என் மலர்tooltip icon

    வழிபாடு

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை விழா நாளை நடக்கிறது
    X

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசை விழா நாளை நடக்கிறது

    • மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
    • வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி சித்திரை மாதத்திற்கான அமாவாசை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விழாவை முன்னிட்டு அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகளும், இரவு சித்திரை கரக (பெரிய பூங்கரகம்) ஊர்வலமும் நடைபெற உள்ளது.

    ஆகையால் வழக்கம்போல் அமாவாசை அன்று இரவு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நாளை நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×