மகிழ்பவள். அழகு பொலியும் திருமுகத்தினள். சதா தவழும் புன்முறுவலுடன் திகழ்கிறாள். முக்கண்களுடனும் இடது கரங்களில் அல்லி மலர், பாசக்கயிறு, கரும்பு வில் ஏந்தியும் வலது கரங்களில் தாமரை, அங்குசம், புஷ்ப பாணங்களை தரித்தும் தோற்றம் தருகிறாள்.

    வழிபடு பலன்கள்:-

    வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம். கர்ப்பத்திலுள்ள சிசு பாதுகாக்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும்.


    (3) நித்யக்லின்னா

    நித்யக்லின்னா என்றால் கருணை மிகுந்தவள் என்று பொருள். இவளின் இதயம் என்றும் கருணையிலேயே ஊறிப்போனதாம்! இவளின் மகிமையைப் பற்றி கருட புராணத்தில், "நித்யக்லின்னா மதோவக்ஷயே த்ரிபுரம் புக்தி முக்திதாம்" எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அம்பிகையைத் துதிப்போர் மூவுலகிலும் புக்தி சக்தியோடு வாழ்வர் என்று பொருள்.

    சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் சிந்தும் திருமுக மண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடனும், திரு முடியில் பிறைச்சந்திரனுடனும் அருட்பாலிக்கும் இந்த தேவிக்கு "மதாலஸா" என்ற பெயரும் உண்டு.

    தன் நான்கு கரங்களிலும், பாசம், அங்குசம், பான பாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கின்றன.

    வழிபடு பலன்கள்:-

    குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் எதுவும் வராது.


    (4) பேருண்டா நித்யா

    அனைத்து அண்டங்களிலும் நிறைந்துள்ள தேவி, அகிலத்துக்கே ஆதிகாரணியாகத் துலங்குபவள். அநேக கோடி அண்டங்களைப் படைத்தவள். அவற்றை உருவாக்கியதால் இந்த அன்னைக்கு "அநேக கோடி ப்ரமாண்ட ஜனனீ" என்றும் ஓர் திருநாமம் உண்டு.

    உருக்கி வார்த்த தங்கம் போன்ற மேனியில் பட்டாடைகளையும், குண்டலங்கள், பொன் ஆரங்கள், முத்துமாலை, ஒட்டியாணம், மோதிரங்களைத் தரித்து, நிகரற்ற அழகுவல்லியாகத் திகழும் இவள் முக்கண்கள் தரித்தவள். புன்முறுவல் பூத்து தரிசிப்போரைப் பூரிக்க வைக்கிறார்.

    தன் கர கமலங்களிலும் பக்தர்களின் பாதக மலங்களை அழிக்க பாசம், அங்குசம், கத்தி, கோதண்டம், கவசம், வஜ்ராயுதம் தரித்துள்ளாள். தேவியின் திருவடித் தாமரையைத் தாமரை மலர் தாங்குகிறது.

    வழிபடு பலன்கள்:-

    விஷ ஆபத்துகளிலிருந்து மீளலாம்.


    (5) வந்நிவாசினி

    அக்னி மண்டலத்தில் உறைவதால் வந்நி வாசினி. அக்னி மண்டலம் நம் உடலின் மூலாதாரத்தில் உள்ளது. அங்கு குண்டலினி வடிவாய் அம்பிகை துலங்குகிறாள். வஹ்னி என்ற பதம் மூன்று என்ற எண்ணிக்கையையும் குறிக்கும்.

    தேவி லலிதையின் பஞ்சதசாக்ஷரி என்னும் மகா மந்திரத்தின் வாக்பவ, காமராஜ, சக்தி கூடங்களும் மூன்றே ஆகும்.

    அழகே உருவாய் அருளே வடிவாய்த் திகழும் இவள் மஞ்சள் நிற பீதாம்பரம் அணிவதில் விருப்பமுள்ளவள். சுற்றிச் சுழலும் மயக்கும் விழிகளையுடையவள்.

    தன் திருக்கரங்களில் தாமரை, சங்கு, கரும்பு வில், அல்லிப்பூ, கொம்பு, மலரம்புகள், மாதுளம்பழம், அம்ருத கலசம் எனத் தரித்திருக்கின்றாள்.

    வழிபாடு பலன்கள்:-

    நோய்கள் தீரும். தேக காந்தியோடு, உலக இன்பங்களை பூரணமாக அனுபவிக்க இயலும்.


