என் மலர்
வழிபாடு
- 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.
- ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சூரியனும், சந்திரனும் ஒரே நட்சத்திரத்தில் ஒன்று கூடி இருப்பதே அமாவாசை எனப்படுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை (4-ந்தேதி) ஆடி அமாவாசை தினம்.
சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் ஆடி மாத அமாவாசை 12 மாத அமாவாசைகளுள் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

பொதுவாக ஆடி அமாவாசை தினத்தன்று மூன்று விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை....
1. புனித நீராடல்
2. தானம்
3. தர்ப்பணம்
இந்த மூன்றையும் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் புனித நதிகள், புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. தங்கள் சந்ததிகள் நலமுடனும், வளமுடனும் வாழ சிறப்பு மிக்க தீர்த்தங்களை நமது முன்னோர்கள் பல இடங்களில் கண்டுபிடித்து நமக்கு அளித்துள்ளார்கள்.
இந்த தீர்த்தங்களின் சிறப்பை உணர்ந்து, நாம் அங்கு புனித நீராட வேண்டும் என்பதற்காகவே, இந்த தீர்த்தங்கள் உள்ள இடங்களில் ஆலயங்களை கட்டினார்கள். ஆலயத்தையும் தீர்த்தத்தையும் ஒன்றுபடுத்தியதன் மூலம் பல நூற்றாண்டுகளாக தீர்த்தங்களின் புனிதம் போற்றப்பட்டு வருகிறது.
தீர்த்தங்கள் என்பது வெறும் தண்ணீர் மட்டுமல்ல. அதில் மகத்துவம் நிறைந்துள்ளது. நமது நாகரிகத்தின் ஒட்டுமொத்த பண்பாடும் அதில் அடங்கியுள்ளது.
பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தீர்த்தங்கள் அமாவாசை தினத்தில் இரட்டிப்பு சக்தி பெற்றதாக இருக்கும். எனவே 4-ந்தேதி நாம் புனித நதியிலும், புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடி இறைவழிபாடு செய்தால் அளவற்ற பலன்களை நிச்சயம் பெறலாம். இந்த தீர்த்தக்கரைகளில் பித்ருதர்ப்பணம் செய்வது மேலும் சிறப்பைத் தரும்.

அடுத்து, தானம்...
உங்களால் என்ன தானம் செய்ய முடிகிறதோ அதை வருகிற ஞாயிற்றுக்கிழமை செய்யுங்கள். நாட்டில் எத்தனையோபேர் அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமல் ஏக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உங்கள் சக்திக்கு ஏற்ப அவர்களுக்கு உதவலாம்.
ஏழைகளுக்கு உணவு, உடை, தானம் செய்யலாம். நீங்கள் செய்யும் தானம் ஏழை - எளிய மக்களின் மனதில் மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். அந்த மகிழ்ச்சி உங்கள் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும். குலம் செழிக்க கைக் கொடுக்கும்.

