என் மலர்tooltip icon

    வழிபாடு

    • 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
    • 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.

    இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர். 

    • நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றலாம்.
    • கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

    மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மன சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம்.

    1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

    2. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.


    3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

    4. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

    5. ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி திருமண தடை விலகி நன்மை பெறலாம்.


    6. ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    7. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    8. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    9. கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    10. ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

    11. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

    12. பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

    13. மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

    14. கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.


    15. வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடைபெறும்.

    16. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

    17. இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.

    18. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

    19. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

    20. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

    21. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

    22. புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

    23. வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

    24. பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    25. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

    26. தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

    27. எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழைத் தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.

    • 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது.
    • 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    26-ந்தேதி (புதன்கிழமை) மகா சிவராத்திரி, காலையில் கோபால விநாயகர் பூஜை, இரவு கொடியேற்றம், காப்பு கட்டுதல், சக்தி கரக ஊர்வலம், 27-ந்தேதி காலை மயானக் கொள்ளை, இரவு அம்மன் ஆண்பூத வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு பெண் பூத வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.

    மார்ச்-1-ந்தேதி (சனிக்கிழமை) காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சிம்ம வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறும். 2-ந்தேதி மாலை 4 மணிக்கு மேல் தீமிதி திருவிழாவும், இரவு அம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 3-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.

    4-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி (தேரோட்டம்) வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலையில் அம்மன் யானை வாகனத்தில் கோவிலை வரும் நிகழ்ச்சியும், இரவு குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவும் நடக்கிறது. 6-ந்தேதி காலையில் தங்க நிற மரப்பல்லக்கிலும் இரவு சத்தாபரணம் என்னும் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 7-ந்தேதி காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி மண்டகப்படியும், இரவு தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது. 8-ந்தேதி முதல் 10-ந் தேதி வரை காலையில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. 10-ந்தேதி மாலையில் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டுடன் வீதி உலாவும், இரவு கும்பப் படையலிட்டு காப்பு களைதலுடன் மாசிப் பெருவிழா முடிவடைகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் நாதஸ்வர கச்சேரி, இன்னிசை, கலைநிகழ்ச்சிகள், நாடகம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள், 7 வம்சா வழியைச் சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-1 (வியாழக்கிழமை)

    பிறை: மேய்பிறை

    திதி: பிரதமை இரவு 9.01 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: மகம் இரவு 9.47 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலைப்பன் புஷ்பாங்கி சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம். திருக்கோஷ்டி யூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-திடம்

    ரிஷபம்-கவனம்

    மிதுனம்-நட்பு

    கடகம்-புகழ்

    சிம்மம்-அமைதி

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-வாழ்வு

    தனுசு- மேன்மை

    மகரம்-முயற்சி

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-வெற்றி

    • அன்னை பகவதி வேங்கிடத்தம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது.
    • மூலவராக வெங்கடாஜலபதி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    கேரள மாநிலம் குருவாயூர் அருகே உள்ள திருவேங்கிடம் என்ற இடத்தில், திருவேங்கிடம் வெங்கடாஜலபதி திருக்கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில மக்கள், இந்த ஆலயத்தை 'கேரள திருப்பதி' என்று கொண்டாடுகிறார்கள்.

    பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த வழிபாட்டு தலத்தில், மூலவராக வெங்கடாஜலபதி அருள்பாலிக்கிறார். இவர் ஆந்திர மாநிலம் திருமலை - திருப்பதியில் வழிபடப்படும் வெங்கடாஜலபதியின் அம்சம் என்கிறார்கள்.


    தல வரலாறு

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர், திருமலை - திருப்பதி திருக்கோவிலின் தீவிர பக்தரான ஒரு முனிவர், 'பூலோக வைகுண்டம்' என்று அழைக்கப்படும் குருவாயூரில், கிருஷ்ணருக்கும், பார்த்தசாரதிக்கும் தனித்தனி கோவில்கள் இருப்பதைக் கண்டார்.