    (6) மகா வஜ்ரேஸ்வரி

    இந்த நித்யா ஜாலாமந்திரி பீடத்தின் அதி தேவதை. லலிதாதேவி உறையும் ஸ்ரீநகரத்தின் பன்னிரண்டாம் மதில் சுற்று வஜ்ரமணியால் ஆனதென்றும் அதற்கருகில் வஜ்ரமயமான நதியொன்று உள்ளதென்றும் அதற்கெல்லாம் அதிதேவதை வஜ்ரேஸ்வரி எனவும் துர்வாஸ மகரிஷி தன் லலிதாஸ்தவரத்னத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இத்தேவி வஜ்ரம் என்ற ஆயுத ரூபமாகவும் உள்ளாள். தங்கப் படகில் தன் பக்தரைக் காக்க வருபவள். நான்கு கரங்கள் கொண்ட இந்த அன்னை செந்நிறப் பூக்களால் ஆன மாலைகளை அணிந்துள்ளாள்.

    வைடூரியம் பதித்த கிரீடமும், கைகளில் பாசம், அங்குசம், கரும்புவில், மாதுளம் கனி தரித்து, கனிவான பார்வையுடன் தம் பக்தர்களைக் காக்கிறாள். அன்பர்களின் பிறவிப்பிணி தீர்க்கும் மருந்தாகி, அவர்தம் உடலும், உள்ளமும் தூய்மை பெறச் செய்யும் அதியற்புத சக்தி. கரங்களில் கங்கணங்கள் குலுங்க பொல்லாத முன் வினைகளுக்கு அஞ்சேல் என அபயமளிப்பவள்.

    வழிபடு பலன்:-

    அனைத்துத் துன்பங்களிலிருந்தும் விடுதலை.


    (7) சிவதூதி

    இந்த நித்யா தேவி சிவனைத் தூதனாகக் கொண்டவள். சும்ப நிசும்பருடன் அம்பிகை யுத்தம் தொடங்குமுன் அவர்களிடம் சிவபெருமானை தூது அனுப்பிய விவரம் தேவி மஹாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. புஷ்கரம் என்ற க்ஷேத்திரத்திலுள்ள அம்பிகைக்கு "சிவதூதி" என்று பெயர்.

    எட்டுத் திருக்கரங்கள், மூன்று கண்கள் கொண்ட இந்த அம்பிகையின் திருமுகம் கோடைக்காலத்து சூர்ய ஒளிபோல் மின்னுகிறது. நவரத்னங்கள் இழைத்த மகுடமும் பட்டாடையும் இவளது அழகுக்கு அழகு செய்கின்றன.

    தன் திருக்கரங்களில் கேடயம், அரிவாள், ஷாஷகா எனும் கோப்பை, பாசம், அங்குசம், கட்கம், கதை, தாமரை ஏந்தி அழகுடன் மிளிர்கிறாள். எல்லாவிதமான மங்களங்களையும் அன்பர்களுக்கு அளிப்பவள்.

    வழிபடு பலன்கள்:

    நமக்கு எதிரான அநீதியும் அதர்மமும் அழியும். நியாயமான கோரிக்கை எதுவும் எளிதில் நிறைவேறும். எந்த ஆபத்தும் நெருங்காது.


    (8) த்வரிதா

    இந்த நித்யா தேவிக்கு தோதலா தேவி என்ற பெயரும் உண்டு. பக்தர்களுக்கு சீக்கிரமாய் அருட்பாலிப்பதால் "த்வரிதா" என்று வணங்கப்படுகிறாள்.

    தழைகளை ஆடையாக அணிந்தவள். எட்டு நாகங்களை தேவி தன் உடலில் சூடியுள்ளாள். கருநீலநிறமான இவள் முக்கண்களுடனும் நான்கு கரங்களோடும் புன்முறுவல் பூத்த திருமுக மண்டலத்துடன் பொலிகிறாள்.

    சலங்கை, இடைமேகலை, ரத்னாபரணங்களுடன், மயில்பீலிகளைச் சூடிக்கொண்டு அலங்கார தரிசனமளிக்கிறாள். தேவியின் வரத அபய ஹஸ்தங்கள் பக்தர்களைக் காக்கக் காத்திருக்கின்றன. இத்தேவியைத் துணை கொள்வார்க்கு அணிமாதி சித்திகளும் ஞானமும் கைகூடும்.

    வழிபடு பலன்கள்:-

    எல்லா பயங்களும் போகும். கலைகளில் தேர்ச்சி பெற முடியும். பூரண ஆயுள் கிட்டும்.


    (9) குலசுந்தரி

    குலசுந்தரி என்பது குண்டலினி சக்தியையே குறிக்கும். நம் சரீரமே குலம். அதை இயக்குபவள் இவள்.