இதையடுத்து தர்ப்பணம்...
நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு தடவை திதி கொடுத்தாலும் வருகிற ஞாயிற்றுக்கிழமை மறக்காமல் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 4.56 மணிக்கு தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை 5.32 மணி வரை அமாவாசை திதி நேரம் தான். எனவே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே தர்ப்பணம் செய்து கடமைகளை நிறைவேற்றலாம்.
நாம் கொடுக்கும் எள்ளும் தண்ணீரும் தான் அவர்களுக்கு உணவு, நம்மை சீராட்டி, பாராட்டி வளர்த்த நம் முன்னோர்களை நாம் பட்டினி போடலாமா? அது எவ்வளவு பெரிய பாவம்? இந்த பாவ மூட்டைகளை நீக்க 4-ந்தேதி மறக்காமல் தர்ப்பணம் கொடுங்கள்.
சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆத்ம தர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.
முக்கியமாக தாய் தந்தையர்களை இழந்தவர்கள் இதில் பெரும் பங்கெடுத்து கடமைகளை செய்ய வேண்டும் மற்றும் தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் சுற்றத்தவர்கள் என நம்மை விட்டு அமரர்களாகிய அனைவருக்கும் இதுபோற்றி வணங்கத்தக்க நாளாகும்.
அப்பா, அம்மா, உறவு என அனைவருக்கும் நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால் செய்ய முடியாதவர்கள் இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில் தீட்டு துடக்கு முடிந்த பின் பிதுர் கடன் செய்ய முடியாதவர்கள் இந்த ஆடி அமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.
- ஆடிப்பூர தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- சூடிக்கொடுத்த நாச்சியார் என்ற சிறப்பு பெற்ற திருத்தலம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இந்த திருத்தலமும் ஒன்று. மங்களாசாசனம் பெற்ற கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் தான், ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற சிறப்பு பெயர் கிடைக்கப்பெற்றது.
இங்குள்ள மூலவர் வடபத்ரசயனர் (ரெங்கமன்னார்). இவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய மூவரும் ஒரு சேர காட்சி அளிப்பது இந்த தலத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெற்றாலும், ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு நடைபெறும் தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த விழா 12 நாட்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும்.
கொடியேற்றுவதற்கு 2 நாட்கள் முன்னதாகவே ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தேரோட்ட திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 30-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ம் தேதி (சனிக்கிழமை) நிறைவடைகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் எந்த அளவிற்கு பிரசித்தி பெற்று விளங்குகிறதோ, அந்த அளவிற்கு இவ்வாலயத்தின் தேரும் பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது.
தேரோட்டத்திற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே, தேரை தயார்படுத்தும் பணி, அலங்கரிக்கும் பணி தொடங்கி விடும். இந்த ஆண்டு தேரில் உள்ள பழைய வடங்கள் அகற்றப்பட்டு புதிய வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொதுவாக அனைத்து கோவில்களிலும் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக தேர் இருக்கும். ஆனால் ஆண்டாள் கோவிலில் பெருமாளும், அம்பாளும் ஒரு சேர மணக் கோலத்தில் காட்சி அளிப்பார்கள். அதனால், இவ்வாலயத்தில் ஒரே ஒரு தேர்தான்.
அதில்தான் ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மணக்கோலத்தில் எழுந்தருளுகின்றனர். இது வேறு எங்கும் இல்லாத ஒரு தனிச் சிறப்பு ஆகும். மணக்கோலத்தில் வீற்றிருக்கும் ஆண்டாளை தரிசித்தால், நற்பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆண்டாள் கோவில் தேரில் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகள் பல சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. அதேபோல ஆண்டாளின் வாழ்க்கை வரலாறு, 64 கலைகள் குறித்த சிற்பங்கள் அனைத்தும் இந்த தேரில் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர் 94 அடி உயரம் கொண்டது. தேரில் 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு சக்கரமும் 1 டன் எடை கொண்டது. பழங்காலத்தில் இந்த தேருக்கு 9 மரச் சக்கரங்கள் இருந்தன. ஆனால் தற்போது 4 இரும்பு சக்கரங்கள் உள்ளன.
தமிழகத்தின் 2-வது மிகப்பெரிய தேர் இதுவாகும். தேரோட்டத்தை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து பரிவட்டம் வருவது வழக்கம்.
பழங்காலத்தில் இவ்வாலயத்தின் தேரோட்டம் ஆடி மாதத்தில் தொடங்கி ஐப்பசி மாதம் வரை நடந்துள்ளது. சுமார் 4 மாதங்கள் கழித்து தான், தேர் நிலைக்கு வந்துள்ளது. அந்த நான்கு மாத காலமும், ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் குறையாமல் இருக்கும் என்பதுதான் உச்சபட்ச சிறப்பு.
அதுபோல முன்காலத்தில் சுற்றுவட்டார கிராமத்தில் எங்கு இருந்து பார்த்தாலும் தேர் தெரியுமாம். இவ்வாறு வரலாற்று சிறப்பு மிக்க தேர் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, ஆடிப்பூர கொடியேற்றம் நடைபெறும் அன்றே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தடைவார்கள்.
ஆண்டாள் கோவிலை சுற்றியுள்ள மண்டபங்கள், நந்தவனங்களில் குடும்பத்துடன் தங்குவார்கள். கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள், அப்படியே ஆங்காங்கே தங்கி இருந்து தினமும் நடைபெறும் சுவாமி வீதி உலாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வர்.
பின்னர் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுப்பர். தேர் நிலைக்கு வந்த பிறகுதான் அனைவரும் தங்களின் ஊருக்கு புறப்பட்டுச் செல்வார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். அந்த வகையில் இந்த ஆண்டு 15 ஆயிரம் பக்தர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
விழாவின் ஆரம்ப நாள் முதல் தேரோட்டம் வரை, அதாவது 9 நாட்கள் இங்கு தங்கியிருக்கும் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இதனை 'ததீயாராதனம்' என்று அழைப்பர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தோரோட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