    அதோடு குருவாயூர் பகுதி மக்களுக்கு குருவாயூரில் இருந்து திருமலை - திருப்பதி சென்று வருவது மிகவும் கடினமான பயணமாக இருந்ததையும் உணர்ந்தார். எனவே, திருமலை -திருப்பதி தலத்திற்கு ஈடாக குருவாயூரில் ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்று விரும்பினார். அதற்கான வேண்டுகோளை, பெருமாளிடமே வைத்தார்.

    பின்னர் அந்த முனிவர் குருவாயூர் அருகே தற்போது இருக்கும் கோவிலுக்கான இடத்தை தேர்ந்தெடுத்தார். அதன்பின், திருப்பதியில் இருந்து ஒரு கருங்கல் சிலையைக் கொண்டு வந்து, இந்த தலத்தில் நிறுவி பிரமாண்ட கோவிலை உருவாக்கினார்.

    இக்கோவில் குருவாயூரில் உள்ள திருவேங்கடம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. பெரும்பாலான கேரள கிராமங்கள் உள்ளது போல, இக்கோவிலின் பெயரும், இந்த கிராமத்தின் பெயரும் ஒன்றாகவே உள்ளது.

    இக்கோவில் இப்பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருந்தது. எனவே இக்கோவிலை இங்குள்ள மக்கள், 'கேரள திருப்பதி' என்று போற்றி வழிபட்டனர்.

    முனிவரால் அர்ப்பணிப்பு உணர்வோடு எழுப்பப்பட்டு, அப்பகுதி மக்களால் போற்றப்பட்ட இக்கோவில், அன்னிய படையெடுப்புகளால் சேதமடைந்தது. மூலவர் சிலையும் சிதைக்கப்பட்டது.

    இதன் காரணமாக பல ஆண்டுகாலம் இக்கோவில் வழிபாடின்றி கிடந்தது. 1974-ம் ஆண்டிற்கு பின்பு சிலரால் பிரசன்னம் பார்க்கப்பட்டதில், இந்த கோவில் மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதி என்பதும், இதை ஒரு முனிவர் கட்டியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கோவில் மீண்டும் கட்டப்பட்டு, 1977-ம் ஆண்டு திருப்பதியில் இருந்து மூலவர் ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கான ஒரு புதிய திருவுருவக் கற்சிலை கொண்டு வரப்பட்டு, உரிய வழிபாடுகளுடன் முறைப்பட நிறுவப்பட்டது.

    இக்கோவிலில் கேரள வழிபாட்டு முறையே பின்பற்றப்படுகிறது. குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் தலைமை அர்ச்சகரே, இந்த கோவிலின் அர்ச்சகராகவும் உள்ளார்.


    ஆலய அமைப்பு

    இவ்வாலயத்திற்கு கிழக்கு மற்றும் மேற்கு வாசல்கள் உள்ளன. ஆலயம் செல்வதற்கு மேற்கு வாசல்தான் பிரதானமாக இருக்கிறது. இதன் அருகில் ராமானுஜர் சன்னிதி உள்ளது. இவரது சன்னிதி, மூலவர் வெங்கடாஜலபதியை வழிபடும் வகையில் இருக்கிறது.

    அதையொட்டி அலுவலக கட்டிடம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நன்கொடையாக அளித்த திருமண மண்டபம் அமைந்துள்ளன. அதன் எதிரில் சிறிய அளவிலான 'தாழந்தே காவு பகவதி' ஆலயம் இருக்கிறது.

    ஆலயத்தின் கருவறையில் மூலவராக வெங்கடாஜலபதி அருள் பாலிக்கிறார். இவர் திருமலை - திருப்பதி பெருமாளை நினைவூட்டும் வகையிலும், அதேநேரம் எளிய வடிவத்திலும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    இக்கோவிலில் அன்னை பகவதி வேங்கிடத்தம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. இது ஆலயத்தின் தெற்கிழக்கில் மேற்கு நோக்கிய சன்னிதியாக அமைந்துள்ளது. இந்த பகவதியை பரதேவதையாகவும், சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தங்கள் குடும்பத்தின் அன்பான அன்னையாகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    இந்த தேவிக்கு முக்கியமான வழிபாடு 'பூ மூடல்' மற்றும் ஆலப்புழா ஆலயத்தைப் போல 'முட்டறுக்கல்' ஆகும்.

