என் மலர்
வழிபாடு
- பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் நந்தி கல்யாணம்.
- நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும்.
நந்தியை சிவபெருமான் தன் மகனாகவே ஏற்றுக்கொண்டார். உரிய வயதில் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணிய சிவன், வசிஷ்ட முனிவரின் பேத்தியை மணமகளாகத் தேர்ந்தெடுத்து, பங்குனி மாத பூச நட்சத்திர நாளில் சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி திருமழபாடியில் மேற்சொன்ன நாளில் கோலாகலமாக நடைபெறும். பார்வதியும் பரமேஸ்வரனும் திருவையாறிலிருந்து பல்லக்கில் வருவர். நந்தி மாப்பிள்ளை கோலத்தில், வெள்ளியாலான தலைப்பாகை அணிந்து, கையில் செங்கோல் ஏந்தி, குதிரை வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க வைத்தியநாதன்பேட்டை வழியாகத் திருமழபாடி வருவார்.

திருமண விழா முடிந்ததும் புனல்வாசல் வழியாக திருவையாறு திரும்பிச் செல்வார். இதைத்தான் 'வருவது வைத்திய நாதன் பேட்டை, போவது புனல்வாசல் என்பர்.
நந்தி திருமணத்தின் போது பல தலங்களில் இருந்து பல பொருட்கள் வரும். திருப்பழனத்தில் இருந்து பழ வகைகள் வரும். திருப்பூந்துருத்தியில் இருந்து மலர் மாலைகள் வரும், திருநெய்த்தானத்திலிருந்து யாகத்திற்கும் சமையலுக்குமான நெய் வரும்.

திருச்சோற்றுத்துறையில் இருந்து அறுசுவை அன்ன வகைகள் வரும். இந்தத் தலங்களெல்லாம் திருமழபாடியைச் சுற்றி அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த திருமண விழா மார்ச் அன்று நடைபெறும்.

இதைக் காணும் திருமணமாகாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரைவில் திருமணம் கூடி வரும் என்பர். 'நந்திக் கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்' என்பது சொல் வழக்கு. இவ்விழாவைக் காண்போர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும், சுபகாரியங்கள் நடைபெறும்.
- பிரதோஷம் அன்று செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும்.
- பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது வழக்கம்.
* சாதாரண நாளில் வரும் பிரதோஷத்தில் இருக்கும் விரதத்தை விட சனிக்கிழமைகளில் வரும் சனிமகா பிரதோஷத்தின் போது விரதமிருந்தால் ஆயிரம் மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும்.
* பிரதோஷ நேரத்தில் நந்தி பகவானுக்கு அருகம்புல் அல்லது வில்வ இலை மாலை சாற்றி நெய் விளக்கு ஏற்றி, பச்சரிசி, வெல்லம் வைத்து பூஜை செய்வது வழக்கம்.

* சாதாரண நாளில் சிவன் கோயிலில் வலம் வருவதைப் போல் இல்லாமல், பிரதோஷ நேரத்தில் சற்று வேறு விதமாக வலம் வருதல் வேண்டும். அதற்கு சோமசூக்தப் பிரதட்சணம் என்று பெயர்.
* அதாவது நந்தியை வணங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்யும் நீர்வரும் கோமுகி வரை சென்று அங்கு நின்று வணங்கி, பின்னர் அதே வழியாக வலம் வந்து சண்டிகேஸ்வரர் வரை வந்து அவரை வணக்கி மீண்டும் கோமுகிக்குச் செல்ல வேண்டும். இப்படி மூன்று முறை வணங்க வேண்டும்.
* இந்த பிரதட்சண முறைக்கு பிரதோஷ பிரதட்சணம் என்று பெயர், பிரதோஷத்தில் நித்தியப் பிரதோஷ, பிரயை பிரதோஷம், பட்சப் பிரதோஷம் என மொத்தம் இருபது வகை பிரதோஷங்கள் உள்ளன.
* சனிப் பிரதோஷ காலத்தில் சிவனை தரிசித்தால் சகல பாவங்களும் நீங்கி புண்ணியங்கள் சேரும். இந்திரனுக்கு நிகரான செல்வாக்கும், புகழும் கிடைக்கும்.
* அன்றைய தினம் செய்யப்படும் தான தர்மங்கள் அளவற்ற பலன்களைத் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் வல்லமை வாய்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