    பன்னிரண்டு திருக்கரங்கள், தாமரை மலரையொத்த ஆறு திருமுகங்கள், ஒவ்வொரு முகத்திலும் முக்கண்கள் கொண்டு தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பவள். திருமேனி முழுவதும் திருவாபரணங்கள் துலங்க, கரங்களில் ஜபமாலை, தாமரை, கமண்டலம், கோப்பை, மாதுளம்பழம், புத்தகம், தாமரை, எழுத்தாணி, ஜபமாலை, சங்கு, வரத முத்திரை கொண்டு தரிசனம் அளிக்கிறாள்.

    தேவர்களும் கந்தர்வர்களும் கின்னரர்களும் இவளைச் சுற்றியிருந்து அவள் புகழ் பாடிய வண்ணம் உள்ளனர். யட்சர்களும் அசுரர்களும் கூட இந்த அன்னையின் அருளை வேண்டி நிற்கின்றனர்.

    வழிபடு பலன்கள்:-

    இந்த தேவியின் அபூர்வ அருளால் இவளை பூஜிப்பவர்கள் சர்வ ஞானமும் அடைவர். செல்வ வளமும், சொத்துக்கள் சேர்க்கையும் கிட்டும்.


    (10) நித்யா

    அழிவில்லாதவள். கால நித்யா ரூபமானவள். சர்வாத்மிகா என்ற திருநாமம் கொண்ட இத்தேவி பொருட்களை இயக்கும் சக்தியாய்த் திகழ்கிறாள். எங்கும் நிறைந்தவள். டாகினி போன்ற தேவதைகளின் அதிதேவதையாய்த் திகழும் அம்பிகையான இவள், உதயத்து சூரிய நிறம் கொண்டு பிரகாசிப்பவள். மந்தகாசமான திருமுகத்தையுடையவள்.

    பிரகாசமான மகுடம் தரித்து தன் திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஸ்தகம், ஜபமாலை, புஷ்பபாணம், கரும்புவில், வாள், கேடயம், கபாலம், சூலம் ஏந்தி அபயவரதம் தரித்தவள். கணக்கில்லாத சக்திகள் அவளை ஓர் முழுமையான வட்டவடிவில் சூழ்ந்துள்ளன.

    சௌந்தர்ய ரூபவதியான இவள் அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களங்கள் தருபவள். நீலகண்டனின் இதயத்தில் வாழும் பச்சைப் பசுங்கிளி.

    வழிபடு பலன்கள்:-

    அனைத்துத் தொல்லைகளும் தானே விலகும். தடைகள் தவிடு பொடியாகும். தோஷங்கள் தொலையும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் இஷ்டமுடன் வந்தடையும். தீர்க்கமான உடல் நலமும், அஷ்டமா சித்திகளும் கிட்டும்.


    (11) நீலபதாகா

    நீல நிற வடிவான இந்த நித்யா தேவி, ஐந்து திருமுகங்களும் ஒவ்வொரு முகத்திலும் முக்கண்களும் கொண்டவள்.

    இவள் பத்து திருக்கரங்களிலும் பாசம், அங்குசம், வஜ்ராயுதம், கொடி, வாள், கேடயம், அம்பு, வில் ஏந்தி அபய, வரதம் தரித்தவள். சிகப்புப் பட்டாடை அணிந்து, முத்தாபரணங்களாலும் ஆங்காங்கே ரத்னங்கள் இழைத்த அணிகலன்களாலும் அலங்கரித்துக் கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்துள்ளாள்.

    இவளின் சாயலைப் போன்றே பல்வேறு சக்திகள் அவளைச் சூழ்ந்துள்ளனர். நல்லோர்களைக் காத்து, தீயோர்களை அழிக்கும் பேரரசி இவள். பரமனின் வாழ்க்கைத் துணையாக விளங்கும் இவள் திருவருட் பார்வையினால் ஒரு நொடிப்போதில் மேன்மை கைகூடும்.

    வழிபடு பலன்கள்:-

    எடுத்த காரியங்களில் வெற்றி, தேர்வுகளில் முதன்மை.


    (12) விஜயா

    இந்த அன்னை அதிகாலை சூரியனைப் போல ஜொலிப்பவள். ஐந்து முகங்கள், பட்டாடை அணிந்து கண்களைக் கவரும் ஒளி பொருந்திய மகுடமும் நெற்றியில் பிறை நிலவு சூடியும் தோற்றமளிப்பவள். பலவகையான அணிகலன்களும் அழகுக்கு அழகு செய்கின்றன.