    பூ மூடல் வழிபாடுக்கு பல மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்ய வேண்டும் என்பதே, இந்த அன்னையின் மகிமையை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தவிர கணபதி, ஐயப்பன், நாகராஜா, பிரம்மராட்சசு போன்ற துணை சன்னிதிகளும் அமைந்துள்ளன.


    இக்கோவிலில் ஆண்டுதோறும் இரண்டு முக்கியமான திருவிழாக்கள் நடைபெறுகின்றன. ஒன்று 'மகரச் செவ்வாய்' என்று அழைக்கப்படும் திருவேங்கிடத்தம்மா தேவியின் திருவிழா. இது கேரளாவில் மகர மாதம் என்று அழைக்கப்படும் தை மாதத்தின் முதல் செவ்வாய் அன்று கொண்டாடப்படுகிறது.

    இவ்விழாவிற்கு முன்பாக ஆலய வளாகத்தில் இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை 41 நாட்கள் வெள்ளரி பூஜை நடைபெறும். இரண்டாவதாக பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

    இதன் 10-ம் நாளில், 'பர புறப்பாடு' என்று அழைக்கப்படும், தாயார் வீதி உலா முக்கியமானது. அப்போது கிராமம் முழுவதும் சுற்றி வந்து அம்மன் அருள்புரிவார். பிரமோற்சவத்தில் அனைத்து நாட்களிலும் ஆன்மிக சொற்பொழிவுகள், அன்னதானம் நடைபெறும்.

    கல்வி, வேலைவாய்ப்பு, திருமணப்பேறு, குழந்தைப்பேறு சிறப்பாக அமைய இவ்வாலய பெருமாளும், தாயாரும் அருள்புகிறார்கள். இவ்வாலயம் தினமும் காலை 4.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

    அமைவிடம்

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இருந்து கிழக்கே சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருவேங்கிடம் வெங்கடாஜலபதி கோவில். குருவாயூர் ரெயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் ரயில்வே மேடையில் இருந்தே இக்கோவிலை எளிதாகக் காண முடியும்.

    • நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது.
    • துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.

    முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். நம் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற விநாயகர் வழிபாடு இன்றியமையாதது. அந்த வகையில் 16 செல்வங்களையும் தன் வசமாக்க விநாயகருக்கு உண்டான மூல மந்திரங்களை இப்பதிவில் காண்போம்.

    கணபதியை மட்டும் வழிபடுபவர்கள் 'கணபதி உபாசகர்கள்' என அழைக்கப்படுகிறார்கள். கர்ண வழிபாடு என்று இதைக் கூறுவர். கணபதி உபாசகர்கள் கருப்பு, நீலம் போன்ற வண்ண ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். சிவப்பு, பொன் வண்ண உடைகள் மிகவும் ஏற்றவை. துளசியை இவர்கள் கிள்ளக் கூடாது. துளசியை விநாயகருக்கு அணிவிக்கக்கூடாது.


    கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் ஜெபிப்பது மிக நன்று என கணேச உத்தரதாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

    விநாயகரை தேய்பிறை சதுர்த்தி தோறும் வழிபடுவது சங்கடஹர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

    மாசி மாதம் வரும் சதுர்த்தி தொடங்கி, ஓராண்டு காலம் சங்கடஹர சதுர்த்தியை மாதந்தோறும் பின்பற்றிவர வேண்டும்.

    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா'. இருபத்தெட்டு அட்சரங்களை உடைய இம்மந்திரம் பலவிதமான சக்திகளையும், சித்திகளையும் அளிக்கவல்லது.