* சனி பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் சிவபெருமானின் நாட்டியத்தை காண வருவார்கள் என்பது ஐதீகம்.
* அதனால் ஆலயத்தின் மற்ற சந்நிதிகள் அந்த நேரத்தில் திரையிடப் பட்டிருக்கும். அதே பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்கு செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.
* பிரதோஷம் விரதம் இருப்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
* மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய் தீபம் ஏற்றி வணங்கி வரவேண்டும்.
- மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம்.
- கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-7 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி காலை 10.35 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.07 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீ செல்லாத்தம்மன் உற்சவம் ஆரம்பம். சிம்மாசனததில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. கூரத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர சூசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலையில் சிறப்பு சோமவார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-சுபம்
மிதுனம்-புகழ்
கடகம்-நட்பு
சிம்மம்-அன்பு
கன்னி-சாந்தம்
துலாம்- வெற்றி
விருச்சிகம்-வரவு
தனுசு- உயர்வு
மகரம்-போட்டி
கும்பம்-திறமை
மீனம்-நன்மை
- ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்.
- ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்.
ஆயுள் பலம் அருளும் பரிகார தலங்கள்!
1. அமிர்தகடேஸ்வரர் கோவில்,திருக்கடையூர்,
2. எமனேஸ்வரமுடையார் கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி
3. காலகாலேஸ்வரர் கோவில், கோவில்பாளையம்,
4. சித்திரகுப்தசுவாமி கோவில், காஞ்சிபுரம்,
5. தண்டீஸ்வரர் கோவில், வேளச்சேரி,
6. ஞீலிவனேஸ்வரர் கோவில். திருப்பைஞ்ஞீலி.
7. வாஞ்சிநாதசுவாமி கோவில், வாஞ்சியம்.

ஆரோக்கிய வாழ்வு அருளும் பரிகார தலங்கள்!
1. தன்வந்திரி கோவில், ராமநாதபுரம், கோவை.
2. பவஒளஷதீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி.
3. பிரசன்னவெங்கடேச பெருமாள் கோவில், குணசீலம்.
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
5. மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான்.
6. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
7. வைத்தியநாதசுவாமி கோவில், வைத்தீஸ்வரன் கோவில்.
எதிரி பயம் போக்கும் பரிகார தலங்கள்
1. அங்காளம்மன் கோவில், மேல்மலையனூர்.
2. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய வண்ணாரப்பேட்டை,சென்னை.
3. காலபைரவர் கோவில், கல்லுக்குறிக்கி. கிருஷ்ணகிரி.
4. காளமேகப்பெருமாள் கோவில், திருமோகூர்.
5. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டித்தெரு, சென்னை.
6. தட்சிணகாசி உன்மத்த காலபைரவர் கோவில்,அதியமான்கோட்டை.
7. தில்லைகாளியம்மன் கோவில், சிதம்பரம்.
8. பிரத்யங்கராதேவி கோவில், அய்யாவாடி. கும்பகோணம்.
9. மாசாணியம்மன் கோவில், ஆணைமலை.
10. முனியப்பன் கோவில், பி.அக்ரஹாரம், தர்மபுரி.
11. ரேணுகாம்பாள் கோவில், படவேடு.
12. வெட்டுடையார் காளியம்மன் கோவில், கொல்லங்குடி
கடன் பிரச்சினை தீர்க்கும் பரிகார தலங்கள்
1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி
2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு.
3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம்.
4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை.

