என் மலர்
வழிபாடு
- மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாத பவுர்ணமி வருகிற 4-ந் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி 5-ந் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் நின்று கொண்டு விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வது போன்று பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்துமுடிப்பீர்கள்.
ரிஷபம்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். உறவில் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இயலாது. தொழிலில் வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்
யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு.
கன்னி
நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கிடைக்கும் நாள். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் கையிருப்பு கரையலாம்.
துலாம்
நன்மைகள் நடைபெறும் நாள். புதிய திட்டமொன்றை செயல்படுத்த முற்படுவீர்கள். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
யோகமான நாள். நினைத்தது நிறைவேறும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மேலதிகாரிகள் முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பர். உணவில் கட்டுப்பாடு தேவை.
மகரம்
செலவுகள் கூடும் நாள். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
கும்பம்
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு.
மீனம்
விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவர். வங்கிகளில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-15 (சனிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி பின்னிரவு 3.18 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : சதயம் பிற்பகல் 2.47 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம் : அமிர்த, மரணயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ ஏகாதசி, ஸ்ரீரங்கம், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்
இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. 1040-வது ராஜ ராஜ சோழன் சதய திருவிழா. பேயாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம்.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி திருமஞ்சன சேவை. திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள், திருஇந்தளூர் ஸ்ரீபரிமள ரெங்கராஜர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மார்வார் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வெற்றி
ரிஷபம்-நலம்
மிதுனம்-சுகம்
கடகம்-அமைதி
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சுபம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-தாமதம்
தனுசு- ஆக்கம்
மகரம்-பெருமை
கும்பம்-நிறைவு
மீனம்-உவகை
- மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்ய வருவார்கள். பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருப்பது சபரிமலையின் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக நவம்பர் 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
இதனால் நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். தினமும் வழக்கமான பூஜைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த நாட்களில் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்யலாம்.
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70 ஆயிரம் பேர், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேர் என தினமும் 90 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
மண்டல பூஜை காலம் மட்டுமின்றி, மகரவிளக்கு பூஜை காலத்திலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மண்டல பூஜை காலத்தில் சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (1-ந்தேதி) தொடங்குகிறது.
பக்தர்கள் தாங்கள் சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய தினத்தை தேர்வு செய்து, கேட்கக்கூடிய ஆவணங்களை பதிவிறக்கம் செய்து முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டு புக்கிங் செய்யக்கூடிய இ-மெயில் முகவரிக்கு அனுப்பப்படும்.
ஆன்லைன் முன்பதிவுக்கு இதுவரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடமிருந்து ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் மரணமடைந்தால், அவர்களது குடும்பத்திற்கு ரூ.3லட்சம் இன்சூரன்சு வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. ஆனால் இது கட்டாயமில்லை எனவும், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இந்த கட்டணதை செலுத்தலாம். அதற்கு தகுந்தாற்போல் ஆன்லைன் முன்பதிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
- அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார்.
- துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
செங்கல்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது துளசீஸ்வரர் கோவில். பொதுவாக சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். ஆனால் இக்கோவிலின் தனிச் சிறப்பாக சிவபெருமானுக்கு துளசி இலைகளை கொண்டு அர்ச்சனை செய்யப்படுகிறது.
கயிலாயத்தில் சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றது. இதைக் காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் குவிந்தனர். இதனால் பூமியின் வடக்கு பகுதி தாழ்ந்து, தென் பகுதி உயர்ந்தது. இதனை சரிசெய்ய அகத்திய முனிவரை தென்திசை நோக்கி செல்ல பணித்தார், சிவபெருமான். அதன்படி, கயிலாயத்தில் இருந்து தென்பகுதிக்கு வந்த அகத்தியர், வரும் வழிகளில் எல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அப்படி அவர் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று தான் இக்கோவிலில் உள்ள சிவலிங்கம்.