பெருமாள் அருகில் கருடாழ்வார்
பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும், பெருமாள் சன்னிதிக்கு எதிரில் தான் கருடாழ்வார் வீற்றிருப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் மட்டும் பெருமாளுக்கு அருகில், அவரை வணங்கியபடி கருடன் காட்சி தருகிறார்.

சூடிக்கொடுத்த நாச்சியார்
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையானது, வருடத்தில் ஒரு முறை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது அங்குள்ள பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. மதுரையில் நடைபெறும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது கள்ளழகருக்கும் இந்த மாலை சாற்றப்படுகிறது.
அதேபோல தினமும் வடபத்ரசயனருக்கும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஆண்டாளுக்கு 'சூடிக்கொடுத்த நாச்சியார்' என்ற பெயர் ஏற்பட்டது.
- இன்று மாத சிவராத்திரி.
- சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 17 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: திரயோதசி மாலை 4.48 மணி வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவாதிரை நண்பகல் 12.59 மணி வரை. பிறகு புனர்பூசம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று மாத சிவராத்திரி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கிலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் பவனி. திருவாடானை ஸ்ரீசிநேகவல்லியம்மன் கிளி வாகனத்தில் திருவீதியுலா. படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளி வாகன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஓய்வு
ரிஷபம்-கவனம்
மிதுனம்-நலம்
கடகம்- ஜெயம்
சிம்மம்-சுகம்
கன்னி-நட்பு
துலாம்- அமைதி
விருச்சிகம்-சலனம்
தனுசு- முயற்சி
மகரம்-ஆர்வம்
கும்பம்-மாற்றம்
மீனம்-சிறப்பு
- இறைவனின் திருவடிகளையே திருமுடியாகக் கொண்டவர்.
- பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும்.
கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். திருக்களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார். போர் புரிகையில் கூற்றுவனைப் போல் மிடுக்குடன் போர் புரிவார். எனவே, இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.
பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதிய படியே இருப்பார். சிவனடியார்களைக் கண்டால் சிவனாகவே எண்ணி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார்.
குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை.
கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோயில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக்கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவநாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.

அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள், "சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களின் மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்." என்று மறுத்து விட்டனர். சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால், அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லை வாழ் அந்தணர்கள் அஞ்சினர்.
ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழ நாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.
தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாக சூடிக் கொள்வேன்' என்று எண்ணி அம்பலத்தரசனை, 'நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாக சூட்டி அருள வேண்டும்' என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.
அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார். உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார்.
தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து 'எதற்கும் அஞ்ச வேண்டாம்' என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர். இறைவனார் கோயில் கொண்டுள்ள பல திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டார்.
இறுதியில் வீடுபேற்றினை இறையருளால் பெற்றார். கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.
- இன்று பிரதோஷம்.
- கூற்றுவ நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-16 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவாதசி மாலை 5.17 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நண்பகல் 12.47 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பிரதோஷம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசத்துடன் வைரவேல் தரிசனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் தெப்ப உற்சவம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தந்தப் பரங்கி நாற்காலியிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் ஸ்ரீ அனுமார் வாகனத்திலும் பவனி. சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. கூற்றுவ நாயனார் குருபூஜை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நட்பு
மிதுனம்-சுபம்
கடகம்-ஆதாயம்
சிம்மம்-தாமதம்
கன்னி-விருப்பம்
துலாம்- தேர்ச்சி
விருச்சிகம்-ஆற்றல்
தனுசு- பெருமை
மகரம்-வெற்றி
கும்பம்-நன்மை
மீனம்-பக்தி
- பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
- வருகிற 4-ந் தேதி ஆடி அமாவாசை.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் மாதத்தில் 8 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் ஆடி அமாவாசை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருவார்கள். மேலும் சுவாமிக்கு பல்வேறு வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெறும்.
இதையொட்டி சதுரகிரி கோவிலில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தயார் செய்துள்ளனர்.
இதற்கிடையே சுந்தரமகாலிங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இதய நோயாளிகள், சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள், பெரிய அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள், அல்சர் நோயாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்கள், கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், கால் ஊனமுற்றோர்கள், அதிக வயதானவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் யாரும் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம்.
- காசிவிஸ்வநாதர் கோவிலில் மச்ச முனியின் ஜீவசமாதி உள்ளது.
எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த பூமியிது. அதில் ஒரு சித்தர்தான் மச்சமுனி. அவர் பாடல் இது;
"செபித்திட காலம் செப்புவேன் மக்களே
குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்
அவித்திடும் இரவி அனலும் மேலும்
தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே''
பொருள்:
ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜெபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும்.

ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது.
காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து, 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்த தயிரை ஏற்றுக் கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.
- ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்பது ஐதீகம்.
- காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு.
ஆடிப் பதினெட்டு காவேரி பூப்பெய்திய நாள் என்று ஐதீகம் இருப்பதால் வளையல், காதோலை, கருகமணி, தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் தடவிய நூல் ஆகியவற்றை நதிக்கரையில் பூஜை செய்து பின் காவிரியில் விடுவதை தமிழர்கள் காலம், காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
புதிதாக திருமணம் செய்தவர்கள் 'தாலிப் பிரித்து போடுதல்' என்று தங்கள் தாலியை வேறு கயிற்றில் அல்லது சங்கிலியில் மாற்றிக் கொள்வர். ஆடிப்பெருக்கென்று நீர் பெருகி வருவது போன்று தங்கள் இல்லற வாழ்வும் பெருக வேண்டும் என வேண்டிக் கொள்வார்கள்.

அன்று மாலை பலவித சித்ரான்னங்கள் படைத்து உண்பதும் சிறுவர்கள் சப்ரம் (சிறிய தேர்) கட்டி இழுப்பதம் கிராமப்புற ஆறுகள் பக்கம் இன்றும் நடைபெறுகிறது.
கும்பகோணத்தில் நவ கன்னியர்களில் ஒருவராக இருக்கும் காவிரியை வழிபட ஆடிப்பெருக்கு விழாவுக்கு 10 நாட்கள் முன்னதாகவே ஒரு தட்டில் நவதானியங்களைத் தூவி முளைப்பாலிகளை முளைக்கச் செய்வர்.
அவற்றை கும்மிப் பாடல்கள், குரவைப் பாடல்களால் போற்றியபடி காவிரிக்கு எடுத்துச் செல்வர். முதலில் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொண்டு வாழை இலையில் மண்ணிலிருந்து ஒன்பது உண்டைகள் பிடித்து வைத்து பூஜிப்பார்கள்.
கும்பகோணம் - திருவாரூர் சாலையில் உள்ள திருச்சேறை சாரநாதர் ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் தென் மேற்குக் கரையில், காவிரி அன்னைக்கு ஒரு கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு ஆடிப்பெருக்கன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.
தஞ்சை -திருவையாறு சாலையில் உள்ள திருவையாற்றில் ஐயாரப்பன் புஷ்ப மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆடி பதினெட்டில் நடைபெற்று வருகிறது.
கொடுமுடி - மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் ஆடிப் பதினெட்டு தினத்தன்று மும்மூர்த்திகள் காவிரிக் கரைக்கு எழுந்தருளுவர். அன்றைய தினம் பச்சை மண்ணில் பானை செய்து அதில் மாவிளக்கு, கருகமணி, காதோலை, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வைத்து நடு ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வருவர். அம்மனுக்கும் மகாலட்சுமிக்கும் சந்தனக் காப்பு ஆராதனை நடைபெறும்.
ஈரோடு பவானி - கூடுதுறையில் அதிகாலையில் நீராடி விட்டு அம்மனுக்குத் தேங்காய், பழம், கருகமணி, காதோலை முதலியவற்றைப் படைத்து ஆராதனை செய்வர்.
ஒவ்வொரு வருடமும் ஆடிப்பெருக்கன்று காவிரியில் சித்தப் புருஷர்களும், யோகிக்களும் நீராடி தங்கள் தவ வலிமையை மக்களுக்குப் பகிர்ந்தளித்துச் செல்வதாக கருதப்படுகிறது. எனவே அன்று நீராடிவிட்டு தாமரை இலையில் விளக்கேற்றி நீரில் மிதக்க விட்டு அன்னையைப் பூஜித்து தான தர்மங்களைச் செய்தால் பதினெட்டு சித்தர்களின் ஆசியையும் பெறலாம்.
நீர் நிலைகள் தங்கள் வீட்டிற்கு அருகில் இல்லையென்றால் முறைப்படி வீட்டில் வைத்தே காவிரித் தாயைப் பூஜித்து சமர்ப்பணப் பொருட்களை அருகில் உள்ள கிணறுகளில் போடலாம்.
ஆடிப் பதினெட்டாம் நாளன்று காவிரியின் கதையைப் படிப்பது சிறப்பு தரும்.
- ஆடி மாதம் என்பது கடக மாதம்.
- ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு.
சங்க நூல்களில் பெண்கள் ஆற்றிற்கு விழா எடுத்தார்கள். ஆற்றை ஒரு கன்னிப் பெண்ணாக நினைத்து வணங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சப்த கன்னிகளுக்கான வழிபாடு என்பது அன்றைக்கு விசேஷமானது.