கல்வி வளம் பெருக அருளும் பரிகார தலங்கள்
1. கரிவரதராஜ பெருமாள் கோவில், மாதவரம், சென்னை
2. தேவநாதசுவாமி கோவில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர். பூந்தோட்டம்.
4. வரதராஜபெருமாள் கோவில், செட்டிபுண்ணியம்.
குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்
1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம்.
2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி.
3. சிவசுப்ரமண்யசுவாமி கோவில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி.
4. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், ஆயக்குடி, தென்காசி.
6. மயூரநாதசுவாமி கோவில், பெத்தவநல்லூர், ராஜபாளையம்.
7. முல்லைவனநாதசுவாமி கோவில், திருக்கருகாவூர்.
8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், தேவதானம், ராஜபாளையம்.
9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.
குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார தலங்கள்
1. அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.
2. அர்த்தநாரீஸ்வரர் கோவில், திருச்செங்கோடு.
3. அங்காளம்மன் கோவில், முத்தனம்பாளையம்.திருப்பூர்.
4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோவில், வெஞ்சமாங்கூ டலூர்.
5. சங்கரநாராய ணசுவாமி கோவில், சங்கரன் கோவில்.
6. நவநீதசுவாமி கோவில், சிக்கல்.
7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி.
8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோவில், மஞ்சக்கம்பை.
9. மாரியம்மன்,காளியம்மன் கோவில், ஊட்டி
10. லட்சுமி நரசிம்மர் கோவில், பரிக்கல்.
11. வெக்காளியம்மன் கோவில், உறையூர்
12. தலசயனப் பெருமாள் கோவில், மாமல்லபுரம்.
செல்வ வளம் அருளும் பரிகார தலங்கள்
1. அனந்தபத்ம நாப சுவாமி கோவில், அடையாறு.
2. அஷ்டலட்சுமி கோவில், பெசன்ட் நகர், சென்னை.
3. கைலாச நாதர் கோவில், தாரமங்க லம்.
4. பக்தவச்சலப்பெருமாள் கோவில், திருநின்றவூர்.
5. மாதவப்பெருமாள் கோவில், மயிலாப்பூர்.
திருமணத்தடைகள் நீக்கும் பரிகார தலங்கள்
1. உத்வாகநாதசுவாமி கோவில், திருமணஞ்சேரி.
2. கல்யாணபசுபதீஸ்வரர் கோவில், கரூர்.
3. கல்யாணவேங்கடரமணசுவாமி கோவில், தான்தோன்றிமலை.
4. கைலாசநாதர் கோவில், தாரமங்கலம்.
5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோவில், பாரிமுனை.
6. பட்டீஸ்வரர் கோவில், பேரூர். கோவை.
7.நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை.
8. வரதராஜபெருமாள் கோவில், நல்லாத்தூர்.
9. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.
தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார தலங்கள்
1. காலபைரவர் கோவில், குண்டடம்.
2. காளிகாம்பாள் கோவில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3. குறுங்காலீஸ்வரர் கோவில், கோயம்பேடு.
4. சரபேஸ்வரர் கோவில், திருபுவனம்.
5. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோவில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.
நிலம், வீடு, மனை அமைந்து சங்கடங்கள் தீர அருளும் பரிகார தலங்கள்
1. அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்.
2. தீர்த்தகிரீஸ்வரர் கோவில், தீர்த்தமலை, அரூர்.
3. பூவராகசுவாமி கோவில், ஸ்ரீமுஷ்ணம்.
4. வராகீஸ்வரர் கோவில், தாமல். காஞ்சீபுரம்.
நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார தலங்கள்
1. இருதயாலீஸ்வரர் கோவில், திருநின்றவூர்.
2. தோரணமலை முருகன் கோவில், தோரணமலை.
3. பண்ணாரிமாரியம்மன் கோவில், பண்ணாரி.
4. மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.
5. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.
6. வீழிநாதேஸ்வரர் கோவில், திருவீழிமழலை.
7. வைத்தியநாதசுவாமி கோவில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார தலங்கள்
1. தாயுமானசுவாமி கோவில், மலைக்கோட்டை, திருச்சி.
2. பாதாள பொன்னியம்மன் கோவில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3. மகாதேவர் கோவில், செங்கனூர்.
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார தலங்கள்
1. சங்கமேஸ்வரர் கோவில், பவானி.
2. மகுடேஸ்வரர் கோவில், கொடுமுடி.
3. வரமூர்த்தீஸ்வரர் கோவில், அரன்வாயல். கவரப்பேட்டை.
4. வீரராகவர் கோவில், திருவள்ளூர்.
5. ராமநாதசுவாமி கோவில், ராமேஸ்வரம்.
6. திருப்பள்ளி முக்கூடல். குருவிராமேஸ்வரம் கோவில், திருவாரூர்
7. காசி விஸ்வநாதர்
8. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
9. சொரிமுத்து அய்யனார் கோவில்
10. பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம்
- சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- சண்டேசுவர நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-6 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: பஞ்சமி காலை 8.37 மணி வரை. பிறகு சஷ்டி
நட்சத்திரம்: உத்திரம் இரவு 6.37 மணி வரை. பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்தயோகம்.
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயனருக்கு சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன், சோழவந்தான் ஸ்ரீ ஜனகைமாரியம்மன் கோவில்களில் அபிஷேகம், ஆராதனை வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம். சண்டேசுவர நாயனார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர், பழனி ஸ்ரீ பாலதண்டாயுத பாணி கோவில்களில் பவனி. சாத்தூர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் புறப்பாடு, வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீசெல்வமுத்துக் குமார சுவாமிக்கும் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உண்மை
ரிஷபம்-உழைப்பு
மிதுனம்-கடமை
கடகம்-போட்டி
சிம்மம்-அன்பு
கன்னி-ஜெயம்
துலாம்- பணிவு
விருச்சிகம்-இன்பம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-பெருமை
கும்பம்-தெளிவு
மீனம்- மாற்றம்
- ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.
- சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும்.
தேய்பிறை சஷ்டியில் முருகனுக்கு விரதம் இருந்தால் மகத்தான பல நன்மைகள் பெற முடியும். தை மாத தேய்பிறை சஷ்டியான நாளை (ஞாயிற்றுக்கிழமை) முருகனை விரதமிருந்து வழிபட உகந்த நாளாகும்.
சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாக கொண்ட காலக்கணிப்பு முறையாகும். 15 நாட்களுக்கு ஒருமுறை சஷ்டி தினம் வருகிறது. இந்த நாட்கள் பொதுவாக திதி என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றது.
அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது நாள் சஷ்டி ஆகும். அமாவாசையை அடுத்து வரும் சஷ்டியை வளர்பிறை சஷ்டி என்பார்கள். பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்று சொல்வார்கள்.
திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. தேய்பிறை சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும். தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.
முருகப்பெருமானை நினைத்து சஷ்டியில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும் என்பது நம்பிக்கை. தேய்பிறை சஷ்டி அன்று காலையில் குளித்து விட்டு சுவாமி படத்திற்கு மாலை அல்லது பூக்கள் அணிவித்து, நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி, பால், பழம் நைவேத்தியம் செய்து கந்தசஷ்டி கவசம் அல்லது கந்தகுரு கவசம் பாராயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓம் சரவண பவ என்ற மந்திரத்தை கூறலாம்.
அவல் நைவேத்தியம் படைப்பது மிகவும் நல்லது. இது எதுவும் செய்ய முடியாவிட்டால் நாவல் பழத்தை வைத்து வழிபடலாம். முருகனுக்கு நாவல் பழமானது மிகவும் விருப்பமான பழம் ஆகும். நாளை நாள் முழுவதும் மாமிசம் உண்ணக்கூடாது.
எந்தவொரு விவாதமும் செய்யக்கூடாது. நாளைய தினம் முழுவதும் மவுனவிரதம் இருந்தால் மகத்தான பலன்கள் கிடைக்கும். சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது சஷ்டியில் விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதே முருகப் பெருமானுக்குரிய சஷ்டி விரதத்தின் பெருமையை போற்றுவதற்காக சொல்லப்படும் பழமொழியாகும். திதிகளில் ஆறாவது திதியாக வரும் சஷ்டி, ஆறுமுகனுக்கு உரியதாகும்.
இந்த நாளில் என்ன குறை இருந்தாலும் அது நீங்க வேண்டும் என முருகனிடம் மனதார வேண்டிக் கொண்டால் அது நிச்சயம் நிறைவேறும்.
தீராத பிரச்சனையில் தவிப்பவர்கள், திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருபவர் ஆகியோர் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், சுலோகம் போன்றவற்றை சொல்லி தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது.
உண்மையான பக்தியுடன், மனமுருகி முருகா என்று அழைத்து, தங்களின் கோரிக்கையை சொன்னாலே முருகப் பெருமான் அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.
அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
இதற்காக தேய்பிறை சஷ்டி நாளில் அதாவது நாளை அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது சிறிய சிலையை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது சிலைக்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள்.
அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் வாழைப்பழ தீபமும் முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமானதாகும். இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம்.
இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.
இந்த திருநாளில் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி காத்திருக்கும் பெண்கள் விரதமிருந்து முருகப் பெருமானை மனமுருகி பிரார்த்தனை செய்திட மனம் மற்றும் உடல் குறைபாடுகள் நீங்கி குழந்தை வரம் கிடைக்கும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. நீண்ட நாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சஷ்டி விரதத்தை தொடர்ந்து மேற்கொள்ள அந்நோய்கள் படிப்படியாக நீங்கி விடும். இத்துடன் நீடித்த செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும். சஷ்டி நாளில் வீடுகளில் அதிகாலையில் நீராடி பூஜையறையில் முருகன் படத்திற்கு முன்பு தீப, தூபங்கள் காட்டி, பால்,பழம் நிவேதனம் வைக்கலாம். உணவை தவிர்த்து பூஜையறையில் கந்த சஷ்டி கவசம், முருகன் துதிப்பாடல்கள், சுகந்த குரு கவசம் படிக்கலாம். வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம். இந்த முறையில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதிகம்.
- திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
- இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சிவன் கோவிலும் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, உச்சிகால பூஜைகள் நிறைவடைந்ததும் நடை சாற்றப்படும். பின்னர், மாலை நடை திறக்கப்பட்டு சாயரட்சை, அர்த்தஜாம பூஜைகள் முடிவடைந்ததும் நடை அடைக்கப்படும். இது தான் ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் ஆன நடைமுறை.
ஒவ்வொரு கோவில்களிலும் கால பூஜைகள் மாறுபடலாம், ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றி தான் அனைத்து கோவில்களிலும் பக்தர்களை வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், தமிழகத்தில் ஒரு கோவில் மட்டும் திங்கட்கிழமை இரவில் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
இதன் மற்றொரு விஷேசம், வருடத்தில் ஒரு நாள் மட்டும் பகலில் கோவில் திறந்திருப்பது. அந்த கோவிலின் வரலாறு, சிறப்புகள், விஷேச பூஜைகள் குறித்து இங்கு காண்போம்.