அகத்தியர் இப்பகுதிக்கு வந்தபோது, சிவலிங்க பூஜை செய்ய நினைத்தார். ஆனால் இப்பகுதி முழுவதும் துளசியால் சூழ்ந்து காணப்பட்டது. அப்போது சிவன் அசரீரியாக, ''நான் இங்குதான் துளசி செடிகள் சூழ மறைந்திருக்கிறேன்'' என்றார். இதையடுத்து சிவனின் குரல் கேட்ட இடத்திற்கு சென்றபோது அங்கு ஒரு சிவலிங்கம் தென்பட்டது. பிறகு, அந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். சிவ பூஜை செய்ய இப்பகுதியில் வேறு எந்த மலரும் கிடைக்காததால், அகத்தியர் துளசி இலைகளை கொண்டே அர்ச்சனை செய்தார். சிவபெருமானும் அகத்தியரின் பூஜையை ஏற்றுக்கொண்டு, சிவசக்தி வடிவமான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
சுமார் 900 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான், லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அமர்ந்து, சற்று திரும்பி ஈசான்ய மூலையை பார்த்து காணப்படுகிறார். துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் இவர், 'துளசீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இங்கு அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம், 'வில்வநாயகி' என்பதாகும். இவர் ஆனந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள துளசீஸ்வரரை துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கணவன் - மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், திங்கட்கிழமை அன்று இத்தல ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபடலாம்.
செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருக்கச்சூர் எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள கொளத்தூரில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பணநெருக்கடி அகலும் நாள். குடும்பத்தினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் கிடைக்கும்.
ரிஷபம்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலாது. மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம்
விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது.
கடகம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம். உறவினர் பகை உருவாகும்.
சிம்மம்
உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிக்கும் நாள். உற்ற நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். புதிய தொழில் தொடங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.
கன்னி
அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்ளும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
துலாம்
புதிய பாதை புலப்படும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
விருச்சிகம்
தொட்ட காரியத்தில் வெற்றி கிட்டும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
தனுசு
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சி கைகூடும். பழைய கடன்களை அடைத்து மகிழ்வீர்கள்.
மகரம்
அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் நன்மை ஏற்படும் நாள். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.
கும்பம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.
மீனம்
சந்தர்ப்பங்கள் சாதமாக அமையும் நாள். சகோதரர்கள் ஆதரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இலாகா மாற்றம் உண்டு.
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-14 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை பிறகு ஏகாதசி.
நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 3.03 மணி வரை. பிறகு சதயம்.
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுருந்தளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. பூதத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.
பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பாள் கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-யோகம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-நட்பு
கடகம்-ஆதரவு
சிம்மம்-ஆக்கம்
கன்னி-நிம்மதி
துலாம்- லாபம்
விருச்சிகம்-இன்பம்
தனுசு- நற்செயல்
மகரம்-உற்சாகம்
கும்பம்-திறமை
மீனம்-சாந்தம்
- திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும்
- கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரிர் சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப் பெருமானின் இரண்டாம் படைவீடாக கருதப்படுகிறது. திருச்செந்தூர் வந்து வழிபட்டு சென்றாலே வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் நடக்கும், முருகனிடம் முன் வைத்த வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்திலும் பல அதிசயங்களை பக்தர்களின் வாழ்வில் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் நடத்தி வருவதால் இங்கு வருடத்தின் அனைத்து நாட்களும் பக்தர்கள் கூட்டம் வந்து கொண்டே இருக்கிறது.
திருச்செந்தூரில் உள்ள மிக முக்கியமான இடம், கோவிலுக்கு எதிரில் உள்ள நாழிக்கிணறு. இங்கு நீராடினாலே நம்முடைய பாவங்கள், துன்பங்கள் அனைத்தும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. திருச்செந்தூர் வரும் பக்தர்கள் முதலில் கோவிலுக்கு தெற்கு புறம் உள்ள நாழிக்கிணற்றில் நீராடி விட்டு, பிறகு கடலில் சென்று நீராடி விட்டு, முருகப் பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். ஆரம்பத்தில் கோவிலை சுற்றி 24 தீர்த்தங்கள் இருந்ததாகவும், பிறகு மணலால் மற்ற தீர்த்தங்கள் மூடப்பட்டு விட்டதாகவும், தற்போது நாழிக்கிணறு மட்டுமே இங்கு உள்ளதாகவும் தல புராணம் சொல்கிறது.
இந்த நாழிக்கிணற்றிற்கு, கந்த தீர்த்தம் என்ற பெயரும் உண்டு. அதாவது முருகப் பெருமான் தன்னுடைய திருக்கை வேலால் உருவாக்கிய தீர்த்தம் என்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரு சதுரடி பரப்பும், 7 அடி ஆழமும் கொண்ட இந்த தீர்த்தம் பெரிய கிணற்றுக்குள் ஒரு சிறிய கிணறு இருப்பது போன்ற அமைப்பில் இருக்கும்.
