என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ema Diwali"

    • தீபாவளிக்கு முன்தினம் திரயோதசி திதியில் எம தீபாவளி கொண்டாடப்படுகிறது.
    • தீபாவளி அன்று காலை எம தர்ப்பணம் செய்வது விசேஷம்.

    தீபாவளிக்கு முன்தினமான திரயோதசி திதியில், எம தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அத்தனை தீபங்களை வீட்டின் பூஜை அறையில் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும். அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, யாருக்காவது அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    எம தர்ப்பணம்

    தீபாவளி அன்று காலை (சதுர்த்தசி திதி) எம தர்ப்பணம் செய்வது மிக விசேஷமானது. இதனால் நீண்ட ஆயுள், ஐஸ்வரியம் கிடைக்கும். இதை தந்தை இல்லாதவர்கள் மட்டுமின்றி, தந்தை, தாய் உயிருடன் இருப்பவர்களும் செய்யலாம். மஞ்சள் கலந்த அரிசியால், தூய்மையான நீரில் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் எம பயம் விலகும். தர்ப்பணம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்..

    யமாய நம : யமம் தர்ப்பயாமி

    தர்மராஜாய நம : தர்மராஜம்தர்ப்பயாமி

    ம்ருத்யவே நம : ம்ருத்யும் தர்ப்பயாமி

    அந்தகாய நம : அந்தகம் தர்ப்பயாமி

    வைவஸ்வதாய நம : வைவஸ்வதம் தர்ப்பயாமி

    காலாய நம : காலம் தர்ப்பயாமி

    ஸர்வபூத க்ஷயாய நம : ஸர்வபூத க்ஷயம் தர்ப்பயாமி

    ஔதும்பராயநம : ஒளதும்பரம் தர்ப்பயாமி

    த த் நாய நம : தீத்நம் தர்ப்பயாமி

    நீலாய நம : நீலம் தர்ப்பயாமி

    பரமேஷ்டி நே நம : பரமேஷ்டி நம் தர்ப்பயாமி

    வ்ருகோதராய நம :வ்ருகோதரம் தர்ப்பயாமி

    சித்ராய நம :சித்ரம்தர்ப்பயாமி

    சித்ரகு ப்தாய நம : சித்ரகு 'ப்தம் தர்ப்பயாமி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள்.
    • பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

    தீபாவளிக்கு முன்தினமான திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையின் அளவில் வீட்டின் பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.


    அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அது என்ன எம தீப தானம் என்கிறீர்களா ?.. அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை யாருக்காவது தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.


    ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை துதியை திதி சிறப்புக்குரியது. ஏனெனில் ஒரு முறை இந்த திதியின் தினத்தில், எமதர்மன் தன்னுடைய சகோதரியான யமுனையின் வீட்டில் விருந்து சாப்பிடச் சென்றார்.

    விருந்து சாப்பிட்டு முடித்ததும், தன் சகோதரிக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை வழங்கினார்.

    அப்போது யமுனை, ஐப்பசி வளர்பிறை துதியை திதி அன்று, சகோதரிகளின் வீட்டில் விருந்து சாப்பிடும் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்ற வரத்தை எமதர்மனிடம் இருந்து பெற்றாள்.

    அதன்படி இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் சகோதரர்களுக்கு, நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும்.

    ×