    செல்வம், பூமி, ஆகர்ஷணம், வசியம், குண்டலி வின்யாசம் முதலிய அனேக சித்திகள் இம்மந்திர ஜெபத்தால் கைகூடும். அருகம்புல், தாமரை, வில்வதளம், செவ்வரளி போன்ற நறுமணம் உடைய புஷ்பங்களால் விநாயகரை பூஜை செய்தால் செல்வச் செழிப்பும் ஞானவளமும் கைகூடும்.

    செல்வத்திறவுகோலாக இம்மந்திர உபாசனை நிகழ்ந்து வந்துள்ளது. வன்னிமர விநாயகருக்கு அரிசி போடுவதன் மூலம் , நீங்கள் ஏழரைச் சனி, அஷ்டமச் சனியிலிருந்து தப்பிக்கலாம்.

    உச்சிஷ்ட கணபதி மந்திரம்

    'ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய ஹஸ்தி முகாய,லம்போதராய உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா'. வேப்பங்குச்சி, ஊமத்தம்பூ,நெய் இவைகளால் இவருக்கு ஹோமம் செய்ய வேண்டும்.

    கடன் தீர கணபதி மந்திரம்

    'ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா'. கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்யும்போது, எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.


    மஹாஹஸ்தி விநாயகர், பெரிய தும்பிக்கையை கொண்டவர். இவர் பொருட்செல்வத்தை அள்ளி வீசுபவராக இருக்கிறார். அப்படி நமக்கு இவரது அருள் கிடைக்க பின்வரும் மந்திரத்தை லட்ச உருவேற்றினால் போதும். நமது பாவங்களும் தீரும். செல்வமும் ஞானமும் நமக்குக் கிடைத்து விடும்.

    'ஓம் ஆதூன இந்த்ர க்ஷீமந்தம் சித்ரம் க்ராபம் ஸ்ங்க்ருபாய மஹாஹஸ்தி தக்ஷ்ணேன வாஞ்சா கல்பலதா கணபதி'. நமது சகல விருப்பங்களையும் அள்ளி வழங்குவதால் இவருக்கு வாஞ்சை கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.

    பின்வரும் மந்திரம் 100 கோடி சூரியனுக்குச் சமமானதாகும். தகுந்த குரு உபதேசம் மூலமாக இந்த மந்திரத்தை தினமும் ஜெபித்துவரவும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

    'ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் ஐம் கஏஈ லஹ்ரீம் தத்ஸவிதர் வரேண்யம்கணபதயே க்லீம் ஹஸகஸல ஹ்ரீம் பர்க்கோ தேவஸ்யதீமஹீ வரவரத சவு ஸஹல ஹ்ரீம் த்யோயோநப்ர சோதயாத் ஸர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா.'

    • இன்று பவுர்ணமி.
    • சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் தெப்ப உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு தை-30 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பவுர்ணமி இரவு 8.12 மணி வரை பிறகு பிரதமை

    நட்சத்திரம்: ஆயில்யம் இரவு 8.24 மணி வரை பிறகு மகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4மணி முதல் 5 மணி வரை

    இன்று பவுர்ணமி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம். காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி, சென்னை ஸ்ரீ சிங்கார வேலவர், சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில்களில் தெப்ப உற்சவம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருது நகர் ஸ்ரீ சிவபெருமான் வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலை அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராம பிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சிறப்பு

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-நற்செயல்

    கடகம்-ஜெயம்

    சிம்மம்-அன்பு

    கன்னி-ஆசை

    துலாம்- குழப்பம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- நிறைவு

    மகரம்-தெளிவு

    கும்பம்-பயணம்

    மீனம்-உண்மை

    • நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • நெற்கதிர்கள் அரிசியாக்கப்பட்டு வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படும்.

    வேதாரண்யம்:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    அங்கிருந்து வரும் நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு விளைந்த அறுவடை செய்து முதல் நெல்லை தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    முன்னதாக களஞ்சியம் விநாயகர் கோவிலின் முன்வைத்து சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் முன்பு வைக்கப்பட்டு, நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.