இத்தகைய சிறப்புமிக்க கோவில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் பொது ஆவுடையார் என அழைக்கப்படுகிறார்.
எல்லா சிவன் கோவில்களிலும் கருவறையில் சிவலிங்க திருமேனி தான் மூலவராக இருப்பதை நாம் தரிசிப்போம். ஆனால், இங்கு கருவறை உண்டு, ஆனால் சிவலிங்க திருமேனி இல்லை. வெள்ளால மரமாகவே சிவபெருமான் காட்சி தருகிறார்.
கோவில் கருவறை கதவு பித்தளை தகடால் வேயப்பட்டது. கதவு திறக்கப்பட்டதும் கருவறையில் உள்ள வெள்ளால மரத்தை தரிசிக்கலாம். மேலும், மரத்தில் சிவலிங்க வடிவம் போலவே அலங்கரித்து பூஜைகள் செய்கிறார்கள். இங்கு அம்பாளுக்கு சன்னதி கிடையாது.
கார்த்திகை மாத சோம வாரத்தில் (திங்கட்கிழமை) முனிவர்களுக்கு சிவபெருமான் காட்சி அளித்தார். இதனால் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடத்தப்படும், அதுவும் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் பூஜைகள் வெகு விமரிசையாக நடப்பதுண்டு.
தமிழர் திருநாளான தைத் திருநாளன்று மட்டும் பகலில் கோவில் நடை திறக்கப்படுவதால் அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுவது வழக்கம். பின்னர், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, தீபாராதை காண்பிக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு நாள் பகலில் நடை திறக்கப்படுவதால் சுவாமியை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் திரள்வர். இவரை மனதார வேண்டிக்கொண்டு எந்த வியாபாரம் தொடங்கினாலும் லாபகரமாக இருக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
அவ்வாறு மூலவரை வேண்டிக்கொண்டு வியாபாரத்தை தொடங்கியவர்கள் நெல், கம்பு, தேங்காய், மாங்காய், ஆடு, கோழி, மாடு ஆகியவை வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். பக்தர்கள் வழங்கிய பொருட்களை எல்லாம் பொங்கல் அன்று ஏலத்துக்கு விடுவார்கள்.

இதனை ஏலம் எடுத்து சென்றால் கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம், செல்வ செழிப்புடன் வாழலாம், சகல ஐஸ்வரியங்களும் கிட்டும் என்பது பக்தர்களின் ஐதீகம். திங்கட்கிழமை இரவு மட்டுமே நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
பொங்கல் திருநாளன்று பகலிலும், ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவிலும் திறக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையாரை நாம் அனைவரும் தரிசித்து, சகல ஐஸ்வரியங்களும் பெறுவோமாக.
- தை முதல் ஆனி வரை உத்தராயணம் நீடிக்கும்.
- தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது.
'தை' மாதத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் நம்பிக்கை மற்றும் நேர்மறையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன. தை பொங்கல் என்பது சூரியனுக்கு நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை, மேலும் காணும் பொங்கல் என்பது உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் ஒரு நாள்.

பஞ்சம் தீர்க்கும் தை மாதம்
விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள். இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது. பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.
உத்தராயண புண்ணிய காலம்
உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள். நம் கண்களுக்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் பகவான் மட்டுமே.
சூரிய பகவான் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும். தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.
தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

சக்தி வேல் பெற்ற நாள்
தை பூச நாளில் தான் அன்னை பார்வதி தேவி, அசுரர்களை அழிப்பதற்காக ஆறுமுகக் கடவுளுக்கு சக்தி வேலை வழங்கிய நாள். அதனால் தான், தைபூச திருநாள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நீத்தார் கடன் நீக்கும் நாள்
தை மாதத்தில் வரும் தை அமாவாசை மற்றொரு முக்கிய நாளாக கருதப்படுகிறது. அன்று தான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டை மோற்கொள்ளும் நாள். ஆறு, குளம், கடல் என அனைத்து நீர்நிலைகளிலும் பித்ரு கடன் வழிபாடு மேற்கொள்ளப்படும்.

ரத சப்தமி விரதம்
தை மாத வளர்பிறையில் வரும் சப்தமி திதியானது ரதசப்தமியாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைக்கு தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். ரத சப்தமி நாளில் விரதம் மேற்கொள்வோருக்கு தேக ஆரோக்கியம், நோய் இல்லாமை, நோய் இல்லாமை, புத்திரப்பேறு, நிலையான செல்வம், பகைவர்களையும் வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம் மற்றும் புண்ணியம் ஆகியவை கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை
பாவங்கள் போக்கும் சபலா ஏகாதசி
தை மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்நாளில் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து மஹாவிஷ்ணுவை வழிபட்டால் நாம் முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். அன்றைய நாளில், ஏழைகளுக்கு பழங்களை தானம் செய்வதால், ஒளிமயமான வாழ்க்கை அமையும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தை கடைபிடித்து பாவங்கள் அனைத்தும் நீங்கி அரச பதவியையும், பின்னர் வைகுண்ட பதவியையும் பெற்றான் என்பது ஐதீகம்.
வளர்பிறை புத்ரதா ஏகாதசி
தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியானது, புத்ரதா ஏகாதசி என்றும் சந்தான ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற மன்னன் புத்திர பாக்கியம் இல்லாத குறையை, புத்ரதா ஏகாதசி விரதமிருந்து நல்ல மகனை பெற்றான். அதோடு தன் நாட்டு மக்களையும் இந்த புத்ரதா ஏகாதசி விரதத்தை பின்பற்றச் செய்தான்.

சாவித்ரி கவுரி விரதம்
தை மாத இரண்டாம் நாளில் பின்பற்றப்படும் விரம் சாவித்ரி கௌரி விரதமாகும். சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் இந்த விரதத்தை தருமனுக்கு எடுத்துக் கூறியதை அடுத்து தருமரும் இந்த விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தை மேற்கொள்வோர், அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும்.

