என் மலர்
வழிபாடு

எம தீபாவளி: எமனும்.. யமுனையும்...
- திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள்.
- பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு முன்தினமான திரயோததி திதியை, 'எம தீபாவளி' என்று போற்றுகிறார்கள். இந்த நாளில் வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையின் அளவில் வீட்டின் பூஜை அறையில் தீபங்கள் ஏற்றிவைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அதோடு எம தீப தானமும் வழங்கலாம். அது என்ன எம தீப தானம் என்கிறீர்களா ?.. அதாவது பித்தளை குத்துவிளக்கு அல்லது வெள்ளி குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, அந்த தீபம் ஏற்றிய குத்துவிளக்குகளை யாருக்காவது தானமாக அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
ஐப்பசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை துதியை திதி சிறப்புக்குரியது. ஏனெனில் ஒரு முறை இந்த திதியின் தினத்தில், எமதர்மன் தன்னுடைய சகோதரியான யமுனையின் வீட்டில் விருந்து சாப்பிடச் சென்றார்.
விருந்து சாப்பிட்டு முடித்ததும், தன் சகோதரிக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை வழங்கினார்.
அப்போது யமுனை, ஐப்பசி வளர்பிறை துதியை திதி அன்று, சகோதரிகளின் வீட்டில் விருந்து சாப்பிடும் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்ற வரத்தை எமதர்மனிடம் இருந்து பெற்றாள்.
அதன்படி இந்த சம்பிரதாயத்தை கடைப்பிடிக்கும் பெண்களின் சகோதரர்களுக்கு, நீண்ட ஆயுள் கிடைக்கப்பெறும்.