கடலுக்கு மிக அருகிலேயே இருந்தும் இந்த தீர்த்தத்தின் தண்ணீர் உப்புக்கரிப்பது கிடையாது. மிகவும் சுவை தன்மை கொண்டதாகவும், எந்த காலத்திலும் வற்றாமலும் இருக்கும் இந்த தீர்த்தம் மிகப் பெரிய அதிசயமாக கருதப்படுகிறது. இந்த கிணற்றில் நீராடுபவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் திருச்செந்தூரில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்கீழ் நாழிக்கிணறு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டில் அக்கறை காட்டும் நாள். உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
திறமைகள் பளிச்சிடும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.
மிதுனம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் துணிந்து செய்ய இயலாது. புதிய நட்பால் பொருள் விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. பிரச்சனைகளை சமாளிக்க நண்பர்கள் துணைபுரிவர். உத்தியோகத்தில் இடமாற்ற சிந்தனைகள் உருவாகும்.
சிம்மம்
புதிய பாதை புலப்படும் நாள். தொழிலில் லாபம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கன்னி
யோகமான நாள். சொத்து பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். மாற்றுக் கருத்துடையோர் மனம்மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும்.
துலாம்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை தருவர்.
விருச்சிகம்
நல்லது நடக்கும் நாள். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவல்களை தருவர். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு
தடைகள் அகலும் நாள். வருங்காலத்தைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
மீனம்
ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு ஐப்பசி-13 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : நவமி மறுநாள் விடியற்காலை 5.17 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 2.56 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம், ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம்
சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவனந்தபுரம், திருவட்டாறு கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் ஆராட்டு விழா. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சிக்கல் ஸ்ரீசிங்கார வேலவர் விடையாற்று உற்சவம். பொய்கையாழ்வார் திருநட்சத்திர வைபவம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உடையவருடன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆர்வம்
ரிஷபம்-உதவி
மிதுனம்-பயணம்
கடகம்-சாந்தம்
சிம்மம்-வெற்றி
கன்னி-அன்பு
துலாம்- புகழ்
விருச்சிகம்-நன்மை
தனுசு- பரிவு
மகரம்-நட்பு
கும்பம்-உவகை
மீனம்-வாழ்வு
- பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது.
- பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிகவும் பழமைவாய்ந்த மிளகு பிள்ளையார் கோவில். பருவமழை பொய்க்கும் பொழுது, இங்குள்ள விநாயகருக்கு மிளகு அரைத்து, அபிஷேகம் செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு
முன்னொரு காலத்தில், கேரளாவை ஆண்ட மன்னனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவு சிகிச்சை அளித்தும் பலனில்லை. ஒரு நாள் மன்னன் கனவில், ''முன்ஜென்ம பயனால் தான் இந்த வயிற்று வலி உண்டாகி உள்ளது. இதற்கு பரிகாரமாக, உன் உருவ அமைப்பில் எள்ளு தானியத்தால் ஒரு பொம்மை செய்து, அதை அந்தணர் ஒருவருக்கு தானம் செய்தால் உன்னுடைய முன்ஜென்ம பலன் அவருக்குச் சென்றுவிடும்'' என்று தெய்வீக குரல் கேட்டது.
மன்னனும் அதன்படியே பொம்மையைச் செய்து, அதை தானம் அளிக்கத் தகுந்த அந்தணரைத் தேடினான். ஆனால் அதை தானமாக பெற்றால் மன்னனுடைய முன் வினைப் பயனும், பாவமும் தங்களை வந்து சேர்ந்துவிடும் எனப் பயந்து யாரும் தானம் பெற முன்வரவில்லை. இதனால் மன்னன், தானம் பெறும் அந்தணருக்கு பொன்னும், பொருளும் பரிசாகத் தருவதாக அறிவித்தான். இதை அறிந்த கர்நாடகாவை சேர்ந்த பிரம்மசாரி அந்தண இளைஞன் ஒருவன், மன்னனிடம் இருந்து அந்த பொம்மையை பெற்றுக்கொண்டான். இதனால் மன்னனை பிடித்திருந்த முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கியது. மன்னனும் தான் அறிவித்தபடி பொன், பரிசுகளை கொடுத்தான்.
அந்த பொம்மை பிரம்மசாரியின் கைக்கு வந்தவுடன் உயிர்பெற்றது. அந்த பொம்மை, பிரம்மசாரி செய்திருந்த பூஜையின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி கொடுத்துவிட்டால் வியாதி நெருங்காது என்றும் சொன்னது. இதைக்கேட்ட அந்த பிரம்மசாரி, பூஜை பலனில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டான்.

கோவில் தோற்றம்
ஆனால், கொடுத்த பின்புதான் அவனது மனம் வேதனை அடைந்தது. ''வியாதி ஏற்பட்டு அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி தர்மத்துக்கு மாறாக பூஜையின் பலனை தானம் செய்து விட்டோமே'' என்று கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக தனக்கு கிடைத்த மதிப்புமிக்க பொருட்களை பொதுநலன் கருதி செலவழிப்பது என்று முடிவெடுத்தான். ஆனால், என்ன செய்வது என்ற குழப்பத்துடன், பொதிகை மலையில் வசித்து வரும் தன் குருவான அகத்திய முனிவரிடம் சென்றான்.
அகத்தியர், ''தானத்தில் சிறந்தது தண்ணீர் தானம் தான். மலையில் இருந்து நீ திரும்பி செல்லும்போது, வழியில் ஒரு பசுவை காண்பாய். அது போகும் வழியில் ஒரு கால்வாய் வெட்டு. பசு சாணம் போடும் இடத்தில் மதகு ஏற்படுத்து. அது கோமியம் பெய்யும் இடங்களில் மறுகால் ஏற்படுத்து. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே கால்வாய் பணியை முடித்து, மீதி தண்ணீர் அங்கே சேரும்படியாக ஒரு குளம் தோண்டு'' என்றார்.
அதன்படி, அந்த பிரம்மசாரி இளைஞன் பசுவை கண்ட இடம்தான் சேரன்மாதேவி. அகத்திய முனிவரே அந்த பசுவாக மாறி வந்து நின்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பசு சென்ற பாதையில் மதகு, ஏரிகளை அமைத்த இளைஞன், கடைசியாக பசு மறைந்த பிராஞ்சேரி என்ற ஊரில் மிகப்பெரிய ஏரியை தோண்டினான். இப்போதும் மழை காலங்களில் நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரியை பார்த்தால், கடல் போல் காட்சியளிக்கும். இத்தகைய சேவையை செய்த அந்த பிரம்மசாரி இளைஞனின் பெயர் யாருக்கும் தெரியவில்லை. எனவே, அந்த கால்வாய் அவனது மொழியின் பெயரில் 'கன்னடியன் கால்வாய்' என்று அழைக்கப்படுகிறது.
ஒரு சமயம் ஆண்டு முழுவதும் மழை பெய்யாமல் கால்வாய் வறண்டு காணப்பட்டது. இதனால் மனம் வருந்திய பிரம்மசாரி இளைஞன், உடனே ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்தான். மேலும், அந்த அபிஷேக நீர் கால்வாயில் விழும்படி செய்தான். உடனே, ஆச்சரியப்படும் விதமாக மழை பெய்தது. இதையடுத்து மழை பெய்யாத காலங்களில் விநாயகருக்கு மிளகு அரைத்து அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இன்றும் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மழையில்லா காலங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
அமைவிடம்
திருநெல்வேலியில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ள சேரன்மாதேவியில் அமைந்துள்ளது மிளகு பிள்ளையார் கோவில்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள்.
ரிஷபம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
விரயங்கள் ஏற்படும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கடகம்
வளர்ச்சி கூடும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். மனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
சிம்மம்
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்று சிந்திப்பீர்கள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
கன்னி
தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். கண்ணியமிக்கவர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர்.
துலாம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். உறவினர்கள் ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
விருச்சிகம்
அதிரடியான முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நினைத்தது நிறைவேறும். உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும்.
தனுசு
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். நண்பர்களுக்காக செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.
மகரம்
மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்து முடிக்கும் நாள். வீடு, நிலம் சம்பந்தமான முடிவுகள் எடுக்க முக்கியப் புள்ளிகளை சந்திப்பீர்கள்.
கும்பம்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.