பைரவர் வழிபாடு
தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய் கிழமையில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகிறது. தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம்.
- குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-5 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: சதுர்த்தி காலை 6.58 மணி வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: பூரம் மாலை 4.19 மணி வரை. பிறகு உத்திரம்.
யோகம்: சித்த, மரணயோகம்.
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
தியாகபிரம்மா ஆராதனை, குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவர் தலங்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப் பெருமாள் ஸ்திரவார திருமஞ்சன சேவை. திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் தலங்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-வரவு
மிதுனம்-அன்பு
கடகம்-பாசம்
சிம்மம்-வெற்றி
கன்னி-இன்பம்
துலாம்- தீரம்
விருச்சிகம்-பொறுப்பு
தனுசு- பெருமை
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-மாற்றம்
மீனம்- உவகை
- தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.
- களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாக பாலை சுரந்து வந்தன.
சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்டபோது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல்கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவ புற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.
தமிழர் திருநாள் திருவிழாவை முன்னிட்டு இக்கோவிலில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. கிராமப்புறங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தங்களது கால்நடைகளின் கறவை பாலைகொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று சென்றனர். மேலும் களிமண்ணால் செய்யப்பட்ட உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்தனர்.
- கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் திருவூடல் விழா முக்கியமானது.
ஆண்டுதோறும் தை மாதம் 2-ம் நாள் இந்த விழா நடக்கும். அதன்படி, நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டதும், சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அதிகாலை 6 மணிக்கு அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையார் தனி வாகனத்தில் எழுந்தருளி, நந்தியம் பெருமானுக்கு அருளாசி வழங்கினார். பின்னர், திட்டிவாசலில் சூரியனுக்கு காட்சியளித்தார்.
இதையடுத்து, அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சுந்தரமூர்த்தி நாயனார் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் 3 முறை வலம் வரும் வைபவம் நடந்தது.
பின்னர், இரவு 7.30 மணிக்கு மேல் சாமி அம்பாள் இடையே திருவூடல் உற்சவம் நடந்தது. அப்போது சுந்தரர் தூது சென்றார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். பின்னர், பராசக்தி அம்மன் கோவிலுக்கு திரும்பினார்.
அண்ணாமலையார் திருமஞ்சன கோபுரத்தெருவில் உள்ள குமரக்கோவில் சென்றார்.
ஆண்டுக்கு 2 முறை அண்ணாமலையார் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதேபோன்று வருடம் தொடக்கத்தில் இன்று அதிகாலை கோவிலில் இருந்து புறப்பட்டு அண்ணாமலையார் 14 கிலோமீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்தார். கிரிவலம் வந்த அண்ணாமலையாரை வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர். பகல் 11 மணி அளவில் கோவிலுக்கு திரும்பினார்.
தொடர்ந்து, சாமியுடன் அம்பாள் சமாதானம் அடையும் மறுவூடல் உற்சவம் கோவில் 2-ம் பிரகாரத்தில் நடக்கிறது.
- படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது.
- சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது.
* அதிகாலையில் கண் விழிக்க வேண்டும்.
* எழுந்ததும் இறை நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
* வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போட வேண்டும்.
* வீட்டின் பின்கதவை மூடிவிட்டு முன்கதவைத் திறந்து வைத்து பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும்.
* ஆனைமுகப்பெருமான் பெயரையும், அழகன் முருகன் பெயரையும், பஞ்சாச்சர மந்திரத்தையும், அஷ்டலட்சுமி பெயரையும் உச்சரித்து அன்றாடக் கடமையைத் தொடங்க வேண்டும்.
* முக்கிய வேலை பார்க்கும் பொழுதும், பணம் எண்ணும் பொழுதும் நகத்தைக் கடிக்கக்கூடாது. கத்திரிக்கோல், விளக்கமாறு போன்றவற்றை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது.
* படிக்கட்டில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ பணப்பரிவர்த்தனை செய்யக்கூடாது.
* சாப்பிடும் முன்னதாக காகத்திற்கும், சாப்பிட்ட பிறகு பைரவருக்கும் உணவளிப்பது நல்லது.
* சமைத்த உணவுகளைப் பரிமாறும் பொழுது 'கிருஷ்ணார்ப்பணம்' என்று சொல்லிப் பரிமாற வேண்டும்.