    திருக்கரங்களில் சங்கு, சக்ரம், பாசம், அங்குசம், வாள், கேடயம், வில், அம்பு, மாதுளம்கனி, அல்லி மலரை ஏந்தி வலது காலை மடித்து இடதுகாலைத் தொங்கவிட்டு, பாதத்தைத் தாமரை மலரில் இருத்திய தோற்றத்துடன் பொலிகிறாள்.

    சுகாசனத்தில் அமர்ந்துள்ள இந்த அம்பிகையை போரில் வெற்றி பெற தியானம் செய்வது வழக்கம். புலியின் மீது அமர்ந்துள்ள எண்ணற்ற சக்திகள் இவளைச் சுற்றிலும் எப்போதும் இருப்பர். ஆணவம் கொண்டவர்களை அடக்கும் ஆதிசக்தியின் அம்சமாக இத்தாய் விளங்குகிறாள்.

    வழிபடு பலன்கள்:

    எந்தவகை வழக்குகளிலும் வெற்றி, கலைகளில் தேர்ச்சி.


    (13) சர்வமங்களா

    இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்னங்களும் இழைக்கப்பட்ட வைடூர்ய மகுடம் துலங்கப் பொலிகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அனவரதமும், அன்பரைக் காக்கின்றது.

    தன் நான்கு கரங்களிலும் மாதுளம்பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்துள்ளாள். சிவப்புப் பட்டு உடுத்தி சர்வசுலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள்.

    இந்த நித்யா தேவியைச் சுற்றிலும் எழுபத்திரண்டு சக்திகள் காவலாய் உள்ளதாக புராணங்கள் பகர்கின்றன.

    வழிபடு பலன்கள்:-

    பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.


    (14) ஜூவாலா மாலினி

    இந்த நித்யா தேவி நெருப்பு ஜ்வாலை ரூபமாய் இருப்பவள். பண்டாசுரனுடன் லலிதாதேவி நடத்திய யுத்தத்தில் நூறு யோஜனை நீளமும் முப்பது யோஜனை அகலமும் முப்பது யோஜனை உயரமும் கொண்ட நெருப்புக் கோட்டையைப் படைத்தவள். அக்னியையே மாலையாகக் கொண்டவள். இந்த அம்பிகையின் வித்யை அறுபது அட்சரங்களைக் கொண்டது.

    வைடூர்ய மகுடம் அணிந்து அக்னி ஜூவாலையைப் போல் சிவந்து காட்சியளிக்கும் இத்தேவிக்கு ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் உள்ளன. கரங்களில் அங்குசம், கத்தி, வில், நெருப்பு, கதை, பாசம், கேடயம், தாமரை, சூலம், அம்பு, அபயம், வரதம் தாங்கியுள்ளாள்.

    பல்வேறு அணிகலன்களைச் சூடிய இவளது ஒவ்வொரு திருமுகத்திலும் புன்முறுவலும் முக்கண்களும் உள்ளன. இவளை தேவரும் முனிவரும் சதா சூழ்ந்துள்ளனர்.

    வழிபடு பலன்கள்:

    எந்தத் துன்பமும் தீயிலிட்ட பஞ்சுபோல் ஆகும். பகைவர்கள் அழிவர்.


    (15) சித்ரா

    திதி நித்யா தேவிகளில் பதினைந்தாம் நித்யா தேவியான சித்ரா, பளபளவென மின்னும் கிரகணங்களை வீசிடும் திருமேனியவள்.

    பல்வேறு ரத்னங்கள் பதித்த மகுடத்தில் பிறைமதி சூடியவள். வெண்பட்டாடை உடுத்தி, பல்வகையான ஆபரணங்களை மேனி முழுதும் அணிந்து அழகே வடிவாய்த் திகழ்கின்றாள்.

    பாசம், அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்கள் கொண்ட இவள், பக்தர்களின் பயத்தை நாசம் செய்பவள்.

    சர்வானந்தமயி என்றும் நிலையானவள். கனவிலும், நினைவிலும் அடியவர்கள் இதயத்தில் வீற்றிருப்பவள். உதிக்கின்ற சூரியனைப்போல் ஞான ஒளி வீசி அறியாமை இருளை விரட்டுபவள். அண்டங்கள் அனைத்திலும் மகிமை வெளிப்படத் திகழ்பவள். தனிப்பெரும் பரம்பொருள்.

    வழிபடு பலன்கள்:

    திடர் அதிர்ஷ்டமும், பெரும் செல்வமும் சேரும்.

    ×