ஆடிப்பெருக்கு அன்று பெருக்கெடுத்து ஓடி வரும் அந்த புது வெள்ளம், புது நீர் வரும் போது தாலியை மாற்றிக் கொள்ளுதல், கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைச் சுற்றிக் கொள்வது. நல்ல வரன் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்வது, சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.
ஆடி 18-ம் பெருக்கிற்கு தனி சக்தி உண்டு. ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. இந்த ஆடி 18 அன்று பூசம் நட்சத்திரத்தை விட்டு விட்டு ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார்.
அந்த சனி நட்சத்திரத்தை விட்டு விட்டு புதன் நட்சத்திரத்திற்கு சூரியன் வரும் போது அது ஒருவித சக்தியைக் கொடுக்கும்.

பூக்கள் நிரப்பும் விழா
சிவகங்கையில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கொல்லங்குடி. இங்குள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு அன்று அம்பாள் சன்னதி முழுவதும் பூக்களால் நிரப்பி, பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது.
இங்கு தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் காளியம்மன் மீதும் சூரியஒளி விழுவது மிகவும் விசேஷமாகத் கருதப்படுகிறது.
- ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள்.
- வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ம் நாள். தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர்.
இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும்.
அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.
இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழியும் விளைந்தது. இந்த சிறப்பான தினம் வருகிற சனிக்கிழமை (3-ந்தேதி) வருகிறது. மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கை கண்டுகளிப்பர். கோவில்களுக்கு சென்று வழிபடவும் செய்வர்.

ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர்வளம் பெருகியதுபோல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள்.
அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பலவிதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கரையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரியாற்றின் கரையில் திருச்சியில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது. ஸ்ரீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும்.

ஆடிப்பெருக்கு நாளன்று ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம். ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம்.

நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். அன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமணத் தடை அகலும்.

நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.
ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
செம்பில் உள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.
ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.
- திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆடி-15 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: ஏகாதசி இரவு 6.10 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 1.01 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபால சுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் பவனி. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் தெப்பம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீ மாரியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அன்பு
ரிஷபம்-வெற்றி
மிதுனம்-இரக்கம்
கடகம்-மேன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-பொறுமை
துலாம்- செலவு
விருச்சிகம்-நன்மை
தனுசு- நற்செயல்
மகரம்-போட்டி
கும்பம்-ஆக்கம்
மீனம்-பண்பு
- கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது.
- கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம், பெத்த பள்ளி அடுத்த ஒடேலாவில் சம்பு லிங்கேஸ்வரர், ஆபத் சகாயஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் நாக தேவதை அம்மன் சிலை உள்ளது. கோவில் பூசாரி நாக தேவதை அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது திடீரென நல்ல பாம்பு ஒன்று வந்து நாக தேவதை அம்மன் சிலையின் மீது அமர்ந்தது. பின்னர் சாமி சிலையின் மீது படம் எடுத்து ஆடியது. இந்த செய்தி ஊர் முழுவதும் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான கிராம மக்கள் திரண்டு வந்து சாமி சிலை மீது பாம்பு ஆடுவதை கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். சாமியை வணங்கி சென்றனர்.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.