    பின்னர், அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு இன்று வேதாரண்யேஸ்வரருக்கு நடக்கும் 2-ம் கால பூஜையில் நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    நெல் கோட்டை ஊர்வலத்தின் போது வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது.
    • ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது.

    திருவாரூர்:

    திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலின் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை மிக்கது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர தேரோட்டம் வருகிற ஏப்ரல் மாதம் 7-ந்தேதி (ஆயில்ய நட்சத்திரத்தன்று) நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக கோவிலில் உள்ள ருண விமோசனர் சன்னதியின் அருகில் உள்ள கல் தூணிற்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, சிவவாத்தியங்கள் முழங்க திருஞானசம்பந்தர் புறப்பாடு நடைபெற்று, தேரடியில் உள்ள ஆழித்தேர் அருகில் வைக்கப்பட்ட 5 பனஞ் சப்பைகளுக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர் மாலை மற்றும் மாவிலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், பூஜை செய்யப்பட்ட பனஞ் சப்பைகள் விநாயகர், முருகன், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அதிக உயரமுள்ள பனஞ்சப்பை ஆழித்தேர் எனப்படும் தியாகராஜர் தேரில் வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை தெப்பத்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா தொடங்கிய நாளில் இருந்தே தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் சித்திரை வீதிகளில் பஞ்சமூர்த்திகளுடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    கடந்த 10-ந்தேதி தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. 11-ம் நாளான நேற்று தங்கப்பல்லக்கில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.


    அதனைத்தொடர்ந்து கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, காமராஜர் சாலை வழியாக சிந்தாமணியில் உள்ள கதிர் அறுப்பு மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு கதிர் அறுப்பு திருவிழா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர்.


    அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவும் தெப்பத்தில் சுவாமி-அம்மாள் வலம் வந்து அருள்பாலிக்க உள்ளனர். தெப்பத்திரு விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை தெப்பத்திரு விழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் தெப்பக்குளத்தில் எழுந்தருளியதால் மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த வடமாநில பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். 

    • ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர்.
    • அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.

    திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

    முருகப்பெருமானின் முதல்படை வீடாக திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது. குடவரைக்கோயிலான இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டனர். காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து மூலவரான முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பழனி

    அறுபடைவீடுகளில் 3-வது படைவீடான பழனி மலை முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு 10 நாட்களும் தினமும் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும் பாதையாத்திரையாக வந்தும் முருகப்பெருமான தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

    திருச்செந்தூர்

    தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திரளான பக்தர்கள் வேல் குத்தி காவடி எடுத்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனைக்கு பின் சுவாமி அலை வாயு கந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    சென்னையில் உள்ள வடபழனி முருகன்கோவில், கந்தகோட்டம், குன்றத்தூர், வளசரவாக்கம், திருவல்லிக்கேணி முருகன் கோவில்களில் இன்றுகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.

    வடபழனி முருகன் கோவிலில் இன்று காலை சிறப்பு வழிபாடு நடை பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, பால்குடம் எடுத்து வந்தனர். இதனால் வடபழனி முருகன்கோவில் வீதிகளில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    இதேபோல் கந்த கோட்டம், குன்றத்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

    வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இறைவன் ஒளி வடிவானவர் என்பதனை உலகிற்கு உணர்த்த மாதந்தோறும், பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.

    இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது.

    தைப்பூசத்தையொட்டி இன்று காலை ஏழு வண்ண திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஞானசபையில் நிலை கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, மற்றும் கலப்பு வண்ண திரை என்று 7 வண்ண திரைகளை ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.


    பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதலே வடலூரில் தங்கி ஜோதி தரிசனத்தில் பங்கேற்று வருகின்றனர். சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என ஆறு காலங்களில் ஏழு திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

    ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானவர்கள் வடலூரில் கூடுவார்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் ஜோதி தரிசனத்தை காண மக்கள் வந்து செல்லும் வகையில் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ×