என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
    • பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    அகமதாபாத்:

    10-வது புரோ கபடி லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 37-33 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் 32-30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்று முத்திரை பதித்தது. பெங்களூர் அணி 2-வது தோல்வியை தழுவியது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- மும்பை அணிகள் மோது கின்றன. குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சை 38-22 என்ற கணக்கிலும், 2-வது போட்டியில் 34-31 என்ற கணக்கில் பெங்களூரையும் தோற்கடித்து இருந்தது.

    மும்பை அணி முதல் ஆட்டத்தில் 34-31 என்ற கணக்கில் உ.பி. யோதாவை தோற்கடித்தது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
    • டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.

    கேப்டவுன்:

    இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 10ந்தேதி டர்பனில் நடக்கிறது. இந்திய தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் காயத்துடன் ஆடிய கேப்டன் பவுமா, வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோருக்கு வெள்ளைநிற பந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஓவர் மற்றும் ஒருநாள் தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    வேகப்பந்து வீச்சாளர்கள் ஜெரால்டு கோட்ஜீ, மார்கோ யான்சென், இங்கிடி ஆகியோர் முதல் இரு 20 ஓவர் போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு அதன் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராவதற்காக உள்ளூர் முதல்தர போட்டிகளில் ஆடுகிறார்கள். டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பவுமா செயல்படுவார்.


    தென்ஆப்பிரிக்க 20 ஓவர் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஓட்னில் பார்ட்மேன், மேத்யூ பிரீட்ஸ்கே, பர்ஜர், கோட்ஜீ, டோனோவன் பெரீரா, ரீஜா ஹென்ரிக்ஸ், மார்கோ யான்சென், கிளாசென், கேஷவ் மகராஜ், டேவிட் மில்லர், இங்கிடி, பெலுக்வாயோ, ஷம்சி, ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ்.

    தென்ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்டினல் பார்ட்மேன், பர்ஜர், டோனி டி ஜோர்ஸி, ரீஜா ஹென்ரிக்ஸ், கிளாசென், கேஷவ் மகராஜ், போங்வானா, டேவிட் மில்லர், வியான் முல்டர், பெலுக்வாயோ, ஷம்சி, வான்டெர் டஸன், கைல் வெரைன், லிசாட் வில்லியம்ஸ்

    டெஸ்ட் அணி:

    பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹம், பர்ஜர், ஜெரால்டு கோட்ஜீ, டோனி டி ஜோர்ஸி, டீன் எல்கர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், இங்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன்.

    • மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.
    • இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து மீட்புப் பணியில் ஈடுபடுவதுதான் உடனடி தீர்வுக்கு முக்கிய காரணம்.

    இதை வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் " " எனப்பதிவிட்டுள்ளார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் தமிழ் மக்கள் பாசத்தால் ஈர்க்கப்பட்டுள்ளார். இதனால் அடிக்கடி தமிழில் டுவீட் செய்வது வழக்கம். தற்போது சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலையில், மக்களுக்கு ஆதரவாக பதிவு செய்துள்ளார்.

    • வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது.
    • சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன்.

    வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்கான முதல் போட்டி நேற்று ஆன்ட்டிகுவா நகரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

    அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 71, ஜாக் கிராவ்லி 48 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 48.5 ஓவரிலேயே இலங்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சதம் விளாசிய ஷாய் ஹோப் (109) ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக இந்திய ஜாம்பவான் டோனியுடன் பேசிய போது அவர் கொடுத்த சில ஆலோசனைகள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவதற்கு உதவியதாக சாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வெற்றி பெற்ற போட்டியில் என்னுடைய சதம் வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சில காலங்கள் முன்பாக நான் டோனியிடம் பேசினேன். அப்போது நீங்கள் நினைப்பதை விட எப்போதுமே உங்களுக்கு களத்தில் அதிக நேரம் இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அந்த வார்த்தைகள் என்னுடன் ஒட்டிக்கொண்டது.

    செபார்ட் சிறப்பாக விளையாடினார். இத்தொடரின் ஆரம்பத்திலேயே வெற்றியை பெற்றுள்ள நாங்கள் அதை அடுத்த போட்டியிலும் தொடர்வோம் என்று நம்புகிறேன். எங்களின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினார்கள். இதே போன்ற துவக்கத்தை அடுத்த போட்டியில் அவர்கள் கொடுக்க முயற்சிக்க வேண்டும். இருப்பினும் உலகின் சிறந்த அணியாக நீங்கள் இருப்பதற்கு சில கேட்ச்களை தவற விடக்கூடாது. இதே நல்ல செயல்பாடுகளை நாங்கள் அடுத்த போட்டிகளிலும் தொடர்வதற்கு பார்க்க வேண்டும்.

    என்று கூறினார்.

    • தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.
    • கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் ஆட்டம், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறும். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டி 26-ந் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்து தென் ஆப்பிரிக்கா முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறியதாவது:-

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களைப் பிடிக்க வேண்டும் என்றால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு கடும் சவாலாக ஜஸ்பிரீத் பும்ரா இருப்பார். அவர்களுக்கு கடும் நெருக்கடியை அவர் கொடுப்பார். பும்ரா பந்து வீசத் தொடங்கினால், எதிரணி வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன.

    கடந்த முறை இந்திய அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய போது பும்ரா தான் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டு இருந்தார். அவர் எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். ஸ்டெம்பை நோக்கி பந்துகளை வீசுவதில் அவர் வல்லவர்.

    இந்த முறை ஒட்டுமொத்த இந்திய வேகப்பந்து வீச்சும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு பெரிய அளவிலான அச்சுறுத்தலைக் கொடுக்கும்.

    இவ்வாறு டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    • இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
    • களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    பெங்களூரு:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது.

    ஷ்ரேயாஸ் அய்யர் 37 பந்தில் 53 ரன்னும் ( 5 பவுண்டரி, 2 சிக்சர்), அக்ஷர் படேல் 21 பந்தில் 31 ரன்னும் ( 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஜிதேஷ் சர்மா 16 பந்தில் 24 ரன்னும் ( 3 பவுண்டரி, 1 சிக்சர்), எடுத்தனர். பென் துவர் ஷிஸ், பெகரன்டார்ப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பென் மெக்டர்மட் 36 பந்தில் 54 ரன்னும் ( 5 சிக்சர்) டிரெவிஸ் ஹெட் 18 பந்தில் 28 ரன்னும் ( 5 பவுண்டரி, 1 சிக்சர்) கேப்டன் மேத்யூ வேட் 15 பந்தில் 22 ரன்னும் ( 4 பவுண்டரி ) எடுத்தனர். முகேஷ் குமார் 3 விக்கெட்டும், அர்ஸ்தீப் சிங், பிஷ்னோய் தலா 2 , அக் ஷர் படேல் 1 விக்கெட டும் வீழ்த்தினார்கள்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி யது. ஏற்கனவே முதல், 2-வது மற்றும் 4-வது போட்டியில் வெற்றி பெற்று இருந்தது. ஆஸ்திரேலியா 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது;-

    இந்த 20 ஓவர் தொடர் சிறப்பான ஒன்றாக அமைந்தது. இந்திய வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதேபோல் களத்தில் அச்சமின்றி, மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று தெளிவாக இருந்தோம்.

    எங்கள் வீரர்களிடம், உங்களுக்கு எது சரியென்று தெரிகிறதோ, அதை செய்து மகிழ்ச்சியுடன் ஆட்டத்தை ஆடுங்கள் என்று கூறினோம். அவர்களும் அதனை தான் செய்தார்கள். அதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

    வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். தீபக் சாஹர் அவசர மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் அவர் இடத்தில் அர்ஸ்தீப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அமிர்தசரசில் நடந்தது.
    • கூட்டத்தில் அஞ்சு ஜார்ஜ், சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    இந்திய தடகள சம்மேளனம், 2027-ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான உரிமத்தை பெற முதலில் திட்டமிட்டது. தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்துள்ள தடகள சம்மேளனம் 2029-ம்ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு உரிமம் கோருவது என்று முடிவு செய்திருக்கிறது.

    இந்த தகவலை தெரிவித்த இந்திய தடகள சம்மேளனத்தின் துணைத் தலைவர் அஞ்சு பாபி ஜார்ஜ் கூறுகையில், '2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் 2030-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2029-ம் ஆண்டில் உலக தடகள சாம்பியன்ஷிப்பை நாம் நடத்தினால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற ஆர்வமாக இருக்கிறோம்' என்றார்.

    இந்திய தடகள சம்மேளனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் அமிர்தசரசில் நடந்தது. கூட்டத்தில் அஞ்சு ஜார்ஜ், சம்மேளன தலைவர் அடில் சுமரிவாலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், 2024-ம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு முன்னணி வீரர், வீராங்கனைகளுக்கு நடத்தப்படும் தேசிய தடகள பயிற்சி முகாமை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சாய், ரிலையன்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ. டாட்டா மற்றும் இதர நிறுவனங்களில் தடகள வீரர்களின் பயிற்சிக்கு ஏராளமான வசதி வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் நியமித்துள்ளனர். அங்கு வீரர்கள் தங்கள் பயிற்சியை தொடரலாம். இதே போல் ரெயில்வே, விமானப்படை, கடற்படை, ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். அத்துடன் மாநில அரசு கூட தங்களது வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்று தடகள சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார்.
    • 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.


    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயரின் அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஹெட் 28, பிலிப் 4, ஆரோன் ஹார்டி 6, டிம் டேவிட் 17, மேத்யூ ஷார்ட் 16, பென் துவர்ஷுயிஸ் 0 ரன்னில் வெளியேறினர்.

    ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் மெக்டெர்மாட் அரை சதம் விளாசினார். கடைசி வரை போராடிய மேத்யூ வேட் 22 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

    • சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் 53 ரன்னில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேயத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்வால் - ருதுராஜ் களமிறங்கினர். வழக்கம் போல அதிரடி காட்டி பவர்பிளேயிலேயே விக்கெட்டை இழந்தார் ஜெய்வால். அவர் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த சூர்யகுமார் யாதவ் 5, ரிங்கு சிங் 6 என வெளியேறினார்.

    ஒரு கட்டத்தில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி திணறியது. இதனையடுத்து ஷ்ரேயாஸ் மற்றும் ஜிதேஷ் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர். அதிரடி காட்டிய ஜித்தேஷ் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஷ்ரேயாஸ் அரை சதம் விளாசி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

    • நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம்.
    • சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும் என்று ஜான்சன் கூறினார்.

    ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை 6-வது முறையாக வென்ற ஆஸ்திரேலியா புதிய சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் அந்த அணி அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14-ம் தேதி சிட்னி நகரில் துவங்குகிறது. இதில் நட்சத்திர துவக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ள அவர் சமீப காலங்களாகவே சுமாரான ஃபார்மில் தடுமாறி வருவதால் சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய டேவிட் வார்னருக்கு இவ்வளவு மரியாதையாக ஓய்வு கொடுப்பது ஏன்? என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் முடிந்து 5 வருடங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இப்போது அவர் வெளியேறும் விதம் அதே திமிர்த்தனம் மற்றும் நம் நாட்டிற்கு அவமரியாதை செய்த பின்னணியில் உள்ளது. ஏனெனில் நாம் டேவிட் வார்னரை வழி அனுப்புவதற்கான தொடரை நடத்துகிறோம். இங்கே சமீப காலங்களில் தடுமாறும் அவருக்கு ஓய்வு நாளை தீர்மானிப்பதற்கான அனுமதியை ஏன் கொடுக்க வேண்டும்? என்று யாராவது சொல்லுங்கள்.

    குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய ஒருவருக்கு மைதானத்தின் நடுவில் ஹீரோ போல் வழி அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவது ஏன்? அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை விட மிகவும் உயர்ந்தவரா? அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இணைந்து விளையாடி நண்பராக இருப்பதன் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி இப்படி டேவிட் வார்னருக்கு ஆதரவாக வழியனுப்பும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளாரா.

    என்று ஜான்சன் விமர்சித்துள்ளார்.

    • வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார்.
    • கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது.

    கராச்சி:

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. குறிப்பாக 50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 8-வது முறையாக தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக தோற்றது.

    இதனையடுத்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. இதில் சல்மான் பட் ஆலோசகராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஏனெனில் கடந்த 2010-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான் பட் ஆதாரத்துடன் பிடிபட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்றார். அவரை தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிப்பது பாகிஸ்தான் அணியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்லும்? என்று பல தரப்பினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிலையில் தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்ததால் பாகிஸ்தான் தேர்வுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை தாண்டி பாகிஸ்தான் வாரியத்திற்குள்ளேயே அவருக்கு சில எதிர்ப்புகள் உருவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பதிலாக மற்றொரு முன்னாள் வீரர் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.

    • இந்திய அணியில் மாற்றங்கள் இல்லை
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 4 ஆட்டங்களின் முடிவில் 3-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 5-வது டி20 போட்டி இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியா பேட்டிங் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், சிவன் துபே ஆடும் லெவனில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டது. தீபக் சாஹருக்கு பதில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ×