என் மலர்
வழிபாடு
- நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.
- நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும்.
கோவில் தோற்றம்
நம் நாட்டின் மீது பல்வேறு படையெடுப்புகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த படையெடுப்புகளின் போதெல்லாம், கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், நம் முன்னோர்கள் பொன் - பொருள்களை கோவில்களில் பாதுகாப்பாக வைத்திருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

அப்படி ஒரு கோவிலை சிலர் சிதைக்க முற்பட்டபோது, மக்களின் பெரு முயற்சியால் அந்த ஆலயம் காப்பாற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில், 'முத்துகிருஷ்ணாபுரி' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் இவ்வூர் வணிக இடமாகக் கருதப்பட்டது.
கோவில்கள் மிக அதிகம். அதில் பல கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், பரங்கிப்பேட்டையில் உள்ள விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் கோவில்.
இவ்வாலயம் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இவ்வாலயம் திப்புசுல்தான் காலத்தில் இவ்வூரில் உள்ள பாப்பான்கோடி தெருவில் சிறு ஆலயமாக அமையப்பெற்று இருந்தது. சில காரணங்களால் அந்த ஆலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த, மன்னன் உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவுப்படி காவலர்கள், அந்த ஆலயத்தை அப்புறப்படுத்த முயன்றனர்.
அப்போது அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து "எங்கள் உயிரே போனாலும் இவ்வாலயத்தை நாங்கள் அப்புறப்படுத்த விடமாட்டோம்" என்று போராடினர். இருப்பினும் ஆலயத்தை அகற்றுவதற்கான நெருக்கடி அதிகரித்ததால், ஆலயம் அதே இடத்தில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதிய ஊர் மக்கள், அதே ஊரில் உள்ள வண்ணாரபாளையம் என்ற இடத்தை கோவில் அமைக்க தேர்வு செய்தனர்.

அங்கு முதலில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியின் திருவுருவங்களை வைத்து வழிபடத் தொடங்கினர். பின்னாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் கற்கோவிலாக கட்டப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.
கோவிலின் முன்னால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சுதைச் சிற்பங்களாக காட்சிதர இருபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க வணங்கிவிட்டு உள்ளே வந்தால், கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தின் இடது பக்கம் விநாயகர், வலது பக்கம் சுப்பிரமணியர் அருள்கின்றனர்.
கோவிலில் தெற்கு முகம் நோக்கி நான்கு திருக்கரங்களோடு விசாலாட்சி அம்மன் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தின் உள்ளே சூரியன் -சந்திரன் இருவரும் காசி விஸ்வநாதரை வணங்கியபடி எழுந்தருள, கருவறையில் காசி விஸ்வநாதர் கிழக்கு திசை நோக்கி வட்ட பீடத்தில் பாண லிங்கமாய் அற்புதமாய் காட்சி தருகிறார்.
பீடத்தின் அடியில் மூல எந்திரம் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். தவிர பிரகாரத்தில் சித்தி கணபதி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், ஆறு முகங்களுடன் அருள்கிறார். மேலும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராஜர், பஞ்சமூர்த்தி என அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் 21 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும். குழந்தை வரம் கேட்பவர்கள், இறைவனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் கிடைத்ததும் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் அரளிப்பூ மாலை சூட்டி இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
கடலூர் - சிதம்பரம் இரு மார்க்கத்தில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கடலூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.
- 21-ந்தேதி திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
- 24-ந்தேதி சர்வ ஏகாதசி.
13-ந்தேதி (செவ்வாய்)
* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (புதன்)
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
* ராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நான்.
20-ந்தேதி (வியாழன்)
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (வெள்ளி)
* திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம் மன் தங்கப் பாவாடை
* சமநோக்கு நாள்.
22-ந்தேதி (சனி)
* ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.
* வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
23-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
24-ந்தேதி (திங்கள்)
* சர்வ ஏகாதசி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.
- கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா.
- முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-6 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி நாளை காலை 6.13 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: சித்திரை காலை 6.57 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா. ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோ வில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருவேல்வேலி சமீபம் 3-ம் நவ திருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-சுபம்
மிதுனம்-ஜெயம்
கடகம்-நன்மை
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆக்கம்
துலாம்- வரவு
விருச்சிகம்-தெளிவு
தனுசு- நிறைவு
மகரம்-போட்டி
கும்பம்-நற்செய்தி
மீனம்-நலம்
- சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது.
- இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது.
பார்வதி திருமணம் நடைபெறும் சமயத்தில் தென் கோடியிலுள்ள மக்கள் அனைவரும் திருமண வைபவத்தை காண வடகோடியை நோக்கி சென்றனர்.
அந்த சமயம் தென்கோடி உயர்ந்தும் வடகோடி தாழ்ந்தும் இருக்க, சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி நீ தென்கோடியில் பொதிகை நோக்கி சென்றடைவாய் என்று பணித்தார்.

அதற்கு அகஸ்தியர், எல்லோரும் உங்கள் திருமண வைபவத்தை காண நான் மட்டும் தங்கள் திருமணத்தை காண கொடுத்து வைக்காதவனாக உள்ளேன் என்று சொன்னார். அதற்கு இறைவன், உனக்கு அங்கே திருமண வைபவ காட்சியளிக்கிறேன் என்றார்.
எல்லோரும் வடதிசை நோக்கி வரும்போது அவர்கள் அனைவரும் பலம் உடையவர், அதனால் தான் நீ தென்திசை சென்றால் சமமாகும் எனக் கூறினார்.
அதன்பின் தென்திசையை நோக்கி வரும்போது, இடும்பாசுரன் (சூரபத்மன் முதலான அசுரர்களின் தலைவன்), அகஸ்தியரை எதிர்கொண்டு அவரை நமஸ்கரித்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான். அகஸ்தியரும் இடும்பனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.
இடும்பாசுரன் தங்களுக்குண்டான பணிவிடை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது, அகஸ்தியர் அவசரமாக தென்திசை நோக்கி வந்ததால் எனது சிவபூஜையை சென்று எடுத்து வருவாயாக என்று பணித்தார்.

இடும்பாசுரன் வடதிசை நோக்கி சென்று மலையில் சிவபூஜை எங்கு உள்ளது என்பதை அறியாது சிவகிரி மற்றும் சத்யகிரி ஆகிய 2 மலைகளையும் காவடியாக எடுத்துக் கொண்டு தென் திசையை நோக்கி வரும்போது வழியறியாது சென்னிமலை வந்தடைந்தான்.
அப்போது சென்னிமலை துவாபரயுகத்தில் புஷ்பகிரியாக இருந்தது. இடும்பாசுரன் பொதிகைக்கு வழி அறியாது இருக்கும்போது, முருகப் பெருமான் ராஜகுமாரனாக காட்சி அளித்து பொதிகைக்கு செல்ல இடும்பனுக்கு வழி காட்டிய இடம்தான் புஷ்பகிரி (சென்னிமலை) ஆகும்.
சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் தற்போது பழனியம்பதியாக உள்ளது.
- முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார்.
- முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.
எல்லாம் வல்ல சென்னிமலை முருகப்பெருமானுடைய திருத்தலத்திலே தைப்பூச தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. குன்று இருக்கும் இடம் மெல்லாம் குமரன் இருப்பான் என்று கோழையற்றோர் வந்து வழிபடும் திருத்தலத்திலேயே நமது சென்னிமலை முருகன் திருத்தலம் மிகவும் தொன்மையானதும், பல சிறப்புகளை கொண்டது ஆகும்.

நமது சென்னிமலை திருத்தலம் சிரகிரி என்ற பெயரோடு ஆதிகாலத்திலேயே விளங்கியதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மலை 4 யுகத்திலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.
அப்படியாக ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் இப்படி எண்ணற்றோர் வந்து இங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்கள் என ஸ்தல புராணங்களிலே குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.
இந்த கலியுகத்தில் தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டதாகவும். சிரகிரி என்ற பெயரில் இருந்து தற்போது சென்னிமலை என்று வணங்கப்படுகின்றது. இங்கு, சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
வைகாசி விசாக விழா, ஆடி மாதம் பாலாபிஷேக விழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா அடுத்தது கார்த்திகை மாதத்தில் தீபம் வைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி, மார்கழி பூஜை விழா, தை மாதம் பூச நட்சத்திரம் பிரம்மோற்சவம், அது 15 நாட்களுக்கு நடைபெறுகிறது.

பூச நட்சத்திரத்திலே மகர லக்கனத்தில் முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி எல்லோருக்கும் 2 நாட்கள் அருளாசியை செய்வார். தைப்பூச விழா ரேவதி நட்சத்திரம் சப்தமி திதியில் கொடி ஏற்றம் நடைபெற்று அதற்கு பிறகு காலை, மாலை 2 நேரமும் பல்வேறு மண்டப கட்டளைகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் சாமி எழுந்தருளி அந்தந்த மண்டபத்திலே பூஜைகள் எல்லாம் நடைபெற்று ஒவ்வொரு கிராமத்தைச் சார்ந்தவர்கள், ஒவ்வொருத்தரும் வந்து சாமியை அந்த மண்டபத்திற்கு அழைத்து செல்வார்கள்.
அங்கு பூஜை ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும். 9 நாட்களுக்கு பிறகு தேரோட்டம் நிறைவு பெற்று தேர் நிலை சேர்த்தல் அடுத்ததாக பரிவேட்டை என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி அடுத்து மார்க்கண்டே தீர்த்தம் என்று அடிவாரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்திலே முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.
15-ம் நாளிலே தச்சாவரம் என்று சொல்லக்கூடிய மகா தரிசனம் அன்று காலையில் மகாபிஷேகம் நடைபெற்று பின்பு இரவு நான்கு ரத வீதிகளிலும் எழுந்தருளி மிகப் பெரிய தரிசன விழா மிகச்சிறப்பான முறையிலே நடக்கும்.
சென்னிமலை தரிசனம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் ஒரு பெரிய சிறப்பு. அந்த காலத்தில் இருந்தே மகாதரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர்.
தைபூச விழா நாட்களில் பக்தர்கள் எல்லோரும் கிராமங்களில் இருந்தும் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர். இப்படி பல சிறப்புகளை பெற்றது சென்னிமலை முருகப்பெருமானுடைய ஸ்தலம்.

சென்னிமலையில் கருவறையில் சுப்ரமணியரை சுற்றிலும் 8 கிரகங்கள் இருக்கின்றது செவ்வாய் நீங்களாக. இங்கு முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார். இங்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பு.
என்ன வியாதிகள் இருந்தாலும் இங்கு ரத்தம் சிந்தியாக்கப்பட்டு நோய்கள் சீரடையும், இங்கே வந்து செவ்வாய்கிழமை அங்காரகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது எண்ணற்ற சிறப்புகள் கிடைக்கும் என்று பெரிய சான்றோர்கள் எல்லாம் சொன்னது.
செவ்வாய்க்கிழமை தோறும் வந்து முருகனை தரிசனம் செய்யலாம். இங்கே தேவியர் வள்ளி, தேவசேனா இருவரும், உண்ணும் நேரம், உறங்கும் நேரம் போக மத்த நேரங்களில் முருகப்பெருமானை எல்லா நேரமும் நினைச்சுட்டு இருந்தார்கள் என்று புராணங்கள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முருகப்பெருமானை அடைய அமிர்த வள்ளி, சுந்தரவல்லி ஆக இருந்து இங்கே தவமிருந்ததாக சொல்லப்படுகின்றது.
அப்பேர்பட்ட சிறப்பான திருத்தலத்தில் தை பூச நாளில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் அதில் எண்ணற்ற அடியார்கள் எல்லோரும் காவடி எடுத்து விரதமிருந்து இங்கே வந்து முருகப்பெருமானுக்கு பிரார்த்தனையை செலுத்தி தரிசனம் பண்ணுவர்.
- இன்று சுபமுகூர்த்த தினம்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-5 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.06 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: சித்திரை (முழுவதும்)
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருஇந்த ளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவதிருப்பதி சந்திர பகவானுக்குரிய நத்தம் ஸ்ரீ வரகுணமங்கை சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-செலவு
கடகம்-வரவு
சிம்மம்-நன்மை
கன்னி-சுகம்
துலாம்- நிறைவு
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஆதரவு
மகரம்-அமைதி
கும்பம்-புகழ்
மீனம்-ஊக்கம்
- தியாகபிரம்மா ஆராதனை.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-3 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: உத்திரம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
தியாகபிரம்மா ஆராதனை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவி லில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-களிப்பு
கடகம்-யோகம்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சுகம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- தாமதம்
மகரம்-வரவு
கும்பம்-உயர்வு
மீனம்-பயணம்
- ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை.
- அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி.
பழனி:
பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், செவ்வாய்கிழமை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த நிலையிலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நகரத்தார் காவடி குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கள் காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நேற்று இரவு 9ம் நாள் நிகழ்ச்சியாக துறையூர் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாராசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்ப தேேராட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
அதன் பின்பு இரவு கொடியிறக்கம் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.
3 நாட்களில் மட்டும் 4 லட்சத்தி 26 ஆயிராயிரத்தி 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்தி 13 ஆயிரத்தி 890 வருவாய் கிடைத்துள்ளது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களும், பழனியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விழாக்கால பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது.
- கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.
பின்னர், 11 அடி அகலமும், 54 அடி நீளமும் கொண்ட குண்டம் மைதானம் தயார் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு அங்கு வாண வேடிக்கையுடன் 15 டன் விறகுகள் கொண்டு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழியில் பல்வேறு வகையான மலர்களும் தூவப்பட்டன.
குண்டம் நிகழ்ச்சி காரணமாக கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.
சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று நடந்தது. குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர்.
குண்டம் இறங்க காப்பு கட்டியிருந்த பக்தர்களும் குண்டம் இறங்குவதற்கு தயாராக இருந்தனர்.
காலை 6 மணிக்கு தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கினர்.
அவர்களை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் என ஒவ்வொருவராக மாசாணியம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.
ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பூ எடுத்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
குண்டம் திருவிழாவை காண கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.
குண்டம் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி, கோவையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் குண்டம் திருவிழா காரணமாக ஆனைமலையில் நேற்று மாலை முதலே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளை காலை (சனிக்கிழமை) 7.30 மணிக்கு கொடி இறக்குதல், 10.30-க்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
- இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.
- கார்த்திகை சோமவாரம் விசேஷமானது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக் கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. தவத்தில் சிறந்து விளங்கிய வான்கோபர் மற்றும் மகாகோபர் என்ற இரு முனிவர்களும், 'இறைவனைச் சென்றடைய சிறந்த வழி இல்லறமா? துறவறமா?' என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இறைவன் இத்தலத்தில் உள்ள வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளினார்.

பின்னர் அந்த முனிவர்களிடம் 'இல்லறமோ, துறவறமோ எதுவாயினும் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றினால் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை' என பொதுவாகத் தீர்ப்பு கூறினார்.
அதன்காரணமாகவே இத்தல இறைவன், 'பொது ஆவுடையார்' என்றும், மத்தியஸ்தம் செய்தவர் என்பதால் 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
இக்கோவிலில் கார்த்திகை சோமவாரம் விசேஷமானது. அன்று இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவதில்லை.
இறைவன் சிதம்பரத்தில் நள்ளிரவு பூஜை முடித்த பிறகு, தனது பரிவாரங்களுடன் இத்தலத்து வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி, அந்த மரத்திலேயே ஐக்கியமானார் என்கிறது தல வரலாறு. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம்.
இங்குள்ள தல மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது. பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.

மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் சன்னிதியும், அருகில் திருக்குளமும் உள்ளன. அம்பாளுக்கென்று தனி சன்னிதி இல்லை. விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள புளிய மரத்தின் அடியில் அலங்கார உடையில் வான்கோபரும், துறவற உடையில் மகாகோபரும் வடக்கு நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சன்னிதிகள் உள்ளன.
இந்த ஆலமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. எனவே பக்தர்களுக்கு இலையும், திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
இக்கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.
அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றால் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய் கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.
பட்டுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தூரத்தில், முத்துப்பேட்டை செல்லும் பேருந்து வழித்தடத்தில் இருக்கும், பரக் கலக்கோட்டையில் உள்ளது, இந்த பொதுஆவுடையார் திருக்கோவில்.
- ஆலய கருவறை, குகைக்குள் அமைந்துள்ளது.
- ஆண்டுதோறும் 'பதுக்கம்மா' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுறது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாராங்கல் நகரில் புகழ்பெற்றக் கோவிலாக விளங்குவது, வாராங்கல் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் ஆகும். அனைத்து மக்களும் வழிபடும் திருக்கோவில் இது.

தல வரலாறு
இக்கோவில் காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சமண சமய மலைக்கோவிலே, பத்மாட்சி திருக்கோவிலாகும். காக்கத்தியர்கள் சமண மதத்தில் இருந்தபோது, இக்கோவில் உருவாக்கப்பட்டது.
இப்பகுதி முழுவதும் சமண மதத்தவர்கள் நிறைந்து வாழ்ந்து வந்தனர். இப்பகுதி 'பாசாதி' என்றே அழைக்கப்பட்டது. இக்கோவிலை 'பத்மாட்சி குட்டா' என்றும், 'அம்மா' என்றும், இப்பகுதிவாழ் மக்கள் அழைக்கின்றனர். இது பத்மாவதி தேவிக்கென அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோவிலாகும்.
இதன்பிறகு காக்கத்திய மன்னர் இரண்டாம் பெத்தராஜு சைவ சமயத்தை தழுவியதால், பத்மாட்சி கோவிலாக மாற்றம் பெற்றது. அதுபோல மக்களும், சமண மதத்தின் கடுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. அதனால் மக்களும் சைவ சமயத்தை தழுவினர்.

ஆலய அமைப்பு
ஹனமகொண்டா மலை மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இக்கோவில் எழிலாக காட்சி தருகிறது. மலை அடிவாரத்தில் அழகிய திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. மலையேற எளிதான படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இக்கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ள தூண் கருங்கல்லால் ஆனது. 'அண்ணா கொண்டா தூண்' நாற்கர வடிவில் திகழ்கிறது. நான்கு பக்கத்திலும் சமண சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன.

ஆலய கருவறை, குகைக்குள் அமைந்துள்ளது. அதே கருவறையில் பெரிய தீர்த்தங்கர பர்சவநாதர் திருவுருவம் உள்ளது. வலது புறம் யட்ச தரனேந்திரனும், வலதுபுறம் பத்மாவதியும் அருள்பாலிக்கின்றனர். பாறையின் புடைப்புச் சிற்பங்களாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றின் திருமேனியில் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன. இது தவிர, கருவறைச் சுற்றில் சமண தீர்த்தங்கர் மற்றும் பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டு, அவற்றின் மீதும் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன.
வலம்வரும் குகைப்பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின், சிலா வடிவங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன.

இவ்வாலய மூலவரான அன்னை பத்மாட்சி காலையில் சிறுமி வடிவத்திலும், மதியம் இளம் பெண்ணாகவும், மாலையில் முதிய பெண் வடிவிலும் காட்சி தருகின்றார்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கூடும் 'பதுக்கம்மா' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த விழாவில் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் பெண் பக்தர்கள் ஏராளமான பூக்களைத் தூவி வணங்குவார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.
அமைவிடம்
தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத் தலைநகரான வாராங்கல் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனமகொண்டா பகுதியில் அரணாகத் திகழும் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது, வாராங்கல்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
- திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-2 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 10.21 மணி வரை. பிறகு திருதியை
நட்சத்திரம்: பூரம் இரவு 11.41 மணி வரை. பிறகு உத்திரம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர். படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆரோக்கியம்
ரிஷபம்-சிறப்பு
மிதுனம்-கண்ணியம்
கடகம்-சுகம்
சிம்மம்-செலவு
கன்னி-நன்மை
துலாம்- ஆசை
விருச்சிகம்-ஊக்கம்
தனுசு- பயிற்சி
மகரம்-வெற்றி
கும்பம்-நிம்மதி
மீனம்-யோகம்






